search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teeth Care"

    • கர்ப்ப காலத்தில் பல் பிரச்சனை உண்டாவது வழக்கம் தான்.
    • பல் பாதுகாப்பு பணியில் கர்ப்பம் என்பது பாதிக்கப்படலாம்.

    கர்ப்பம் என்பது பல புதிய உணர்ச்சிகள், அனுபவங்கள் மற்றும் சில பெண்களுக்கு சங்கடமான பக்க விளைவுகளுடன் வருகிறது. கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு இதுபோன்ற பொதுவான கவலைகளில் ஒன்று கர்ப்ப காலத்தில் பல் வலி.

    கர்ப்ப காலத்தில் ஒரு சில பெண்களுக்கு பல் பிரச்சனை உண்டாவது வழக்கம் தான். அதாவது கர்ப்பத்தின் போது அதிகரிக்கும் ஹார்மோன்களால் கிருமிகள் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணிகள் தன் பற்களை தானாகவே பாதிப்புக்குள்ளாக்கி கொள்வதில்லை. கர்ப்பிணிகளின் பற்களை பொறுத்தே குழந்தைகள் பல் அமையும். கர்ப்பத்தின் போது எடுத்துக்கொள்ளும் கால்சியத்தின் அளவு என்பது குறைவாக இருக்குமெனில் குழந்தைக்கு தேவையான கால்சியத்தை அம்மாவின் எலும்பு தருகிறது.

    இருப்பினும், கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது.

    கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது?

    1. ப்ளூரைடு டூத் பேஸ்ட் கொண்டு தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள்.

    2. ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

    3. பல் மருத்துவரை சந்தித்து அவரிடம் அடிக்கடி ஆலோசனை பெற முயலுங்கள். பல் பாதுகாப்பு பணியில் கர்ப்பம் என்பது பாதிக்கப்படலாம். ஓர் உதாரணத்திற்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு பல் மருத்துவர் X-கதிர்களை செலுத்திவிடக்கூடும். எனவே மிகவும் கவனமாக நீங்கள் இருந்திட வேண்டும். இந்த பல் பாதுகாப்பு X-கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மருத்துவரிடம் முன்கூட்டியே கூறுவதன் மூலம் அவர் செலுத்தும் அளவு என்பது மிகவும் கவனத்துடன் கையாளப்படும். அதனால் நீங்கள் கர்ப்பம் என்பதை மருத்துவரிடம் சென்றவுடன் சொல்லிவிட வேண்டியது மிகவும் அவசியம்.

    கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போல் பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திலும் தனி கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு ஈறு நோய்கள், ஈறுகளில் ரத்தம் மற்றும் சீழ் வடிதல் போன்றவை இயல்பாய் ஏற்படும். அவ்வாறு ஈறு நோய்கள் ஏற்பட்டால் டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். அது போல கர்ப்பிணி பெண்களுக்கு பல் சொத்தை எளிதில் ஏற்படும். அதற்கும் முறையான சிகிச்சை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.

    உங்கள் பல் மருத்துவரை அணுக முடியாவிட்டால், கிராம்புத் துண்டை மென்று சாப்பிடுவது அல்லது கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்துவது போன்ற எளிய வீட்டு வைத்தியங்களை நீங்கள் எப்போதும் முயற்சி செய்யலாம். பூண்டு கிராம்பைப் போலவே செயல்படுகிறது மற்றும் பல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். வெதுவெதுப்பான உப்பு நீரில் கழுவுதல் ஈறுகளை ஆற்றவும், வாய்வழி பாக்டீரியாவைக் குறைக்கவும் உதவும்.

    கர்ப்ப காலத்தில் ஈறுகள் வீக்கமடைவது பொதுவானது மற்றும் இந்த காலங்களில் ஈறு அழற்சி மற்றும் பீரியண்டோன்டிடிஸ் ஆகியவற்றின் தீவிரத்தை குறைக்க வாய்வழி சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    * நீங்கள் கடுமையான பல் வலியை அனுபவித்தாலும் வலி நிவாரணி மருந்தை மட்டும் பயன்படுத்த வேண்டாம். சில மருந்துகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி குழந்தையை நேரடியாக பாதிக்கலாம்.

    * உங்களுக்கு ஏதேனும் வீக்கம் இருந்தால், சூடான அல்லது குளிர்ந்த பேக்குகளை வைக்க வேண்டாம், உடனடியாக பல் மருத்துவரை அணுகவும்.

    * நிவாரணத்திற்காக அதிகப்படியான கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். குறைந்தபட்சம் 1-2 சொட்டுகளை மட்டும் பயன்படுத்துங்கள்.

    * சூடான மற்றும் கடினமான சீரான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    * உங்கள் பல் மருத்துவரிடம் கேட்பதற்கு முன், எந்த ஜெல் அல்லது வாய்வழி களிம்புகளையும் பயன்படுத்த வேண்டாம்.

    * கடைசியாக ஆனால் வலியைப் புறக்கணிக்கவோ அல்லது துன்பப்படவோ வேண்டாம். உங்கள் பல் மருத்துவர் உங்களுக்கு வழிகாட்டுவார் மற்றும் உங்கள் துன்பங்களிலிருந்து விடுபட உதவுவார். உங்கள் பல் மருத்துவரைச் சந்திக்கும் போது உங்கள் எல்லா அறிக்கைகளையும் எடுத்துச் செல்வதை உறுதிசெய்யவும்.

    • பல் சிதைவு என்பது நீண்ட கால பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
    • பாக்டீரியாக்கள் ஒட்டும் தன்மை உடையதாக பற்களில் தங்கிவிடுகிறது.

    பல் சிதைவு என்பது இந்தியா முழுவதும் குழந்தை பருவத்தினருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். இது நீண்ட கால பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் பல் நோய் தடுப்பு மையங்களின் அறிக்கைப்படி, ஐந்து முதல் 11 வயது வரையிலான 20 சதவீத குழந்தைகளில் குறைந்தது ஒரு குழந்தையாவது சிதைந்த அல்லது அழுகும் பல் இருக்கப் பெற்று, அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது.

    பற்சிதைவு என்பது வாயில் ஒளிந்திருக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து இத்தகைய பாக்டீரியாக்கள் செழித்து வளர்கின்றன. நாம் உண்ட உணவின் துணுக்குகள் பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்வதால் பெரும்பாலான பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இத்தகைய பாக்டீரியாக்கள் ஒட்டும் தன்மை உடையதாக பற்களில் தங்கிவிடுகிறது.

    இவைகள் நமது பற்களின் எனாமல்லை சுரண்டி அதிக அளவில் பாதிப்பை உருவாக்குகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களால் இத்தகைய பாக்டீரியாக்கள் எளிதில் பற்களில் உருவாகின்றன. குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட்டுகள், குக்கீஸ், பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றினால் பற்களில் அதிக சிதைவு ஏற்படுகிறது.

    இதில் நல்ல செய்தி என்னவென்றால், பல் சிதைவு என்பது தடுக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. பற்சிதைவை சரியான பல் துலக்குதல் நுட்பங்கள் மற்றும் ஒரு பல் மருத்துவரின் முறையான சிகிச்சை முறை ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்கு பல் சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கலாம்.

    மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்ட புளோரைடு பற்பசையுடன் உங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல்துலக்க செய்ய வேண்டும், அதிலும் படுக்கைக்கு முன் பல் துலக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

    • குழந்தையின் பற்களை ஆரம்பத்திலிருந்து பராமரிக்க வேண்டியது அவசியம்
    • குழந்தைகளுக்கு, முதலில் தானாக விழும் பல் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

    குழந்தையின் பற்களை ஆரம்பத்திலிருந்து பராமரிக்க வேண்டியது அவசியம். இதில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பல் நோய்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    1. பல் சிதைவு:

    பல் சிதைவு என்பது இந்தியா முழுவதும் குழந்தை பருவத்தினருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். இது நீண்ட கால பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் பல் நோய் தடுப்பு மையங்களின் அறிக்கைப்படி, ஐந்து முதல் 11 வயது வரையிலான 20 சதவீத குழந்தைகளில் குறைந்தது ஒரு குழந்தையாவது சிதைந்த அல்லது அழுகும் பல் இருக்கப் பெற்று, அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது. பற்சிதைவு என்பது வாயில் ஒளிந்திருக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து இத்தகைய பாக்டீரியாக்கள் செழித்து வளர்கின்றன. நாம் உண்ட உணவின் துணுக்குகள் பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்வதால் பெரும்பாலான பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இத்தகைய பாக்டீரியாக்கள் ஒட்டும் தன்மை உடையதாக பற்களில் தங்கிவிடுகிறது. இவைகள் நமது பற்களின் எனாமல்லை சுரண்டி அதிக அளவில் பாதிப்பை உருவாக்குகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களால் இத்தகைய பாக்டீரியாக்கள் எளிதில் பற்களில் உருவாகின்றன. குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட்டுகள், குக்கீஸ், பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றினால் பற்களில் அதிக சிதைவு ஏற்படுகிறது. இதில் நல்ல செய்தி என்னவென்றால், பல் சிதைவு என்பது தடுக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. பற்சிதைவை சரியான பல் துலக்குதல் நுட்பங்கள் மற்றும் ஒரு பல் மருத்துவரின் முறையான சிகிச்சை முறை ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்கு பல் சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கலாம். மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்ட புளோரைடு பற்பசையுடன் உங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல்துலக்க செய்ய வேண்டும், அதிலும் படுக்கைக்கு முன் பல் துலக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

    2. வாய் துர்நாற்றம்:

    இந்த வாய் துர்நாற்றம் ஹலிடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது குறிப்பிட்ட வயதினரை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த பாக்டீரியா காலனிகள் நமது வாயில் தங்கியுள்ள உணவு, திரவம் மற்றும் பிளேக் ஆகியவற்றை உண்கின்றன. அவை சாப்பிடும்போது, ஹைட்ரஜன் சல்பைடை உற்பத்தி செய்கின்றன, இதனால்தான் வாயில் துர்நாற்றம் வீசுகிறது. பெரியவர்களைப் போலவே, காலையில் குழந்தைகள் எழுந்தபின், துர்நாற்றம் சகஜமாக ஏற்படுகிறது. இருப்பினும், உங்கள் குழந்தையின் துர்நாற்றம் நாள் முழுவதும் நீடித்தால், அது ஒரு பெரிய சிக்கலைக் கொடுக்கும். இந்த வாய் துர்நாற்றத்தை தடுப்பதற்கு சரியான பல் சுகாதாரம் பேணுவதே சிறந்த வழியாகும். பாக்டீரியா எதிர்ப்பு மவுத்வாஷ் பயன்படுத்துவது வாய் துர்நாற்றத்தை குறைக்க உதவும், மேலும் நாக்கைத் துலக்குவது வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவும்.

    3. பல் கூச்சம் :

    குழந்தைகளுக்கு ஏற்படும் மற்றொரு பொதுவான பிரச்சினை பல் கூச்சம் ஆகும். சூடாகவோ அல்லது குளிர்ந்த உணவுகள் மற்றும் திரவங்கள் ஆகியவற்றை குழந்தைகள் எடுத்துக்கொள்ளும்போது அது அவர்களுக்கு எரிச்சலையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தினால், அவர்களுக்கு பல் கூச்சம் இருப்பதை நாம் உணரலாம். சில நேரங்களில், குளிர்ந்த அல்லது சூடான காற்றை சுவாசிப்பது கூட அவர்களுக்கு வலியை ஏற்படுத்தும். பல் கூச்சம் என்பது ஒரு மோசமான அறிகுறி அல்ல என்றாலும், அவை மிகவும் கடுமையான பல் பிரச்சினையை சுட்டிக்காட்டக்கூடும்.

    4. பெருவிரல் சூப்புதல்:

    பொதுவாக குழந்தைகள் தனது பெரு விரலை வாயில் வைத்து சூப்பினேன் வழக்கமாக கொண்டிருக்கும். நிரந்தர பற்கள் வளர தொடங்கும் போது குழந்தைகள் இன்னும் பெரு விரலை சூப்பிக் கொண்டிருந்தால், அது பலவிதமான பிற சிக்கல்களை ஏற்படுத்தும். பெரு விரலை சூப்புவது சாதாரண வாய்வழி வளர்ச்சியை சீர்குலைத்து, பற்களின் சீரமைப்பு மற்றும் வாயின் மேல்பகுதி அமைப்பை பாதிக்கும். குழந்தைகளுக்கு இந்த பழக்கம் தொடர்ந்தால், உங்கள் பல் மருத்துவரைத் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனை பெறலாம். ஒரு அனுபவமிக்க பல் மருத்துவர் கூடுதல் உதவிகளையும், ஆதரவையும் வழங்குவார். மேலும் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த உங்கள் குழந்தையுடன் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்த ஆலோசனையையும் வழங்குவார். இந்த ஆலோசனை வழங்குவதற்கு என சென்னையில் பல குழந்தைகள் பல் சிகிச்சை மையங்கள் உள்ளன.

    5. பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள்:

    ஈறு நோய் அல்லது ஈறு அழற்சி என்பது திசுக்களின் அழற்சி காரணமாக ஏற்படுகிறது. இது பெரும்பாலும் வாய் வழி மற்றும் பல் சுகாதாரம் மற்றும் பிளேக் கட்டமைப்பால் ஏற்படுகிறது. மேலும் இது தொடர்ந்தால் எலும்பு பாதிப்பு மற்றும் பல் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது . பற்களின் அடிப்பகுதியில் பிளேக் மற்றும் டார்டார் வைப்புக்கள் உருவாகும்போது, அவை ஈறுகளை பாதிக்கத் தொடங்குகின்றன. ஈறு அழற்சியின் ஆரம்ப கட்டங்களில், ஒரு குழந்தையின் ஈறுகள் பெரும்பாலும் வீங்கி, சிவப்பு நிறத்தில் இருக்கும், மேலும் அவை பற்களிலிருந்து விலகி, மிதந்த பின் எளிதில் இரத்தம் கசியும். ஈறு நோயினால் வாய் துர்நாற்றம் மற்றும் குழந்தையின் வாயில் எப்போதும் ஒரு மோசமான சுவை இருக்கும். ஈறுகளில் ஏற்படும் நோய்களை எளிதாக தடுக்க முடியும். தினசரி இரண்டு முறை சரியான முறையில் பல் துலக்குதல், வாய் கொப்பளித்தல் மற்றும் முறையான பல் மருத்துவர் ஆலோசனை பெறுதல் போன்ற எளிய வழிமுறைகளால் இதனை தவிர்க்கலாம்.

    6. ப்ரூக்ஸிசம்:

    பற்களை ஒன்றோடு ஒன்று தேய்ப்பது ப்ரூக்ஸிசம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் பள்ளி வயது குழந்தைகளிடையே ஒரு பொதுவான பிரச்சனையாக திகழ்கிறது. 10 குழந்தைகளில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பற்களை தேய்க்கவும் அல்லது பற்களை எடுக்கவும் செய்வார்கள். சில நேரங்களில் ஒரு குழந்தை தானாகவே ப்ரூக்ஸிஸத்தை உருவாக்குகிறது, ஏனெனில் அவற்றின் மேல் பற்கள் அவற்றின் கீழ் பற்களுடன் சீராக இருப்பதில்லை. இதனால் சில நேரங்களில் அந்த குழந்தைகளுக்கு பற்களில் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் குழந்தைகள் வலியின் விளைவாக பற்களை தேய்ப்பார்கள். பொதுவாக ப்ரூக்ஸிசத்திற்கு என எந்த தனிப்பட்ட சிகிச்சையும் தேவையில்லை. குழந்தைகள் வளர்ந்து வரும் போது இந்த பிரச்சனை தானாக தற்போது. இருப்பினும் இந்த பழக்கம் தொடர்ந்தால், அது படிப்படியாக பற்களை சேதப்படுத்த கூடும். இதன் விளைவாக கடுமையான பல் வலியும் ஏற்படக்கூடும்.

    7. கேங்கர் சோர்ஸ் :

    கேங்கர் சோர்ஸ் என்பது சிறிய வகை புண்கள் ஆகும். இந்த புண்கள், வாயினுள், ஈறுகளில் அல்லது நாக்கில் உருவாகும். பொதுவாக, இந்த புண்கள் ஒரு சிவப்பு எல்லையால் சூழப்பட்ட சாம்பல் அல்லது வெள்ளை மையத்தைக் கொண்டு இருக்கும். காய்ச்சல் கொப்புளங்கள் மற்றும் சளி புண்கள் ஆகியவற்றிலிருந்து கேங்கர் புண்கள் முற்றிலும் வேறுபட்டவை. இவை பொருள் குழந்தைகளிடமிருந்து மற்றொரு குழந்தை பரவாது. பெரும்பாலும் இவை ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் தானாக மறைந்து போய்விடும். இதனால் ஒரு குழந்தைக்கு தண்ணீர் குடிப்பதையும், உணவு உட்கொள்வதில் மிகுந்த சிரமங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த புண்கள் தனியாகவோ, கூட்டாகவோ ஏற்படலாம். இந்த புண்கள் உருவாக காரணமாகும் காரணிகளாக கீழ்க்கண்டவற்றை கொள்ளலாம்.,

    1.டயட்

    2.மன அழுத்தம் அல்லது அதிர்ச்சி

    3.அலர்ஜி

    4.ஊட்டச்சத்து குறைபாடுகள்

    5. தொற்று.

    8. குழந்தைகளின் பற்கள் இழப்பு :

    பல குழந்தைகளுக்கு, முதலில் தானாக விழும் பல் ஒரு வரப்பிரசாதம் ஆகும். அப்படி தானாக பல் விழுந்த அந்த இடத்தில் விரைவில் புதிய ஒரு பல் வருகை தரக்கூடும், மேலும் குழந்தைகளின் சிறிய "குழந்தை பல்" விரைவில் "வளர்ந்த பற்களால்" மாற்றம் பெற்றுவிடும். பல் இழப்பு என்பது வளர்ச்சியின் இயற்கையான கட்டமாகும். முதல் இழந்த பல் பொதுவாக நடுத்தர முன் பற்களில் ஒன்றாகவே இருக்கும். இது பொதுவாக ஆறு வயதில் ஏற்படக்கூடும். ஒரு குழந்தை 10 முதல் 12 வயது வரை இருக்கும் வரை மோலர்கள் இழக்கப்படுவதில்லை, மேலும் பெரும்பாலான குழந்தைகள் 13 வயதிற்குள் 28 நிரந்தர பற்களின் முழு தொகுப்பையும் பெற்று விடுகிறார்கள். பல குழந்தைகளுக்கு, அவர்களின் முதன்மை அல்லது "குழந்தை" பற்களை இழக்கும் போது அதிக வலி ஏற்படுவதில்லை. இருப்பினும் அது வெளியேற மறுத்தால் அல்லது குழந்தைகளுக்கு அதிக வலியை ஏற்படுத்தினால், உங்கள் பல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    9. ஒன்றின்மேல் ஒன்றாக வளரக்கூடிய முதன்மை பல்:

    சில நேரங்களில் ஒரு குழந்தைக்கு தானாக வேண்டிய முதன்மை பல் விழாமல் போகலாம். அப்படி ஒரு முதன்மை பல் விழாவிட்டால், அதன் அடியில் இருக்கும் நிரந்தர பல் அதே இடத்தில் முளைத்து வர முயற்சிக்கும். இதன் விளைவாக, ஒரு இடத்தில் இரண்டு பற்கள் இருக்கக்கூடும். அல்லது, மற்ற பற்கள் அதைச் சுற்றி தளர்த்தப்படுவதால் ஒரு குழந்தையின் பல் பல ஆண்டுகளாக திடமாக இருக்கலாம். இந்த நிகழ்வுகளால், குழந்தைக்கு முதன்மையானதை மாற்றுவதற்கு நிரந்தர பல் இருக்காது, எனவே முதன்மை பல் வாயிலிருந்து வெளியே விழாது. இந்த வகை பற்களுக்கு, ஒரு பல் மருத்துவர் முறையாக சிகிச்சை அளித்து முதன்மை பற்களை அகற்றுவார், இதனால் நிரந்தர பல் போட்டி இல்லாமல் வளரும் வாய்ப்பு உருவாகிறது. பற்கள் முழுமையாக வெளிவந்தவுடன் எந்தவொரு தவறான வடிவமைப்பையும் சரிசெய்ய பிரேஸ்களைப் பயன்படுத்தலாம்.

    10.டென்டல் அன்க்ஸியிட்டி:

    டென்டல் அன்க்ஸியிட்டி என்பது நேரடியாக பல் ஆரோக்கியத்துடன் தொடர்புப்படுத்தப்படவில்லை என்றாலும் ஒரு குழந்தையை அடிக்கடி பல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் அவர்களுக்கு ஒருவித பயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவர்கள் முறையான பராமரிப்பு முறைகளை தெரிந்து கொள்ள முடியாமல், பற்களில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை அறிந்து கொள்ளமுடியாமல், ரூட் கேனல், பல் பிடுங்குதல், மற்றும் அவசர பல் சிகிச்சை ஆகியவற்றை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனை போக்க தலைசிறந்த பல் மருத்துவ நிபுணர் ஆல் மட்டுமே முடியும். ஒரு சிறந்த குழந்தைகள் பல் மருத்துவ நிபுணர், மருத்துவ சிகிச்சையளிக்கும் அறைக்குள், குழந்தைகளுக்கு பல் மருத்துவத்தை பற்றி நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் விதத்தில் கட்டமைப்புக்களை செய்திருப்பார். சென்னையில் குழந்தைகளுக்கு என தனியாக பல் மருத்துவம் வழங்கும் சிகிச்சை மையங்கள் அதிக அளவில் உள்ளன.

    • பல் கட்டுவதிலும் கம்ப்யூட்டரின் உதவியுடன் செய்யக்கூடிய நவீன முறைகள் உள்ளன.
    • ஈறு நோய் உள்ளவர்கள் அனைத்து வயதிலும் இருப்பார்கள்.

    மதுரையை சேர்ந்த நளா பல் மருத்துவமனை டாக்டர் ஜெ.கண்ணபெருமான் கூறியதாவது:-

    உடல் ஆரோக்கியத்திற்கும் உள்ளத்தில் தன்னம்பிக்கைக்கும் பற்களின் ஆரோக்கியம் மிக அவசியம். வாய் தான் உடலின் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. சர்க்கரை நோய், ரத்தசோகை, வயிறு மற்றும் குடல் பிரச்சினைகள் போன்ற பல உடல் உபாதைகளை வாயின் ஆரோக்கியத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதே போல் உடலுக்கு பற்களின் தேவை பல பரிமாணங்களில் இருக்கும். உணவை நன்றாக சாப்பிடுவதற்கு, தடையின்றி பேசுவதற்கு, அழகாக சிரிப்பதற்கு என பற்களின் பயன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

    இம்பிளான்ட் நிரந்தர பற்கள்

    இம்பிளான்ட் என்பது டைட்டானியம் என்னும் உலோகத்தால் ஆனது. இது பற்களின் வேர் பகுதிக்கு பதிலாக செயலாற்றக்கூடியது. . இம்பிளான்ட் பொருத்துவதால் மற்ற பற்களுக்கோ உடலுக்கோ எந்த விதமான பக்கவிளைவுகளும் வராது. இம்பிளான்ட் பொருத்தி அதன் மேல் நிரந்தர பற்கள் கட்டுவதன் மூலம் இயற்கை பற்கள் போன்ற பலமான பற்களை பெறலாம்.

    யார் செய்து கொள்ளலாம்?

    இம்பிளான்ட் நிரந்தர பல் கட்டும் சிகிச்சை வயதானவர்களுக்கு தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் பல் கட்ட வேண்டிய தேவை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.

    இளம் வயதினருக்கு முக அழகிற்கும் சிரிப்பிற்கும் தேவைப்படும். அலுவலகம் செல்பவர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு சரியாக பேசுவதற்கு தேவைப்படும். வயதானவர்களுக்கு நன்றாக சாப்பிட தேவைப்படும். இதில் எது குறைந்தாலும் வாழ்க்கை முறையில் பல அசவுகரியங்களை சந்திக்க நேரிடும்.

    சொத்தை பற்கள், ஆடும் பற்கள், விளையாடும் பொழுதோ அல்லது கீழே விழுந்தோ உடையும் பற்கள் என பல விதமான சூழ்நிலையில் பல் கட்டும் சிகிச்சை தேவைப்படும். ஈறு நோய் உள்ளவர்கள் அனைத்து வயதிலும் இருப்பார்கள். ஈறு நோயால் வலி வராது. ஆனால் மெதுவாக பரவி பற்களை ஆட செய்து விடும். இது ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே வரும். மரபு வழியாகவோ அல்லது வாழ்க்கை முறை மற்றும் சரியான கவனிப்பு இல்லாததால் பலருக்கும் ஈறு நோய் மற்றும் பற்களில் பாதிப்பு வருகிறது. எனவே எந்த வயதிலும் பற்களின் தேவை உள்ளவர்கள் இம்பிளான்ட் பற்கள் பொருத்தும் சிகிச்சையை செய்து கொள்ளலாம்.

    பல் பிரச்சினை காரணமாக பல் செட் போட்டுகொண்டு சாப்பிட அவதிப்படுவார்கள், பொது இடங்களில் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் சங்கடப்படுவார்கள். ஒரு சில பற்கள் முதல் பற்களே இல்லாதவர்கள் என எல்லா தரப்பினரும் எந்த தயக்கமுமின்றி இம்பிளான்ட் நிரந்தர பற்கள் பொருத்தும் சிகிச்சை செய்து கொள்ளலாம்.

    இம்பிளான்ட் சிகிச்சையின் நவீன புரட்சி

    இன்றைய நவீன சிகிச்சை முறையில் ஐரோப்பிய இம்பிளான்ட்கள் மிகவும் முக்கியமானதாகும். எலும்பு தேய்ந்து போனதால் நிரந்தர பல் கட்ட முடியாமல் பல் செட் போடுபவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட இம்பிளான்ட்கள் உள்ளன. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, இருதய நோய், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு சிகிச்சை முறையில் சில மாற்றங்களை செய்தால் எந்த தடையுமின்றி இவர்கள் அனைவரும் இம்பிளான்ட் சிகிச்சையின் மூலம் நிரந்தர பற்கள் பெறலாம்.

    பல் கட்டுவதிலும் கம்ப்யூட்டரின் உதவியுடன் செய்யக்கூடிய நவீன முறைகள் உள்ளன. பற்களின் அளவை கம்ப்யூட்டரில் பதிவு செய்தால் நிரந்தர பற்களை நம் வாய்க்கேற்ப துல்லியமாக வடிவமைத்து கொடுத்துவிடும். அதேபோல் கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கப்படும் நிரந்தர பற்கள் செராமிக் மற்றும் ஜிர்க்கோனியா போன்ற அதி நவீன பொருட்களால் செய்யப்படுகின்றன. இவை மிக லேசானதாகவும் அதே சமயம் அதிக பலம் உள்ளதாகவும் இருக்கும். எனவே பல் கட்டிய உணர்வே இல்லாமல் இயற்கை பற்கள் போலவே இருக்கும்.

    இம்பிளான்ட் நிரந்தர பற்கள் பொருத்தியவர்கள் விரும்பியதை சாப்பிட முடியும். மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியும். இதனால் உடலின் ஆரோக்கியம் வெகுவாக முன்னேறும். அதே போல் பேசுவது, சிரிப்பது அனைத்திலும் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் ஒன்றிணைந்து வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தையின் பொக்கை வாய்ச் சிரிப்புக்கு மயங்காதவர் யாருமே இருக்க முடியாது.
    • குழந்தையின் பற்களை ஆரம்பத்திலிருந்து பராமரிக்க வேண்டியது அவசியம்.

    தாய்ப்பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைகளின் பல் பராமரிப்பு பற்றிய சில அத்தியாவசியத் தகவல்கள். ஏன் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும்போதே சொத்தையாக வளர்கிறது என்பதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.

    குழந்தை பால் குடித்து முடித்த ஒவ்வொரு முறையுமே, நம் விரலில் தூய்மையான துணியை சுற்றி குழந்தையின் ஈறுகளை நன்றாக சுத்தம் செய்துவிடவேண்டும்.

    குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைத்ததும், அவர்களுக்கென இருக்கும் பிரத்தியேக டூத் பிரஷ், பேஸ்ட் கொண்டு தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல் துலக்கிவிடவும்.

    பின்னர் பெரியவர்கள் பயன்படுத்தும் டங்க் க்ளீனரை பயன்படுத்தாமல், தூய்மையான துணியாலோ அல்லது குழந்தைக்கு பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் கொண்டோ நாக்கினை சுத்தம் செய்துவிடலாம்.

    பெரும்பாலான அம்மாகள், இரவு நேரத்தில் பால் புட்டியை வாயில் வைத்தபடியே குழந்தைகளை தூங்க வைப்பார்கள்.

    அதனால் இரவு முழுக்க குழந்தையின் பற்களில் பாலில் இருக்கும் இனிப்பு, பாக்டீரியாக்களுடன் வினைபுரிய வாய்ப்பிருக்கிறது. இச்செயல்பாடு தொடர்ந்தால், சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பல் சொத்தை உள்ளிட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது.

    சிறுவயதில் குழந்தைகளுக்கு பற்களில் பிரச்சனை உண்டானால் நிரந்த பற்கள் முளைக்கும்போது சரியாகிவிடும் என குழந்தைகளின் பல் பராமரிப்பில் பல பெற்றோர்கள் கவனம் செலுத்த மாட்டார்கள்.

    இது முற்றிலும் தவறானது. பால் பற்கள், நிரந்தர பற்களின் சக்தியையும் தாங்கி வளர்கின்றன என்பதால், இதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    வாயில் விரல் வைத்து சூப்புவது, நாக்கினை இரண்டு பற்களுக்கு இடைபட்ட பகுதியில் அடிக்கடி வைத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகளை பெரும்பாலான குழந்தைகள் செய்வார்கள். இதனால் அவர்கள் பல் வரிசை சீரற்றதாகவும், முக அமைப்பு மாறவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளின் இந்த நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

    • குழந்தைகளுக்கு புளூரைடு நிரம்பிய பற்பசையை பயன்படுத்த வேண்டும்.
    • குழந்தைகளின் பற்களை பெற்றோர் சுத்தம் செய்ய வேண்டும்.

    குழந்தைகளுக்கான பற்கள் பாதுகாப்பு குறித்து டாக்டர் வினுசியா பாலாஜி கூறுகையில், குழந்தைகள் பிறந்த 6 மாதங்களில் இருந்து பற்கள் வளர தொடங்கிவிடும். சிறு குழந்தைகளுக்கு விரலில் மாட்டிக்கொண்டு பல் துலக்கும் பிரஸ்(பிங்கர் பிரஸ்) மூலம் பல் துலக்க பழக்கப்படுத்த வேண்டும்.

    குழந்தைகளுக்கு புளூரைடு நிரம்பிய பற்பசையை பயன்படுத்த வேண்டும். தூங்கும் முன்பு பால்குடிக்கும் பழக்கம் உள்ள குழந்தைகள் பல் துலக்கிவிட்டு தூங்க வேண்டும். அவ்வாறு முடியாத பட்சம் ஈர துணியை கொண்டு குழந்தைகளின் பற்களை பெற்றோர் சுத்தம் செய்ய வேண்டும்.

    முடிந்த வரை குழந்தைகளை வாயு நிரப்பட்ட குளிர்பானங்களை குடிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும். நொறுக்கு தீனிகளான சிப்ஸ் வகைகள், சாக்லேட் உள்ளிட்டவற்றை குறைக்க செய்யலாம். பல் சிகிச்சையை பொறுத்தவரை பெரியவர்களை விட குழந்தைகளுக்கு செய்வது மிகவும் கடினம்.

    எனவே குழந்தைகளுக்கு சொத்து சேர்ப்பதை விட, பற்களில் சொத்தை சேர்க்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

    மேற்சொன்ன ஆலோசனைகளை பின்பற்றினால், ஆரோக்கியமான புன்னகை உங்கள் வசம் என்றார்கள்.

    • பற்களின் வேர் வளரும்போது, பற்கள் மேல் புறமாக வளரும்.
    • முடி, நகம் போன்று பற்களும் ஒரு கடினமானத் திசுவாகும்.

    பற்கள் குழந்தைகளுக்கு முளைக்கும் போதெல்லாம் காய்ச்சல் வரும். பற்கள் முளைக்கும்போது குழந்தைகள் கொஞ்சம் அதி தீவிரமாகவும் செயல்படுவார்கள்.

    குழந்தைகள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கையிலே 6-8வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன. கருவில் 14-வது வாரம் நிறைவடையும்போது, ஈறுகளும் பால் பற்களும் குழந்தைகளின் உடலுக்குள் தோன்றிவிடும்.

    தாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத் தொடங்குகின்றன. பற்கள் வருவதன் அறிகுறிகள் வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல் வாயை நரநரவென்று கடித்துக் கொண்டிருத்தல் போன்ற அறிகுறிகள்.

    ஈறின் உள்பகுதியில் உள்ள எம்பிரியானிக் செல்களில் இருந்து பற்கள் தோன்றி, ஈறினைத் துளைத்து வெளிவருகிறது. முடி, நகம் போன்று பற்களும் ஒரு கடினமானத் திசுவாகும். இவை நரம்பு கிளைகளின் வேர்களைப் பிடித்துக் கொண்டு வளருகின்றன. பல் முளைக்கும் நிலையானது 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு வெளியே வருகின்றன.

    குழந்தை பருவத்தில் ஒவ்வொரு 6 மாத இடைவெளியில், குறைந்தது 4 பற்கள் முளைக்கின்றன. பற்களின் வேர் வளரும்போது, பற்கள் மேல் புறமாக வளரும். 8 மாதம் - 6 வயது வரை, பற்கள் வேகமாக வளருகின்றன. ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு பற்கள் விரைவாகத் தோன்றி, விரைவாக வளர்கின்றன.

    • பற்களை பாதுகாத்து பாதுகாப்பான வாழ கற்றுக்கொள்வோம்.
    • பாக்டீரியா என்ற நுண் கிருமிகள் ஈறு நோயை உண்டாக்கும்.

    காரைக்குடி மணீஸ் பல் மருத்துவமனை டாக்டர் மணிகண்டன் விளக்கம்

    பொதுவாக இருதய நோய் உள்ளவர்களுக்கு ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை தரும். மேலும் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு பாக்டீரியா என்ற நுண் கிருமிகள் ஈறு நோயை உண்டாக்கும். அதன் மூலம் கிருமிகள் நமது ரத்தக்குழாயில் கலந்து இருதயத்தில் அடைப்பு உண்டாகும்.

    Atherosclerosis இந்த பிரச்சினை உள்ள நிறைய பேருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் இருதய நோய் உள்ளவர்கள் பல் மருத்துவரை அணுகும் போது இருதய நோய் உள்ளவர்கள் தாங்கள் எடுக்கும் மாத்திரைகள் குறித்த விவரங்களை மருத்துவர்களிடம் தெளிவாக எடுத்து கூற வேண்டும்.

    ஈறுகளில் உள்ள கிருமிகளை உண்டாக்கும் இன்பக்‌ஷன் மூலமாக நமது மூளையில் இருக்கும் செல்கள் பாதித்து நமக்கு ஞாபக மறதி மற்றும் அல்சீமர் போன்ற நோய்களை உண்டாக்கும். இப்படியும் ஆகுமா என பலருக்கும் தெரிவதில்லை. அதனாலேயே பலரும் பல் பிரச்சினையை அலட்சியமாக எடுத்துக்கொள்கின்றனர்.

    நீரழிவு நோய் உள்ள ஒரு சிலருக்கு எவ்வளவு மாத்திரை எடுத்துக்கொண்டாலும், சாப்பாடு திட்டமாக எடுத்துக்கொண்டாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையவே குறையாது. ஏன் என்றால் அவர்களின் ஈறுகளில் உள்ள கிருமிகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விடாது. எனவே நமது பற்களை பாதுகாத்து பாதுகாப்பான வாழ கற்றுக்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாப்பிட்டவுடன் கண்டிப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும்.
    • தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம்.

    முகத்திற்கு அழகு சேர்க்கும் விஷயங்களில் பற்களுக்கும் முக்கிய பங்குண்டு. அதை எப்படி பாதுகாப்பது என தெரிந்து கொள்வோமா...?

    குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்யவேண்டும். தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம். சாப்பிட்டவுடன் கண்டிப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும். சிலருக்கு சிறு வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால், அவர்களது முக அமைப்பே மாறிவிடுகிறது. இதற்குக் காரணம், குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே.

    பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும் பட்சத்தில், பற்கள் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருக்கின்றன. பற்கள் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பித்து விடுகின்றன. எனவே, 4 வயதுக்கு மேல் குழந்தைகள் இந்தப் பழக்கத்தைத் தொடர அனுமதிக்கக்கூடாது.

    பல் துலக்கும்போது பலரும் தெரியாமலேயே தவறு செய்கிறார்கள். அது, பற்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பல் ஈறுகளுக்கு கொடுக்க மறப்பதுதான்.

    ஈறுகளுக்கும், பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளிகளில் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் தங்குவதால்தான் ஈறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க ஈறுகளை எப்படி பாதுகாப்பது என்பதை பல் மருத்துவர்கள் மூலம் அறிந்து, அதை குழந்தைகளுக்குக்கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால், பிற்காலத்தில் பல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

    • குழந்தைகளை தினமும் இரு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும் சொல்லித்தர வேண்டும்.
    • சாப்பிட்டதும் குழந்தைகளை வாய் கொப்பளித்துக் கொள்ள பழக்கப்படுத்துங்கள்.

    மழலைகளின் புன்னகை.... அனைவருக்குமே மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுப்பவை. குழந்தைகளின் முத்துப்போன்ற பற்களை பராமரிக்கத் தேவையான ஆலோசனைகளை பார்க்கலாம்...

    * பிறந்த நாளில் இருந்தே குழந்தையின் பல் பராமரிப்பில், பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பால் பற்கள் முளைத்திராத குழந்தைகள் பால் குடித்து முடித்த ஒவ்வொரு முறையுமே, நம் விரலில் தூய்மையான துணியை சுற்றி குழந்தையின் ஈறுகளை நன்றாக சுத்தம் செய்துவிடவேண்டும்.

    * குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைத்ததும், அவர்களுக்கென இருக்கும் பிரத்தியேக டூத் பிரஷ், பேஸ்ட்(பற்பசை) கொண்டு தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல் துலக்கிவிடவும். பின்னர் பெரியவர்கள் பயன்படுத்தும் டங்க் க்ளீனரை பயன்படுத்தாமல், தூய்மையான துணியாலோ அல்லது குழந்தைக்கு பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் கொண்டோ நாக்கினை சுத்தம் செய்துவிடலாம்.

    * பெரும்பாலான அம்மாகள், இரவு நேரத்தில் பால் புட்டியை வாயில் வைத்தபடியே குழந்தைகளை தூங்க வைப்பார்கள். அதனால் இரவு முழுக்க குழந்தையின் பற்களில் பாலில் இருக்கும் இனிப்பு, பாக்டீரியாக்களுடன் வினைபுரிய வாய்ப்பிருக்கிறது. இச்செயல்பாடு தொடர்ந்தால், சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பல் சொத்தை உள்ளிட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. மேலும் அனைவருமே இனிப்பு சார்ந்த எந்த பொருட்களை சாப்பிட்ட பின்னரும் தண்ணீரால் வாயை கொப்பளித்து மற்றும் தண்ணீர் குடிப்பதன் மூலம் இனிப்பானது ஓராளவாவது பற்களில் தங்குவதை தவிர்க்க முடியும்.

    * பால் பல் பிரச்சனை தானே; நிரந்த பற்கள் முளைக்கும்போது சரியாகிவிடும் என குழந்தைகளின் பல் பராமரிப்பில் பல பெற்றோர்களும் போதிய கவனமின்மை மற்றும் விழிப்புணர்வின்மையுடன் இருப்பார்கள். பால் பற்கள், நிரந்தர பற்களின் சக்தியையும் தாங்கி வளர்கின்றன என்பதால், பால் பல் பிரச்சனை நிரந்தர பற்களும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * குழந்தைகளின் 7-12 வயதிற்குள் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைத்திருக்க வேண்டும். இதில் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின், கட்டாயமாக பல் மருத்துவரை அணுக வேண்டும்.

    * வாயில் விரல் வைத்து சூப்புவது, நாக்கினை இரண்டு பற்களுக்கு இடைபட்ட பகுதியில் அடிக்கடி வைத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகளை பெரும்பாலான குழந்தைகள் செய்வார்கள். இதனால் அவர்கள் பல் வரிசை சீரற்றதாகவும், முக அமைப்பு மாறவும் வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளுக்கு தொடர்ந்து விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், விரல்களில் வேப்பம் எண்ணெய்யை(Neem Oil) தடவி விடலாம். பல குழந்தைகள் விரலில் தடவிய எண்ணெய்யை துடைத்துவிட்டு, மீண்டும் விரல் சூப்புவார்கள். இப்படி தவிர்க்க முடியாத சூழலில் பல் மருத்துவரை அணுகி, பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை செய்யலாம்.

    * குழந்தைகளின் தாடை அமைப்பு, பல் வரிசை ஆகியவை சரியாக இருக்கின்றதா என அவ்வபோது கவனிக்க வேண்டும். பல் வரிசை சீரற்ற தன்மையில் இருந்தால் எந்த வயதில் க்ளிப் அணிய வேண்டும், எந்த வகையான க்ளிப் அணிய வேண்டும் என்பது போன்ற விபரங்களை பல் மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யலாம்.

    * குழந்தைகளை தினமும் இரு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும் என சொன்னால், நீ இரண்டு வேளைகளிலும் பல் துலக்குகிறாயா? என நம்மையே எதிர்கேள்வி கேட்பார்கள். ஆக பெற்றோர்களாகிய நாமும் தினமும் இருவேளைகளிலும் பல் துலக்குவதை கட்டாயமாக செய்தால்தான், நாம் சொல்வதை குழந்தைகளும் கேட்பார்கள்.

    * சிறு வயதிலேயே ஐஸ்கிரீம், சாக்லேட், பிஸ்கட் சாப்பிட்டால் பல் பிரச்சனைகள் வரும் என பல பெற்றோர்களும் குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பதுண்டு. சிறு வயதில் இதுபோன்ற உணவுப் பொருட்களை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவதை தவிர்க்காமல், கட்டுப்பாடுடன் சாப்பிடச் சொல்லுங்கள். ஆனால், சாப்பிட்டதும் அவர்களாகவே வாய் கொப்பளித்துக் கொள்ள பழக்கப்படுத்துங்கள்.

    * சிறு வயதிலேயே பல் சொத்தை, இடைவிடாத பல் கூச்சமும், பல் வலியும், சீரற்ற பல்வரிசை என எத்தகைய பல் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அருகிலுள்ள மெடிக்கல், பல் சாராத மருத்துவர்களை அணுகி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதை தவிர்த்து, பல் மருத்துவரை அணுகி பிரச்சனையை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்து கொள்வது சிறந்தது.

    • கர்ப்ப காலத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்துக்குக் கூடுதல் பராமரிப்பு அவசியம்.
    • காலை, இரவு என இரு வேளையும் பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

    உடலின் ஆரோக்கியத்தைப் போலவே, பற்களின் ஆரோக்கியமும் முக்கியமானது. அதிலும், கர்ப்ப காலத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்துக்குக் கூடுதல் பராமரிப்பு அவசியம். கர்ப்ப காலத்திற்கு முன்னும், கர்ப்ப காலத்திலும் பற்களைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து சில ஆலோசனைகள் இதோ:

    கர்ப்ப காலத்தில் சீரான இடைவெளியில் உடலைப் பரிசோதனை செய்து கொள்வது போல, பற்கள் சார்ந்த பிரச்சினைகள் ஏதேனும் உள்ளதா? என்பதைக் கண்டறிய பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அதிலும், தாய்மைக்குத் தயாராகும் முன்னரே பெண்கள் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதில், பற்களில் பிரச்சினை, சொத்தை ஏதேனும் உள்ளதா, ஈறுகளின் நிலை எப்படி இருக்கிறது என அறிய வேண்டும்.

    பிரச்சினை இருப்பதைக் கண்டறிந்தால், உடனடியாக அதைச் சரி செய்வதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வது சிறந்தது. இது, பேறு காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க உதவும். ஆனால், இந்தச் சமயத்தில் பற்களைக் கவனிக்காமல் விடும்போது, கர்ப்ப காலத்தில் முதல் 3 மாதங்களுக்கு, பற்களில் ஏற்படும் பிரச்சினைக்கான சிகிச்சையோ, மருந்தோ எடுத்துக் கொள்ள முடியாது. தற்காலிக நிவாரணியாக வலி மருந்தை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும்.

    அதேபோல், 21 வயதில் பலருக்கும் ஞானப்பற்கள் முளைக்கும். இது சில சமயங்களில் தொந்தரவு தரக்கூடும். கர்ப்ப காலத்தில் அந்தப் பிரச்சினை ஏற்பட்டால், அந்தப் பல்லை நீக்குவதற்கான சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே முன்பே இதை மருத்துவரிடம் காண்பித்து குணப்படுத்துவது அவசியம்.

    ஈறு சார்ந்த பிரச்சினைகள்: பெண்களுக்குப் மகப்பேறு காலத்தில் ஹார்மோன்களில் மாறுதல் ஏற்படும். இதனால், ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இவற்றை அலட்சியம் செய்யாமல், உடனடியாகப் பல் மருத்துவரிடம் தகுந்த சிகிச்சை பெற்று ஆரம்ப நிலையிலேயே ஈறு பிரச்சினையைச் சரி செய்ய வேண்டும்.

    பற்களின் பராமரிப்பு: சாப்பிடும் போது உணவுத் துகள்கள் வாயில் தங்கிவிடும் வாய்ப்புள்ளது. இதனால் கிருமிகள் பெருகி பல் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாகும். இதைத் தவிர்க்க காலை, இரவு என இரு வேளையும் பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். தரமான பற்பசையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஈறுகளுக்கு உறுதி சேர்க்கும் வகையில், தினமும் வைட்டமின் 'சி' சத்து நிரம்பிய ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடலாம். கர்ப்ப காலத்தில் இனிப்பு சார்ந்த உணவுப் பண்டங்கள் மீது ஈர்ப்பு இருக்கும். இனிப்பு வகைகளை சாப்பிட்டால், உடனடியாக வெதுவெதுப்பான வெந்நீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.

    கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் ஒரு சில பெண்களுக்கு பல் பிரச்சனை உண்டாவது வழக்கம் தான். அதாவது கர்ப்பத்தின் போது அதிகரிக்கும் ஹார்மோன்களால் கிருமிகள் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணிகள் தன் பற்களை தானாகவே பாதிப்புக்குள்ளாக்கி கொள்வதில்லை. கர்ப்பிணிகளின் பற்களை பொறுத்தே குழந்தைகள் பல் அமையும். கர்ப்பத்தின் போது எடுத்துக்கொள்ளும் கால்சியத்தின் அளவு என்பது குறைவாக இருக்குமெனில் குழந்தைக்கு தேவையான கால்சியத்தை அம்மாவின் எலும்பு தருகிறது.

    இருப்பினும், கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது.

    ஒரு ஆராய்ச்சியின் கூற்றுப்படி கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பல் பிரச்சனை என்பது குறைப்பிரசவத்துடன் கூடிய குறைவான எடையை தருகிறதாம். இவ்வாறு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை குறைபாடு மற்றும் காது பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது?

    1. ப்ளூரைடு டூத் பேஸ்ட் கொண்டு தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள்.
    2. ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
    3. பல் மருத்துவரை சந்தித்து அவரிடம் அடிக்கடி ஆலோசனை பெற முயலுங்கள்.

    பல் பாதுகாப்பு பணியில் கர்ப்பம் என்பது பாதிக்கப்படலாம். ஓர் உதாரணத்திற்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு பல் மருத்துவர் X-கதிர்களை செலுத்திவிடக்கூடும். எனவே மிகவும் கவனமாக நீங்கள் இருந்திட வேண்டும். இந்த பல் பாதுகாப்பு X-கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மருத்துவரிடம் முன்கூட்டியே கூறுவதன் மூலம் அவர் செலுத்தும் அளவு என்பது மிகவும் கவனத்துடன் கையாளப்படும். அதனால் நீங்கள் கர்ப்பம் என்பதை மருத்துவரிடம் சென்றவுடன் சொல்லிவிட வேண்டியது மிகவும் அவசியம்.

    பல் பிரச்சனை வர என்ன காரணம்?

    1. கிருமி பிரச்சனை.
    2. வாந்தி எடுப்பதால் பல் இடுக்கில் அழுக்கு சேர்வது.
    3. இனிப்பு சாப்பிட்டு வாய் கொப்பளிக்காமல் இருப்பது.

    கர்ப்ப காலத்தில் கால்சியத்தை அதிகரிக்கும் உணவு:

    1. பால்.
    2. பாலாடைக்கட்டி.
    3. இனிப்பு இல்லாத தயிர்.
    4. சோயாப்பால் (கால்சியம் கொண்டது)

    கால்சியம் நிறைந்த வைட்டமின் D:

    வைட்டமின் Dஇல் தேவையான அளவில் கால்சியம் இருக்கிறது.

    1. பாலாடைக்கட்டி
    2. செறிவூட்டிய வெண்ணெய்.
    3. சால்மன் போன்ற மீன்.
    4. முட்டை.

    ×