search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்நலம்"

    ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நீண்டகாலத்துக்கு பக்க விளைவுகளை கொண்டிருக்கும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது.
    கொசுக்களில் இருந்து பரவும் டெங்கு காய்ச்சல் உடல் ஆரோக்கியத்தை பலவீனப்படுத்தக்கூடியது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் வலி, வாந்தி, வயிற்று வலி, கண்களையொட்டிய பகுதியில் வலி, எலும்பு பகுதிகளில் வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். காய்ச்சலுடன் இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சை பெறுவது நோயின் வீரியத்தை குறைக்க உதவும்.

    ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நீண்டகாலத்துக்கு பக்க விளைவுகளை கொண்டிருக்கும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் எந்த நோயிலிருந்தும் மீள்வது எளிது. எனினும் டெங்கு காய்ச்சல் காரணமாக, உடலில் உள்ள பிளேட்லெட் எனப்படும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும். மேலும் ரத்த அணுக்களை நிறமற்றதாக மாற்றுவதால் ரத்த உறைவு பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும். அப்படி பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கால அவகாசம் தேவைப்படும். அப்போது சில பக்க விளைவுகள் ஏற்படலாம். எனினும் டெங்குவால் நீண்டகால பக்கவிளைவுகள் ஏற்படாது என்பதே மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    டெங்கு காய்ச்சல் உடலை பலவீனப்படுத்தி தசை மற்றும் மூட்டுகளில் வலிகளை ஏற்படுத்தும். எழுந்து நடமாட முடியாத நிலையையும் சிலர் எதிர்கொள்ள நேரிடும். நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகும். ஒருமுறை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானால் நோய் எதிர்ப்பு சக்தி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில மாதங்களாகும். அதற்குள் இரண்டாவது முறையாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் பாதிப்பு கடுமையாக இருக்கும்.

    அதனால் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தொய்வு ஏற்படக்கூடாது. நீர், இளநீர், பப்பாளி சாறு போன்ற திரவங்களை உட்கொள்வது டெங்கு நோயில் இருந்து விரைவில் மீள்வதற்கு உதவும்.
    ஒருசில பழக்கங்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைதான் நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது.
    உடலின் எந்தப் பகுதியிலாவது செல்களின் வளர்ச்சி கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிப்பது புற்றுநோய் உருவாகுவதற்கு காரணமாக அமைகிறது. 10 இந்தியர்களில் ஒருவர் வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், 15 பேரில் ஒருவர் புற்றுநோயால் இறப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

    மற்ற நாடுகளை விட நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஒருசில பழக்கங்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைதான் நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது. புற்றுநோயை வரவழைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    புகையிலை: புகையிலை பொருட்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிகரெட் பிடிப்பது மட்டுமின்றி வெற்றிலை பாக்கு உட்கொள்வது, சுருட்டு, பீடி பிடிப்பது நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது தொண்டை வழி யாக வயிற்று பகுதிக்கு சென்றடைந்து ஓசோபேஜியல் எனும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச்செய்யும். புகையிலை பயன்படுத்துவது குரல்வளை, நுரையீரல், உணவுக்குழாய், சிறுநீர்ப்பை, தொண்டை, சிறுநீரகம், வயிறு, கல்லீரல், பெருங்குடல், கணையம், மலக்குடல், கருப்பைவாய் உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.

    காரமான, சூடான உணவு: உணவை அதிக சூடாகவோ, காரமாகவோ சாப்பிடக்கூடாது. காரமான, சூடான உணவுகளை அதிகமாக உட்கொள்வது நுரையீரல், வாய், வயிற்றுப்பகுதியில் புற்றுநோய் உருவாக வழிவகுக்கும். உணவில் காரத்தன்மை கொண்ட மசாலாக்களை அதிகம் சேர்ப்பது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய்க்கும், காரத்திற்கும் இடையேயான தொடர்பை ஆராய கூடுதல் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    தாய்ப்பால்: தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை 30 சதவீதம் குறைக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதோ அல்லது மிகவும் குறைவாக கொடுப்பதோ புற்றுநோய்க்கு திறவுகோலாக மாறிவிடும். எனவே மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

    அதிக சூரிய வெளிச்சம்: உடலில் சூரிய வெப்பம் அதிகமாக படர்வது செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது சரும புற்றுநோய் ஏற்படுவதற்கும் வித்திடும். 18 வயதுக்குட்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாகுவது பாதிப்பை அதிகப்படுத்திவிடும். தீக்காயங்கள், எக்ஸ்ரே கதிர்களின் வெளிப்பாடு, சில வேதிப்பொருட்களின் தாக்கத்தால் சருமத்தில் வடுக்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுக்கும், சரும புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் மதிய வேளையில் சூரிய ஒளி அதிகம் உடலில் படர்வதை தவிர்ப்பது நல்லது.

    செயலற்ற தன்மை: உடல் இயக்கம் இல்லாமல் செயலற்ற தன்மையில் இருப்பது, உடலில் கொழுப்பு அதிகரிப்பது, மது அருந்துவது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 18 சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியகம் மதிப்பீடு செய்துள்ளது. உடற்பயிற்சி செய்யாதது, அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற காரணங்களால் நிறைய பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    நார்ச்சத்து: நார்ச்சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது, அதனை குறைவாக உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் தோன்றுவதற்கு வழிவகுக்கும். சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து, நார்ச்சத்து அதிகம் கொண்ட பழங்கள், காய்கறிகள், சாலட்டுகள், முழு தானியங்கள், பருப்பு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது ஆரோக்கியமானது.
    கோடை விடுமுறைக்கு பலரும் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிடுவார்கள். பயணம் உற்சாகத்துடன் அமைவதற்கு உடல் ஆரோக்கியம் மற்றும் உணவு முறைகளில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியமானது.
    கோடை விடுமுறைக்கு பலரும் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிடுவார்கள். கோடையில் குளிர்ச்சியான இடங்களுக்குச் செல்வது மனதுக்கு இதமளிக்கும். மறக்க முடியாத நினைவுகளையும் சுமக்க வைக்கும். ஆனால் பயணம் உற்சாகத்துடன் அமைவதற்கு உடல் ஆரோக்கியம் மற்றும் உணவு முறைகளில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியமானது.

    பயணத்தின்போது வெளி உணவுகளை உட்கொள்வது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. சில உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கும். ஆனால் பயணத்தின்போது பெரும்பாலும் வெளி உணவுகளையே சார்ந்திருக்க வேண்டி இருப்பதால் உணவு வழக்கத்தில் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:

    * பயணத்தின் போது எளிதில் ஜீரணமாகும் உணவை உட்கொள்வதே நல்லது. அதிலும் பயணம் நீண்டதாக இருந்தால், செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவை தவிர்ப்பதே சிறந்தது. வேகவைத்த முட்டை, பருப்பு சாதம், கிச்சடி போன்ற உணவுகளை எடுத்து செல்லலாம். மேலும், பயணத்தின்போது உடலுக்கு ஆற்றலை வழங்கும் பழங்கள், பழச்சாறுகளையும் சாப்பிடுவதற்கு மறந்துவிடக்கூடாது.

    * பயணம் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் சீக்கிரம் கெட்டுப்போகாத உணவு பதார்த்தங்களை எடுத்து செல்லலாம். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவுகளை இரு வேளை சாப்பிடுவதற்கு திட்டமிடலாம். சாலடுகள், உலர் பழங்கள் ஆகியவற்றை சிற்றுண்டிகளாக சாப்பிடலாம்.

    * பயணத்தின் போது சிலர் சிப்ஸ் போன்ற பொரித்த பொருட்களை சாப்பிடுவதை நிறுத்த மாட்டார்கள். கோடை காலத்தில் எண்ணெய் உணவுகள் சீக்கிரம் ஜீரணமாகாமல் வாயு தொல்லை, அசிடிட்டி, அஜீரணம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். எனவே, பயணத்தின்போது இவற்றை உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

    * பயணத்தின் போது நிறைய தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். முடிந்தால், வீட்டில் இருந்து தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லுங்கள். வெளி இடத்தில் தண்ணீர் வாங்க வேண்டும் என்றால், சீல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை மட்டும் வாங்குங்கள். ஜூஸ் அல்லது பிற பானங்களையும் குடிக்கலாம்.

    * பயணத்தின் போது மதிய உணவு அல்லது இரவு உணவை சாப்பிடுவதற்கு காலதாமதமாகக்கூடும். மதிய உணவை சாப்பிட முடியாவிட்டால், சீரான இடைவெளியில் ஏதேனும் உணவு பதார்த்தங்களை உட்கொள்வது நல்லது. அதே வேளையில் காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். பயணத்தின் போது வெறும் வயிற்றில் இருக்கக்கூடாது. கனமான உணவை உட்கொண்டு விட்டால் அது முழுமையாக ஜீரணமாவதற்கு குறைந்தது 5-6 மணிநேரம் அனுமதிப்பது நல்லது. அதுவரை வேறு எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால் வீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பயணத்தின்போது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்றினால்தான் பயணம் இனிமையாக அமையும்.

    பயணத்தின் போது மதிய உணவு அல்லது இரவு உணவை சாப்பிடுவதற்கு காலதாமதமாகக்கூடும். மதிய உணவை சாப்பிட முடியாவிட்டால், சீரான இடைவெளியில் ஏதேனும் உணவு பதார்த்தங்களை உட்கொள்வது நல்லது.
    கணையம், என்கிற சுரப்பி மணிபூரகம் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை ,கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.
    1. மூலாதாரம்:- முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது.

    உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது.

    உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.

    சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில்

    2. சுவாதிஷ்டானம்:- இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது.

    பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது.

    மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது.

    பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

    3. மணிபூரகம்:- நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு.

    தொப்புளுக்கு சற்று மேலே பத்து இதழ் தாமரை அமைப்பில்  மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது.

    உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன.

    கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை ,கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

    4. அனாகதம்:- இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு.

    மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் இருக்கிறது.

    அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும். தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

    5. விசுத்தி:- இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது.

    தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம்.

    தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

    6. ஆக்கினை:- இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது.

    தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது.

    இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள். பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

    7. தூரியம்:- இதற்கு சகஸ்ரஹாரம், தாமரைச் சக்கரம் என்ற பெயருகள் உண்டு.

    இது உச்சந்தலை பகுதியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது. இந்தச் சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவுபடுத்துகின்ற சக்கரம் இது.

    என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது.

    பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

    -வள்ளல் ராமமூர்த்தி
    50 வயதை கடந்ததுமே சில பழக்கவழக்கங்களை பின்பற்ற தொடங்கினாலே முதுமை காலத்தை ஆனந்தமயமாக கழிப்பதற்கு அடித்தளமிட்டுவிடலாம்.
    முதுமை, வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் முதுமை பருவத்தை நோய் நொடியின்றி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக எதிர்கொள்வதற்கு சில நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது. 50 வயதை கடந்ததுமே சில பழக்கவழக்கங்களை பின்பற்ற தொடங்கினாலே முதுமை காலத்தை ஆனந்தமயமாக கழிப்பதற்கு அடித்தளமிட்டுவிடலாம்.

    1. சுறுசுறுப்பு: உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். அது கவலை, மனச்சோர்வை குறைக்க உதவும். உடல் சம நிலையையும், மன நிலையையும் மேம்படுத்துவதற்கு சில பயிற்சிகள் கைகொடுக்கும். இதுநாள் வரை உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருந்தாலும் கூட 50 வயதை கடந்த பிறகு உடற்பயிற்சியை நாட வேண்டியது அவசியம். அது ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானது. பயிற்சியின்போது தசை வலிமையை அதிகரிப்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும்.

    2. இணைந்திருங்கள்: முதுமை காலகட்டத்தை நெருங்கிவிட்டாலே சிலர் தனிமையை விரும்ப தொடங்கிவிடுவார்கள். அது குடும்பத்தினரிடம் இருந்து விலகுவதற்கு தாமே அடித்தளமிட்டதாக அமைந்துவிடும். குடும்பத்தினர், நண்பர்களுடனான தொடர்பை இழப்பதற்கான சூழலை ஒருபோதும் உருவாகிவிடக்கூடாது. நகைச்சுவை உணர்வை தக்கவைத்துக்கொள்வதும் அவசியமானது. அன்புக்குரியவர்களுடன் பேசுவதும், தொடர்பில் இருப்பதும் மிகவும் முக்கியம். சமூக தொடர்புகளையும் உருவாக்கிக்கொள்ளலாம். சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் இணைந்து தன்னார்வ தொண்டுகளில் ஈடுபடலாம். இன்றைய கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வழியாக வீட்டில் இருந்தபடியே சமூக குழுக்களை ஒருங்கிணைத்து சேவையாற்றலாம்.

    3. சமச்சீர் உணவு: ஆயுளை அதிகரிப்பதற்கு சமச்சீர் உணவு வழக்கத்தை பின்பற்ற வேண்டும். 50 வயதை கடந்துவிட்டால் உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதும் அவசியமானது. கார்போஹைட்ரேட், கொழுப்பு உணவுகள் எளிதில் ஜீரணமாகாது. அவற்றை தவிர்த்து ஒமேகா 3 கொழுப்பு அமிலம், நார்ச்சத்து மற்றும் புரதங்கள் கொண்ட உணவுகளை தேர்வு செய்ய வேண்டும். முழு தானியங்கள், நட்ஸ் வகைகள், பழங்கள், காய்கறிகளை உட்கொள்வது முதுமை கால ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இதய நோய் உள்ளவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை ஒதுக்கி வைக்க வேண்டும். போதுமான அளவு கால்சியம் கொண்ட உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். கொழுப்பு அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

    4. பரிசோதனை: வயது அதிகரிக்கும்போது நோய் பாதிப்பும் வீரியமடையும். ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்புகளை கண்டறிவதற்கு குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. வழக்கமான பரிசோதனைகளை தவறாமல் செய்துவந்தால் பெரிய சிக்கல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட இணை நோய்களை கொண்டிருப்பவர்கள் மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் மருந்துகளையும், பரிசோதனைகளையும் புறக்கணிக்கக்கூடாது.

    5. மதுப்பழக்கம்: வயது அதிகரிக்கும்போது உடல் நலம் குறைய தொடங்கும். ஆதலால் உடல் இயக்க செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மது பழக்கம் கொண்டவர்கள் 50 வயதுக்கு பிறகு அறவே தவிர்த்துவிட வேண்டும். வயதான காலத்தில் ஆல்கஹால் நுகர்வு, நோய் பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.

    6. புகைப்பழக்கம்: பொதுவாகவே புகைப்பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வயதான காலத்தில் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். ஏற்கனவே வயது அதிகரிப்புக்கு ஏற்ப உடல் செயல்பாடுகள், செயல் திறன் குறைந்துவிடும். அதனை கருத்தில் கொள்ளாமல் புகையிலை பொருட்களை நுகர்வது, உயர் ரத்த அழுத்தம், இதய துடிப்பு அதிகரிப்பு, நீரிழிவு நோய், புற்றுநோய், கொழுப்பு அதிகரிப்பு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். புகைப்பழக்கம் எலும்புகளையும் பலவீனப்படுத்திவிடும். ஆதலால் புகைப்பழக்கத்தை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

    7. தூக்கம்: வயதான காலத்தில் உடல் ஆரோக்கியமாக செயல்பட, சரியான ஓய்வு தேவை. 50 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு 6 முதல் 8 மணிநேர தூக்கம் அவசியம். தூங்கும் நேரம் எவ்வளவு குறைகிறதோ, அதற்கேற்ப ஆரோக்கியத்தில் கடுமையான விளைவை ஏற்படுத்தும். தாமதமாக தூங்க செல்வது, இரவில் இடை இடையே கண் விழிப்பது, சீக்கிரமாகவே எழுந்திருப்பது போன்றவை பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும், தூங்குவதில் சிக்கல் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
    சாப்பிடும் உணவின் சுவை மற்றும் வாசனையை நுகராமல் திரையை பார்த்துக்கொண்டே இயந்திரத்தனமாக சாப்பிடும்போது, சாப்பிடும் அளவு தெரியாது.
    அலுவலக பணி முடிந்து வீடு திரும்பும் பலர் டி.வி.யோ, ஸ்மார்ட்போனோ பார்த்துக்கொண்டு இரவு உணவை சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். லேப்டாப்பை இயக்கியபடி சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடும்போது கண்களின் பார்வை முழுவதும் திரையின் மீது பதிந்திருக்கும்.

    சாப்பிடும் உணவின் சுவை மற்றும் வாசனையை நுகராமல் திரையை பார்த்துக்கொண்டே இயந்திரத்தனமாக சாப்பிடும்போது, சாப்பிடும் அளவு தெரியாது. வழக்கத்தை விட கூடுதலாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிகமாக சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக மூளை சமிக்ஞை செய்யும். கவனம் முழுவதும் திரையில் தென்படும் காட்சிகளின் மீது பதிந்திருப்பதால் மூளையின் சமிக்ஞையை உணராமல் சாப்பிட்டு முடிப்பதற்கு முனைவார்கள். நன்றாக மென்று சாப்பிடாமல் விரைவாக சாப்பிட்டு விடுவார்கள். அப்படி சாப்பிடுவது வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    திரைக்கு முன்னால் சாப்பிடும்போது உடலில் என்ன நடக்கும்?

    டி.வி. பார்த்துக்கொண்டே அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கக் கூடும். நீங்கள் எவ்வளவு சாப்பிட்டிருக்கிறீர்கள் என்பதை மூளை பதிவு செய்யாது. சாப்பிட்ட திருப்தியும் இருக்காது. அதனால் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பசி எடுக்கத் தொடங்கிவிடும். சிப்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை நாடுவீர்கள். டி.வி. பார்த்துக்கொண்டே அவற்றை சாப்பிடுவது ருசியாக இருப்பது போல் தோன்றும். அதனால் இனிப்பு பொருட்கள் மீது நாட்டம் அதிகரித்துவிடும். அவை எந்தவிதமான உடல்நலப் பலன்களையும் வழங்காமல் எளிதாக உடல் எடையை அதிகரிக்க செய்துவிடக் கூடும்.

    எப்படி சாப்பிடுவது சரியானது?

    எத்தகைய உணவுகளை உட்கொண்டாலும் நன்றாக மென்று சாப்பிடும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அந்த உணவு எத்தகைய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன் சுவை மற்றும் நறுமணத்தை நுகர வேண்டும். நீங்கள் வயிற்றுக்கு போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்கள் என்ற சமிக்ஞை மூளைக்கு செல்ல சுமார் 20 நிமிடங்கள் ஆகும் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கேற்ப உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிடும்போது சமிக்ஞை மூளைக்கு செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைக்கும். அதிகமாக சாப் பிடுவதையும் தடுத்துவிடும். என்ன சாப்பிடு கிறீர்கள் என்பதை விட அதை எப்படி சாப்பிடு கிறீர்கள் என்பது முக்கியமானது.
    வயதானவர்கள், மூட்டுவலி உள்ளவர்கள், தரையில் இருந்து எழுந்து நிற்பதில் சிக்கல் உள்ளவர்கள், ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் தரையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
    மென்மையான மெத்தையில் படுப்பதற்குதான் பலரும் விரும்புகிறார்கள். முன்னோர் காலத்தில் தரையில் தூங்கும் பழக்கத்தைத்தான் பின்பற்றினார்கள். தரையில் படுத்து தூங்குவதன் மூலம் கிடைக்கும் முக்கியமான நன்மை என்னவென்றால் உடல் தோரணையை சரியாக வைத்திருப்பதுதான்.

    மெத்தையில் படுத்து தூங்கும்போது பெரும்பாலும் உடலை நிமிர்த்தி வைத்திருக்க முடியாது. மெத்தையின் மென்மை தன்மைக்கு ஏற்ப உடலை வளைத்து சவுகரியமாக தூங்குவார்கள். அப்படி தூங்குவது முதுகெலும்பு தோரணையை சீராக பேணுவதற்கு உதவாது. தரையில் தூங்கும்போது முதுகெலும்பை நேராக வைத்திருப்பதற்கு எளிதாக இருக்கும்.

    ஏனெனில் தரையில் படுக்கும்போது பெரும்பாலும் கால்களை நேராக நீட்டி முதுகு தண்டுவடம் நேர் நிலையில் இருக்கும்படிதான் தூக்க நிலை அமையும். வளைந்து படுத்தாலும் முதுகெலும்புக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படாது. தரையில் படுக்கும்போது கிடைக்கும் மேம்பட்ட தோரணை முதுகெலும்பின் இயற்கையான வளைவை ஆதரிக்கும். இருப்பினும் முதுகெலும்பின் அழுத்தத்தைக் குறைக்க சிலர் தலையணைகளை பயன்படுத்த வேண்டியிருக்கலாம். அதாவது முதுகின் கீழ் மெல்லிய தலையணையை வைக்க வேண்டியிருக்கும்.

    நீங்கள் முதுகுவலியால் பாதிக்கப்பட்டிருந்தால், மெத்தையில் படுப்பது உடலுக்கு மென்மையாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் உடல் எடைக்கு ஏற்ப அழுத்தம் உண்டாகும். அதனால் முதுகுவலி அதிகரிக்கக்கூடும். சமதளமான மேற்பரப்பில் தூங்குவதன் மூலம் வலியில் இருந்து சிறிது நிவாரணம் பெறலாம்.

    தரையில் தூங்குவது குளிர்ச்சியான தூக்க சூழலை வழங்கும். அதாவது தரை குளிர்ச்சியாக இருக்கும் போது, உடல் வெப்பம் விரைவில் தணிந்துவிடும். குறிப்பாக வெப்பமான கோடை மாதங்களில் அதிக உடல் உஷ்ணம் கொண்டவர்களுக்கு இந்த தூக்கமுறை சவுகரியமாக இருக்கும். கோடையில் படுக்கை அறை சூழல் குளிர்ச்சியாக அமைந்திருக்க வேண்டும். அதற்கேற்ப ஏ.சி. பயன்படுத்தாதவர்களுக்கு தரையில் தூங்குவது சிறந்த பலனை கொடுக்கும்.

    இருப்பினும், எல்லோரும் தரையில் தூங்கக்கூடாது. வயதானவர்கள், மூட்டுவலி உள்ளவர்கள், தரையில் இருந்து எழுந்து நிற்பதில் சிக்கல் உள்ளவர்கள், ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் தரையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை பெற்று தூக்க நிலையை தீர்மானித்துக்கொள்ளலாம்.
    குளு குளு லிச்சி பழத்தை கோடை காலங்களில் நாம் சாப்பிடுவதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என அறிந்து கொள்வோம்.
    லிச்சி பழம் கோடைகால சரும பிரச்சினைகள் முதல் எடை இழப்பு வரை பெரிய பங்கு அளிக்கிறது. இந்த லிச்சி பழத்தை கோடை காலங்களில் நாம் சாப்பிடுவதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என அறிந்து கொள்வோம்.

    லிச்சி பழத்தில் நிறைய அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின் சி, கே, பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் ஈ ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகிறது.

    கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகளும் இதில் காணப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை மேம்படுத்தி ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

    எனவே ரத்த சோகையை போக்க உதவி செய்யும். சருமத்தை அழகாக்கும் சக்தி லிச்சிக்கு உண்டு. மேலும் கோடை காலத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் சரும எரிச்சலுக்கும் லிச்சி சிறந்த மருந்தாகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் பழங்களின் பட்டியலில் லிச்சி மிக முக்கிய இடம் வகிக்கிறது.

    உடல்​ எடையை குறைக்கவும் இது உதவுகிறது. சோர்வில் இருந்து உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தும் இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. ஈ.கோலி நோய்த்தொற்றுகள் போன்ற பல கோடை நோய்களுக்கு சிகிச்சையளிக்க லிச்சி பழச்சாறு உதவுகிறது.

    இது நமது சரும பராமரிப்பிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதே மாதிரி பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை தடுக்க லிச்சி பழம் உதவுகிறது.
    வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
    வாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

    வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளது, அதை குறைக்க மாற்ற பழங்களோடு கலந்து சாப்பிடலாம். உதாரணமாக ஆரஞ்சு, துண்டுகளாக்கப்பட்ட தர்பூசணி, ஒரு கப் திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

    வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் ஒற்றைத்தலைவலி, சுவாசப் பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், நரம்புப் பிரச்சனைகள், ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருந்தால் வரும் ஹைபர்கலீமியா, பற்சிதைவு, சோம்பல், மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவை உண்டாகும்.

    ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும், வாழைப்பழம் அதிகம் உட்கொள்பவர்களுக்கும் ஒரே மாதிரியான ஒவ்வாமை அறிகுறிகள் உள்ளது.

    அவை மூக்கு ஒழுகுதல், மூச்சிரைப்பு, இருமல், தொண்டை எரிச்சல், கலங்கிய கண்கள் போன்ற பொதுவான ஒவ்வாமைகள் உண்டாக முதன்மையான காரணமான இந்த வாழைப்பழம் சாப்பிடுவது இருக்கிறது.

    சிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை குறைக்கவும். ஏனெனில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இதனால் உங்கள் சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும். இது ஆபத்தை விளைவிக்கும்.

    நீங்கள் ஒவ்வொரு முறையும் வாழைப்பழம் அல்லது அதற்கு இணையான சத்துக்கள் கொண்ட வேறொரு பழத்தை சாப்பிடும்போது மூச்சுத் திணறுதல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டால் உங்களுக்கு ஒவ்வாமை உள்ளது என்று அர்த்தம்.
    மருதாணி போட்டுக் கொள்ள பிடிக்காத ஆளே இருக்க முடியாது, மருதாணியை இரு பாதங்கள் மற்றும் கைகளில் போட்டுக் கொள்வதால், உடல் குளிர்ச்சி அடைகிறது. உடலும் மனமும் இளமையடைகிறது.
    பொதுவாக வெயில் காலத்தில், அம்மை நோய், மஞ்சள் காமாலை, தோல் நோய், வேர்க்குரு, கட்டி, முகப்பரு, பைல்ஸ், உறக்கத்தில் விந்தணுக்கள் வெளியேற்றம் போன்ற வெப்பம் சார்ந்த வியாதிகளும், மூட்டு வலி நரம்புத்தளர்ச்சி போன்ற வாதம் சார்ந்த வியாதிகளும், தட்பவெப்ப நிலை காரணமாக தூக்கமின்மை, மன அழுத்தம் சார்ந்த வியாதிகளும் ஏற்படுவது இயற்கையே.

    வெயில் காலத்தில் நாம் செய்ய வேண்டியவை...

    காலைக் கடன்களை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னரே கழித்து விட்டு, அரைமணி நேரம் வியர்வை வரும் வரை நடைபயிற்சி செய்திடல் வேண்டும். வியர்வையின் வழியாக, உடலில் உள்ள நச்சுத்தன்மை (கழிவுகள்) வெளியேறும் ஆகையால், தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.

    வியர்வையில் நனைந்த உடனே, தண்ணீர் அருந்தவோ, குளிக்கவோ கூடாது. ஏன் எனில், வியர்வை என்பதே உடலை குளிர்விக்கும் நிகழ்வு தான். அதற்கு பிறகு நீர் அல்லது மோர் அருந்தினாலோ குளித்தாலோ, உடல் மேலும் குளுமை அடைந்து சளி பிடிக்கவும் நீர் கோர்த்துக் கொண்டு தலைவலி வரவும் வாய்ப்புகள் அதிகம். ஆதலால் வியர்வை அடங்கும் வரை நிழலில் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து வியர்வை நின்ற உடன் உங்களுக்கு வேண்டியதை பருகலாம்.

    வெயில் காலத்தில் பொதுவாகவே பசியின் அளவு குறைந்தும் தாகத்தின் அளவு அதிகமாகவும் இருக்கும். அதனால் இயன்றவரை ஒருவேளை உணவாக பழைய சாதம், நீர் ஆகாரம், பழங்கள், பழச்சாறுகள், கம்பு, கேழ்வரகு கூழ், நீர் மோர், இளநீர், பதநீர் சாப்பிடுங்கள்.

    இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும், வெயில் காலத்தில் நிகழும்  நீர் பற்றாக்குறையில் இருந்தும், அஜீரண கோளாறுகளில் இருந்தும், உடல் உஷ்ணம் ஆவதில் இருந்தும், மலச்சிக்கலில் இருந்தும் பாதுகாக்கும்.

    அதிசயம் செய்யும் குளியல் முறைகள்: -

    வெந்தயக் குளியல்


    ஒரு கைப்பிடி வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் அதை நன்கு மை போல் அரைத்து, தலை முதல் கால்வரை பூசி அரைமணி நேரம் ஊற வைத்து பிறகு குளிக்க வேண்டும்.

    கற்றாழைக் குளியல்:

    கற்றாழையின் மேல் தோலை சீவி விட்டு, அதில் உள்ள சதைப் பகுதியை சுத்தமான தண்ணீரில் அலச வேண்டும். ஏழு அல்லது எட்டு முறை தண்ணீரை மாற்றி அலசும் போது தான், அதில் உள்ள பிசுபிசுப்பு தன்மை குறையும். பின்னர் அதை அரைத்து உடலில் தலைமுதல் கால்வரை பூசி 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு குளிக்க வேண்டும்.

    நெல்லிக்காய் குளியல்:

    தேவையான அளவு நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுத்து, தலைமுதல் கால்வரை பூசி 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு குளிக்க வேண்டும். நெல்லிக்காய் குளியல் மட்டும் மதியம் 11 முதல் 3 வரை அதாவது சூரிய ஒளி உச்சத்தில் இருக்கும் நேரத்தில் மட்டும் குளித்தல் வேண்டும்.

    மேற்கூறிய குளியல் முறைகளால், உடல் சூடு குறைவதை கண்கூடாகக் காணலாம். தலைமுடி உதிர்வது குறையும், மன அழுத்தம் மனபாரம் குறையும். மேனி பளபளப்பாகவும் வசீகரமாகவும் மாறும். தொடர்ச்சியாக வாரம் ஒரு முறை என்று செய்து வந்தால், மேற்கூறிய உடல் உஷ்ணம் சார்ந்த வியாதிகள் வராமல் காக்கும். ஏற்கனவே உடல் சூடு சார்ந்த வியாதிகள் உள்ளவர்களுக்கு இந்த வியாதிகள் அதிகரிக்காமல் தடுக்கப்படுவதோடல்லாமல் நாளடைவில் வியாதியின் தாக்கம் குறையும்.

    இந்த குளியல் முறைகளை, பதினைந்து வயது முதல் 70 வயது வரை உள்ள அனைத்து பாலினரும் செய்யலாம்.

    மருதாணி போட்டுக் கொள்ள பிடிக்காத ஆளே இருக்க முடியாது, மருதாணியை இரு பாதங்கள் மற்றும் கைகளில் போட்டுக் கொள்வதால், உடல் குளிர்ச்சி அடைகிறது. உடலும் மனமும் இளமையடைகிறது.  கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும்.

    வெயில் காலத்தில் கூடுமானவரை, தளர்வான ஆடைகளை மட்டுமே அணியுங்கள். பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை நீர் கட்டி மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கும், ஆண்களுக்கு ஏற்படும் விந்தணுக்கள் சார்ந்த குறைபாடுகளுக்கும் அவர்கள் அணியும் இறுக்கமான ஆடைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

    -முனைவர் பா. ஜெயப்ரசாத்
    தைராய்டு நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 25-ந் தேதி ‘உலக தைராய்டு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
    உலகம் முழுவதும் பலரை பாதித்துள்ள தைராய்டு பிரச்சினை, ஆண்-பெண் இருபாலருக்கும் வரக்கூடியது. இது தைராய்டு சுரப்பியின் இயக்கத்தில் ஏற்படும் மாறுதல் காரணமாக உண்டாகிறது. தைராய்டு சுரப்பி, கழுத்தின் கீழ்ப்பகுதியின் மையத்தில் வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும். இதில் இருந்து வளர்சிதை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் தைராக்ஸின் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது.

    இது உடலில் உள்ள செல்கள் எவ்வளவு சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. தைராக்ஸின் அதிகப்படியாக சுரக்கும்போது ஹைப்பர் தைராய்டு பிரச்சினையும், குறைவாக சுரக்கும்போது ஹைப்போ தைராய்டு பிரச்சினையும் உண்டாகிறது. ஆண்களை விட, பெண்களுக்கு பத்து மடங்கு அதிகமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 25-ந் தேதி 'உலக தைராய்டு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. உடல் எடை திடீரென குறைதல் மற்றும் அதிகரித்தல், அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, ஞாபக மறதி, எரிச்சல், படபடப்பு, உடல் தசைகளில் பலவீனம், நடுக்கம், தூக்கமின்மை, தைராய்டு சுரப்பி வீங்குதல், முடி உதிர்வு, கைகால் மரத்துப்போதல், மூட்டுவலி மற்றும் கண் எரிச்சல் போன்றவை தைராய்டு நோயின் அறிகுறிகள்.

    இந்த ஆண்டின் கருப்பொருளான 'நம் உலகம் நம் ஆரோக்கியம்' என்பதற்கிணங்க, அறிகுறிகள் இருக்கும்போதே தைராய்டு நோய்க்கான பரிசோதனை மேற்கொண்டு, தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்நோயின் பிடியிலிருந்து மீளலாம்.
    தினமும் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் எல்லோரும் அறிந்ததுதான். கூடவே சிலவகை புற்றுநோய்களை தடுக்கும் சக்தியும் உடற்பயிற்சிக்கு இருக்கிறது.
    இதயநோய்க்கு அடுத்து உலகில் அதிக அளவிலான மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருப்பது, புற்றுநோய். இது புதிய நோய் அல்ல, ஆதிகாலத்திலேயே இருந்துகொண்டிருக்கிறது. கடுமையான கட்டி என்ற பொருள்படும் ‘கார்சினோமா’ என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து ‘கேன்சர்’ என்பது உருவானது.

    நவீன மருத்துவம் புற்றுநோயின் தாக்கத்தை வெகுவாக குறைத்திருக்கிறது. அதனால் அதனை உயிர்க்கொல்லி நோய் என்று கூறமுடியாது. அதுபோல், பரவும் தன்மைகொண்டது என்ற பழைய நம்பிக்கையும் தவறானது என்று உணர்த்தப்பட்டுவிட்டது. தொடக்கத்திலே கண்டறிந்தால் இந்த நோயில் இருந்து முழுமையாக குணமாகிவிட முடியும்.

    புற்றுநோயை தடுக்கும் முக்கியமான விஷயங்கள் பற்றி பார்ப்போம்!

    தினமும் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் எல்லோரும் அறிந்ததுதான். கூடவே சிலவகை புற்றுநோய்களை தடுக்கும் சக்தியும் உடற்பயிற்சிக்கு இருக்கிறது. உடற்பயிற்சியால் உடலில் தேவைக்கு அதிகமாக இருக்கும் கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. அதனால் மார்பகம், கருப்பை வாய், புரோஸ்டேட், பெருங்குடல் போன்றவைகளில் ஏற்படும் புற்றுநோய்கள் பெருமளவு தடுக்கப்படும். தினமும் முக்கால் மணிநேரம் வேகமான நடைப்பயிற்சியே போதுமானது.

    பலவகையான நிறங்களை கொண்ட பழங்களை உண்ணவேண்டும். காய்கறிகள், கீரை வகைகளையும் தவறாமல் உணவில் சேர்க்கவேண்டும். இதன் மூலம் உடலுக்கு தேவையான எல்லாவிதமான சத்துக்களும் கிடைக்கும். நார்ச்சத்து கொண்ட உணவுகளில் புற்றுநோய்க்கு எதிரான சக்தி நிறைந்திருக்கிறது. எளிதாக ஜீரணமாகும் உணவுகளையும், கழிவுகளை தாமதமின்றி உடல் வெளியேற்றும் விதத்திலான உணவுகளையும் உண்பது அவசியம். மாம்பழம், பலாப்பழம், நெல்லிக்காய், பப்பாளி, வாழை, சப்போட்டா போன்ற நாட்டு வகை பழங்களை அதிகம் உண்ணுங்கள்.

    உடல் பருமனை குறையுங்கள். கொழுப்பு உடலில் சேருவது புற்றுநோயை வரவேற்கும் விதமாக அமைந்துவிடுகிறது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவைகளால் உடல் எடையை கட்டுக்குள்கொண்டு வாருங்கள்.

    கடுமையான வெயில் உடலைத் தாக்குவதை தவிர்க்கவேண்டும். அல்ட்ரா வயலைட் கதிர்கள் உடலில் அதிகம்படுவது சரும புற்றுநோய் உருவாக காரணமாகிவிடும். நமது நாட்டில் இந்த புற்றுநோய் பாதிப்பு குறைவு என்றாலும், உச்சி வெயில் உடலில் பாய்வதை தடுத்தாலே இந்த வகை புற்றுநோயில் இருந்து தப்பித்துவிடலாம்.

    புற்றுநோய் ஒரு வகை ‘சைக்கோசோமோட்டிக்’ பாதிப்பாகும். அதாவது இந்த நோய் உருவாக உடலும், மனமும் காரணமாக இருக்கிறது. அதனால் உடலையும், மனதையும் ஒரே நிலையில் சீராக்கும் தியானத்தால் புற்றுநோயை தடுக்கமுடியும். தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்தால் போதுமானது.

    சுற்றுப்புற சூழல் மாசற்றதாக இருக்கவேண்டும். சுற்றுப்புறம் சுகாதாரமாக இருந்தால் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவு போன்றவைகளும் சுத்தமாக இருக்கும். போக்குவரத்து நிறைந்த இடங்கள், ரசாயன தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களில் வசிப்பது அவ்வளவு ஏற்புடையதல்ல.

    பான்மசாலாவை பயன்படுத்த வேண்டாம். புகையிலை, பாக்கு மற்றும் ரசாயன பொருட்கள் சேர்க்கப்படும் பான்மசாலா பயன்பாட்டை முழுமையாக தவிர்த்துவிடுங்கள். இதன் பயன்பாடு நாக்கு, கன்னம், குட்டிநாக்கு போன்றவைகளில் புற்றுநோயை உருவாக்குகிறது. பெரும்பாலும் நடுத்தர வயதினர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

    மது அதிகமாக அருந்தக்கூடாது. அதிகமாக மது அருந்துகிறவர்களுக்கு நுரையீரல் புற்று, தொண்டை புற்று, ஈரல் புற்று போன்றவை ஏற்படுகிறது. மதுவோடு புகையும் பிடித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.

    மாமிச உணவுகளின் அளவை குறையுங்கள். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளையும் தவிர்த்திடுங்கள். ஊறுகாய் போன்ற உப்பு அதிகம் சேர்த்த உணவுகளையும் குறைக்கவேண்டும். பாஸ்ட் புட் வகைகளையும் தவிர்த்துவிடலாம். அவ்வப்போது உங்கள் வாயை நீங்கள் பரிசோதித்து பார்க்கவேண்டும். வெளிச்சத்தில் கண்ணாடியை பயன்படுத்தி வாயை ஆராயுங்கள். வாய்க்குள் வெள்ளையான படை, சிவப்பு படை, திட்டுகள், புண்கள், பற்களின் உரசலால் ஏற்பட்ட காயங்கள், பல்லை பிடுங்கிய இடத்தில் ஆறாத காயங்கள், பூஞ்சைத் தொற்று போன்றவை இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நீங்களே உங்கள் வாயை நன்றாக பரிசோதியுங்கள். காரமான, சூடான உணவினை உண்ணமுடியாவிட்டாலும் அதற்கான காரணத்தை டாக்டரிடம் கேளுங்கள்.
    ×