search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகு"

    கோடையில் சூரிய ஒளிக்கதிர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எனவே, உங்கள் தேவைக்கேற்ப நல்ல சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.
    குளிர் காலத்தில் இருந்து கோடை காலத்திற்கு அடியெடுத்து வைக்கும்போது சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கதகதப்பான கம்பளி போர்வை, துணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு மென்மையான பருத்தி ஆடைகளை தழுவ வேண்டி யிருக்கும். கோடை காலமும்.. சரும அழகும்..!

    சூப்கள் போன்ற சூடான பானங்களுக்கு மாற்றாக பழச்சாறுகள், மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களை அருந்த வேண்டியிருக்கும். ஒரு பருவத்தில் இருந்து மற்றொரு பருவத்திற்கு மாறும்போது சரும பராமரிப்பு முறைகளிலும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் சூரிய ஒளி பல மடங்கு அதிகரித்து, வெப்பநிலை மாறுவது சருமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    குளிர்காலத்தில், கிரீம் கலந்த பேஸ் வாஷ்களை பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்திருக்கலாம். ஆனால் கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வெளிப்படும். அது சருமத்தில் சுரந்து கொண்டே இருக்கும். அதனை போக்குவதற்கு ஜெல் அடிப்படையிலான கிளின்சர்களை தேர்வு செய்யலாம். எனினும் தோல் வகைக்கு ஏற்ப சரும பராமரிப்பு பொருளை தேர்வு செய்ய வேண்டும்.

    தோல் வகை மற்றும் தேவையை பொறுத்தே உபயோகிக்க வேண்டும். கோடைகாலத்தில் கடைப்பிடிக்கக்கூடிய மற்றொரு முக்கியமான விஷயம் முகம் கழுவுவது. சருமத்தில் படிந்திருக்கும் அசுத்தங்களை அகற்றுவதற்கு முகத்தை இரண்டு முறை அவசியம் சுத்தம் செய்ய வேண்டும்.

    குளிர்காலத்தில், ஈரப்பதத்தை சீராக பராமரிக்க கனமான மாய்ஸ்சுரைசர்களை தேர்வு செய்திருப்போம். ஆனால் கோடையில் அது ஒத்துக்கொள்ளாது. ஏனெனில் இந்த சீசனில் அதிகமாக வியர்க்கும். அதனை கவனத்தில் கொள்ளாமல் கிரீம்களை பயன்படுத்தினால் முகப்பருக்கள் ஏற்படலாம். எனவே, கோடை காலத்தில் இலகுவான லோஷன்களுக்கு மாற வேண்டும். இந்த கோடையில் நீங்கள் தேர்வு செய்யக்கூடிய மற்றொரு தோல் பராமரிப்பு பொருள், சீரம் ஆகும். இவை நீர் தன்மை கொண்டவை. சருமத்தில் எண்ணெய் பசை தன்மையையும் உணராதவை. சருமத்துக்குள் நன்றாக ஊடுருவி, தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதற்கு உதவும். மீண்டும், உங்கள் தோல் வகை மற்றும் தேவைக்கு ஏற்ப சீரம்களை தேர்வு செய்ய வேண்டும்.

    கோடை காலம், குளிர் காலம் மட்டுமின்றி அனைத்து பருவங்களிலும் தவறாமல் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். அதிலும் கோடையில் சூரிய ஒளிக்கதிர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எனவே, உங்கள் தேவைக்கேற்ப நல்ல சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.

    மேலும் கோடை காலத்தில், மாய்ஸ்சுரைசிங் செய்வதை விட ஜெல் அடிப் படையிலான சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கோடையில் அதிகமாக வியர்க்கும்போது, சருமத்தில் இருந்து சன்ஸ்கிரீன் அப்புறப்படுத்தப்படலாம். எனவே அதனை அடிக்கடி உபயோகிப்பது நல்லது. அதிலும் வெளி இடங்களுக்கு சென்றால் வழக்கத்தை விட இரண்டு, மூன்று முறை கூடுதலாக தடவலாம்.

    இவை தவிர, உடலில் நீர்ச்சத்தின் அளவை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவற்றுள் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முக்கியமானது. எனவே, சரிவிகித உணவைப் பின்பற்றுங்கள். வானிலைக்கு ஏற்ற லேசான பருத்தி ஆடைகளை அணியுங்கள். மேக்கப்பை பொறுத்தவரை, இந்த பருவத்திற்கு ஏற்ற ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சுரைசரை தேர்வு செய்யுங்கள்.
    இயற்கையான அழகை மேம்படுத்துவதற்கு சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள்...
    மணிக்கணக்கில் கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்து கொள்ளும் முகங்களை விட, இயல்பான அழகோடு இருக்கும் முகங்கள் பல நேரங்களில் மிக அழகானதாகத் தெரியும். இயற்கையான அழகை மேம்படுத்துவதற்கு சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள்...

    நல்ல உணவுப் பழக்கம்: தினசரி உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆளி விதை, அக்ரூட் பருப்பு போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் மற்றும் ஆரஞ்சு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணி போன்ற வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் அவசியம். முட்டை, கோழிக்கறி, கிட்னி பீன்ஸ், பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் பாலாடைக்கட்டி போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது, உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும்.

    நிம்மதியான தூக்கம்: இரவில் நல்ல தூக்கம் முக்கியமானது. தூங்கும்போது தோல் புதிய கொலாஜனை உற்பத்தி செய்கிறது. உங்கள் செல்போனை சார்ஜ் செய்வது போல், உடல் தானாகவே சார்ஜ் செய்ய வேண்டும். இதற்கு நல்ல உறக்கம் அவசியம். இதன் மூலம் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மறையும்.

    பயன்படுத்தும் பொருட்கள்: நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் 60 சதவீதத்தை உங்கள் சருமம் உறிஞ்சிக் கொள்கிறது. எனவே சருமப் பராமரிப்பு, முடிப் பராமரிப்புக்குப் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டவையாக இருப்பது நல்லது. சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய அல்லது தலைமுடியை உலர வைக்கும் பாரபென்கள், பெட்ரோகெமிக்கல்கள் மற்றும் சல்பேட்டுகள் உள்ள பொருட்களில் இருந்து விலகி இருங்கள். இயற்கை பொருட்களைக் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

    உடற்பயிற்சி அவசியம்: ஓட்டப் பயிற்சி, யோகா, நீச்சல் போன்ற ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள். உடற்பயிற்சி சருமத்திற்கு நன்மை செய்வதோடு, உங்கள் மனநிலையை மேம்படுத்தும். வாரம் 3 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், நச்சுகளை அகற்றும், சருமத்திற்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கும், மன அழுத்தத்தைக் குறைக்கும். முழு உடலையும் அமைதிப்படுத்தும் எண்டோர்பின்களைத் தூண்டும்.

    சரும பராமரிப்புப் பழக்கம் சருமத்தை தூய்மையாக்குவது, டோனிங் செய்தல் மற்றும் ஈரப்பதமூட்டுதல் போன்ற பழக்கங்கள் ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியம். இந்த முறையைப் பின்பற்ற நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளை உங்கள் தோலின் தன்மையைப் பொறுத்து, தேர்ந்தெடுக்க வேண்டும். காலை அல்லது இரவில் சருமப் பராமரிப்புப் பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

    இறந்த செல்களை நீக்குங்கள்: இறந்த செல்களை நீக்குவது பளபளப்பான சருமத்திற்கு முக்கியமானதாகும். இது புதிய மற்றும் ஆரோக்கியமான செல்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உளுந்து மாவு அல்லது காபி தூள் ஸ்கிரப் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி சருமத்தில் படியும் இறந்த செல்களை நீக்கலாம்.
    மாதம் ஒருமுறை, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், மருக்கள் போன்றவை வராமல் இருக்கும்.
    வெயில், மாசு போன்றவற்றால் சருமம் பெரிதும் பாதிப்படைகிறது. அதற்காக வெளியில் செல்வதை நாம் தவிர்க்க முடியாது. சில பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் சரும ஆரோக்கியத்தை அதிகரித்து அழகை மேம்படுத்தலாம். அதற்கான குறிப்புகள் இங்கே...

    இறந்த செல்களை நீக்குதல்:

    மாதம் ஒருமுறை, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், மருக்கள் போன்றவை வராமல் இருக்கும். வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு இறந்த செல்களை நீக்கலாம்.

    சீத்தாப்பழம்

    சீத்தாப்பழத்தில் உள்ள ‘வைட்டமின் சி’ சரும வறட்சியை நீக்கும். சீத்தாப்பழத் தோலை முகத்தில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு நீரைக்கொண்டு முகம் கழுவுங்கள். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் இறந்த செல்கள் நீங்கும். சீத்தாப் பழச்சாற்றை வாரம் 3 நாட்கள் பருகி வந்தால் சரும பிரச்சினைகள் ஏற்படாது.

    கூந்தல் அழகிற்கு:

    தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்தும்போது ‘கண்டிஷனிங்’ செய்வது முக்கியமானது. குறிப்பாக ‘முடி பிளவு’ உடையவர்கள் கண்டிஷனிங் செய்துவந்தால் அந்தப் பிரச்சினை நீங்கும். வறண்ட கூந்தல் உடையவர்கள் ‘கிரீம்’ வகை கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும். சுருட்டை முடி கொண்டவர்கள் ‘ஜெல்’ வகை கண்டிஷனரை தேர்வு செய்யலாம்.

    நேரான முடி கொண்டவர்கள் ‘கிரீம்’ அல்லது ‘போம்’ வகை கண்டிஷனர்களை பயன்படுத்தலாம். இயற்கையான முறையில், சாதம் வடித்த கஞ்சி, மருதாணி, செம்பருத்தி போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

    நகங்கள் பராமரிப்பு:

    நகங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் மூலம் தொற்று ஏற்படாது. வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு, எலுமிச்சம் பழச்சாறு போன்றவை கலந்து, அதில் கைவிரல் நகங்களை சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் நன்றாக சுத்தப்படுத்த வேண்டும்.

    வெந்தயத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கெட்டக்கொழுப்பு கரையும். சருமம் பொலிவாகும். ரசாயனப்பொருட்கள் நிறைந்த கிரீம்கள், முகப் பூச்சுகளை அதிகம் பயன்படுத்தினால் சருமம் பாதிக்கப்படும். கூந்தல் அழகு பெற இயற்கையான முறையில் தயார் செய்த கண்டிஷனர் பயன்படுத்தலாம்.
    ×