search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பச்சிளம் குழந்தை"

    • குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.
    • குழந்தையை கொடூரமாக கொன்ற நீத்துவை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நீத்து (வயது21). அவர் திருச்சூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு திருமணமாகாத நிலையில், நீத்து கர்ப்பமாகியதாக தெரிகிறது.

    இருந்தபோதிலும் காதலர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீத்துவுக்கு சுமத்ரா பகுதியில் உள்ள வீட்டில் வைத்து குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.

    ஆனால் அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்பு அந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த குழந்தையின் மூக்கில் தண்ணீர் புகுந்ததால் மூச்சு திணறி இறந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினர். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தபடி இருந்திருக்கிறார். இருந்தபோதிலும் போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதால், தனது குழந்தையை கொன்றதை நீத்து ஒப்புக்கொண்டார்.

    அவர் தனது குழந்தையின் முகத்தில் தொடர்ந்து தண்ணீரை ஊற்றி மூச்சு திணறடித்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார். திருசூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை நீத்து காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் நீத்து கர்ப்பமாகி இருக்கிறார். அதன்பிறகும் இருவரும் திருமணம் செய்யாமலேயே இருந்தனர்.

    இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது. திருமணமாகாத நிலையில் குழந்தை பிறந்திருக்கிறது என்று மற்றவர்களுக்கு தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் வீட்டில் வைத்தே குழந்தை பெற்றெடுத்து கொன்றிருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற நீத்துவை போலீசார் கைது செய்தனர்.

    • தலைக்கு அதிகமாக குளிக்க வைக்கக் கூடாது.
    • மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும்.

    பொதுவாக குழந்தைகளை தினமும் குளிக்க வைக்க வேண்டும். ஆனால் தலைக்கு அதிகமாக குளிக்க வைக்கக் கூடாது. குழந்தைகளை அதிக நேரம் குளிக்க வைத்தால் நன்றாக தூக்கம் வரும் எனப் பலரும் சொல்லுவார்கள் அது தவறு. இது போன்று தவறுகள் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கும், குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    தற்போது மழை மற்றும் குளிர்வாட்டி வருகிறது. எனவே குழந்தைகளை குளிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவும் குழந்தைகளின் சருமம் தாங்கும் அளவிற்குத் தான் சூடான நீரில் குளிப்பாட்டவேண்டும்.

    * பச்சிளம் குழந்தை என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும். பச்சிளம் குழந்தை என்றால் முதலில் அந்த தண்ணீரை நம் கைகள் வைத்து வெதுவெதுப்பாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அதற்குப் பிறகு தான், குழந்தைகளின் காலில் ஊற்றி அதற்குச் சரியாக இருந்தால் மட்டும் குளிக்க வைக்க வேண்டும்.

    * ஆறு மாத குழந்தை என்றால் அந்த குழந்தையை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் தலைக்கு குளிக்க வைக்கலாம். ஆனால் சூடான நீராக இருந்தால் முதலில் நம்மால் தாங்க முடியும் என்றால் மட்டும் குழந்தைகளுக்குக் குளிக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கலாம்.

    * பச்சிளம் குழந்தை மற்றும் ஆறுமாதம், ஒரு வருடக் குழந்தையாக இருந்தாலும் அதிக நேரம் குளிக்க வைத்தால் தூக்கம் நன்றாக வரும் மற்றும் உடலுக்கு நல்லது எனச் சொன்னால் அது சரியில்லை. எந்த குழந்தையாக இருந்தாலும் 5-ல் இருந்து 7 நிமிடங்களுக்குள் குளிக்க வைக்க வேண்டும்.

    * கோடைக்காலத்தில் ஆறு மாதங்கள் ஆன குழந்தையாக இருந்தால் மிகவும் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. சாதாரண வெப்பநிலையில் உள்ள குளிர்ந்த நீரைப் பயன்படுத்தலாம்.

    * குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பயன்படுத்து சோப்பு மற்றும் ஷாம்பு அல்லது வீட்டில் உள்ள கடலைமாவும் பயன்படுத்தி குளிக்க வைக்கலாம்.

    * ஆறுமாதம் ஆன குழந்தை என்றால் கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகளின் தலைக்கு எனக் கடைகளில் விற்கும் ஷாம்பு அல்லது வீட்டில் தயாரிக்கும் ஷாம்பு கூட பயன்படுத்தலாம்.

    * குழந்தைகளின் தலைக்குக் குளிக்க வைக்கும் போது முகத்தில் தண்ணீர் வராமல் இருக்கக் கண்களுக்கு மேல் உள்ள இடத்தில் கைகள் வைத்துக் குளிக்க வைக்க வேண்டும்.

    * தலைக்குக் குளிக்க வைத்த பிறகு, உடலுக்குக் குளிக்க வைக்க வேண்டும். சளிப்பிடித்து இருந்தால் அதிகமாக தலைக்கு குளிக்கவைக்க கூடாது. வெதுவெதுப்பான நீரில் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் தலைக்கு குளிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    • பிறந்த குழந்தையின் பார்வை மங்கலாக இருக்கும்.
    • தாலாட்டு போன்ற அந்த இசையைக் கேட்டு குழந்தை திரும்பியது

    பிறந்த குழந்தைகள் கூட அழகான முகத்தைத்தான் பார்க்க விரும்புகின்றனவாம். இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு ஆய்வில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். தாயின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தையின் மூளையில் அழகுணர்ச்சி பதிவாகிறது.

    பிறந்த குழந்தையின் பார்வை மங்கலாக இருக்கும். இருப்பினும் 15 மணி நேரத்தில் அது, தன் தாயின் முகத்தை அடையாளம் கண்டு கொள்கிறது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைகள் மற்றும் பிறந்து இரண்டு நாட்களான குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. குழந்தையின் முன்னால் அழகான மற்றும் அழகு குறைந்த முகங்கள் காட்டப்பட்டன. அழகு குறைந்த முகத்தை விட, அழகான முகத்தை 80 சதவீத நேரம் அதிகமாகப் பார்த்தன என்றும் சொல்கிறது அந்த ஆய்வு.

    'கவர்ந்திழுக்கும் தன்மை ஒருவரது கண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல... ஒரு குழந்தை பிறந்தது முதல், அல்லது பிறப்புக்கு முன்னரே கூட அதன் மூளையில் பதிவான விஷயம்' என்கிறது எக்ஸெடெர் பல்கலைக்கழக ஆய்வுக்குழு.

    அழகுணர்ச்சி மட்டுமின்றி நல்ல இசையைத் தேர்வு செய்யும் திறனும் குழந்தைகளிடம் இருப்பதாக இந்தக் குழு தெரிவிக்கிறது. ஒரு குழந்தை கேட்கும்படி நல்ல இசை ஒலிபரப்பப்பட்டது. தாலாட்டு போன்ற அந்த இசையைக் கேட்டு குழந்தை திரும்பியது! அதே சமயம் கரடுமுரடான இசையை ஒலிபரப்பியபோது குழந்தை அதை விரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

    • பல் சிதைவு என்பது நீண்ட கால பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
    • பாக்டீரியாக்கள் ஒட்டும் தன்மை உடையதாக பற்களில் தங்கிவிடுகிறது.

    பல் சிதைவு என்பது இந்தியா முழுவதும் குழந்தை பருவத்தினருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். இது நீண்ட கால பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் பல் நோய் தடுப்பு மையங்களின் அறிக்கைப்படி, ஐந்து முதல் 11 வயது வரையிலான 20 சதவீத குழந்தைகளில் குறைந்தது ஒரு குழந்தையாவது சிதைந்த அல்லது அழுகும் பல் இருக்கப் பெற்று, அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது.

    பற்சிதைவு என்பது வாயில் ஒளிந்திருக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து இத்தகைய பாக்டீரியாக்கள் செழித்து வளர்கின்றன. நாம் உண்ட உணவின் துணுக்குகள் பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்வதால் பெரும்பாலான பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இத்தகைய பாக்டீரியாக்கள் ஒட்டும் தன்மை உடையதாக பற்களில் தங்கிவிடுகிறது.

    இவைகள் நமது பற்களின் எனாமல்லை சுரண்டி அதிக அளவில் பாதிப்பை உருவாக்குகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களால் இத்தகைய பாக்டீரியாக்கள் எளிதில் பற்களில் உருவாகின்றன. குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட்டுகள், குக்கீஸ், பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றினால் பற்களில் அதிக சிதைவு ஏற்படுகிறது.

    இதில் நல்ல செய்தி என்னவென்றால், பல் சிதைவு என்பது தடுக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. பற்சிதைவை சரியான பல் துலக்குதல் நுட்பங்கள் மற்றும் ஒரு பல் மருத்துவரின் முறையான சிகிச்சை முறை ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்கு பல் சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கலாம்.

    மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்ட புளோரைடு பற்பசையுடன் உங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல்துலக்க செய்ய வேண்டும், அதிலும் படுக்கைக்கு முன் பல் துலக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

    • ஸ்பிட் அப் பிரச்சனையைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்.
    • அதிகமாக உணவுக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

    சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுத்துக்கொண்டே இருப்பார்கள். உணவு உண்ட பிறகு, பால் குடித்த பிறகு என வாந்தி எடுக்கும் பிரச்சனை இருக்கும். இந்த பிரச்னை ஏன் ஏற்படுகிறது? தடுக்க வழிகள் இருக்கிறதா? விளக்கமாகப் பார்க்கலாம்.

    ஸ்பிட் அப் என்பது 0-1 வயது குழந்தைகளுக்கு பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை. வயிற்றில் உள்ளவை ஏப்பம் மூலமாக, வாய் வழியாக வெளியேறுவது. கை குழந்தைகள் தாய்ப்பால் குடித்த பின் குழந்தைகள் 'ஸ்பிட் அப்' செய்வார்கள். இது இயல்பான விஷயம், குழந்தைகள் பொதுவாக ஏப்பம் விடும்போது சிறிதளவு ஸ்பிட் செய்வது சாதாரணமான விஷயம்தான். குழந்தை வளர வளர இந்த ஸ்பிட் அப் பிரச்சனைத் தானாக சரியாகிவிடும்.

    10-12 மாத குழந்தைகளாக வளரும்போது தானாக குழந்தைகள், இந்த ஸ்பிட் அப் பிரச்சனையிலிருந்து வெளி வருவார்கள். ஸ்பிட் அப் பிரச்சனையைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்.

    மிகவும் இயல்பற்ற நிலையில், வலுகட்டாயமாக ஸ்பிட் அப் அல்லது வாந்தி எடுப்பதைத் தொடர்ந்து செய்வது போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே மருத்துவரிடம் குழந்தையை அழைத்து செல்லுங்கள். குழந்தை பால் குடிக்கவோ உணவு சாப்பிடவோ அவஸ்தை பட்டால் நிச்சயம் நீங்கள் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

    குழந்தைக்கு கொடுக்கும் உணவைக் கொஞ்சம் திக்காக, கெட்டியான கூழ் வடிவில் கொடுக்கலாம். அதிகமாக உணவுக் கொடுப்பதைத் தவிர்க்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக உணவுகளை நிறைய முறை கொடுக்கலாம். குழந்தை ஏப்பம் விட வசதியாக, சாப்பிட்ட பின் லேசாக முதுகைத் தட்டுங்கள். உணவு உண்ட பிறகு, அமைதியான, பாதுகாப்பான, நிமிர்ந்த நிலையில் 20-30 நிமிடங்கள் குழந்தையை வைத்திருங்கள்.

    வாந்தி, குமட்டலைத் தடுக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

    இங்கு சொல்லப்படும் கைவைத்தியங்கள் குழந்தைகளுக்கு ஏற்றது. இது கொடுக்கலாமா அது கொடுக்கலாமா குழப்பிக் கொள்ளாமல் எது கொடுத்தாலும் சரியான அளவில் மருந்தாகக் கொடுக்கும் போது குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது. மருந்தை அளவாகத் தருவதில் தவறில்லை.

    லேசான வெஜிடபிள் சூப், கிளியர் சூப், ஜூஸ், கஞ்சி, கூழ் போன்ற திரவ உணவுகள் அதிகமாகக் கொடுக்கலாம். எந்த உணவு கொடுத்தப் பின்னும் உடனடியாகப் படுக்க வைக்க கூடாது.

    சின்ன துண்டு இஞ்சியை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதில் இருந்து சாறை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சாறில் சிறிது தேன் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம். இஞ்சியும் தேனும் செரிமானத்துக்கு உதவும்.

    வாந்தி, குமட்டலை தீர்க்க புதினாவுக்கு சிறப்பான ஆற்றல் உண்டு. ஃப்ரெஷ்ஷான புதினா இலைகளை எடுத்து, அரைத்து, ஜூஸ் எடுக்கவும். அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சுவைக்காக, சிறிது தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். இதைக் குழந்தைக்கு கொடுத்தாலும் வாந்தி, குமட்டல் பிரச்சனை இருக்காது.

    வயிற்றின் இயக்கத்தை சீராக்குவதில் பட்டை சிறந்தது. குமட்டல், வாந்தி ஆகிய தொல்லைகளை நீக்கும். பட்டை டீ தயாரிக்க, ஓரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பட்டை தூள் போட்டு, கொதிக்க விட்டு நிறுத்தி விடலாம். இதைக் குடிக்க வாந்தி, குமட்டல் இருக்காது.

    அரிசி வடித்த கஞ்சி தண்ணீரைக் குழந்தைகளுக்கு கொடுக்க வாந்தி, குமட்டல் நிற்கும்.

    ஏலம் விதைகளுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அரைத்து, அந்த பவுடரை சிறிதளவு குழந்தைகளுக்கு கொடுக்க வாந்தி, குமட்டல் பிரச்னை இருக்காது.

    பட்டை டீ தயாரித்தது போலவே கிராம்பு டீ தயாரித்து, சுவைக்குத் தேன் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

    பட்டை டீ, கிராம்பு டீ போல சோம்பு டீ தயாரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு 4-5 வேளை ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.

    ஒரு ஸ்பூன் வெங்காய சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு. இதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை கொடுக்கலாம். வாந்தி, குமட்டல் தொல்லை வராது.

    சீரகத்தை வறுத்து பவுடராக்கி கொள்ளுங்கள். குழந்தைக்கு குமட்டல், வாந்தி வருவது போல பிரச்சனை இருக்கும் போது, சூடான ஒரு டம்ளர் தண்ணீரில் சீரக பவுடரைக் கலந்து அந்தத் தண்ணீரை ஒரு ஸ்பூன் அளவுக்கு அரை மணி நேரம் இடைவெளி விட்டு கொடுத்து வாருங்கள். மேலும் சீரக பவுடருடன் ஒரு சிட்டிகை பட்டைத் தூள், தேன் குழைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு குழந்தைக்கு தரலாம்.

    • குழந்தையின் பற்களை ஆரம்பத்திலிருந்து பராமரிக்க வேண்டியது அவசியம்
    • குழந்தைகளுக்கு, முதலில் தானாக விழும் பல் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

    குழந்தையின் பற்களை ஆரம்பத்திலிருந்து பராமரிக்க வேண்டியது அவசியம். இதில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பல் நோய்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    1. பல் சிதைவு:

    பல் சிதைவு என்பது இந்தியா முழுவதும் குழந்தை பருவத்தினருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். இது நீண்ட கால பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் பல் நோய் தடுப்பு மையங்களின் அறிக்கைப்படி, ஐந்து முதல் 11 வயது வரையிலான 20 சதவீத குழந்தைகளில் குறைந்தது ஒரு குழந்தையாவது சிதைந்த அல்லது அழுகும் பல் இருக்கப் பெற்று, அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது. பற்சிதைவு என்பது வாயில் ஒளிந்திருக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து இத்தகைய பாக்டீரியாக்கள் செழித்து வளர்கின்றன. நாம் உண்ட உணவின் துணுக்குகள் பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்வதால் பெரும்பாலான பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இத்தகைய பாக்டீரியாக்கள் ஒட்டும் தன்மை உடையதாக பற்களில் தங்கிவிடுகிறது. இவைகள் நமது பற்களின் எனாமல்லை சுரண்டி அதிக அளவில் பாதிப்பை உருவாக்குகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களால் இத்தகைய பாக்டீரியாக்கள் எளிதில் பற்களில் உருவாகின்றன. குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட்டுகள், குக்கீஸ், பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றினால் பற்களில் அதிக சிதைவு ஏற்படுகிறது. இதில் நல்ல செய்தி என்னவென்றால், பல் சிதைவு என்பது தடுக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. பற்சிதைவை சரியான பல் துலக்குதல் நுட்பங்கள் மற்றும் ஒரு பல் மருத்துவரின் முறையான சிகிச்சை முறை ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்கு பல் சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கலாம். மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்ட புளோரைடு பற்பசையுடன் உங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல்துலக்க செய்ய வேண்டும், அதிலும் படுக்கைக்கு முன் பல் துலக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

    2. வாய் துர்நாற்றம்:

    இந்த வாய் துர்நாற்றம் ஹலிடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது குறிப்பிட்ட வயதினரை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த பாக்டீரியா காலனிகள் நமது வாயில் தங்கியுள்ள உணவு, திரவம் மற்றும் பிளேக் ஆகியவற்றை உண்கின்றன. அவை சாப்பிடும்போது, ஹைட்ரஜன் சல்பைடை உற்பத்தி செய்கின்றன, இதனால்தான் வாயில் துர்நாற்றம் வீசுகிறது. பெரியவர்களைப் போலவே, காலையில் குழந்தைகள் எழுந்தபின், துர்நாற்றம் சகஜமாக ஏற்படுகிறது. இருப்பினும், உங்கள் குழந்தையின் துர்நாற்றம் நாள் முழுவதும் நீடித்தால், அது ஒரு பெரிய சிக்கலைக் கொடுக்கும். இந்த வாய் துர்நாற்றத்தை தடுப்பதற்கு சரியான பல் சுகாதாரம் பேணுவதே சிறந்த வழியாகும். பாக்டீரியா எதிர்ப்பு மவுத்வாஷ் பயன்படுத்துவது வாய் துர்நாற்றத்தை குறைக்க உதவும், மேலும் நாக்கைத் துலக்குவது வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவும்.

    3. பல் கூச்சம் :

    குழந்தைகளுக்கு ஏற்படும் மற்றொரு பொதுவான பிரச்சினை பல் கூச்சம் ஆகும். சூடாகவோ அல்லது குளிர்ந்த உணவுகள் மற்றும் திரவங்கள் ஆகியவற்றை குழந்தைகள் எடுத்துக்கொள்ளும்போது அது அவர்களுக்கு எரிச்சலையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தினால், அவர்களுக்கு பல் கூச்சம் இருப்பதை நாம் உணரலாம். சில நேரங்களில், குளிர்ந்த அல்லது சூடான காற்றை சுவாசிப்பது கூட அவர்களுக்கு வலியை ஏற்படுத்தும். பல் கூச்சம் என்பது ஒரு மோசமான அறிகுறி அல்ல என்றாலும், அவை மிகவும் கடுமையான பல் பிரச்சினையை சுட்டிக்காட்டக்கூடும்.

    4. பெருவிரல் சூப்புதல்:

    பொதுவாக குழந்தைகள் தனது பெரு விரலை வாயில் வைத்து சூப்பினேன் வழக்கமாக கொண்டிருக்கும். நிரந்தர பற்கள் வளர தொடங்கும் போது குழந்தைகள் இன்னும் பெரு விரலை சூப்பிக் கொண்டிருந்தால், அது பலவிதமான பிற சிக்கல்களை ஏற்படுத்தும். பெரு விரலை சூப்புவது சாதாரண வாய்வழி வளர்ச்சியை சீர்குலைத்து, பற்களின் சீரமைப்பு மற்றும் வாயின் மேல்பகுதி அமைப்பை பாதிக்கும். குழந்தைகளுக்கு இந்த பழக்கம் தொடர்ந்தால், உங்கள் பல் மருத்துவரைத் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனை பெறலாம். ஒரு அனுபவமிக்க பல் மருத்துவர் கூடுதல் உதவிகளையும், ஆதரவையும் வழங்குவார். மேலும் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த உங்கள் குழந்தையுடன் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்த ஆலோசனையையும் வழங்குவார். இந்த ஆலோசனை வழங்குவதற்கு என சென்னையில் பல குழந்தைகள் பல் சிகிச்சை மையங்கள் உள்ளன.

    5. பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள்:

    ஈறு நோய் அல்லது ஈறு அழற்சி என்பது திசுக்களின் அழற்சி காரணமாக ஏற்படுகிறது. இது பெரும்பாலும் வாய் வழி மற்றும் பல் சுகாதாரம் மற்றும் பிளேக் கட்டமைப்பால் ஏற்படுகிறது. மேலும் இது தொடர்ந்தால் எலும்பு பாதிப்பு மற்றும் பல் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது . பற்களின் அடிப்பகுதியில் பிளேக் மற்றும் டார்டார் வைப்புக்கள் உருவாகும்போது, அவை ஈறுகளை பாதிக்கத் தொடங்குகின்றன. ஈறு அழற்சியின் ஆரம்ப கட்டங்களில், ஒரு குழந்தையின் ஈறுகள் பெரும்பாலும் வீங்கி, சிவப்பு நிறத்தில் இருக்கும், மேலும் அவை பற்களிலிருந்து விலகி, மிதந்த பின் எளிதில் இரத்தம் கசியும். ஈறு நோயினால் வாய் துர்நாற்றம் மற்றும் குழந்தையின் வாயில் எப்போதும் ஒரு மோசமான சுவை இருக்கும். ஈறுகளில் ஏற்படும் நோய்களை எளிதாக தடுக்க முடியும். தினசரி இரண்டு முறை சரியான முறையில் பல் துலக்குதல், வாய் கொப்பளித்தல் மற்றும் முறையான பல் மருத்துவர் ஆலோசனை பெறுதல் போன்ற எளிய வழிமுறைகளால் இதனை தவிர்க்கலாம்.

    6. ப்ரூக்ஸிசம்:

    பற்களை ஒன்றோடு ஒன்று தேய்ப்பது ப்ரூக்ஸிசம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் பள்ளி வயது குழந்தைகளிடையே ஒரு பொதுவான பிரச்சனையாக திகழ்கிறது. 10 குழந்தைகளில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பற்களை தேய்க்கவும் அல்லது பற்களை எடுக்கவும் செய்வார்கள். சில நேரங்களில் ஒரு குழந்தை தானாகவே ப்ரூக்ஸிஸத்தை உருவாக்குகிறது, ஏனெனில் அவற்றின் மேல் பற்கள் அவற்றின் கீழ் பற்களுடன் சீராக இருப்பதில்லை. இதனால் சில நேரங்களில் அந்த குழந்தைகளுக்கு பற்களில் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் குழந்தைகள் வலியின் விளைவாக பற்களை தேய்ப்பார்கள். பொதுவாக ப்ரூக்ஸிசத்திற்கு என எந்த தனிப்பட்ட சிகிச்சையும் தேவையில்லை. குழந்தைகள் வளர்ந்து வரும் போது இந்த பிரச்சனை தானாக தற்போது. இருப்பினும் இந்த பழக்கம் தொடர்ந்தால், அது படிப்படியாக பற்களை சேதப்படுத்த கூடும். இதன் விளைவாக கடுமையான பல் வலியும் ஏற்படக்கூடும்.

    7. கேங்கர் சோர்ஸ் :

    கேங்கர் சோர்ஸ் என்பது சிறிய வகை புண்கள் ஆகும். இந்த புண்கள், வாயினுள், ஈறுகளில் அல்லது நாக்கில் உருவாகும். பொதுவாக, இந்த புண்கள் ஒரு சிவப்பு எல்லையால் சூழப்பட்ட சாம்பல் அல்லது வெள்ளை மையத்தைக் கொண்டு இருக்கும். காய்ச்சல் கொப்புளங்கள் மற்றும் சளி புண்கள் ஆகியவற்றிலிருந்து கேங்கர் புண்கள் முற்றிலும் வேறுபட்டவை. இவை பொருள் குழந்தைகளிடமிருந்து மற்றொரு குழந்தை பரவாது. பெரும்பாலும் இவை ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் தானாக மறைந்து போய்விடும். இதனால் ஒரு குழந்தைக்கு தண்ணீர் குடிப்பதையும், உணவு உட்கொள்வதில் மிகுந்த சிரமங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த புண்கள் தனியாகவோ, கூட்டாகவோ ஏற்படலாம். இந்த புண்கள் உருவாக காரணமாகும் காரணிகளாக கீழ்க்கண்டவற்றை கொள்ளலாம்.,

    1.டயட்

    2.மன அழுத்தம் அல்லது அதிர்ச்சி

    3.அலர்ஜி

    4.ஊட்டச்சத்து குறைபாடுகள்

    5. தொற்று.

    8. குழந்தைகளின் பற்கள் இழப்பு :

    பல குழந்தைகளுக்கு, முதலில் தானாக விழும் பல் ஒரு வரப்பிரசாதம் ஆகும். அப்படி தானாக பல் விழுந்த அந்த இடத்தில் விரைவில் புதிய ஒரு பல் வருகை தரக்கூடும், மேலும் குழந்தைகளின் சிறிய "குழந்தை பல்" விரைவில் "வளர்ந்த பற்களால்" மாற்றம் பெற்றுவிடும். பல் இழப்பு என்பது வளர்ச்சியின் இயற்கையான கட்டமாகும். முதல் இழந்த பல் பொதுவாக நடுத்தர முன் பற்களில் ஒன்றாகவே இருக்கும். இது பொதுவாக ஆறு வயதில் ஏற்படக்கூடும். ஒரு குழந்தை 10 முதல் 12 வயது வரை இருக்கும் வரை மோலர்கள் இழக்கப்படுவதில்லை, மேலும் பெரும்பாலான குழந்தைகள் 13 வயதிற்குள் 28 நிரந்தர பற்களின் முழு தொகுப்பையும் பெற்று விடுகிறார்கள். பல குழந்தைகளுக்கு, அவர்களின் முதன்மை அல்லது "குழந்தை" பற்களை இழக்கும் போது அதிக வலி ஏற்படுவதில்லை. இருப்பினும் அது வெளியேற மறுத்தால் அல்லது குழந்தைகளுக்கு அதிக வலியை ஏற்படுத்தினால், உங்கள் பல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    9. ஒன்றின்மேல் ஒன்றாக வளரக்கூடிய முதன்மை பல்:

    சில நேரங்களில் ஒரு குழந்தைக்கு தானாக வேண்டிய முதன்மை பல் விழாமல் போகலாம். அப்படி ஒரு முதன்மை பல் விழாவிட்டால், அதன் அடியில் இருக்கும் நிரந்தர பல் அதே இடத்தில் முளைத்து வர முயற்சிக்கும். இதன் விளைவாக, ஒரு இடத்தில் இரண்டு பற்கள் இருக்கக்கூடும். அல்லது, மற்ற பற்கள் அதைச் சுற்றி தளர்த்தப்படுவதால் ஒரு குழந்தையின் பல் பல ஆண்டுகளாக திடமாக இருக்கலாம். இந்த நிகழ்வுகளால், குழந்தைக்கு முதன்மையானதை மாற்றுவதற்கு நிரந்தர பல் இருக்காது, எனவே முதன்மை பல் வாயிலிருந்து வெளியே விழாது. இந்த வகை பற்களுக்கு, ஒரு பல் மருத்துவர் முறையாக சிகிச்சை அளித்து முதன்மை பற்களை அகற்றுவார், இதனால் நிரந்தர பல் போட்டி இல்லாமல் வளரும் வாய்ப்பு உருவாகிறது. பற்கள் முழுமையாக வெளிவந்தவுடன் எந்தவொரு தவறான வடிவமைப்பையும் சரிசெய்ய பிரேஸ்களைப் பயன்படுத்தலாம்.

    10.டென்டல் அன்க்ஸியிட்டி:

    டென்டல் அன்க்ஸியிட்டி என்பது நேரடியாக பல் ஆரோக்கியத்துடன் தொடர்புப்படுத்தப்படவில்லை என்றாலும் ஒரு குழந்தையை அடிக்கடி பல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் அவர்களுக்கு ஒருவித பயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவர்கள் முறையான பராமரிப்பு முறைகளை தெரிந்து கொள்ள முடியாமல், பற்களில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை அறிந்து கொள்ளமுடியாமல், ரூட் கேனல், பல் பிடுங்குதல், மற்றும் அவசர பல் சிகிச்சை ஆகியவற்றை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனை போக்க தலைசிறந்த பல் மருத்துவ நிபுணர் ஆல் மட்டுமே முடியும். ஒரு சிறந்த குழந்தைகள் பல் மருத்துவ நிபுணர், மருத்துவ சிகிச்சையளிக்கும் அறைக்குள், குழந்தைகளுக்கு பல் மருத்துவத்தை பற்றி நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் விதத்தில் கட்டமைப்புக்களை செய்திருப்பார். சென்னையில் குழந்தைகளுக்கு என தனியாக பல் மருத்துவம் வழங்கும் சிகிச்சை மையங்கள் அதிக அளவில் உள்ளன.

    • பிறந்த குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும்.
    • சரும பராமரிப்புக்கு வீட்டிலேயே குளியல் பொடி தயாரித்து பயன்படுத்தினார்கள்.

    புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும். ரசாயனம் கலந்த சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தும்போது, சருமத்துக்கு அவை பாதிப்பை ஏற்படுத்தலாம். சில தலைமுறைகள் வரை, பிறந்த குழந்தைகளின் சரும பராமரிப்புக்கு வீட்டிலேயே குளியல் பொடி தயாரித்து பயன்படுத்தினார்கள்.

    மசாஜ் செய்வதற்கும், சருமப் பொலிவை அதிகரிப்பதற்கும் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை உபயோகப்படுத்தினார்கள். இவை குழந்தையின் மென்மையான சருமத்தை பூப்போல் பாதுகாக்கும். சருமப் பிரச்சினைகள் வராமல் தடுத்து, இயற்கையான நிறத்தை மெருகேற்றும். இந்தக் குளியல் பொடி செய்முறை பற்றி பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீர் ரோஜா இதழ்கள் - 100 கிராம்

    ஆவாரம் பூ - 50 கிராம்

    துளசி இலை - ஒரு கைப்பிடி

    வேப்பிலைக் கொழுந்து - ஒரு கைப்பிடி

    பச்சைப் பயறு - 300 கிராம்

    சிவப்பு சந்தனம் - 50 கிராம்

    பச்சரிசி - ஒரு கைப்பிடி

    கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம் (ஆண் குழந்தையாக இருந்தால் இதைத் தவிர்க்கவும்)

    தரமான பொருட்களை வாங்கவும். பூக்கள் மற்றும் இலைகளை தனித்தனியாக சுத்தப்படுத்தி நன்றாக உலர வைக்கவும். பச்சைப் பயறு மற்றும் கஸ்தூரி மஞ்சளை ஒரு மணி நேரம் வெயிலில் காயவைக்கவும். பின்னர் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து அரவை இயந்திரத்தில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.

    இந்தப் பொருட்களை அரைப்பதற்கு முன்பாக அரை கிலோ பச்சரிசியை கொடுத்து மாவாக அரையுங்கள். இயந்திரத்தில் இதற்கு முன்பு ஏதேனும் காரத்தன்மை கொண்ட பொருளை அரைத்திருந்தாலும் அல்லது அசுத்தங்கள் இருந்தாலும் நீங்கி குளியல் பொடி சுத்தமானதாக இருக்கும். இந்தப் பொடியை சலித்துப் பயன்படுத்துவது நல்லது. பிறகு சுத்தமான காற்றுப் புகாத பெரிய பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைக்கவும். சிறிது பொடியை, சிறிய டப்பாவில் போட்டு தினசரி பயன்படுத்திக்கொள்ளலாம். 2 அல்லது 3 மாதத்துக்கு ஒரு முறை அரைத்தால் போதும்.

    பயன்படுத்தும் முறை: சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு குழந்தையின் உடல் முழுவதும் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிக்க வைக்கும் போது இந்தப் பொடியை நீரில் குழைத்துக் குழந்தையின் உடலில் தடவி, மென்மையாக கைகளால் தேய்த்துக் குளிக்க வைக்கலாம். முகத்துக்கும் பயன்படுத்தலாம். மசாஜ் செய்யாதபோதும் இதை நீரில் குழைத்துப் பயன்படுத்துங்கள்.

    நன்மைகள்: ரோஜா இதழ் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். பச்சைப் பயறு, பச்சரிசி ஆகியவை சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையாக்கும். ஆவாரம் பூ, துளசி மற்றும் வேப்பிலை மூன்றும் கிருமிநாசினியாக செயல்படும். மஞ்சள், குழந்தையின் உடலில் இருக்கும் தேவையற்ற முடியை உதிரச் செய்யும். சிவப்பு சந்தனம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.

    • கண்காணிப்பு கேமராவில் பதிவான பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை
    • குழந்தையை யாரும் கொண்டுவந்து போட்டுச் செல்வது போன்ற பதிவுகள் எதுவும் இல்லை

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி சோதனை சாவடி அருகே சாலையோரம் உள்ள கோவிலின் முன்பு பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த அந்த குழந்தையை பார்த்தவர்கள் பதறி நிற்க, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

    பிறந்து ஓரிரு நாட்களே ஆன நிலையில் குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். முறை தவறி பிறந்ததால் குழந்தையை வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு நடத்தினர்.

    இதில் பெண் ஒருவர் கோவில் அமைந்துள்ள பகுதியில் சுற்றி வருவது பதிவாகி உள்ளது. ஆனால் அந்த பெண்ணின் முகம் சரியாக தெரியவில்லை. அவர், அந்த பகுதியில் தரையில் கிடந்த நாவல் பழங்களை எடுப்பதும் பின்னர் கோவிலை நோக்கி சென்று திரும்புவதுமாக காட்சிகள் பதிவாகி உள்ளன. மேலும் 2 வாலிபர்களும் காமிரா பதிவில் சிக்கி உள்ளனர். இருப்பினும் குழந்தையை யாரும் கொண்டுவந்து போட்டுச் செல்வது போன்ற பதிவுகள் எதுவும் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் போலீசாரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

    எனவே வேறு ஏதும் கண்காணிப்பு கேமராவில் பெண்ணின் உருவம் முழுமையாக பதிவாகி இருக்கலாமா? என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பெற்ற குழந்தையை கல் மனதுடன் வீசி சென்ற தாய் யாரென்று தெரியாத நிலையில், அந்த குழந்தையை தத்தெடுக்க பலரும் போட்டா போட்டியில் ஈடு பட்டு வருகின்றனர். இதற் கான முயற்சியில் பலரும் ஈடு பட்டுள்ளதாக கூறப்படு கிறது. அரசு விதிமுறைகளை கடைபிடித்து குழந்தையை தத்தெடுப்பது எப்படி? என பலரும் ஆலோசித்து வருகின்றனர்.

    • திடீர் மரணத்துக்கு மூன்று காரணங்கள் முக்கியமாகச் சொல்லப்படுகின்றன.
    • 3-4 மாதங்கள் ஆன குழந்தைகளே இந்த திடீர் உயிாிழப்புக்கு ஆளாகிறார்கள்.

    காரணம் தெரியாத இத்தகைய திடீர் மரணத்தை SIDS (sudden infant death syndrome) என்கின்றனர் மருத்துவர்கள். சிட்ஸ் எனும் பச்சிளம் குழந்தை திடீர் மரணம் ஏன் ஏற்படுகிறது? அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்த குழந்தைகள் நல மருத்துவர் கூறுவதை பார்க்கலாம்.

    90களில் ஆயிரம் குழந்தைகளுக்கு 2 குழந்தைகள் இதற்குப் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவில் இது பற்றியான துல்லியமான கணக்கெடுப்பு நிகழ்த்தப்படவில்லை. ஒரு வயது வரை உள்ள குழந்தைகளையே நாம் பச்சிளம் குழந்தைகள் என்று குறிப்பிடுகிறோம். 3-4 மாதங்கள் ஆன பச்சிளம் குழந்தைகளே இந்த திடீர் மரணத்துக்கு ஆளாகின்றனர்.

    இவ்விஷயத்தில் பெண்குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் ஆசிய நாடுகளில் இந்த பச்சிளம் குழந்தை திடீர் மரணத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

    இந்த திடீர் மரணத்துக்கு மூன்று காரணங்கள் முக்கியமாகச் சொல்லப்படுகின்றன.முதலாவது மரபணுக் கோளாறு. இரண்டாவது குழந்தைகள் தூங்கும் அறையில் புகைப் பிடித்தல். குளிர்பிரதேசங்களில் மூடிய அறையினுள்தான் புகைப் பிடிப்பார்கள். அந்தப் புகையிலிருக்கும் கார்பன் மோனாக்ஸைடு ஆக்சிஜன் ஓட்டத்தை தடை செய்வதால் மூச்சுத்திணறி குழந்தை இறக்கக் கூடும். மூன்றாவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது. இந்த மூன்று காரணங்களில் எதனாலும் சிட்ஸ் ஏற்படலாம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது.

    ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவெனில் பச்சிளம் குழந்தை திடீர் மரணத்துக்கு மிக முக்கியக் காரணம் குழந்தைக்குக் கொடுக்கப்படுகிற பசும்பால்தான். 1994 நவம்பர் 5 அன்று வெளியான லான்செட் மருத்துவ இதழில் இது குறித்தான விரிவான கட்டுரை வெளியாகியிருக்கிறது. பசும்பாலில் கேசீன் (Casein), அல்புமின் (Albumin), க்ளோபுலின் (Globulin) ஆகிய முக்கியப் புரதங்களும், பல ஹார்மோன் புரதங்களும் இருக்கின்றன. உலகில் 50 சதவிகித மக்களுக்கு பசும்பால் புரத ஒவ்வாமை இருக்கிறது. தும்மல், ஆஸ்துமா, எக்ஸிமா உள்ளிட்ட சரும நோய்கள் போன்றவை இந்த ஒவ்வாமையால் ஏற்படுகிறது. மரபணுக்களால் ஏற்படுவதால் இதை மரபணுக் கோளாறு எனலாம்.

    குழந்தையின் தூக்கத்தின்போது ஏற்படுகிற ஒவ்வாமையின் காரணமாகவும் திடீர் மரணத்துக்கு ஆளாகலாம்.தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக பசும்பால்/பவுடர் பால் குடிக்கிற குழந்தைகளே இதில் சிக்குகின்றனர். காரணம் என்னவெனில், பசும்பாலில் உள்ள கேசீன் புரதத்திலிருந்து Caso morphine எனும் போதை தரக்கூடிய பொருள் வயிற்றில் உருவாகிறது.

    தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளைக் காட்டிலும் பசும்பால் குடிக்கிற குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்லக் காரணம் இதுதான். ஆழ்ந்த உறக்கத்தில் ஒவ்வாமை ஏற்படும்போது கோழை சுரந்து மூச்சுப்பாதையை அடைத்துக் கொள்ளும். இதனால் மூச்சுத் திணறி குழந்தை இறந்து விடக்கூடும். தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தை ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்லாது. இந்த புரத ஒவ்வாமைக்கும் ஆளாகாது.

    3-4 மாதங்கள் ஆன குழந்தைகளே இந்த திடீர் உயிாிழப்புக்கு ஆளாகிறார்கள். ஏன் என்றால் 3-வது மாதத்தில்தான் குழந்தைக்கு பசும்பால்/பவுடர் பால் கொடுக்க ஆரம்பித்திருப்பார்கள். பசும்பால் புரத ஒவ்வாமையின் காரணமாக 3 வது மாத இறுதியில் அல்லது நான்காவது மாதத்தில் சில குழந்தைகள் மரணத்தை சந்திக்கிறார்கள். உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் ஆசிய நாடுகளில் பெரும்பாலான குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது. ஆகவேதான் இந்நாடுகளில் இந்த திடீர் மரணத்தின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

    பசும்பால் மனிதனுக்கு ஆனதல்ல என்பதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வேறு பல பிரச்னைகளுக்கும் அடிகோலிடும் என்பதால், பசும்பாலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரவு தூங்க வைக்கும் முன் பசும்பால் கொடுக்கவே கூடாது. குறைந்தது ஒரு வயது வரை அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும்படி காற்றோட்டமான இடத்தில் தூங்க வைக்க வேண்டும்.

    வீட்டுக்குள் புகைப்பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதில் கவனத்துடன் செயல்படும்போது பச்சிளம் குழந்தை திடீர் மரணத்திலிருந்து நமது குழந்தையை காக்க முடியும்.மரபணுக் கோளாறு, குழந்தைகள் தூங்கும் அறையில் புகைப் பிடித்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது... இந்த மூன்று காரணங்களால் சிட்ஸ் எனும் குழந்தைகளின் திடீர் மரணம் ஏற்படலாம்.

    • குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது.
    • குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்.

    பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். பச்சிளம் குழந்தைகளை எத்தனை நாள்களுக்கொரு முறை தலைக்கு குளிப்பாட்ட வேண்டும்? எத்தனை வயதுவரை வெந்நீரில் குளிப்பாட்ட வேண்டும்? கோடைக்காலத்தில் பச்சைத்தண்ணீரில் குளிப்பாட்டலாமா? என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    பச்சிளம் குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று நாள்களுக்கு தலைக்குக் குளிப்பாட்ட வேண்டியது அவசியம். குழந்தைகளை ரொம்ப நேரம் குளிக்க வைக்க வேண்டாம். அதிகபட்சமாக 5 நிமிடங்களுக்குள் குளிக்க வைத்துவிடுவது சிறப்பு. பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், குழந்தைகளுக்கான ஷாம்பு அல்லது சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.

    குழந்தைகளை அதிக நேரம் குளிப்பாட்டுவதால் நன்றாகத் தூங்குவார்கள் என்றெல்லாம் நினைத்து அப்படிச் செய்யத் தேவையில்லை. குழந்தைக்கேற்ற ஷாம்பூ மற்றும் சோப் உபயோகித்துக் குளிப்பாட்ட வேண்டியதும் அவசியம்.

    குழந்தையைக் குளிப்பாட்ட ஆவி பறக்கும் வெந்நீர் தேவையில்லை. சரியான சூடுதானா என்பதை முதலில் உங்கள் முழங்கையில் ஊற்றி சரி பாருங்கள். குழந்தையின் சருமம் அந்தச் சூட்டைத் தாங்குமா என்றும் பாருங்கள்.

    வெதுவெதுப்பான சூடு இருந்தால் போதுமானது. கோடைக்காலத்திலும் குழந்தையின் சருமம் பொறுக்கும் அளவு சூட்டில் உள்ள நீரில் குளிப்பாட்டலாம்.

    ரொம்பவும் சூடான நீரை ஊற்றிக் குளிப்பாட்டினால் அவர்களுக்குத் தாங்க முடியாது. எப்போதுமே குழந்தையைக் குளிப்பாட்ட ரொம்பவும் குளிர்ந்த நீரும் வேண்டாம், அதிக சூடான நீரும் வேண்டாம்.

    குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோ தான் பால் புகட்ட வேண்டும்.

    • இளம் தம்பதியர் பிறந்த குழந்தையை தங்கள் அருகிலேயே தூங்க வைப்பதற்கு ஆசைப்படுகிறார்
    • குழந்தையை திருப்பி படுக்க வைப்பது அதன் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    பிறந்த குழந்தைகள், பச்சிளங்குழந்தைகளை தனியாக தொட்டிலில் தூங்க வைப்பது வழக்கம். அது குழந்தைகளுக்கு சவுகரியமான சூழலை கொடுக்கும். எந்த அசவுகரியங்களுமின்றி குழந்தைகள் தூங்குவதற்கும் வழிவகுக்கும். இன்றைய காலகட்டத்தில் சில இளம் தம்பதியர் பிறந்த குழந்தையை தங்கள் அருகிலேயே தூங்க வைப்பதற்கு ஆசைப்படுகிறார்கள்.

    சிலர் குழந்தையை தங்கள் மார்பின் மீது குழந்தையின் தலைசாய்த்து தூங்க வைக்கிறார்கள். அப்படி குழந்தையை அரவணைத்தபடியே தூங்கவும் செய்கிறார்கள். மார்பில் குழந்தையை நெருக்கமாக வைத்திருப்பது குழந்தைக்கும், பெற்றோருக்கும் இடையே உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அது பகல் வேளையில் குழந்தையை தூங்க வைப்பதற்குத்தான் பொருந்தும். தாங்களும் தூங்கிய நிலையில் குழந்தையை மார்பின் மீது படுக்க வைப்பது சரியான வழிமுறை அல்ல.

    அது குழந்தைக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். தூங்கிய நிலையில் தங்கள் சவுகரியங்களுக்கு ஏற்ப வலது பக்கம், இடது பக்கம் திரும்பி படுப்பார்கள். அதே நிலையில் குழந்தையையும் திருப்பி படுக்க வைப்பது அதன் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சில சமயங்களில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தி குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

    சில தம்பதியர் தங்கள் இருவருக்கும் இடையே பச்சிளம் குழந்தையை தூங்க வைப்பார்கள். அதுவும் குழந்தைக்கு சவுகரியமான சூழலை கொடுக்காது. பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.

    அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்று நடத்திய ஆய்வின்படி, கடந்த 15 மாதங்களில் பாதுகாப்பற்ற முறையில் தூங்கிய சுமார் 30 குழந்தைகள் உயிரிழந்தனர். அந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் பெற்றோரின் அருகில் தூங்கியவர்கள். அவர்களின் இறப்புகளுக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

    குழந்தைகளை அருகில் தூங்க வைக்கும்போது ஆடைகளால் அதன் முகத்தை மறைப்பது, குழந்தைகளை நெருக்கமாக படுக்க வைக்கும்போது போதுமான அளவு சுவாசிக்க முடியாமல் சுவாசக்கோளாறு பிரச்சினையை எதிர்கொள்வது போன்றவை காரணமாக இருக்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    குழந்தையை தனியாக தொட்டிலில் தூங்க வைப்பதுதான் சரியான வழிமுறை என்பதே மருத்துவர்களின் வாதமாக இருக்கிறது. குழந்தையுடன் நெருக்கமாக இருப்பதை உணரும் வகையில் தொட்டிலை அருகே அமைத்துக்கொள்ளலாம். அதன் மூலம் மூச்சுத்திணறல் உள்பட பிற அசவுகரியங்களில் இருந்து குழந்தையை காக்கலாம். குழந்தை ஆழ்ந்து தூங்குவதற்கும் வழிவகை செய்யலாம்.

    சில தம்பதியர் தங்கள் இருவருக்கும் இடையே பச்சிளம் குழந்தையை தூங்க வைப்பார்கள். அதுவும் குழந்தைக்கு சவுகரியமான சூழலை கொடுக்காது. பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.

    • பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த திரவங்களை கொடுக்க வேண்டும் என பெற்றோர் விரும்புவார்கள்.
    • பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்க வேண்டும்.

    தண்ணீர் தாகத்தை தீர்க்கும் பானமாக கருதப்படுகிறது. இதில் சுவை என்று எதுவும் இருப்பதில்லை. ஆனால் கோடைகாலங்களில் தண்ணீர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது ஏன் தெரியுமா?

    பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த திரவங்களை கொடுக்க வேண்டும் என பெற்றோர் விரும்புவார்கள். ஆனால் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்க வேண்டும். அதில் எல்லா ஊட்டச்சத்துகளும் இருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைப்பர். இந்த கோடைகாலத்தில் குழந்தை உட்கொள்ளும் தாய்ப்பால் அவர்களை நீரேற்றமாக வைத்திருக்க போதுமானதா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். ஆனால் தாய்ப்பால் போதும் என்பது தான் பதிலாக இருக்கிறது.

    தண்ணீர் ஏன் கொடுக்கக்கூடாது?

    பிறந்து சில மாதங்கள் வரை, பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் தண்ணீரை செரிமானம் செய்ய தயாராக இல்லை என்பதே இதற்குக் காரணம். அவர்களின் வளர்ச்சியடையாத சிறுநீரகங்கள் ஊட்டச்சத்து இழப்பினால் எளிதில் பாதிக்கப்படும். பிறந்த குழந்தையின் வயிற்றில் உண்மையில் 1 முதல் 2 டீஸ்பூன்கள் அல்லது 5 முதல் 10 மி.லிக்கு மட்டுமே இடம் இருக்கும். குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பது தேவையில்லாத பொருள்களால் அவர்களின் வயிற்றை நிரப்புவதற்கு சமம். இதனால் வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புகள் மற்றும் கலோரிகளுக்கு இடமளிக்காது. குறிப்பாக தண்ணீரில் எந்த சத்துக்களும் இல்லை. இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கும்.

    குழந்தையின் 6 மாதத்திற்கு பின்னர் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் அரை கப் தண்ணீர் தேவைப்படுகிறது. சில குழந்தைகள் அதிகமாக விரும்பினாலும் கொடுக்கலாம். ஆனால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கூடுதலாக எதுவும் தேவைப்படாது. உங்கள் குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பதற்கு முன், உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு அவர் சொல்லும் அளவுகளில் தண்ணீர் கொடுங்கள்.

    ×