search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Polycystic ovary syndrome"

    • முகத்தில் முடி வளர்ச்சியை தீர்மானிப்பதில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • ஹார்மோன் சமநிலையின்மையே பெண்களின் முகத்தில் முடி வருவதற்கு காரணம்.

    முகத்தில் முடி தோன்றும் பிரச்சனை ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களும் இருக்கும். சில பெண்களுக்கு முகத்தில் அடர்த்தியான முடி இருக்கும், அதனால்தான் அவர்கள் பார்லருக்கு சென்று ஷேவிங், வாக்சிங் அல்லது மெழுகு போன்றவற்றை செய்கிறார்கள். நீங்கள் இன்னும் கொஞ்சம் செலவழிக்க விரும்பினால், லேசர் சிகிச்சையையும் முயற்சி செய்யலாம்.

    பெண்களுக்கு முகத்தில் முடி வருவதற்கு என்ன காரணம்?

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற மருத்துவ நிலைகளால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையே பெண்களின் முகத்தில் முடி வருவதற்கு மிகவும் பொதுவான காரணம் என்கிறார்கள் நிபுணர்கள். இது முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    ஒரு நபரின் உடல் மற்றும் முகத்தில் முடி வளர்ச்சியை தீர்மானிப்பதில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்டெராய்டுகள் போன்ற சில வகையான மருந்துகள் பெண்களுக்கு முக முடி பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றொரு காரணியாக இருக்கலாம். இதற்கு நீங்கள் வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்ளலாம். நல்ல விஷயம் என்னவென்றால், உங்கள் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற நீங்கள் சமையலறை பொருட்களையே பயன்படுத்தலாம்.

    சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு

    நீங்கள் 35 மில்லி தண்ணீருடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும். கலவையை கொதிக்க ஆரம்பிக்கும் வரை சூடாக்கவும். பிறகு ஆறவிடவும். ஆறிய கலவையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 20 முதல் 25 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும். அதை தண்ணீரில் கழுவி, வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். எலுமிச்சை மற்றும் தேன் ஒரு தேக்கரண்டி தேன், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தொடங்குங்கள். கலவையை சுமார் மூன்று நிமிடங்கள் சூடாக்கி, அது மிகவும் தடிமனாக இருந்தால் அதை மெல்லியதாக மாற்ற மெதுவாக தண்ணீரை கிளறவும். பேஸ்ட் குளிர்ந்ததும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். இது இயற்கையான மெழுகு போன்றது, எனவே மெழுகு பட்டையைப் பயன்படுத்தி, வளர்ச்சியின் எதிர் திசையில் முடியை வெளியே இழுக்கவும்.

    முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் அரிசி மாவு

    ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, அரை டீஸ்பூன் அரிசி மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கெட்டியான பேஸ்ட்டை உருவாக்க அவற்றை நன்கு கலந்து, தேவையற்ற முக முடி உள்ள பகுதிகளில் தடவி, சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை உலர வைக்கவும். முடி வளர்ச்சியின் எதிர் திசையில் உலர்ந்த ஃபேஸ் மாஸ்க்கை மெதுவாக உரிக்கவும், பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

    ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம்

    ஒரு பழுத்த வாழைப்பழத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்மீலைக் கலக்க வேண்டும். இது ஒரு பயனுள்ள இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட் ஆகும். மேலும் இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வட்ட இயக்கத்தில் தடவவும். தொடர்ந்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்து, முகத்தை தண்ணீரில் மெதுவாக கழுவ வேண்டும்.

    பப்பாளி மற்றும் மஞ்சள்

    பப்பாளியில் பப்பெய்ன் என்ற நொதி உள்ளது, இது மயிர்க்கால்களை உடைத்து முடி வளர்ச்சியைத் தடுக்க உதவும். பப்பாளி மற்றும் மஞ்சள் பேஸ்ட் செய்ய, பப்பாளி கூழ் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.

    இந்த இயற்கையான முக முடி அகற்றும் யோசனைகளை பயன்படுத்துவதற்கு முன், தேவையற்ற தோல் எதிர்வினைகளைத் தவிர்க்க பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். மேலும், தோல் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய மறக்காதீர்கள். உங்கள் முகத்தில் உள்ள தோல் பொதுவாக மற்ற உடல் பாகங்களை விட அதிக உணர்திறன் கொண்டது, எனவே முடி அகற்றும் முறைகள் வரும்போது அதற்கு கவனிப்பு தேவை. இயற்கையான முறைகளைப் பயன்படுத்தி முகத்தில் உள்ள முடியை அகற்ற முயற்சி செய்கிறீர்கள் என்றால், கவனமாக இருக்க வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் பருமன் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும்.
    • உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அதிகரிப்பது.

    பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் நிகழக்கூடிய மாதவிடாய் சீராக இல்லாமல் தடைபடுவதும் அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிக ரத்தப்போக்கை உண்டாக்குவதுதான் பி.சி.ஓ.எஸ். கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள்தான் இதற்கு முக்கிய காரணம். இந்த நீர்க்கட்டிகள் முழுமையாக உடைந்தால்தான் மாதவிடாய் சீராக இருக்கும்.

    பி.சி.ஓ.எஸை முற்றிலும் குணப்படுத்த எந்த சிகிச்சைகளும் இல்லாத நிலையில் முறையான வாழ்க்கை முறையே கை கொடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக அதிக எடை பிரதான காரணமாக இருக்கிறது. மேலும் முகம் மற்றும் உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

    பாலிசிஸ்டிக் ஓவரி நோய் (பி.சி.ஓ.எஸ்) பொதுவாக பெண்களின் இனப்பெருக்க வயதில் நிகழ்கிறது. இந்த பிரச்சனை உள்ள பெண்களின் கருப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் சிறிய நீர்க்கட்டிகளின் வளர்ச்சி இருக்கும். இதன் விளைவாக கருமுட்டைகள் உருவாக முடியாத நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.

    பி.சி.ஓ.எஸ் பெரும்பாலும் வாழ்க்கை முறை தொடர்பான நோயாக வகைப்படுத்தப்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள், உடற்பயிற்சியின்மை, மோசமான வாழ்க்கை முறை, புகைபிடித்தல், மன அழுத்தம் மற்றும் போதிய தூக்கமின்மை போன்ற பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதை சரி செய்ய எப்படியான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்..?

    ஆரம்ப கட்ட அறிகுறிகள்

    * ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தாமதமான சுழற்சிகள், மிகக் குறைந்த கால மாதவிடாய் போன்றவை நீர்க்கட்டி பிரச்னையின் முக்கிய அறிகுறிகள்.

    * பெரியவர்களுக்கு மாதவிடாய் காலங்கள் 21 நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது 35 நாட்களுக்குப் பிறகோ ஏற்படும். அதுவே இளம் பெண்களுக்கு 45 நாட்களுக்கு பிறகு மாதவிடாய் நிகழ்ந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

    * உடல் பருமன் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும். ஏனெனில் பி.சி.ஓ.எஸ் பாதித்த பெண்களில் கிட்டத்தட்ட 40-80 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள்.

    * ஆண்களின் உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் அதிக அளவில் இருப்பதால் உடலில் முகப்பரு, அதிகப்படியான முடி வளர்வது, குறிப்பாக முகத்தில் ஒரு முக்கிய அறிகுறி.

    * உச்சந்தலையில் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை ஏற்படுத்துவது.

    * டைப் 2 நீரிழிவு நோயின் பாதிப்பு. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாதாரண அளவை விட அதிகரிக்கும்.

    * உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அதிகரிப்பது.

    *மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, தன்னம்பிக்கை இல்லாமை மற்றும் பதட்டம் போன்றவை பி.சி.ஓ.எஸ்-ன் அறிகுறிகளாகும்.

    மருத்துவ ரீதியாக கண்டறியும் முறை பி.சி.ஓ.எஸ் நோயைக் கண்டறிய திட்டவட்டமான சோதனை எதுவும் இல்லை. எனினும் மருத்துவர்கள் பி.சி.ஓ.எஸ் நோயறிதலுக்கு ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகளான ரத்த பரிசோதனைகள் மற்றும் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம்.

    வாழ்க்கை முறை மாற்றங்கள்

    பி.சி.ஓ.எஸ் உயிருக்கு ஆபத்தான நோய் அல்ல. ஆனால் நீண்டகால சிக்கல்களை தவிர்க்க ஆரம்ப கட்டத்திலேயே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவ ரீதியாக சிகிச்சையளிக்க முடியும் என்றாலும், சில எளிய வாழ்க்கை முறை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பி.சி.ஓ.எஸ்-ஐ குணப்படுத்தலாம்.

    * சத்தான உணவை உட்கொள்வது மற்றும் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறலாம்.

    * பீட்சா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வெண்ணெய், சீஸ் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருள்களை சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதையும் தேர்ந்தெடுப்பது அவசியம்.

    *வழக்கமான உடற்பயிற்சி, நடைப்பயிற்சியில் ஈடுபடுவது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

    * உங்கள் அன்றாட செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இன்சுலின் அளவை சீராக வைத்துக்கொள்ளலாம். இது உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

    * தினசரி 7- 8 மணிநேர இடைவிடாத தூக்கம் பி.சி.ஓ.எஸ் வராமல் தடுக்க உதவும் ஒரு முக்கிய காரணியாகும்

    * மன அழுத்தம் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது, ஆனால் பி.சி.ஓ.எஸ்-ல் இருந்து நீங்கள் குணமடைய விரும்பினால் மன அழுத்தத்தை குறைக்க நேரம் ஒதுக்குவது அவசியமாகும். இதற்கு தினமும் யோகா, நீச்சல் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

    ×