search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summer beauty"

    கோடையில் சூரிய ஒளிக்கதிர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எனவே, உங்கள் தேவைக்கேற்ப நல்ல சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.
    குளிர் காலத்தில் இருந்து கோடை காலத்திற்கு அடியெடுத்து வைக்கும்போது சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கதகதப்பான கம்பளி போர்வை, துணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு மென்மையான பருத்தி ஆடைகளை தழுவ வேண்டி யிருக்கும். கோடை காலமும்.. சரும அழகும்..!

    சூப்கள் போன்ற சூடான பானங்களுக்கு மாற்றாக பழச்சாறுகள், மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களை அருந்த வேண்டியிருக்கும். ஒரு பருவத்தில் இருந்து மற்றொரு பருவத்திற்கு மாறும்போது சரும பராமரிப்பு முறைகளிலும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் சூரிய ஒளி பல மடங்கு அதிகரித்து, வெப்பநிலை மாறுவது சருமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    குளிர்காலத்தில், கிரீம் கலந்த பேஸ் வாஷ்களை பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்திருக்கலாம். ஆனால் கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வெளிப்படும். அது சருமத்தில் சுரந்து கொண்டே இருக்கும். அதனை போக்குவதற்கு ஜெல் அடிப்படையிலான கிளின்சர்களை தேர்வு செய்யலாம். எனினும் தோல் வகைக்கு ஏற்ப சரும பராமரிப்பு பொருளை தேர்வு செய்ய வேண்டும்.

    தோல் வகை மற்றும் தேவையை பொறுத்தே உபயோகிக்க வேண்டும். கோடைகாலத்தில் கடைப்பிடிக்கக்கூடிய மற்றொரு முக்கியமான விஷயம் முகம் கழுவுவது. சருமத்தில் படிந்திருக்கும் அசுத்தங்களை அகற்றுவதற்கு முகத்தை இரண்டு முறை அவசியம் சுத்தம் செய்ய வேண்டும்.

    குளிர்காலத்தில், ஈரப்பதத்தை சீராக பராமரிக்க கனமான மாய்ஸ்சுரைசர்களை தேர்வு செய்திருப்போம். ஆனால் கோடையில் அது ஒத்துக்கொள்ளாது. ஏனெனில் இந்த சீசனில் அதிகமாக வியர்க்கும். அதனை கவனத்தில் கொள்ளாமல் கிரீம்களை பயன்படுத்தினால் முகப்பருக்கள் ஏற்படலாம். எனவே, கோடை காலத்தில் இலகுவான லோஷன்களுக்கு மாற வேண்டும். இந்த கோடையில் நீங்கள் தேர்வு செய்யக்கூடிய மற்றொரு தோல் பராமரிப்பு பொருள், சீரம் ஆகும். இவை நீர் தன்மை கொண்டவை. சருமத்தில் எண்ணெய் பசை தன்மையையும் உணராதவை. சருமத்துக்குள் நன்றாக ஊடுருவி, தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதற்கு உதவும். மீண்டும், உங்கள் தோல் வகை மற்றும் தேவைக்கு ஏற்ப சீரம்களை தேர்வு செய்ய வேண்டும்.

    கோடை காலம், குளிர் காலம் மட்டுமின்றி அனைத்து பருவங்களிலும் தவறாமல் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். அதிலும் கோடையில் சூரிய ஒளிக்கதிர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எனவே, உங்கள் தேவைக்கேற்ப நல்ல சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.

    மேலும் கோடை காலத்தில், மாய்ஸ்சுரைசிங் செய்வதை விட ஜெல் அடிப் படையிலான சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கோடையில் அதிகமாக வியர்க்கும்போது, சருமத்தில் இருந்து சன்ஸ்கிரீன் அப்புறப்படுத்தப்படலாம். எனவே அதனை அடிக்கடி உபயோகிப்பது நல்லது. அதிலும் வெளி இடங்களுக்கு சென்றால் வழக்கத்தை விட இரண்டு, மூன்று முறை கூடுதலாக தடவலாம்.

    இவை தவிர, உடலில் நீர்ச்சத்தின் அளவை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவற்றுள் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முக்கியமானது. எனவே, சரிவிகித உணவைப் பின்பற்றுங்கள். வானிலைக்கு ஏற்ற லேசான பருத்தி ஆடைகளை அணியுங்கள். மேக்கப்பை பொறுத்தவரை, இந்த பருவத்திற்கு ஏற்ற ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சுரைசரை தேர்வு செய்யுங்கள்.
    கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது போன்று கூந்தல் பராமரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
    கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது போன்று கூந்தல் பராமரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெப்ப தாக்கம் கூந்தலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். முடி உதிர்வு, முடி வெடிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். கோடைகாலத்துக்கு அவசியமான கூந்தல்

    பராமரிப்பு வழிமுறைகள்:

    * கோடையில் சூரிய கதிர்கள் நேரடியாக கூந்தலைத்தாக்கும். அதனால், குளித்ததும் கூந்தலை உலர வைப்பதற்கான டிரையரை கோடைகாலத்தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதுவும் வெப்பத்தை உமிழ்வதால் கூந்தலுக்கு அதிக சேதம் ஏற்பட்டுவிடும்.

    * கோடை காலத்தில் வெளியே செல்லும்போது தலையில் தொப்பி அணிந்துகொள்ளலாம். அல்லது துணியால் தலையை மூடிக்கொள்ளலாம். அதன் மூலம் உச்சந்தலையில் கூந்தலுக்குரிய இயல்பான ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். வெப்பக்காற்றினால் கூந்தல் சேதம் அடைவதையும் தவிர்க்கலாம்.



    * இறுக்கமான சிகை அலங்காரம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். கூந்தலை தளர்வாக பின்னிக்கொள்வதே நல்லது. இறுக்கமாக இருந்தால் கூந்தலில் வியர்வை படிந்து சூரிய கதிர்களின் தாக்கத்தால் முடி சேதமடைந்துவிடும்.

    * கடற்கரை, நீச்சல் குளம் போன்ற இடங் களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினால் உடனே கூந்தலை கழுவ வேண்டும்.

    * கூந்தலை சீவுவதற்கு பரந்த பற்கள் கொண்ட சீப்புகளை பயன்படுத்த வேண்டும். பிரஷ் வைத்து கூந்தலை அலங்கரிப்பதை தவிர்க்க வேண்டும்.

    * தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. மயிர்கால்கள் வரை ஆழமாக ஊடுருவும்படி எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். குளியலுக்கு தரமான ஷாம்புகளையும் பயன்படுத்த வேண்டும்.
    ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் எரிச்சல், வறட்சி, அதிகப்படியான எண்ணெய், கருமையான சருமம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
    ரோஸ் வாட்டரை சரியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம். அதுமட்டுமின்றி அழகை மேன்மேலும் அதிகரிக்க முடியும். ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் எரிச்சல், வறட்சி, அதிகப்படியான எண்ணெய், கருமையான சருமம், மென்மையிழந்த சருமம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைத்து, சருமமே இளமையுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இங்கு ரோஸ் வாட்டரைக் கொண்டு அழகை அதிகரிக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

    • ரோஸ் வாட்டர் பாட்டிலை 1/2 மணிநேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்களில் உள்ள வீக்கம் குறைந்து, கண்கள் அழகாக காணப்படும்.

    • கோடையில் முகம் விரைவில் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும். அப்போது ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தாலோ அல்லது காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும். மேலும் இந்த முறையை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.



    • மென்மையான சருமம் தினமும் குளிக்கும் போது குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

    • வறட்சியான சருமம் உள்ளவர்கள், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சியின்றி, மென்மையோடு அழகாக இருக்கும்.

    • இரவில் படுக்கும் போது, வீட்டில் ரோஸ் வாட்டர் இருந்தால், அதனை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால், மேக்கப் நீங்குவதோடு, சருமமும் மென்மையோடு இருக்கும்.

    • ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். மேலும் ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாக காட்டும்.

    ஆரோக்கியம் கருதி பழங்களை சாப்பிட்டு வரும் பெண்கள், அழகுக்காகவும் அதனை தற்போது அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பழங்களால் கிடைக்கும் அழகு எந்த பக்கவிளைவும் இல்லாதது.
    ஆரோக்கியம் கருதி பழங்களை சாப்பிட்டு வரும் பெண்கள், அழகுக்காகவும் அதனை தற்போது அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பெண்கள் வழக்கமாக பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் ரசாயனம் கலந்திருக்கிறது. அது சிலரது சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பழங்களால் கிடைக்கும் அழகு எந்த பக்கவிளைவும் இல்லாததாக இருக்கிறது.

    பழங்கள் அழகுக்காக எப்படி பயன்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

    ஆப்பிள்: இது சருமத்திற்கு பொலிவு தரும் ‘ஸ்கின் டோனர்’. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும். ஆப்பிளை கூழ்போல் ஆக்கி, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.

    மாம்பழம்: எல்லாவித சருமத்திற்கும் இது ஏற்றது. அதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி போன்றவை சருமத்திற்கு நிறத்தையும், பளபளப்பையும் தரும். நன்றாக பழுத்த பழத்தின் தோலை நீக்கிவிட்டு, தசைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதை பிசைந்து தினமும் முகத்தில் பூச வேண்டும். சருமத்தின் சுருக்கங்களை இது போக்கும்.



    ஆரஞ்ச்: வைட்டமின் சி நிறைந்திருக்கும் பழம் இது. இரண்டாக வெட்டி, ஒரு பகுதியால் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்தால் சருமம் பிரஷ் ஆகிவிடும். பழத்தோலை நகங்களில் தேய்த்தால் கறை நீங்கும். தோலை வெயிலில் காயவைத்து தூளாக்கி பாதுகாத்திடுங்கள். அதில் முல்தானிமெட்டியும், தண்ணீரும் கலந்து குழைத்து முகத்தில் ‘பேக்’ செய்யலாம். காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவி விட்டால் முகம் பளிச் சிடும்.

    நேந்திரன் பழம்: பழத்தின் உள்ளே கறுப்பாக இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு கூழாக்கி முகத்தில் பூச வேண்டும். காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சருமத்திற்கு புத் துணர்ச்சியை தரும்.

    திராட்சை: எண்ணெய் தன்மை கொண்ட, பருக்கள் உருவாகும் சருமத்திற்கு இது மிகவும் ஏற்றது. தினமும் திராட்சை சாறு பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும்.

    மாதுளை: சுருக்கத்தையும், கருப்பு படையையும் போக்கும் தன்மைகொண்டது. மாதுளையை அரைத்து முகத்தில் பூசி கழுவி விட்டால் முகமும் மாதுளை போல் பளிச்சிடும். செயலிழந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கும் திறன் இதற்கு உண்டு.

    பப்பாளி: பப்பாளி பழக்கூழை தினமும் முகத்தில் பூசிக்கொள்ளலாம். சருமத்திற்கு நிறமும், மினிமினுப்பும் கிடைக்கும். பப்பாளி கூழ், ஓட்ஸ், தேன் போன்றவைகளை கலந்து ‘பேஸ் பேக்’காக பயன்படுத்தலாம். பழங்கள் பெண்களின் சருமத்தை பளிச்சிடவைக்கிறது. 
    வெயில் காலத்தில் சருமத்தில் வரும் கரும்புள்ளிகள், கருமைத் திட்டுக்களை இந்த குளியல் பொடி போக்கும். இன்று இந்த குளியல் பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சைப் பயறு - அரை கிலோ,
    ரோஜா இதழ் - 10 கிராம்,
    வெட்டி வேர்  - 50 கிராம்

    இவற்றை வெயிலில் நன்றாக காய வைத்து அரைத்து வைத்து கொள்ளவும். தினமும் இந்த பொடியை குளிப்பதற்கு பயன்படுத்தலாம். சருமப் பிரச்சனை இருப்பவர்கள், துளசி இலை, வேப்பிலைகளை சேர்த்துக்கொள்ளலாம். உடல் வறட்சி இருப்பவர்கள், நல்லெண்ணெயை உடல் முழுவதும் தேய்த்த பிறகு, கடலை மாவு போட்டுக் குளிக்கலாம். எண்ணெய் பசை பிரச்னை உள்ளவர்கள், முட்டையின் வெள்ளைப் பகுதியை ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறோடு கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து பச்சைப் பயறு கொண்டு குளிக்கலாம்.

    பலன்கள்: சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருமைத் திட்டுக்களைப் போக்கும். சருமத் தளர்ச்சியை சரியாக்கும். அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும். நிறம் பொலிவு பெறும். சரும எரிச்சலைக் குணப்படுத்தும்.
    பெண்கள் பெரும்பாலும் 30 வயது தொடங்கியவுடன் சிலருக்கு வயதான தோற்றம் வந்துவிடும். உங்கள் சருமம் இளமையாகவே இருக்க இந்த குறிப்பு பயன்படும்.
    பெண்கள் பெரும்பாலும் 30 வயதை கடந்தவுடன் பெரிதாக சதை தொய்வு இருக்காது. அதனால் அப்போது கண்டுகொள்ள மாட்டார்கள். 35 வயது தொடங்கியவுடன் சிலருக்கு வயதான தோற்றம் வந்துவிடும். அதன் பின் அடுத்த பெண்களுடன் கம்பேர் செய்ய ஆரம்பித்து விடுவோம்.

    சரும தொய்வை தடுக்க இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். நல்ல பலன் தரும். 40 களிலும் உங்கள் சருமம் இளமையாகவே இருக்க இந்த குறிப்பு பயன்படும்.

    தேவையான பொருட்கள்  :

    முல்தானி மெட்டி - 1 கப்
    1 ப்ளாக் டீ பேக் - 1
    ஆலிவ் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
    காபித் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
    ஹாஜல் நட் சாறு (Hazelnut juice) - 10 துளிகள்.

    நீரை சுட வைத்து அதில் ப்ளாக் டீ பேக்கை போட வேண்டும். சில நிமிடங்கள் அப்படியே விட்டு அதன் பின் அந்த நிறம் மாறிய நீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

    இந்த நீரில் முல்தானி மெட்டியை சிறிது சிறிதாக கட்டியாகாமல் கலக்க வேண்டும். அது முழுவதும் கரையும் வரை நன்றாக கலக்குங்கள். இந்த கலவையில் காபித் தூள், ஆலிவ் எண்ணெய் மற்றும் ஹாஜல் நட் சாறு ஆகிய மூன்றையும் கலந்து க்ரீம் பதத்திற்கு கொண்டு வாருங்கள்.

    மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது டீ டிகாஷனையோ அல்லது ஆலிவ் எண்ணெயையோ ஊற்றிக் கொள்ளலாம். இந்த கலவையை உங்கள் முகம், வயிறு, கழுத்து மற்றும் தொங்கும் சதையுள்ள கைகளுக்கும் போட வேண்டும்.

    20 நிமிடங்கள் காய வைத்த பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவுங்கள். பின்னர் மிருதுவான துண்டினால் துவட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தாலும் உடனே மாய்ஸ்ரைசர் க்ரீன் போட்டுக் கொள்ளலாம். இல்லையெனில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.

    இவ்வாறு வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை செய்தால் மீண்டும் உங்கள் இருபதுகளில் இருப்பது போல் மாறிவிடுவீர்கள்.

    முகத்திற்கு தினமும் எண்ணெய் தடவுவது கட்டாயமாகும். அதுவும் 30 வயது ஆரம்பித்தவுடன் முகத்தில் வறட்சி ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் உங்கள் சருமம் மிருதுவாக இருக்க வேண்டும்.
    கோடை என்றால் சரும பாதிப்பு என்பது மிக அதிகம். கோடையில் சருமம் பாதிப்பை தடுக்கும் இயற்கை வழிமுறைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    வெயில் காலத்தில் நாம் நமது வழக்கமான பாதுகாப்பு முறைகளை மீண்டும் கவனத்தில் கொள்வோம். கோடை என்றாலே உடலில் நீர்சத்து குறைய ஆரம்பிப்பது வெயிலில் அலையும் அனைவருக்கும் சர்வ சாதாரணமாக நிகழும் ஒன்று. இதுவே கூடும் பொழுது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனும் அதிக நீர்வற்றி ஏற்படும் பாதிப்பு ஏற்படுகின்றது.

    கோடை என்றால் சரும பாதிப்பு என்பது மிக அதிகம். ஊறல், நமைச்சல், அதிக அரிப்பு, குத்துவது போன்ற உணர்வு, எரிச்சல்,வலி, கட்டி, வெடிப்பு, வீக்கம், கசிவு என பல பிரச்சினைகள் ஏற்படும்.

    * வேர்குரு: குளிர்ந்த ஒத்தடங்கள் வேர்குருவிற்கு நன்கு உதவும். முட்டானி மட்டி, கடலை மாவு இவை உடலில் தடவி குளிப்பது உதவும். ஆப்பிள் சிடார் வினிகருடன் நீர் கலந்து பாதிப்பு ஏற்பட்ட  இடத்தில் தடவி 10 நிமிடங்கள் சென்று கழுவி விட வேர்குரு அடங்கும். லவாண்டர் எண்ணெயினை வெது வெதுப்பான நீரில் கலந்து குளிக்க உஷ்ண கட்டிகள் அடங்கும்.

    * மெல்லிய, பருத்தியினால் ஆன இறுகாத ஆடைகளை அணியுங்கள்.

    * நடைபயிற்சி, ஓடுதல் இவற்றினை காலை, மாலை அதிக வெய்யில்  இல்லாத நேரத்தில் செய்யுங்கள்.
    * குளிர்ந்த அதாவது சாதாரண நீரில் குளியுங்கள்.
    * உடல் மடிப்புகளில் வேர்வையின் ஈரம்  படியாது உலர்ந்து இருக்கச் செய்யுங்கள்.

    * கனமான கிரீம்களை இக்காலத்தில் பயன்படுத்தாதீர்கள். சருமத்தில் சிறுசிறு முடிகள் இருக்கும். இவற்றின் வேர்களில் கிருமி பாதிப்புகள் ஏற்படலாம். இவை முகம், தலை, கை மடிப்பு, முதுகு, நெஞ்சு, கழுத்து, தொடை என பல இடங்களில் ஏற்படலாம்.



    நீரில் வேப்ப இலையினை முதல் நாள் இரவே நனைத்து உடல் முழுவதும் படும்படி குளிக்க இயற்கை வைத்தியத்தில் அறிவுறுத்தி பலனும் அடைந்துள்ளனர்.
    மருத்துவம் எந்த முறை என்பதனை விட ஆய்வு பூர்வமாக நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டால் அதனை மனித சமுதாயம் பயன்படுத்தி பலன் பெறலாமே.

    வெள்ளை வினிகர் (அ) ஆப்பிள் சிடார் வினிகர் இதனை சிறிதளவு நீரில் கலந்து பாதிப்புள்ள இடத்தில் தடவுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது. இத்தகு பாதிப்பு ஏற்படாது இருக்க கோடையில்

    * வேர்வை உடைகளை அடிக்கடி மாற்றுங்கள்.
    * நீச்சல் செய்பவர்கள் மிக அதிக க்ளோரின் இல்லாது பார்த்துக் கொள்ளுங்கள்.
    * சருமத்திற்கு எரிச்சல் அளிக்காத ஆடைகளை அணியுங்கள்.

    * பெண்கள் வாக்கிங் செய்யும் பொழுதும் ஆண்கள் ஷேவ் செய்யும் பொழுதும் உங்களது சுகாதார டவல்களை உபயோகியுங்கள்.

    பரு பாதிப்பு: வியர்வையும், கிருமியும் சேர்ந்தால் கட்டி, பருபாதிப்புகள் ஏற்படும். இதனை தவிர்க்க சுகாதாரமே முதல் அவசியம். துண்டு, தொப்பி, தலை பேண்டுகள் இவற்றினை அன்றாடம் சுத்தம் செய்யுங்கள். எண்ணை பசை மிகுந்த க்ரீம், மாஸ்ட்ரைஸர் இவற்றினை அடியோடு தவிருங்கள். கடல் உப்பினை நீரில் கலந்து குளிக்க முதுகில் ஏற்படும் பருக்களும் நீங்கும்.

    * சருமம் வறட்சி அடைவதை தவிர்க்க மிதமான காரம் கொண்ட சோப்பினை பயன்படுத்தவும். மென்மையான, மெலிதான சன் ஸ்க்ரீன் உபயோகிக்கவும், உடலில் வியர்வை துர்நாற்றம் ஏற்படாதிருக்க இயற்கையான மஞ்சள், சந்தனம் உபயோகிக்கவும்.
    ×