search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "waxing"

    • எக்ஸ்ஃபோலியேட் செய்துகொள்வதுதான் முதல் ஸ்டெப்.
    • சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம்.

    உங்கள் அழகான சருமத்தை மேலும் பொலிவாகக் காட்டிட சருமத்தில் இருக்கும் தேவை இல்லாத முடிகளை நீக்குதல் மிகவும் முக்கியமானது. முகம், கை, கால் மற்றும் மென்மையான பாகங்களில் உள்ள தேவை இல்லாத முடிகளை நீக்குவதற்குப் பல வழிகளை பின்பற்றி வருகிறார்கள். அவற்றில், பலர் பெரிதும் ஆர்வம் காட்டும் ஒரு வழி - வேக்சிங். இதை எளிமையாக வீட்டிலேயே செய்துகொள்ளலாம். வேக்சிங்கில் ஹாட் வேக்ஸ் மற்றும் கோல்டு வேக்ஸ் என இருவகைகள் உள்ளன.

    எக்ஸ்ஃபோலியேட்

    வேக்சிங் செய்வதற்கு முன் எக்ஸ்ஃபோலியேட் செய்துகொள்வதுதான் முதல் ஸ்டெப். வேக்சிங் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பு சருமத்தின் மேல் இருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும். அதற்கு சர்க்கரை, காபி ஸ்கிரப்கள், ஆல்ஃபா ஹைட்ராக்சி அமிலங்கள், பீட்டா ஹைட்ராக்சி அமிலங்கள், சாலிசிலிக் அமிலங்கள் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மாஸ்க், ஓட்மீல் ஸ்கிரப் போன்றவற்றைப் பயன்படுத்தி எளிதாக சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம். இதன் மூலம், சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்புடனும் காணப்படும்.

    மாய்ஸ்ச்சரைஸர்

    நமது உடலில் ஈரப்பதம் குறையும் போது, சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்கு, இயற்கை உட்பொருள்கள் நிறைந்திருக்கும் மாய்ஸ்ச்சரைஸரை உபயோகப்படுத்தும்போது நம் உடலில் ஈரப்பதம் மேலோங்கி இருக்கும். மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துவதும் சருமத்தின் தன்மைகளைப் பொறுத்து மாறுபடும். எண்ணெய் வழியும் சருமம் உடையவர்கள் லைட் மாய்ஸ்ச்சரைசர், நார்மல் சருமம் உடையவர்கள் மீடியம் மாய்ஸ்ச்சரைசர் மற்றும் வறண்ட சருமம் உடையவர்கள் ஹெவி மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்தலாம்.

    ஒவ்வொரு நாளும் அலுவலகம் கிளம்பும்போது உங்களது வாட்ச், போன் போன்ற அடிப்படையான விஷயங்களை மறக்காமல் எடுத்துக்கொள்வது போல உங்கள் சருமத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். இது உங்கள் தோல் ஆரோக்கியத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுக்காக்கிறது. மேலும், வெளிப்புற சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தோலில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

    மேற்கூறிய வழிகளைப் பின்பற்றி, சருமத்தை ஆரோக்கியமாகவும், வேக்சிங் செய்து பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.

    • முகத்தில் முடி வளர்ச்சியை தீர்மானிப்பதில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • ஹார்மோன் சமநிலையின்மையே பெண்களின் முகத்தில் முடி வருவதற்கு காரணம்.

    முகத்தில் முடி தோன்றும் பிரச்சனை ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களும் இருக்கும். சில பெண்களுக்கு முகத்தில் அடர்த்தியான முடி இருக்கும், அதனால்தான் அவர்கள் பார்லருக்கு சென்று ஷேவிங், வாக்சிங் அல்லது மெழுகு போன்றவற்றை செய்கிறார்கள். நீங்கள் இன்னும் கொஞ்சம் செலவழிக்க விரும்பினால், லேசர் சிகிச்சையையும் முயற்சி செய்யலாம்.

    பெண்களுக்கு முகத்தில் முடி வருவதற்கு என்ன காரணம்?

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற மருத்துவ நிலைகளால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையே பெண்களின் முகத்தில் முடி வருவதற்கு மிகவும் பொதுவான காரணம் என்கிறார்கள் நிபுணர்கள். இது முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    ஒரு நபரின் உடல் மற்றும் முகத்தில் முடி வளர்ச்சியை தீர்மானிப்பதில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்டெராய்டுகள் போன்ற சில வகையான மருந்துகள் பெண்களுக்கு முக முடி பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றொரு காரணியாக இருக்கலாம். இதற்கு நீங்கள் வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்ளலாம். நல்ல விஷயம் என்னவென்றால், உங்கள் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற நீங்கள் சமையலறை பொருட்களையே பயன்படுத்தலாம்.

    சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு

    நீங்கள் 35 மில்லி தண்ணீருடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும். கலவையை கொதிக்க ஆரம்பிக்கும் வரை சூடாக்கவும். பிறகு ஆறவிடவும். ஆறிய கலவையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 20 முதல் 25 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும். அதை தண்ணீரில் கழுவி, வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். எலுமிச்சை மற்றும் தேன் ஒரு தேக்கரண்டி தேன், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தொடங்குங்கள். கலவையை சுமார் மூன்று நிமிடங்கள் சூடாக்கி, அது மிகவும் தடிமனாக இருந்தால் அதை மெல்லியதாக மாற்ற மெதுவாக தண்ணீரை கிளறவும். பேஸ்ட் குளிர்ந்ததும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். இது இயற்கையான மெழுகு போன்றது, எனவே மெழுகு பட்டையைப் பயன்படுத்தி, வளர்ச்சியின் எதிர் திசையில் முடியை வெளியே இழுக்கவும்.

    முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் அரிசி மாவு

    ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, அரை டீஸ்பூன் அரிசி மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கெட்டியான பேஸ்ட்டை உருவாக்க அவற்றை நன்கு கலந்து, தேவையற்ற முக முடி உள்ள பகுதிகளில் தடவி, சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை உலர வைக்கவும். முடி வளர்ச்சியின் எதிர் திசையில் உலர்ந்த ஃபேஸ் மாஸ்க்கை மெதுவாக உரிக்கவும், பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

    ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம்

    ஒரு பழுத்த வாழைப்பழத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்மீலைக் கலக்க வேண்டும். இது ஒரு பயனுள்ள இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட் ஆகும். மேலும் இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வட்ட இயக்கத்தில் தடவவும். தொடர்ந்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்து, முகத்தை தண்ணீரில் மெதுவாக கழுவ வேண்டும்.

    பப்பாளி மற்றும் மஞ்சள்

    பப்பாளியில் பப்பெய்ன் என்ற நொதி உள்ளது, இது மயிர்க்கால்களை உடைத்து முடி வளர்ச்சியைத் தடுக்க உதவும். பப்பாளி மற்றும் மஞ்சள் பேஸ்ட் செய்ய, பப்பாளி கூழ் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.

    இந்த இயற்கையான முக முடி அகற்றும் யோசனைகளை பயன்படுத்துவதற்கு முன், தேவையற்ற தோல் எதிர்வினைகளைத் தவிர்க்க பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். மேலும், தோல் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய மறக்காதீர்கள். உங்கள் முகத்தில் உள்ள தோல் பொதுவாக மற்ற உடல் பாகங்களை விட அதிக உணர்திறன் கொண்டது, எனவே முடி அகற்றும் முறைகள் வரும்போது அதற்கு கவனிப்பு தேவை. இயற்கையான முறைகளைப் பயன்படுத்தி முகத்தில் உள்ள முடியை அகற்ற முயற்சி செய்கிறீர்கள் என்றால், கவனமாக இருக்க வேண்டும்.

    • கால்களுக்கும் சில பராமரிப்புகளைச் செய்தால் மட்டுமே, அவை பிசுக்கு மற்றும் தழும்பு இல்லாமல் பளிச்சென்று ஜொலிக்கும்.
    • கால்கள் வாழைத்தண்டுப் போல ஜொலிப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

    * ஒரு சிலருக்கு கெமிக்கல் சேர்க்கப்பட்ட க்ரீம்களைப் பயன்படுத்தி முடிகளை எடுக்கும்போது, கால்களின் சருமம் கருப்பாகிடும். அப்படிப்பட்டவர்கள் ரேசர் பயன்படுத்தியோ அல்லது வேக்ஸ் பண்ணியோ முடிகளை நீக்கலாம்.

    * சில பெண்களுக்கு வேக்ஸ் செய்தால், கால்களில் சின்ன சின்னதாக வீக்கங்கள் வரும். இதை, நாங்கள் `ஸ்ட்ராபெர்ரி லெக்ஸ்' என்போம். இந்த வீக்கங்களில் நமைச்சல் அதிகமாக இருக்கும். அவற்றில் முடி வளரும்போது நமைச்சல் இன்னும் அதிகரிக்கும். இதுபோல ஆகிடும் பெண்கள் `விமன் ரேசர்' பயன்படுத்தி முடிகளை நீக்கலாம். இந்த ரேசர் கொஞ்சம் அழுத்தினாலும் சருமத்தை கட் செய்யாது. இந்த ரேசரில் முடிகளை நீக்கும்போது கால்களில் இருக்கிற மாய்ஸ்ரைசர் குறையாது என்பது கூடுதல் பிளஸ். ஆனால், இதை வாரத்துக்கு ஒருமுறை செய்ய வேண்டி வரும்.

    * நார்மல் ரேசர் பயன்படுத்தி கால்களில் இருக்கும் முடிகளை ரிமூவ் செய்வதற்கு முன், ஏதாவது ஒரு ஆயிலையோ அல்லது குளியல் சோப் நுரையையோ தடவி விட்டுச் செய்தால், கால்களின் சருமம் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.

    * மசாஜ் செய்தும் முடிகளை நீக்கலாம். பாதாம் மற்றும் ஆலிவ் ஆயிலைக் கலந்து கால்களின்மேல் அப்ளை செய்து, மேலும் கீழுமாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த ஆயில் ஒரு மணி நேரம் அப்படியே கால் சருமத்தில் ஊற வேண்டும். பிறகு, கடலை மாவு 5 டீஸ்பூன், சர்க்கரை 2 டீஸ்பூன் கலந்து, அதை ஈரக் கைகளால் தொட்டு தொட்டு காலில் பரபரவெனத் தேய்த்துக் கழுவினால் கால்களில் இருக்கிற முடிகள் உதிர்வதுடன் அழுக்கு, தழும்புகள் எல்லாம் படிப்படியாகப் போய், கால்கள் பளிங்கில் செய்ததுபோல பளிச்சென்று ஆகி விடும். இந்த மசாஜ் அண்டு ஸ்கிரபை வாரம் இரண்டு முறை செய்யவேண்டும்.

    * ஸ்கர்ட் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு நினைப்பார்கள். ஆனால், கால்கள் வறண்டு பொலிவிழந்து இருக்கிறது என அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்கள். அவர்கள், சர்க்கரையையும் உப்பையும் சமமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கால்கள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்தால் அந்தப் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாய்ந்து, கால்கள் உயிர்ப்புடன் மின்னும். தயக்கமின்றி நடைபோடலாம்.

    * கால்கள் பொலிவிழந்து இருந்தால், கோகோ பட்டர் மசாஜ் செய்தாலும் பொலிவு கிடைத்து விடும்.

    * கால்கள் அழகாக இருக்கும்போது, பாதங்களும் வெடிப்பில்லாமல் இருந்தால்தானே அதுவொரு கம்ப்ளீட் அழகாக இருக்க முடியும். அதனால், பாதங்களில் வெடிப்பு இருந்தால், நல்லெண்ணெயில் 2 சொட்டு டீ ட்ரீஆயில் கலந்து வெடிப்புகளில் தடவி வரலாம். டீ ட்ரீ ஆயில் கிடைக்கவில்லை என்றால் லாவண்டர் ஆயிலுடன் 4 சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து பாதங்களில் தொடர்ந்து அப்ளை செய்து வாருங்கள். பாதங்களில் ஈரத்தன்மை பேலன்ஸாக இருக்க ஆரம்பித்தால், வெடிப்புப் பிரச்னை போயே போய் விடும்.

    • எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
    • தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும்.

    முகம் மட்டும் அழகாக இருந்தால் போதாது கால்களும்(legs) பார்க்க அழகாக இருக்க வேண்டும். அப்போது தான் உடைக்கு ஏற்ற காலணிகள் நாம் தேர்வு செய்து அணிய முடியும். இல்லையெனில் கால்கள்(legs) பொலிவிழந்து காணப்படும். பாவடை அணிய ஆசைப்படுபவர்கள் கால்கள்(legs) பொலிவுடன் இல்லாததால் அணிய தயங்குவார்கள். நல்ல பொலிவான பளபளப்பான கால்களை(legs) பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

    பாதங்களிலுள்ள சொரசொரப்பு நீங்க :

    * ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால்(legs) வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகள் தங்காது.

    * கடுகு எண்ணெயை தினமும் கால்(legs) பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு நீங்கும். மென்மையான பாதங்களாக திகழும். தினமும் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை பாதத்தில் தேயுங்கள். சொரசொரப்பான பாதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

    மிருதுவான பாதங்கள் கிடைக்க :

    * தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் உப்பு அல்லது சோடா உப்பை குதிகால்களில்(legs) தேய்த்து, கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி மாறி மாறி வாரம் மூன்று முறை செய்தால் பாதம் மெத்தென்று ஆகும்.

    * வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில்(legs) தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், மென்மையான பாதங்கள் கிடைக்கும்.

    * கால்கள்(legs) அழகாக இருக்கும்போது, பாதங்களும் வெடிப்பில்லாமல் இருந்தால் தானே அதுவொரு கம்ப்ளீட் அழகாக இருக்க முடியும். அதனால், பாதங்களில் வெடிப்பு இருந்தால், நல்லெண்ணெயில் 2 சொட்டு டீ ட்ரீஆயில் கலந்து வெடிப்புகளில் தடவி வரலாம். டீ ட்ரீ ஆயில் கிடைக்கவில்லை என்றால் லாவண்டர் ஆயிலுடன் 4 சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து பாதங்களில் தொடர்ந்து அப்ளை செய்து வாருங்கள். பாதங்களில் ஈரத்தன்மை பேலன்ஸாக இருக்க ஆரம்பித்தால், வெடிப்புப் பிரச்னை போயே போய் விடும்.

    * ஸ்கர்ட் போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு நினைப்பார்கள். ஆனால், கால்கள்(legs) வறண்டு பொலிவிழந்து இருக்கிறது என அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்கள். அவர்கள், சர்க்கரையையும் உப்பையும் சமமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கால்கள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்தால் அந்தப் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாய்ந்து, கால்கள்(legs) உயிர்ப்புடன் மின்னும். தயக்கமின்றி நடைபோடலாம்.

    வெடிப்பு மறைய :

    * மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேயுங்கள். 10 நிமிடன்ம் கழித்து பாதத்தை கழுவலாம். இது கால்(legs) வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.

    * மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால்(legs) வெடிப்பில் பூசி வர கால்(legs) வெடிப்பு குணமாகும்.

    * கற்றாழையில் இருக்கும் சதைபகுதியை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் ஒரே மாதத்தில் வெடிப்பு சரியாகிவிடும்.

    * உருளைக் கிழங்கி சாறினை எடுத்து பாதங்களில் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து குதிகால்கள்(legs) அழகு பெறும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால்(legs) பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.

    * பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால்(legs) பாதங்களில் தடவி வந்தால் கால்(legs) வெடிப்பு மறையும்.

    • சில பெண்களுக்கு வேக்ஸ் செய்தால், கால்களில் சின்ன சின்னதாக வீக்கங்கள் வரும்.
    • மசாஜ் செய்தும் முடிகளை நீக்கலாம்.

    கால்களுக்கும் சில பராமரிப்புகளைச் செய்தால் மட்டுமே, அவை பிசுக்கு மற்றும் தழும்பு இல்லாமல் பளிச்சென்று ஜொலிக்கும். சரி, கால்கள் வாழைத்தண்டுப் போல ஜொலிப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

    * கால்களில் இருக்கும் முடிகளை, உங்கள் சருமத்துக்கு ஏற்ற க்ரீமைப் பயன்படுத்தி ரிமூவ் செய்யலாம்.

    * ஒரு சிலருக்கு கெமிக்கல் சேர்க்கப்பட்ட க்ரீம்களைப் பயன்படுத்தி முடிகளை எடுக்கும்போது, கால்களின் சருமம் கருப்பாகிடும். அப்படிப்பட்டவர்கள் ரேசர் பயன்படுத்தியோ அல்லது வேக்ஸ் பண்ணியோ முடிகளை நீக்கலாம்.

    * சில பெண்களுக்கு வேக்ஸ் செய்தால், கால்களில் சின்ன சின்னதாக வீக்கங்கள் வரும். இதை, நாங்கள் `ஸ்ட்ராபெர்ரி லெக்ஸ்' என்போம். இந்த வீக்கங்களில் நமைச்சல் அதிகமாக இருக்கும். அவற்றில் முடி வளரும்போது நமைச்சல் இன்னும் அதிகரிக்கும். இதுபோல ஆகிடும் பெண்கள் `விமன் ரேசர்' பயன்படுத்தி முடிகளை நீக்கலாம். இந்த ரேசர் கொஞ்சம் அழுத்தினாலும் சருமத்தை கட் செய்யாது. இந்த ரேசரில் முடிகளை நீக்கும்போது கால்களில் இருக்கிற மாய்ஸ்ரைசர் குறையாது என்பது கூடுதல் பிளஸ். ஆனால், இதை வாரத்துக்கு ஒருமுறை செய்ய வேண்டி வரும்.

    * நார்மல் ரேசர் பயன்படுத்தி கால்களில் இருக்கும் முடிகளை ரிமூவ் செய்வதற்கு முன், ஏதாவது ஒரு ஆயிலையோ அல்லது குளியல் சோப் நுரையையோ தடவி விட்டுச் செய்தால், கால்களின் சருமம் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.

    * மசாஜ் செய்தும் முடிகளை நீக்கலாம். பாதாம் மற்றும் ஆலிவ் ஆயிலைக் கலந்து கால்களின்மேல் அப்ளை செய்து, மேலும் கீழுமாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த ஆயில் ஒரு மணி நேரம் அப்படியே கால் சருமத்தில் ஊற வேண்டும். பிறகு, கடலை மாவு 5 டீஸ்பூன், சர்க்கரை 2 டீஸ்பூன் கலந்து, அதை ஈரக் கைகளால் தொட்டு தொட்டு காலில் பரபரவெனத் தேய்த்துக் கழுவினால் கால்களில் இருக்கிற முடிகள் உதிர்வதுடன் அழுக்கு, தழும்புகள் எல்லாம் படிப்படியாகப் போய், கால்கள் பளிங்கில் செய்ததுபோல பளிச்சென்று ஆகி விடும். இந்த மசாஜ் அண்டு ஸ்கிப்பை வாரம் இரண்டு முறை செய்யவேண்டும்.

    * ஸ்கர்ட் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு நினைப்பார்கள். ஆனால், கால்கள் வறண்டு பொலிவிழந்து இருக்கிறது என அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்கள். அவர்கள், சர்க்கரையையும் உப்பையும் சமமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கால்கள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்தால் அந்தப் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாய்ந்து, கால்கள் உயிர்ப்புடன் மின்னும். தயக்கமின்றி நடைபோடலாம்.

    கை மற்றும் கால் முடியை நீக்குவதற்கு பல்வேறு வேக்ஸ் இருந்தாலும் பெண்கள் அதிகம் விரும்புவது கோல்டு வேக்ஸை தான். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    அதிகப்படியான வேண்டாத ரோமங்களை நீக்கும் முறையையே வேக்ஸிங் என்கிறோம். இது காலம் காலமாகப் பயன்படுத்தும் முறைதான். இன்றைய தலைமுறையினர் பலரும் வேக்ஸிங்கை தவிர்க்காமல் செய்கின்றனர். வேக்ஸ் பயன்படுத்துவதால், முடி கொஞ்சம் லேட்டாக வளர ஆரம்பிக்கும்.

    பெரும்பாலானோர் கிரீம் மூலம் ரிமூவ் செய்வதையே விரும்புகிறார்கள். கை மற்றும் கால் முடியை நீக்குவதற்கு இந்த வகை வேக்ஸ்தான் சிறந்தது. கிரீம் மூலம் வேக்ஸ் செய்வதில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் கோல்டு வேக்ஸ்.

    சாதாரணமாக, ஜெல் மூலமாக வேக்ஸ் செய்யும்போது அதனைச் சூடுபடுத்தி கை, கால்களில் அப்ளை செய்ய வேண்டும். ஆனால், இந்த வகை கோல்டு வேக்ஸைப் பயன்படுத்தும்போது சூடுபடுத்த தேவையில்லை. நேரடியாகவே கை, கால்களில் அப்ளை செய்துகொள்ளலாம். வெளியூர் செல்லும் நேரங்களில் கையோடு ஹீட்டரைக் கொண்டுசெல்ல முடியாது. அந்த நேரத்தில், இந்த வகை வேக்ஸ் உதவியாக இருக்கும். கோல்டு வேக்ஸ் செமி சாலிடாக இருப்பதால், பலரும் இதை விரும்புகிறார்கள்.

    முதலில், சூடான நீரில் காட்டன் துணியை நனைத்து, கையைச் சுத்தம் செய்துகொள்ளவும். பின்னர், சாதாரணமாக முகத்துக்குப் பயன்படுத்தும் பவுடரை கையில் தடவிக்கொள்ளவும். அதன்மீது, கோல்டு வேக்ஸ் அப்ளை செய்துகொள்ளவும்.பின்னர், ஸ்டிரைப் பயன்படுத்தி எதிர்புறமாக வேக்ஸை ரிமூவ் செய்யவும்.

    இந்த கோல்டு வேக்ஸில் எலுமிச்சை ஜூஸ், குளுக்கோஸ் போன்றவை கலந்துள்ளது. சாதாரண வேக்ஸ் ஜெல்லுடன் ஒப்பிடும்போது, இதன் விலை சற்று அதிகம்.



    வேக்ஸ் தேர்வு:

    டிரை ஸ்கின் - சாக்லேட், ஸ்டாபெர்ரி

    மிகவும் டிரை ஸ்கின் - கோக்கோனெட், ஆலிவ் ஆயில்

    சென்சிட்டிவ் - தேன், மில்க், ஆலோவேரா, கிரீன் ஆப்பிள்

    அன்டர் ஆர்ம், பிகினி - பிரேசிலியன் வேக்ஸ்

    லக்‌சரி ( luxury) - கோல்டு, பியர்ல்

    ரிலாக்ஸிங் - டால்கம்

    எச்சரிக்கை:

    வேக்ஸை நீங்களே செய்துகொள்ளாமல், புரொபஷனல்கிட்ட கத்துக்கிட்டு பண்ணனும்.   முகத்துக்கு தனி வேக்ஸ் இருக்கு. ஆனால், நார்மலா ஃபேஸ் வாக்ஸ் பண்ணவே கூடாது. உடம்புக்கு போடுறதை முகத்துக்குப் போடக்கூடாது. சென்சிட்டிவ் ஸ்கின்னுக்கு என இருக்கும் வேக்ஸைப் பயன்படுத்தணும்.
    ×