என் மலர்
நீங்கள் தேடியது "Rose Water"
- ஸ்ப்ரே பாட்டிலில் ரோஸ் வாட்டரை ஊற்றி, தேவைப்படும்போது அதனை தலைமுடியில் அடித்துக்கொள்ளலாம்.
- ஷாம்பு போட்டு குளித்தபின், ரோஸ் வாட்டரை முடியில் தடவி சிலமணிநேரம் கழித்து கழுவுங்கள்.
ரோஸ் வாட்டர் பெரும்பாலும் முகத்திற்கு பயன்படுத்திதான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் அழகியலுக்கு அப்பாற்பட்ட ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. முடி பராமரிப்பிற்கும் ரோஸ் வாட்டர் உதவுகிறது. உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி உதிர்தலைக் குறைக்கவும், முடியின் பளபளப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. ரோஜாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் சருமத்தை மென்மையாக்கும் பண்புகள், ஆரோக்கியமான உச்சந்தலையை ஆதரிக்கவும், எரிச்சல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளை குறைக்கவும் உதவுகிறது. அந்தவகையில் ரோஸ் வாட்டர், தலைமுடிக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதனை முடிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து காண்போம்.
ஈரப்பதம்
ரோஸ் வாட்டர் முடியின் நீரேற்றத்தை பராமரிக்க உதவுகிறது. உச்சந்தலையின் pH அளவை சமன் செய்ய உதவுகிறது. ரோஸ் வாட்டரில் உள்ள சர்க்கரைகள் முடியின் தண்டில் ஈரப்பதத்தை ஈர்க்கவும், தக்கவைக்கவும் உதவுகின்றன. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு முக்கியமானது. முடி இழைகளை மென்மையாக்குகிறது மற்றும் முடி உதிர்தலை குறைக்கிறது. முடிக்கு இயற்கை பளபளப்பு மற்றும் மென்மையை சேர்க்கிறது.
பொடுகு தடுப்பு
வறண்ட உச்சந்தலையை ஈரப்பதமாக்குகிறது மற்றும் அரிப்புகளைக் குறைக்கிறது. ரோஸ் வாட்டரின் லேசான அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உச்சந்தலையில் எண்ணெய் பசையை சீராக்க உதவுகின்றன. பொடுகுக்கு வழிவகுக்கும் அதிகப்படியான படிவைத் தடுக்கின்றன. இதன் அழற்சி எதிர்ப்பு பண்பு எரிச்சல், சிவத்தல், மற்றும் அரிப்பு ஆகியவற்றை தணித்து, உணர்திறன் வாய்ந்த உச்சந்தலைகளுக்கு நன்மை பயக்கிறது.
நறுமணம்
ரோஸ் வாட்டர் இயற்கையான, மைல்டான நறுமணத்தைக் கொண்டுள்ளது. இது கூந்தலுக்கு நன்மை பயக்குவதோடு, அதன் நறுமணம் மனநிலையை மேம்படுத்தும். முடி நறுமணத்தோடு இருப்பது, மகிழ்ச்சியான பராமரிப்பை மேம்படுத்த பங்களிக்கிறது.

முகத்திற்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ளது ரோஸ் வாட்டர்
முடிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம்
ஷாம்பு போட்டு குளித்தபின், ரோஸ் வாட்டரை முடியில் தடவி சிலமணிநேரம் கழித்து கழுவுங்கள். இது முடிக்கு பளபளப்பு, மென்மை மற்றும் நறுமணத்தை சேர்க்க உதவும்.
ஷாம்பு மற்றும் கண்டிஷனரில் ரோஸ் வாட்டரைச் சேர்த்தல்
நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு அல்லது கண்டிஷனரில் சில டீஸ்பூன் ரோஸ் வாட்டரை கலந்து முடிக்கு பயன்படுத்துங்கள். இது முடிக்கு நல்ல ஈரப்பதம் அளிக்கும். அதுபோல ஸ்ப்ரே பாட்டிலில் ரோஸ் வாட்டரை ஊற்றி, தேவைப்படும்போது அதனை தலைமுடியில் அடித்துக்கொள்ளுங்கள். இது சின்ன சின்ன முடிகள் அதிகம் பறக்காமல் இருக்கவும், முடிக்கு பளபளப்பையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
உச்சந்தலையில் தடவுதல்
பருத்தி துணியை பயன்படுத்தி ரோஸ் வாட்டரை நேரடியாக உச்சந்தலையில் தடவலாம். இது பொடுகு, அரிப்பு, எரிச்சலை குறைக்கும். மசாஜ் போலவும் கொடுக்கலாம்.
முன்னெச்சரிக்கைகள்
ரோஸ் வாட்டர் நன்மை பயக்கக்கூடியது என்றாலும், முழுமையாக பயன்படுத்துவதற்கு முன்பு, ஒரு சிறிய அளவை எடுத்து நமது தலையின் உணர்திறனை சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள். கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் ரோஸ் வாட்டரை உச்சந்தலையில் அதிகம் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
- கிரீம்களில் இந்த ரோஜா இதழ்கள் பயன் படுத்துவார்கள்.
- ரோஜா இதழ்களில் பல வகையான சத்துகள் உள்ளது.
இயற்கையாகப் பயன்படுத்தும் அனைத்து க்ரீம்களில் இந்த ரோஜா இதழ்கள் பயன்படுத்துவார்கள். அந்த ரோஜா இதழ்கள் பயன்படுத்தி தனியாக பவுடர் செய்தால் எப்படி இருக்கும். ரோஜா இதழ்களில் பல வகையான சத்துகள் உள்ளது.
தேவையான பொருள்கள்:
எலுமிச்சை பழம் – 1
வெள்ளை வினிகர் -2 ஸ்பூன்
ரோஜா பூ இதழ்கள் – 1கப்
புதினா இலைகள் – 1கப்
செய்முறை:
* முதலில் ஓரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி அதில் உள்ள விதைகளை எடுத்து விட்டு நன்றாகப் பிழியவும்.
* அதில் வரும் சாற்றை இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். ரோஜா இதழ்கள் மற்றும் புதினா இலைகள் இரண்டையும் வெயிலில் காய வைத்து அரைக்க வேண்டும்.
* அரைத்த பிறகு, அதை ரோஜா இதழ்கள் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். அதில் புதினா இலைகளை அரைத்து ஒரு கப் அளவிற்கு அதில் சேர்க்கவும்.
* அதில் பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலக்கினால் முகம் மற்றும் உடலுக்குப் பயன்படுத்த பேஸ்ட் தயார்.
* எலுமிச்சை சாறு சிலருக்குச் சேராமல் உடலில் அரிப்புகள் மற்றும் அலர்ஜிகள் வரும். அப்படி வந்தால் எலுமிச்சை சாற்றுக்குப் பதிலாக வெள்ளை வினிகர் கூட சேர்த்துப் பயன்படுத்தலாம்.
* இதை உடல் மற்றும் முகம் முழுவதுமாக அப்ளை செய்து ஒரு அரை மணி நேரம் உலர விடவும். அதற்குப் பின், தண்ணீரில் குளிக்கலாம். இதை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்யலாம். பெண்கள் பயன்படுத்தும் போது இதனுடன் மஞ்சள் சேர்த்துக் குளிக்கலாம்.
ரோஜா இதழ்கள் பயன்கள்
ரோஜா இதழ்கள் பல இயற்கையாகத் தயாரிக்கும் க்ரிம்களில் இது கண்டிப்பாக இருக்கும் அதற்குக் காரணம். இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீக்கி அழகாகவும் மற்றும் மிருதுவாகவும் மாற்றித் தரும். இது சருமத்தில் உள்ள ஈரப்பதம் குறையாமல் மற்றும் வறட்சியான சருமம் ஆக இருந்தால் இது ஈரப்பதம் ஆக மாற்றித் தரும்.
இந்த ரோஜா இதழைச் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு மற்றும் சீதபேதி போன்ற பிரச்சினைகளைச் சரி செய்யும். உடலுக்குக் குளிர்ச்சி தன்மை அதிகரிக்கும். இது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
• ரோஸ் வாட்டர் பாட்டிலை 1/2 மணிநேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்களில் உள்ள வீக்கம் குறைந்து, கண்கள் அழகாக காணப்படும்.
• கோடையில் முகம் விரைவில் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும். அப்போது ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தாலோ அல்லது காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும். மேலும் இந்த முறையை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

• மென்மையான சருமம் தினமும் குளிக்கும் போது குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
• வறட்சியான சருமம் உள்ளவர்கள், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சியின்றி, மென்மையோடு அழகாக இருக்கும்.
• இரவில் படுக்கும் போது, வீட்டில் ரோஸ் வாட்டர் இருந்தால், அதனை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால், மேக்கப் நீங்குவதோடு, சருமமும் மென்மையோடு இருக்கும்.
• ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். மேலும் ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாக காட்டும்.






