search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பல் நோய்கள்...
    X

    குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பல் நோய்கள்...

    • குழந்தையின் பற்களை ஆரம்பத்திலிருந்து பராமரிக்க வேண்டியது அவசியம்
    • குழந்தைகளுக்கு, முதலில் தானாக விழும் பல் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

    குழந்தையின் பற்களை ஆரம்பத்திலிருந்து பராமரிக்க வேண்டியது அவசியம். இதில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பல் நோய்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    1. பல் சிதைவு:

    பல் சிதைவு என்பது இந்தியா முழுவதும் குழந்தை பருவத்தினருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். இது நீண்ட கால பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் பல் நோய் தடுப்பு மையங்களின் அறிக்கைப்படி, ஐந்து முதல் 11 வயது வரையிலான 20 சதவீத குழந்தைகளில் குறைந்தது ஒரு குழந்தையாவது சிதைந்த அல்லது அழுகும் பல் இருக்கப் பெற்று, அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது. பற்சிதைவு என்பது வாயில் ஒளிந்திருக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து இத்தகைய பாக்டீரியாக்கள் செழித்து வளர்கின்றன. நாம் உண்ட உணவின் துணுக்குகள் பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்வதால் பெரும்பாலான பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இத்தகைய பாக்டீரியாக்கள் ஒட்டும் தன்மை உடையதாக பற்களில் தங்கிவிடுகிறது. இவைகள் நமது பற்களின் எனாமல்லை சுரண்டி அதிக அளவில் பாதிப்பை உருவாக்குகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களால் இத்தகைய பாக்டீரியாக்கள் எளிதில் பற்களில் உருவாகின்றன. குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட்டுகள், குக்கீஸ், பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றினால் பற்களில் அதிக சிதைவு ஏற்படுகிறது. இதில் நல்ல செய்தி என்னவென்றால், பல் சிதைவு என்பது தடுக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. பற்சிதைவை சரியான பல் துலக்குதல் நுட்பங்கள் மற்றும் ஒரு பல் மருத்துவரின் முறையான சிகிச்சை முறை ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்கு பல் சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கலாம். மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்ட புளோரைடு பற்பசையுடன் உங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல்துலக்க செய்ய வேண்டும், அதிலும் படுக்கைக்கு முன் பல் துலக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

    2. வாய் துர்நாற்றம்:

    இந்த வாய் துர்நாற்றம் ஹலிடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது குறிப்பிட்ட வயதினரை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த பாக்டீரியா காலனிகள் நமது வாயில் தங்கியுள்ள உணவு, திரவம் மற்றும் பிளேக் ஆகியவற்றை உண்கின்றன. அவை சாப்பிடும்போது, ஹைட்ரஜன் சல்பைடை உற்பத்தி செய்கின்றன, இதனால்தான் வாயில் துர்நாற்றம் வீசுகிறது. பெரியவர்களைப் போலவே, காலையில் குழந்தைகள் எழுந்தபின், துர்நாற்றம் சகஜமாக ஏற்படுகிறது. இருப்பினும், உங்கள் குழந்தையின் துர்நாற்றம் நாள் முழுவதும் நீடித்தால், அது ஒரு பெரிய சிக்கலைக் கொடுக்கும். இந்த வாய் துர்நாற்றத்தை தடுப்பதற்கு சரியான பல் சுகாதாரம் பேணுவதே சிறந்த வழியாகும். பாக்டீரியா எதிர்ப்பு மவுத்வாஷ் பயன்படுத்துவது வாய் துர்நாற்றத்தை குறைக்க உதவும், மேலும் நாக்கைத் துலக்குவது வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவும்.

    3. பல் கூச்சம் :

    குழந்தைகளுக்கு ஏற்படும் மற்றொரு பொதுவான பிரச்சினை பல் கூச்சம் ஆகும். சூடாகவோ அல்லது குளிர்ந்த உணவுகள் மற்றும் திரவங்கள் ஆகியவற்றை குழந்தைகள் எடுத்துக்கொள்ளும்போது அது அவர்களுக்கு எரிச்சலையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தினால், அவர்களுக்கு பல் கூச்சம் இருப்பதை நாம் உணரலாம். சில நேரங்களில், குளிர்ந்த அல்லது சூடான காற்றை சுவாசிப்பது கூட அவர்களுக்கு வலியை ஏற்படுத்தும். பல் கூச்சம் என்பது ஒரு மோசமான அறிகுறி அல்ல என்றாலும், அவை மிகவும் கடுமையான பல் பிரச்சினையை சுட்டிக்காட்டக்கூடும்.

    4. பெருவிரல் சூப்புதல்:

    பொதுவாக குழந்தைகள் தனது பெரு விரலை வாயில் வைத்து சூப்பினேன் வழக்கமாக கொண்டிருக்கும். நிரந்தர பற்கள் வளர தொடங்கும் போது குழந்தைகள் இன்னும் பெரு விரலை சூப்பிக் கொண்டிருந்தால், அது பலவிதமான பிற சிக்கல்களை ஏற்படுத்தும். பெரு விரலை சூப்புவது சாதாரண வாய்வழி வளர்ச்சியை சீர்குலைத்து, பற்களின் சீரமைப்பு மற்றும் வாயின் மேல்பகுதி அமைப்பை பாதிக்கும். குழந்தைகளுக்கு இந்த பழக்கம் தொடர்ந்தால், உங்கள் பல் மருத்துவரைத் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனை பெறலாம். ஒரு அனுபவமிக்க பல் மருத்துவர் கூடுதல் உதவிகளையும், ஆதரவையும் வழங்குவார். மேலும் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த உங்கள் குழந்தையுடன் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்த ஆலோசனையையும் வழங்குவார். இந்த ஆலோசனை வழங்குவதற்கு என சென்னையில் பல குழந்தைகள் பல் சிகிச்சை மையங்கள் உள்ளன.

    5. பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள்:

    ஈறு நோய் அல்லது ஈறு அழற்சி என்பது திசுக்களின் அழற்சி காரணமாக ஏற்படுகிறது. இது பெரும்பாலும் வாய் வழி மற்றும் பல் சுகாதாரம் மற்றும் பிளேக் கட்டமைப்பால் ஏற்படுகிறது. மேலும் இது தொடர்ந்தால் எலும்பு பாதிப்பு மற்றும் பல் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது . பற்களின் அடிப்பகுதியில் பிளேக் மற்றும் டார்டார் வைப்புக்கள் உருவாகும்போது, அவை ஈறுகளை பாதிக்கத் தொடங்குகின்றன. ஈறு அழற்சியின் ஆரம்ப கட்டங்களில், ஒரு குழந்தையின் ஈறுகள் பெரும்பாலும் வீங்கி, சிவப்பு நிறத்தில் இருக்கும், மேலும் அவை பற்களிலிருந்து விலகி, மிதந்த பின் எளிதில் இரத்தம் கசியும். ஈறு நோயினால் வாய் துர்நாற்றம் மற்றும் குழந்தையின் வாயில் எப்போதும் ஒரு மோசமான சுவை இருக்கும். ஈறுகளில் ஏற்படும் நோய்களை எளிதாக தடுக்க முடியும். தினசரி இரண்டு முறை சரியான முறையில் பல் துலக்குதல், வாய் கொப்பளித்தல் மற்றும் முறையான பல் மருத்துவர் ஆலோசனை பெறுதல் போன்ற எளிய வழிமுறைகளால் இதனை தவிர்க்கலாம்.

    6. ப்ரூக்ஸிசம்:

    பற்களை ஒன்றோடு ஒன்று தேய்ப்பது ப்ரூக்ஸிசம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் பள்ளி வயது குழந்தைகளிடையே ஒரு பொதுவான பிரச்சனையாக திகழ்கிறது. 10 குழந்தைகளில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பற்களை தேய்க்கவும் அல்லது பற்களை எடுக்கவும் செய்வார்கள். சில நேரங்களில் ஒரு குழந்தை தானாகவே ப்ரூக்ஸிஸத்தை உருவாக்குகிறது, ஏனெனில் அவற்றின் மேல் பற்கள் அவற்றின் கீழ் பற்களுடன் சீராக இருப்பதில்லை. இதனால் சில நேரங்களில் அந்த குழந்தைகளுக்கு பற்களில் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் குழந்தைகள் வலியின் விளைவாக பற்களை தேய்ப்பார்கள். பொதுவாக ப்ரூக்ஸிசத்திற்கு என எந்த தனிப்பட்ட சிகிச்சையும் தேவையில்லை. குழந்தைகள் வளர்ந்து வரும் போது இந்த பிரச்சனை தானாக தற்போது. இருப்பினும் இந்த பழக்கம் தொடர்ந்தால், அது படிப்படியாக பற்களை சேதப்படுத்த கூடும். இதன் விளைவாக கடுமையான பல் வலியும் ஏற்படக்கூடும்.

    7. கேங்கர் சோர்ஸ் :

    கேங்கர் சோர்ஸ் என்பது சிறிய வகை புண்கள் ஆகும். இந்த புண்கள், வாயினுள், ஈறுகளில் அல்லது நாக்கில் உருவாகும். பொதுவாக, இந்த புண்கள் ஒரு சிவப்பு எல்லையால் சூழப்பட்ட சாம்பல் அல்லது வெள்ளை மையத்தைக் கொண்டு இருக்கும். காய்ச்சல் கொப்புளங்கள் மற்றும் சளி புண்கள் ஆகியவற்றிலிருந்து கேங்கர் புண்கள் முற்றிலும் வேறுபட்டவை. இவை பொருள் குழந்தைகளிடமிருந்து மற்றொரு குழந்தை பரவாது. பெரும்பாலும் இவை ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் தானாக மறைந்து போய்விடும். இதனால் ஒரு குழந்தைக்கு தண்ணீர் குடிப்பதையும், உணவு உட்கொள்வதில் மிகுந்த சிரமங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த புண்கள் தனியாகவோ, கூட்டாகவோ ஏற்படலாம். இந்த புண்கள் உருவாக காரணமாகும் காரணிகளாக கீழ்க்கண்டவற்றை கொள்ளலாம்.,

    1.டயட்

    2.மன அழுத்தம் அல்லது அதிர்ச்சி

    3.அலர்ஜி

    4.ஊட்டச்சத்து குறைபாடுகள்

    5. தொற்று.

    8. குழந்தைகளின் பற்கள் இழப்பு :

    பல குழந்தைகளுக்கு, முதலில் தானாக விழும் பல் ஒரு வரப்பிரசாதம் ஆகும். அப்படி தானாக பல் விழுந்த அந்த இடத்தில் விரைவில் புதிய ஒரு பல் வருகை தரக்கூடும், மேலும் குழந்தைகளின் சிறிய "குழந்தை பல்" விரைவில் "வளர்ந்த பற்களால்" மாற்றம் பெற்றுவிடும். பல் இழப்பு என்பது வளர்ச்சியின் இயற்கையான கட்டமாகும். முதல் இழந்த பல் பொதுவாக நடுத்தர முன் பற்களில் ஒன்றாகவே இருக்கும். இது பொதுவாக ஆறு வயதில் ஏற்படக்கூடும். ஒரு குழந்தை 10 முதல் 12 வயது வரை இருக்கும் வரை மோலர்கள் இழக்கப்படுவதில்லை, மேலும் பெரும்பாலான குழந்தைகள் 13 வயதிற்குள் 28 நிரந்தர பற்களின் முழு தொகுப்பையும் பெற்று விடுகிறார்கள். பல குழந்தைகளுக்கு, அவர்களின் முதன்மை அல்லது "குழந்தை" பற்களை இழக்கும் போது அதிக வலி ஏற்படுவதில்லை. இருப்பினும் அது வெளியேற மறுத்தால் அல்லது குழந்தைகளுக்கு அதிக வலியை ஏற்படுத்தினால், உங்கள் பல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    9. ஒன்றின்மேல் ஒன்றாக வளரக்கூடிய முதன்மை பல்:

    சில நேரங்களில் ஒரு குழந்தைக்கு தானாக வேண்டிய முதன்மை பல் விழாமல் போகலாம். அப்படி ஒரு முதன்மை பல் விழாவிட்டால், அதன் அடியில் இருக்கும் நிரந்தர பல் அதே இடத்தில் முளைத்து வர முயற்சிக்கும். இதன் விளைவாக, ஒரு இடத்தில் இரண்டு பற்கள் இருக்கக்கூடும். அல்லது, மற்ற பற்கள் அதைச் சுற்றி தளர்த்தப்படுவதால் ஒரு குழந்தையின் பல் பல ஆண்டுகளாக திடமாக இருக்கலாம். இந்த நிகழ்வுகளால், குழந்தைக்கு முதன்மையானதை மாற்றுவதற்கு நிரந்தர பல் இருக்காது, எனவே முதன்மை பல் வாயிலிருந்து வெளியே விழாது. இந்த வகை பற்களுக்கு, ஒரு பல் மருத்துவர் முறையாக சிகிச்சை அளித்து முதன்மை பற்களை அகற்றுவார், இதனால் நிரந்தர பல் போட்டி இல்லாமல் வளரும் வாய்ப்பு உருவாகிறது. பற்கள் முழுமையாக வெளிவந்தவுடன் எந்தவொரு தவறான வடிவமைப்பையும் சரிசெய்ய பிரேஸ்களைப் பயன்படுத்தலாம்.

    10.டென்டல் அன்க்ஸியிட்டி:

    டென்டல் அன்க்ஸியிட்டி என்பது நேரடியாக பல் ஆரோக்கியத்துடன் தொடர்புப்படுத்தப்படவில்லை என்றாலும் ஒரு குழந்தையை அடிக்கடி பல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் அவர்களுக்கு ஒருவித பயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவர்கள் முறையான பராமரிப்பு முறைகளை தெரிந்து கொள்ள முடியாமல், பற்களில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை அறிந்து கொள்ளமுடியாமல், ரூட் கேனல், பல் பிடுங்குதல், மற்றும் அவசர பல் சிகிச்சை ஆகியவற்றை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனை போக்க தலைசிறந்த பல் மருத்துவ நிபுணர் ஆல் மட்டுமே முடியும். ஒரு சிறந்த குழந்தைகள் பல் மருத்துவ நிபுணர், மருத்துவ சிகிச்சையளிக்கும் அறைக்குள், குழந்தைகளுக்கு பல் மருத்துவத்தை பற்றி நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் விதத்தில் கட்டமைப்புக்களை செய்திருப்பார். சென்னையில் குழந்தைகளுக்கு என தனியாக பல் மருத்துவம் வழங்கும் சிகிச்சை மையங்கள் அதிக அளவில் உள்ளன.

    Next Story
    ×