என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "thyroid"
- புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
- ரத்தப் பரிசோதனை மூலம் கொழுப்பின் அளவை கண்டறியலாம்.
குடும்ப நலன் நாடும் பெண்கள் தங்கள் நலனில் போதிய அக்கறை கொள்ளாததால் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருசில பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் பெரிய அளவிலான ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய சில பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்..
புற்றுநோய்
உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அதிலும் பல பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இளம் வயது பெண்கள் கூட இந்த புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் 20 வயதை கடந்த பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மார்பக புற்றுநோயும் வயது வித்தியாசமின்றி பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்குரிய பரிசோதனையையும் அவசியம் மேற்கொள்ள வேண்டும். 40 வயதை கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய்க்கான மேமோகிராம் சோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்து கொள்வது நல்லது.
கொழுப்பு பரிசோதனை
ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் சேர்ந்தால், பல்வேறு வகையான பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் குறிப்பிட்ட காலகட்டத்தில் கொழுப்பு அளவை கண்டறிய வேண்டியது அவசியமானது. சாதாரண ரத்தப் பரிசோதனை மூலமே கொழுப்பின் அளவை கண்டறிந்துவிடலாம். அதனால் 5 ஆண்டு களுக்கு ஒருமுறையாவது கொழுப்பு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. 20 வயதை கடந்த பெண்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.
தைராய்டு பரிசோதனை
கழுத்து பகுதியில் அமைந்திருக்கும் தைராய்டு சுரப்பியின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பதுதான். இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம், குறைந்தால் ஹைப்போ தைராய்டிசம் என்ற பாதிப்பு உண்டாகும். ஆரம்ப நிலையிலேயே தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்தால் மருந்துகளின் மூலம் குணப்படுத்திவிட முடியும்.
கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி இருந்தால் அது பெரும்பாலும் தைராய்டு கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்வதன் மூலமே கண்டறிய முடியும். ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்துவிட்டால் நோய் பாதிப்பின் வீரியத்தை கட்டுப்படுத்திவிடலாம்.
கண்பார்வை பரிசோதனை
பெண்கள் பலரும் கண் பார்வை பரிசோதனை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதன் அவசியத்தை புரிந்து கொள்வதுமில்லை. கண் பார்வையில் சிறு குறைபாடு தென்படும்போதே கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.
நாளடைவில் கண் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகரிக்க தொடங்கிவிடுகிறது. ஆண்டுக்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. கண்ணாடி அணியுமாறு மருத்துவர் பரிந்துரைத்த நபர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
எலும்பு அடர்த்தி சோதனை
எலும்புகள் பலவீனம் அடைந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். எலும்புகளின் அடர்த்தியில் மாறுபாடு ஏற்படும்போது கடுமையான விளைவுகளை அனுபவிக்க நேரிடும். எலும்பின் அடர்த்தியை முன்கூட்டியே பரிசோதனை செய்து அறிந்து கொண்டால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
பெண்கள் 5 வருடங்களுக்கு ஒருமுறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. அதிலும் 65 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய் நிற்கும் காலகட்டமான மெனோபாஸ் சமயத்தில் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.
- மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 கிலோ எடையுள்ள தைராய்டு கட்டி அகற்றப்பட்டது.
- இது போன்ற பிரச்சினைகள் புற்றுநோயாக கூட மாறிவிடும்.
மதுரை
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கிலோ எடையுள்ள தைராய்டு கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதுகுறித்து மதுரை நரிமேடு சரவணா மருத்துவமனை டாக்டர் சரவணன் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 63 வயது பெண் எங்களது மருத்துவ மனைக்கு வெளி நோயா ளியாக வந்தார். அவரை பரிசோதித்ததில் கழுத்துப் பகுதியில் பெரிய அளவி லான தைராய்டு கட்டி இருப்பது கண்டறி யப்பட்டது.
சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அந்த கட்டி இருந்துள்ளது. உடனடியாக சரவணா மருத்துவ மனை அறுவை சிகிச்சை குழுவி னரின் உதவியுடன் அந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இந்த கட்டி சுமார் 2 கிலோ எடையுள்ளதாக இருந்தது.
கிராமப்புற மக்கள் அறியாமையால் ஆரம்ப கட்டத்திலேயே இது போன்ற கட்டிகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இது போன்ற கட்டிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். இதற்காக ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும். இல்லையெனில் இது போன்ற பிரச்சினைகள் புற்றுநோயாக கூட மாறிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிக மாதவிடாய் தொந்தரவுகளை ஏற்படுத்துபவை தைராய்டு சுரப்பி கோளாறுகள்.
- சித்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறுக்கு நல்ல தீர்வு எட்ட முடியும்.
சினைப்பை நீர்கட்டிக்கு அடுத்தாற்போல், பெண்களுக்கு அதிக மாதவிடாய் தொந்தரவுகளை ஏற்படுத்துபவை தைராய்டு சுரப்பி கோளாறுகள். மாதவிடாய் சரிவர ஆகவில்லை என்று மருத்துவரை அணுகும் பெண்களுக்கு அதிர்ச்சி தர காத்திருப்பது தைராய்டு சுரப்பி கோளாறுகளும் தான். டாக்டர் எனக்கு மாதவிடாய் சரிவர நிகழவில்லை, ஸ்கேன் பண்ணி பாத்தாச்சு, நீர்க்கட்டி தொந்தரவும் இல்லை என்று கூறும் போது மருத்துவர் அடுத்ததாக தைராய்டு பரிசோதனையை ஆய்வு செய்ய விரும்புவது வழக்கமான ஒன்று.
உடல் எடை கூடிக்கொண்டே செல்கிறதா? அல்லது குறைகிறதா? உடல் அசதியாக உள்ளதா? மலச்சிக்கல் உள்ளதா ? அல்லது கழிச்சல் உள்ளதா?மாதவிடாய் சுழற்சி சரிவர நிகழ்கிறதா? மாதவிடாயின் போது வலி உள்ளதா? அதிக உதிரப்போக்கு உள்ளதா? வறண்ட தோலா? உடையக்கூடிய நகங்களா? கருச்சிதைவா? குழந்தை பேறின்மையா ? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அணுக இருப்பது இந்த தைராய்டு பரிசோதனையைத் தான். அவ்வாறு செய்யப்படும் தைராய்டு பரிசோதனையில் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்படுவது குறைவீதனம் எனப்படும் தைராய்டு சுரப்பு குறைந்த நிலை (ஹைப்போதைராய்டு) தான். ஆய்வுக் கூட பரிசோதனையில் கண்டறியப்படும் டி.எஸ்.எச் (TSH) அளவைப்பொறுத்து இந்நோயின் நிலையை கண்டறியலாம்.
அதிகரிக்கும் உடல் எடையும், வளர்ச்சிதை மாற்ற குறைப்பாட்டால் உடல் அசதியும், மாதாந்திர பூப்பு சுழற்சி மாறுபடுதலும் இந்த ஹைப்போதைராய்டு பிரச்சினை உள்ள மகளிர்க்கு அதிகம். ஏன் தைராய்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று கவனித்தால், கழுத்தின் முன் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பியில் சுரக்கும் 'தைராக்சின்' எனும் ஒற்றை ஹார்மோன் உடலில் உள்ள மற்ற அனைத்து ஹார்மோன்களோடும் தொடர்புடையதே இதற்கு காரணம்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த தைராய்டு சுரப்பி கோளாறுகள் இன்று வீட்டுக்கு வீடு வாசப்படியைப் போல மாறிவிட்டதற்கு காரணம் மாறிப்போன வாழ்வியல் முறையும் உணவு முறையும் தான். மன அழுத்தம் என்பது பலரும் அறிந்தது. மனதோடு தொடர்புடைய மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது உடலும் தான். இது பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணம்.
சற்று உற்றுநோக்கினால், அதைப்போல் நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இந்த ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் சென்று ஏற்படுத்தும் சேதங்களே இவ்வாறு அதிகமாகும் ஹார்மோன் குறைபாடுகளுக்கு காரணம். இது இயல்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹார்மோன் சுழற்சியை தடுத்து செல்லுக்குள் இருக்கும் டி.என்.ஏ. வரை சென்று தாக்கி சேதாரத்தை ஏற்படுத்தக் கூடியது.
இந்த 'ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்' தான் இன்றைய பெரும்பாலான நவீன ஆராய்ச்சியாளர்களின் பரிசோதனைப் பொருள். இதனை குறைப்பதும், தடுப்பதும் தான் பல்வேறு நோய் நிலைகளை தடுப்பதற்கு ஒரே ஆயுதம்.
'பாட்டி எனக்கு தைராய்டு இருக்குனு சொல்லிட்டாங்க, நான் காலத்துக்கும் மருந்து சாப்பிட்டே ஆகணுமாம்' என்று வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும் இன்றைய இளம் தலைமுறைப்பெண்கள் சித்த மருத்துவத்தை அணுக வேண்டியது அவசியம். ஏனெனில் நோயின் சப் கிளினிக்கல் ஹைப்போ தைராய்டு என்று கூறப்படும் ஆரம்ப நிலையிலே சித்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறுக்கு நல்ல தீர்வு எட்ட முடியும்.
தைராய்டு சுரப்பி குறைந்த நிலையில் பயன்படும் சித்த மருத்துவ மூலிகைகளில் முக்கிய இடத்தை பிடிப்பது மந்தாரை பட்டையும், அமுக்கரா கிழங்கும், குங்கிலியமும் தான்.
இந்தியன் ஜின்செங் என்று அழைக்கப்படும் அமுக்கரா கிழங்கு பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தினசரி அமுக்கரா சூரணம் என்ற சித்த மருந்தை எடுத்துக்கொள்ள தைராய்டு சுரப்பி கோளாறு மட்டுமின்றி, பல்வேறு ஹார்மோன் சுரப்பிகளை சீராக்கும் தன்மை உடையது. பெண்களின் மலட்டு நோய்க்கு பல்வேறு ஆண்டுகளாக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. வித்தாபெரின்-எ என்ற வேதிப்பொருள் சினைப்பை நீர்கட்டிகளை கரைக்கும் தன்மையும், மாதவிடாய் சீராக்கும் தன்மையும், தைராய்டு சுரப்பியை தூண்டி இயற்கையாக செயல்பட வைக்கும் தன்மையும் உடையது.
அடுத்து அதிக பலனை தருவது மந்தாரை பட்டை. மந்தாரை இலை எனும் மகத்தான விருந்தளிக்கும் இலையை இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை. அந்த இலையில் அறுசுவை விருந்து உண்டால், அதன் சுவைக்கும் மணத்திற்கும் நிகரில்லை என்றே சொல்லலாம். நோய்க்கு ஆதாரமாகும் பிளாஸ்டிக் தட்டுக்களும், பேப்பர் பிளேட்களும் பழகிவிட்ட இக்காலத்தில் மருத்துவ குணமிக்க பல மூலிகைகள் மறந்தே போய்விட்டன. இதனால் மறந்துபோன பல நோய்களும், மீண்டெழுந்து நம் ஆரோக்கியத்தை சிதைக்கின்றன.
அந்த வகையில், மந்தாரை மரத்தின் பட்டையானது தைராய்டு சுரப்பியின் வீக்கத்தை குறைப்பதோடு, அதைத்தூண்டி இயற்கையாக செயல்பட வைக்கும் தன்மை உடையது. பல ஆண்டுகளாக தைராய்டு சுரப்பி குறைவுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மூலிகை எலிகளில் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பாரம்பரிய மருத்துவம் மீதான நம்பிக்கையை உலக அரங்கில் அதிகரிக்கிறது. இதில் உள்ள மூன்று முக்கிய பிளவனாய்டு வேதிப்பொருட்கள் இதன் மருத்துவ தன்மைக்கு காரணமாகின்றன.
குங்கிலியம் எனும் மற்றொரு மூலிகைப்பிசின் தைராய்டு கோளாறுக்கு நல்ல பலன் தருவதாக உள்ளது. காலம்காலமாக வீட்டில் சாம்பிராணி புகைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் குங்கிலியம் காற்றில் உள்ள கிருமிகளை மட்டுமல்லாது, நம் உடலில் உள்ள கிருமிகளையும் அழித்து, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். மேலும் தைராய்டு சுரப்பியை இயற்கையாக தூண்டி செயல்பட வைக்கும் தன்மையுடையது குறிப்பிடத்தக்கது.
நம் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது, ஹைப்போ தைராய்டு நிலையைத் தூண்டும் தன்மையுடையன என்று ஆய்வுகள் கூறுகின்றது. ஆக, தாதுஉப்புக்கள் மற்றும் வைட்டமின்களின் உட்கொள்ளலை அதிகரிக்க செய்வது, அவைகளை அடிப்படையாக கொண்ட கீரைகளையும், பழங்களையும், பாரம்பரிய உணவுகளையும் உணவில் சேர்ப்பதால் தைராய்டு குறைபாடு மட்டுமின்றி பல்வேறு ஹார்மோன் குறைபாடுகளை போக்க உதவும்.
பரம்பரை வழியாக வரும் தைராய்டு குறைவு நோயினை கண்டு அஞ்சி வருந்தும் மகளிர் தினசரி மஞ்சளை பாலில் கலந்து எடுத்துக்கொள்வதுடன் சர்வாங்காசனம்,தியானம் ஆகியவற்றை பழகுதல் மூலம் ஹைப்போதைராய்டு வராமல் தடுக்க முடியும். பல்வேறு உடல் உறுப்புகளையும், எண்டோகிரைன் சுரப்பிகளையும் இயற்கையாக தூண்டும் மருத்துவ குணமிக்க மஞ்சளை அடிக்கடி உணவில் பயன்படுத்துவது பெண்களுக்கு நல்ல பயன் தரும். காய்டர் என்று சொல்லப்படும் தைராய்டு சுரப்பியின் வீக்கத்திலும், இது வீக்கத்தை குறைப்பதில் நல்ல பயனளிக்கும். மஞ்சளில் உள்ள 'குர்குமின்' என்ற வேதிப்பொருள் உலகமே வியக்கும் வண்ணம் பல்வேறு நோய்களுக்கும் மருந்தாகிறது.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com
இந்தக் கேள்விகளில் ஏதாவது ஒன்றுக்குப் பதில், ஆமாம் என்றால் கூட உங்களுக்கு தைராய்டு தொடர்பான சிக்கல் உண்டாகியிருக்க வாய்ப்பு உண்டு. கழுத்தின் முன்பக்கமாக இருக்கிறது தைராய்டு சுரப்பி. அங்கே புடைத்துக்கொண்டிருக்கும் பகுதியை ஆடம்ஸ் ஆப்பிள் என்பார்கள். அதற்கு கொஞ்சம் கீழே இருக்கிறது தைராய்டு. சுவாசக்குழாய்க்கு முன்புறமும் வலப்பக்கமும் இடப்பக்கமுமாக விரிந்திருக்க, நடுவே சுருங்கி இருக்கிறது இந்த சுரப்பி. ஒரு பட்டாம்பூச்சிபோல் தோற்றம் அளிக்கிறது இது. தைராய்டு சுரப்பி, தைராக்ஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது உடலின் பல வேலைபாடுகளுக்கு அடிப்படையாகிறது. முக்கியமாக உடலில் மெடபாலிஸத்துக்கு.
அதாவது மாவுச்சத்து, புரதம், கொழுப்பு ஆகியவற்றின் செரிமானத்தை இது கட்டுபடுத்துகிறது. தசை வளர்ச்சி எலும்புகளின் உருட்கி ஆகியவற்றுக்கு தைராய்டு முக்கியச் காரணமாக அமைகிறது. தைராக்ஸின் குறைவாகவோ, அதிகமாகவோ, சுரக்கும்போது பிரச்னைகள் உண்டாகின்றன. தைராக்ஸின் போதிய அளவில் சுரக்க வேண்டும் என்றால் அதற்கு அயோடின் சத்து தேவை. அயோடின்தான் தைராக்ஸின் சுரப்பதற்கு தூண்டுகோலாக இருக்கிறது. பொதுவாக நாம் பயன்படுத்தும் தண்ணீரிலேயே நம் உடம்புக்கு இந்த அயோடின் சத்து கிடைத்துவிடுகிறது என்றாலும் மலைப்பகுதியில் வாழ்பவர்களுக்கு அங்குள்ள தண்ணீரிலும், உப்பிலும் வழக்கத்தைவிட குறைவான அயோடினே இருப்பதால் தைராக்ஸின் குறைவாகச் சுரந்து சிக்கல்களை உண்டாக வாய்ப்பு அதிகம்.
நகரங்களில் வசிப்பவர்களுக்கும் தைராக்ஸின் குறைபாடு ஏற்படுவது உண்டு. அதுவும் இப்போதெல்லாம் தைராய்டு பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சிலருக்கு பிறவியிலேயே இந்த ஹார்மோன் குறைவாக சுரக்கிறது. பிரசவம், பூப்பெய்தல், மாதவிலக்கு போன்ற சமயங்களில் உடலிலும், மனத்திலும் உண்டாகும் இறுக்கங்கள் காரணமாகவும் தைராய்டு பிரச்னைகள் உண்டாகலாம். அப்போது உடலுக்கு தைராக்ஸின் தேவை அதிகமாக ஏற்படலாம். அந்த அளவுக்கு இந்த ஹார்மோன் சுரக்காதபோது, தைராய்டு சுரப்பி தன்னை பெரிதாகிக்கொள்ளும். அப்படியாவது தைராக்ஸின் அதிகம் சுரக்கட்டும் என்பதற்காக இயற்கை செய்யும் விந்தை இது. ஆனால் அப்போதும் போதிய தைராக்ஸின் கிடைக்காமல் போகலாம்.
நாளடைவில் உடலுக்கு தேவையான அளவு தைராக்ஹினை இந்த சுரப்பியால் சுரக்கமுடிந்தால் பெரிதான சுரப்பி தானாகவே பழைய நிலையை அடையக்கூடும். அப்படி இல்லையென்றால் வீக்கம் தொடர்ந்து பெரிதாகும். மிக அதிக அளவில் பெண்கள்தான் தைராய்டு பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் இப்போதைய பரபரப்பான வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள். முதலில் பட்டாணி அளவுக்குதான் இந்த சுரப்பி வீங்கும். அதற்கு பிறகு, பெரிய நெல்லிக்காய் அளவில் விரிவடையும். பின்னர் மேலும் பெரிதாகும். சிலருக்கு தொடக்கத்திலேயே தொண்டைப் பகுதியில் இரண்டு மூன்று கட்டிகள் தோன்றலாம்.
இவை ஒவ்வொன்றும் பெரிதாகும் போது நாளடைவில் பார்க்கவே விகாரமாக இருக்கும். அதேசமயம் பார்வைக்கு விகாரமாக இருக்கக்கூடாது என்பது மட்டுமே இதில் ஏற்படும் பிரச்னை அல்ல. பெரும்பாலும் பெரிதாக வளர்ந்துவிட்ட தைராய்டு சுரப்பி மீண்டும் பழைய நிலையை அடைவதில்லை. உள்ளுக்குள் ரத்தக்கசிவும் ஏற்படலாம். அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்க வாய்ப்பு மிக அதிகம். மருந்தினால் இதை குணப்படுத்திவிட முடியாது. அறுவை சிகிச்சையின் மூலம் வீக்கப்பகுதியை நீக்கிவிடுவார்கள். தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்தால் கழுத்துப்பகுதியில் வீக்கம் கட்டாயம் தோன்றுமா? என்றால், அவசியமில்லை. வீக்கம் இல்லாமல் கூட தைராக்ஸின் மிகக் குறைவாக சுரக்கலாம்.
இதற்கு ஆயுள் முழுவதும் மாத்திரைகள் உட்கொள்ளவேண்டி இருக்கும். தைராக்ஸின் அதிகமாக சுரப்பதும் சிக்கல்தான். தைராக்ஸின் அதிகமாக சுரக்கும் நபரின் கைகளில் நடுக்கம் இருக்கும். அவர்களால் வெப்பத்தை தாங்க முடியாது. சரியாக தூங்க முடியாது. கண்கள் வீங்கும். எடை குறையும். மருந்துகளின் மூலம் தைராக்ஸின் சுரப்பதைக் குறைக்கலாம்.
கதிரியக்க அயோடின் சிகிச்சையின் மூலம் தைராய்டு சுரப்பியையே செயலற்றதாக ஆக்க முடியும். அறுவை சிகிச்சை மூலம் தைராய்டு சுரப்பியை நீக்குவதும் ஒரு வழிதான். தைராக்ஸின் குறைவாக சுரந்தால் முதல் கட்டமாக மாத்திரைகள் மூலம் இந்த குறைபாட்டை சரிசெய்ய முயற்சிக்கப்படும். வீக்கம் அதிகமாகி பார்வைக்கு உறுத்தலாக இருக்கும் நிலையில், இதை சரிசெய்யத்தான் தைராய்டு சுரப்பியில் வீங்கிய பகுதி அறுவைச்சிகிச்சையின் மூலம் நீக்கப்படுகிறது. அறுவை சிகிச்சையின் மூலம் தைராய்டு சுரப்பியின் ஒரு பகுதியையோ அல்லது அதை முழுவதுமாகவோ நீக்கிட்டால் அதற்கு பிறகு வாழ்நாள் முழுவதும் தினமும் தைராக்ஸின் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டி இருக்கும்.
சாப்பிடக் கூடியவை
தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். உணவில் பசலைக்கீரை, எள், பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடுவது நல்லது. உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும்போது தண்ணீரை வடித்து விட்டு பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.
தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உடல் சோர்வின்போது, அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம். அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும். தூதுவளைக் கீரைச்சாறு 30 மில்லி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும். தும்பை இலையை அரைத்து கழுத்து பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.
பாதுகாப்பு முறை:
உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக்கொள்ள கூடாது. உணவில் கல் உப்பு பயன்படுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டை தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ளலாம்.
இது உடலில் உள்ள செல்கள் எவ்வளவு சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. தைராக்ஸின் அதிகப்படியாக சுரக்கும்போது ஹைப்பர் தைராய்டு பிரச்சினையும், குறைவாக சுரக்கும்போது ஹைப்போ தைராய்டு பிரச்சினையும் உண்டாகிறது. ஆண்களை விட, பெண்களுக்கு பத்து மடங்கு அதிகமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 25-ந் தேதி 'உலக தைராய்டு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. உடல் எடை திடீரென குறைதல் மற்றும் அதிகரித்தல், அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, ஞாபக மறதி, எரிச்சல், படபடப்பு, உடல் தசைகளில் பலவீனம், நடுக்கம், தூக்கமின்மை, தைராய்டு சுரப்பி வீங்குதல், முடி உதிர்வு, கைகால் மரத்துப்போதல், மூட்டுவலி மற்றும் கண் எரிச்சல் போன்றவை தைராய்டு நோயின் அறிகுறிகள்.
இந்த ஆண்டின் கருப்பொருளான 'நம் உலகம் நம் ஆரோக்கியம்' என்பதற்கிணங்க, அறிகுறிகள் இருக்கும்போதே தைராய்டு நோய்க்கான பரிசோதனை மேற்கொண்டு, தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்நோயின் பிடியிலிருந்து மீளலாம்.
தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்டு பிரச்சினை காரணமாகி விடுவதுண்டு. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர்.
இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக சுரந்தால் கொழுப்பு சக்தி அதிகமாகி விடும் இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராயிடிசன், தைராய்டு கட்டிகள் ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை தான் தைராய்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் ஆகும்.
சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையின் குணங்கள் (ஹைப்போ தைராய்டிசன்). வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும் சிறுவயதில் அளவுக்கு அதிக உயரம் பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள்.
அடுத்தது (ஹைப்பர் தைராயிடிசன்) இதில் வயதானவர்களின் எடைக் குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள்.

தைராய்டு மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்டு பிரச்சினையால் தான். கழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான் முட்டைகோஸ், கேரட் அதிகமாக சேர்க்கக்கூடாது. இது தைராய்டு பிரச்சினையை அதிகப்படுத்தும்.
மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.
டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு.
ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்டு பிரச்சினை காரணமாகி விடுவதுண்டு. அவர்களை மகப்பேறு நிபுணர்கள் முதலில் சோதிப்பது தைராய்டு இருக்கிறதா என்பது தான். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர். இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக சுரந்தால் கொழுப்பு சக்தி அதிகமாகி விடும் இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகலாம்.
ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராயிடிசன், தைராய்டு கட்டிகள் ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை தான் தைராய்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் ஆகும்.
சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையின் குணங்கள் (ஹைப்போ தைராய்டிசன்). வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும் சிறுவயதில் அளவுக்கு அதிக உயரம் பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள்.
அடுத்தது (ஹைப்பர் தைராயிடிசன்) இதில் வயதானவர்களின் எடைக் குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். தைராய்டு மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்டு பிரச்சினையால் தான். சோர்வு, கவலை என மனநோயாளி போல் ஆகிவிடுவார்கள். மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இது விலகி விடும்.
கழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான் முட்டைகோஸ், கேரட் அதிகமாக சேர்க்கக்கூடாது. இது தைராய்டு பிரச்சினையை அதிகப்படுத்தும். மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.
தைராய்டு கட்டிகள் அறுவை சிகிச்சை மூலமாய் குணப்படுத்தலாம். மேலும் லேசர் சிகிச்சை இருக்கிறது. தைராய்டு கட்டிகளில் சில புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் அது மிகவும் அபூர்வமாகவே வரும். இதனை FNAC(Fine Needle Aspiration Citation) மூலம் கண்டுபிடிக்கலாம்.
டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு. ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதும், உடற்பயிற்சி செய்வதும், இந்த நோயினின்றும் பாதுகாக்கும் முறைகளாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
