search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women beauty"

    முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும்.
    பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் ஒரு விஷயம் அழகு. அதிலும் முக அழகுக்கு ரொம்ப அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும்.முக அழகை பாதிக்கும் சில வியாதிகள் பற்றி பார்க்கலாம்.

    Bells Palsy or Facial palsy

    நம் மூளையில் இருந்து முகத்திற்கு செல்லும்12 நரம்புகளில் முகத்தசைகளுக்குச் செல்லும் 7வது நரம்பு பாதிக்கும்போது இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை ஏற்பட்டவர்களுக்கு எந்தப் பக்கத்து நரம்பு பாதிக்கப்படுகிறதோ அந்தப் பக்க தசைகள் செயல்படாது. இதனால் ஒரு பக்கம் கண் திறந்தே இருக்கும். சிரிக்கும் போது வாய் ஒரு பக்கம் கோணலாக போகும். காரணம் சிரிப்பின்போது வாய்க்கு இரண்டு பக்கமும் உள்ள தசைகளும் விரிய வேண்டும். ஆனால் ஒரு பக்கம் உள்ள நரம்பு பாதிக்கப்படும் போது அந்த பக்கம் உள்ள முகத்தசைகள் செயல்படாது.

    இதனால் சிரிக்கும்போது ஒரு பக்கம் மட்டும் முகத்தசைகள் விரிவடையும் இன்னொரு பக்கம் அப்படியே இருக்கும். அதனால் சிரித்தால் முகம் கோணலாக இருக்கும். இந்தப் பிரச்சனை சில சமயம் கடுமையான வியாதிகளாலும் வரலாம். அல்லது சாதாரணமாகவும் வரலாம். சாதாரணமாக இந்தப் பிரச்சனை ஏற்படும் போது இதனை முழுவதுமாக சரி செய்துவிட முடியும். அதற்கு சரியான வைத்தியமும், முகத்திற்கான பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். முறையாக இவ்விரண்டையும் செய்யும்போது குறைந்தபட்சம் இரண்டு வாரத்தில் இந்தப் பிரச்சனையை சரி செய்துவிட முடியும்.

    வலிப்புக்காக எடுக்கும் மாத்திரைகள்

    நரம்பு வியாதியான வலிப்புக்கு மருந்தாக பயன்படும் PHENYTOIN என்ற மருந்தினை உட்கொள்பவர்களுக்கு உடல் முழுவதும் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். அவ்வாறு முகத்திலும் முடிவளர்ச்சி அதிகம் இருக்கும் போது பெண்களுக்கு அது அவர்களின் அழகை பாதிக்கும். சிலருக்கு பல் ஈறுகளில் வீக்கம் உண்டாகும். அதுவும் அவர்களின் முகத்தோற்றத்தில் வித்தியாசத்தை உருவாக்கும். அதனாலேயே இந்த மாத்திரையை இளம் பெண்களுக்கு பெரும்பாலும் நரம்பு மருத்துவர்கள்பரிந்துரைப்பதில்லை. 
    நவநாகரீக பெண்கள் அணிகின்ற வகையில் அழகிய வடிவமைப்புடன் கடிகாரங்கள் முந்தைய பட்டை அமைப்பிலான ஸ்ட்ராப் டைப் வாட்ச்கள் என்பது மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன.
    நவநாகரீக பெண்கள் அணிகின்ற வகையில் அழகிய வடிவமைப்புடன் கடிகாரங்கள் முந்தைய பட்டை அமைப்பிலான ஸ்ட்ராப் டைப் வாட்ச்கள் என்பது மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இந்த அதிநுட்பமான வேலைப்பாடு மிகுந்த கைக் கடிகாரங்கள் என்பது கணினி உதவியுடன் கண்கவர் வடிவங்கள் உள்ளவாறு உருவாக்கப்படுகின்றன. இதன் சிறப்பம்சம் எனும்போது சிக்கலான சிற்பங்கள் என்பதை வடிவமைப்பாக கொண்டு அழகிய வண்ண கற்கள் பொருத்தப்பட்டவாறு கிடைக்கின்றன. அதாவது பூ வேலைப்பாடு கொண்ட ஸ்ட்ராப் முதல் மேம்பட்ட புதிய டிசைன்கள் பல உள்ளவாறு கைக் கடிகாரங்கள் கிடைக்கின்றன.

    பழங்குடியினர் வளையம் போன்ற கைக் கடிகாரங்கள்

    மேம்பட்ட சிக்கலான வேலைப்பாட்டுடன் அழகிய பழங்குடியினர் வளையம் போன்ற கைக் கடிகாரங்கள் கிடைக்கின்றன. பப்- பிரிண்டட் செய்யப்பட்ட மாசாபா மோதிப்ஸ் டையல் பகுதிகளிலும், சூரிய கதிர் போன்ற பினிஷ் செய்யப்பட்ட ஜலி பேட்டர்ன் அமைப்பு உள்ளது. இதன் சிற்பங்கள் இணைந்த வளையல் அமைப்பு இரு சுழற்சி கொண்டவாறு கடிகாரப்பகுதி ஒரு பக்க இணைப்பில் பற்றியவாறு உள்ளது. அந்த சிற்ப அமைப்பு அழகிய உருளைகள் மற்றும் சிற்பங்கள் இணைந்தவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தின் உலோக வண்ண சாயல் என்பது செம்மை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் உள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வளைய பகுதியும் சிறிய செதுக்கல்கள், உருவ பின்னணி கொண்டவாறு மிக துல்லியமான நுண்ணிய வேலைப்பாடுடன் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது, நீண்ட நாள் உழைக்கக்கூடிய வகையிலான மேற்பூச்சுடன் உள்ளது.

    பூ வேலைப்பாட்டுடன் கூடிய கைக்கடிகாரங்கள்

    முதன்மையான டையல் பகுதி என்பது வட்ட வடிவிலும், ஓவல் மற்றும் மொட்டு அமைப்பிலும் இருக்கும் படியான கடிகார அமைப்பின் ஸ்ட்ராப் என்பது மட்டும் பூ வேலைப்பாட்டுடன் அழகிய வடிவங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூ வேலைப்பாடு பூ பேட்டர்ன் மற்றும் பெசல் அமைப்புடன் கூடிய ஸ்ராப் உள்ளது. இந்த தங்க பூ வடிவ அமைப்பின் நடுவே ஜொலிக்கும் ஸ்வரோஸ்கி கற்கள் பதியப்பட்டுள்ளன.

    வண்ண கற்கள் பதியப்பட்ட கொடி பின்னல் கைக்கடிகாரம்

    வெள்ளை நிற பின்னணியில் தங்க நிற வடிவமைப்பு முதன்மை கடிகாரம் இருக்க வலை பின்னல் அமைப்பிலான ஸ்ட்ராப் வண்ணக்கற்கள் பதியப்பட்டவாறு உள்ளன. அதாவது பட்டையான தங்க தகட்டில் இடைவெளிவிட்டு காற்றோட்டமான அமைப்பில் உருவங்கள் மட்டும் தெரியும் வகையில் உள்ளன. இந்த இடைவெளி விட்ட உருவ அமைப்பில் சிறு சிறு வண்ணங்கள் பூ, இலை, கொடி அமைப்பு என்றவாறு தனி வண்ணங்களில் பதியப்பட்டுள்ளன. முதன்மை கடிகாரப்பகுதி என்பது வட்டவடிவில் மேற்புறம் சிறு வைரக்கற்கள் பதியப்பட்டுள்ளன.



    ஆடை மடிப்பு போன்று கைக்கடிகாரங்கள்

    அழகிய உருளை கம்பி இருபக்கவாட்டு அமைப்புடன் நடுப்பகுதியில் ஆடை மடிப்பு போன்று கம்பிகள் குறுக்குவாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இடைவெளிவிட்டு கம்பி அமைப்பு மேல் எழுந்தவாறு அலை அமைப்புடன் காணப்படுகிறது. அதுபோல் ஒரு கம்பி விட்டு ஒரு கம்பி அமைப்பில் அழகிய இளஞ்சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. ரோஸ் கோல்டு சாயல் கொண்ட வண்ண பின்னணிக்கு ஏற்ப டயல் பகுதியும் அதே வண்ணத்தில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

    கலைநயத்துடன் உருவான பதக்க அமைப்பு கைக்கடிகாரங்கள்

    முதன்மை கடிகாரப்பகுதி என்பது வட்டவடிவில் முல்லை நிற இலை சாயலுடன் உள்ளது. அதுபோல் இதன் ஸ்ட்ராப் பகுதி மீதான வட்ட வடிவ பதக்கங்கள் இணைக்கப்பட்ட அமைப்பில் உள்ளன. வட்ட வடிவ பதக்கம் என்பது இலைப் பிரிவுகளுடன் கூடிய பூவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பூப்பகுதி மட்டும் சிறு கற்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன.

    வெள்ளி நிற பின்னணி கைக்கடிகாரங்கள்

    ஓவல் வடிவ முதன்மை கைக் கடிகாரப்பகுதி என்பது வெளிர் நீல டையல் பின்னணியுடன் காட்சி தருகிறது. அதன் ஸ்ட்ராப் பகுதி சிறு சிறு டப்போதில் மலர் போன்று வெள்ளி கம்பியில் உருவாக்கப்பட்டு அதன் நடுவே ஒற்றை வெள்ளை கல் பதியப்பட்டுள்ளது. வெள்ளி நிற சாயலுடன் வெள்ளை கற்கள் பதியப்பட்ட இந்த கடிகாரம் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

    பிரேஸ்லெட் அமைப்பிலான கைக்கடிகாரங்கள்


    உருளை கம்பியின் ஒரு பகுதி கடிகாரமும், ஒரு பகுதியில் கற்கள் உள்ளவாறு பிரிவுகளுடன் கூடிய பிரேஸ்லெட் கடிகாரம் என்பது அழகுடன் அனைவரது கவனத்தையும் ஈர்க்கின்றது. கம்பி அமைப்பில் மெல்லிய அமைப்பில் டிசைன்கள் செய்யப்பட்டும் அதிலிருந்து மேலே எழுந்தப்படி பூ மொட்டு போல வண்ண கற்கள் பதியப்பட்டுள்ளது. வெள்ளி, தங்க, ரோஸ் கோல்டு வண்ண பின்னணியில் அழகிய பிரேஸ்லெட்-கள் வருகின்றன. பிரேஸ்லெட் போலவும், அதே நேரம் கடிகார தேவையையும் பூர்த்தி செய்யும் இந்த கடிகாரம் அழகின் உச்சம்.
    கைரேகை மட்டுமல்ல, மனிதர்களின் ஒவ்வொரு தோற்றமும் அவர்களது குணத்தை சொல்லும். இதோ உங்கள் கூந்தல் அலங்காரத்தையும், உங்கள் குணத்தையும் ஒப்பிட்டுப் பாருங்களேன்...
    கைரேகை மட்டுமல்ல, மனிதர்களின் ஒவ்வொரு தோற்றமும் அவர்களது குணத்தை சொல்லும். உங்கள் கூந்தல் அலங்காரம்கூட நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை காட்டிக் கொடுக்கும். இதோ உங்கள் கூந்தல் அலங்காரத்தையும், உங்கள் குணத்தையும் ஒப்பிட்டுப் பாருங்களேன்...

    கூந்தல் தோள்பட்டையை தொட முயற்சிக்கும் ‘பாப் கட்டிங்’, பெண்ணாக நீங்கள் இருந்தால், பாசி்ட்டிவ்வான எண்ணம் கொண்டவர். எதிலும் இருக்கும் நிறைகளை அலசுவீர்கள். குறைகளை சொல்லமாட்டீர்கள். பண்பாளராக திகழ்வீர்கள். உண்மை பேசுபவராகவும், மற்றவர்களைவிட தனித்துவம் பெற்றவராகவும் இருப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் நிலைகுலைந்து போகாமல் நிதானமும், பொறுமையும் மிக்கவராக வாழ்க்கையை நடத்திச்செல்வீர்கள். மற்றவர்களைப் போல வழக்கமான வாழ்க்கையை வாழ விரும்பாதவராக, புதுமை படைப்பவராக வித்தியாசமான எண்ணங்களுடன் வலம் வருவீர்கள். காதலில்கூட உங்கள் எண்ணம் புதுமையானதாக இருக்கும். ஜொள்ளுப் பார்ட்டிகள் உங்களிடம் வழிந்து காதலைச் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். அதே நேரத்தில் பண்பான ஒருவரைப் பார்த்தால் நீங்களாக காதலைச் சொல்லவும் தயங்கமாட்டீர்கள்.

    ‘பிக்சி கட்’ எனப்படும் இந்த குட்டையான கூந்தல் தோற்றம் உங்கள் உருவத்திற்கு கச்சிதமாகப் பொருந்துவதாக நினைக்கிறீர்களா? நீங்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர் என்பதை காட்டுகிறது இந்த தோற்றம். உங்களுக்கு சமூக அக்கறையும் அதிகம். கொஞ்சம் ஜாலிப் பேர்வழியும்கூட. காதல் உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால் காதலுக்கு மேல் எல்லைமீற மாட்டீர்கள் என்று சொல்லலாம்.

    உங்களுக்கு நிறைய நண்பர்களும், பிரியமானவர்களும் இருப்பார்கள். அந்த அளவுக்கு எளிமையாக, பண்பாக பழகும் ஆற்றல் கொண்டவர். வேலையிலும் இன்பம் காண்பவர். சுய உள்ளுணர்வால் தூண்டப்பட்டு எதையும் புதுமையாகச் செய்யும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். அதே நேரத்தில் சுய கட்டுப்பாடு மிகுந்தவராகவும் விளங்குவீர்கள். எவரும் உங்களைப் பாராட்டவும் பழகவும் விரும்புவார்கள். உங்களுடன் இணைந்து செயல்படவும் ஆசைப்படுவார்கள்.

    கூந்தல் உங்கள் தோள்பட்டையை தொட்டுக் கொண்டிருக்கும் இது ‘லோப் கட்டிங்’ எனப்படுகிறது. நீங்கள் பெண்ணிய கருத்துக்கள் கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் இயற்கை அழகு உங்களை கடந்து செல்லும் ஒவ்வொருவரையும் ஈர்க்கும். பழகிப் பார்ப்பவர்களுக்கு உங்கள் பண்பாடும், கலாசாரமும் பிடித்துப் போகும். சவால்களை ஏற்றுச் செய்வதில் உங்களுக்கு விருப்பம் அதிகம். நண்பர்களை அதிகமாக உருவாக்கிக் கொள்வீர்கள். நண்பர்களுக்கு உதவுவதில் முன்னணியில் இருப்பீர்கள். நீங்கள் ஆண்களிடம் கனிவாகப் பேசுவீர்கள். ஆனால் அவ்வளவு எளிதாக காதல்வலையில் விழுந்துவிடமாட்டீர்கள். மற்றவர்கள் உங்களை அதிகமாக பேசுபவராக கருதுவார்கள். நிஜத்தில் நீங்கள் பேச்சைவிட செயலிலே அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

    பின்னே புஜத்திற்கு கீழே, முன்னே மார்பகத்தை மறைக்கும் அளவுக்கு தொங்கும் இது ‘லாங் ஹேர் கட்’ எனப்படுகிறது. அதிகமாக வளரும் கூந்தலை நுனியில் மட்டும் கத்தரித்து அழகு செய்துகொள்ளும் நீங்கள் எதிலும் கவனமாக இருப்பவர். பொறுமை மிக்கவர். உங்களுக்கு மிகப்பெரிய கனவுகள் இருக்கும். நீங்கள் எதற்கும் கலங்குவதில்லை. அதை மற்றவர்களும் அறிவார்கள். உறவை பேணுவதிலும் வல்லவர். கடினமான மனிதர்களிடம்கூட நட்பு பாராட்டி உறவை பேண உங்களால் முடியும். ஆனால் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் மட்டும் கறாராக இருப்பீர்கள். ஏனோதானோ என்று செயல்பட மாட்டீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேற போராடுவீர்கள், பாடுபடுவீர்கள். இலக்கை அடையாமல் ஓயமாட்டீர்கள்.
    பெண்களின் ஆபரணங்கள் உலோகங்களில் செய்யப்பட்டது போல தற்போது வண்ணமயமான ஜொலிக்கும் பட்டு நூல்கள் கொண்டு தயாராகின்றன.
    இளம் பெண்கள் தங்களின் ஆடை வடிவமைப்புக்கு ஏற்றவாறு விதவிதமான புதிய ஆபரணங்களை அணிந்து கொள்கின்றனர். பெண்களின் ஆபரணங்கள் உலோகங்களில் செய்யப்பட்டது போல தற்போது வண்ணமயமான ஜொலிக்கும் பட்டு நூல்கள் கொண்டு தயாராகின்றன. பட்டு நூல் லேசானது. எடை குறைவானது. மேலும் பளபளப்பும் வழவழப்பும் தன்மை கொண்டது.

    அதன் மூலம் உருவாகும் ஆபரணங்கள் நாளடைவில் மங்காத தன்மையுடன் உள்ளது. அத்துடன் எந்த வண்ண ஆடை அணிகின்றோமோ அந்த வண்ணத்திலான நூல்களை கொண்ட ஆபரணங்களை அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஆடை நெய்த நூல் அமைப்பிலேயே ஆபரணமும் அணியும்போது கூடுதல் அழகும், பொலிவும் ஏற்படும்.

    பட்டு நூல் ஆபரணங்கள்

    பட்டு நூல் கொண்டு தற்போது காதணி, நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட் போன்றவை உருவாக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆபரண வகையும் அதற்கென உள்ள பிரத்யேக கம்பி வடிவங்கள், கொக்கி அமைப்புகள் கொண்டு அழகுற பின்னப்படுகிறது. பட்டு நூல் இறுக்கமான அமைப்புடன் ஆபரணமாக செய்யப்படும்போது அதன் உறுதி தன்மை அதிகரிக்கிறது. மேலும் அதன் மேம்பட்ட பொலிவு தன்மை எந்த புறம் திரும்பினாலும் அழகிய வண்ண சாயலுடன் பிரதிபலிக்கின்றன. விலை மதிப்புமிக்க பட்டு நூல் சேலையாக அணியும் பெண்கள் பட்டு நூல் ஆபரணத்தையும் ஆர்வமாக அணிய தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அதிகபட்ச அழகியலுடன் கூடிய பட்டு நூல் நகை தயாராகின்றன.

    சிறு மணி கொத்துகளுடன் கூடிய நெக்லஸ்கள்

    முற்றிலும் பட்டு நூல் கொண்டு நெக்லஸ் வடிவமைப்பு மேற்கொள்ளாது நடுநடுவே சிறு மணிகள், கற்கள், முத்துக்கள் இணைக்கப்பட்டவாறு உருவாக்கப்பட்டுள்ளன. சீரான இடைவெளியில் அழகிய சிறு சிறு முத்து மணிகள் கொத்துகளை உள்ளதுடன் அதன் இணைப்பாக வண்ண பட்டு நூல் இணைந்தபடி உள்ளது. அதுபோல் அதன் நடுப்பகுதி பதக்கங்கள் பட்டு நூல் சேர்ந்தபடியும், கற்கள் பதித்த பதக்கங்கள் என்றவாறும் இணைக்கப்பட்டுள்ளன.

    சிறு மணி குஞ்சரங்கள் இணைந்த பட்டு நூல் நெக்லஸ்-யின் அதே அமைப்பிலான காதணி மற்றும் வளையல்கள் போன்றவை செட்-ஆக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.



    உலோக மணிகளுடன் கூடிய மாலைகள்

    இரட்டை வண்ண கலவையுடன் நடுநடுவே உலோக மணிகள் இணைப்புடன் கூடிய மாலைகள் பட்டு நூலில் தயார் செய்யப்படுகின்றன. பெரிய நீளமான மாலைகள் பந்து வடிவ உருளைகள் மற்றும் நீள் வடிவ உருளைகள் என்றவாறு பல வண்ண கலப்பு நூல்களுடன் மாலையாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாலைகளில் நடுநடுவே உலோக மணிகள் இணைப்பும், நடுவே பெரியஉலோக பதக்கங்களுடன் காட்சி தருகிறது. பித்தளை உலோக மணிகள் என்பதுடன் வெள்ளி உலோக மணிகள் என்றவாறும் இம்மாலைகளில் இடம் பெறுகின்றன.

    பிரகாசமான வண்ணங்களை பச்சை, நீலம், மஞ்சள், சிகப்பு மற்றும் இளஞ்சிகப்பு நூல்கள் கொண்ட மாலைகளில் சில ஒற்றை வண்ண நூல்களுடன் உருவாக்கி தரப்படுகிறது. பார்க்க பரவசமான உருவ அமைப்புடன் பட்டு நூல் மாலைகள் உருவாகின்றன.

    அழகிய பட்டு நூல் ஜிமிக்கிகள்

    காதணிகளில் அழகிய பட்டு நூல் ஜிமிக்கிகள் பாந்தமான வடிவமைப்புடன் காட்சி தருகின்றது. பட்டு நூல் ஜிமிக்கிகளின் நடுப்பகுதி மற்றும் ஓரப்பகுதிகள் கற்கள் மற்றும் மணிகள் தொங்கும் அமைப்பில் உருவாகியுள்ளன. இதிலும் ஒற்றை நிற ஜிமிக்கி மற்றும் பல நிறத்திலான ஜிமிக்கிகள் கிடைக்கின்றன. இதில் சிறிய மற்றும் பெரிய அளவிலான ஜிமிக்கி காதணிகள் விதவிதமான அளவில் கிடைக்கின்றன.

    வண்ண பிரகாசத்துடன் வளையல்கள்


    வளையல்கள் என்பதில் பட்டு நூல் இடைவெளியுடன் உலோக உருவங்கள் இணைப்புடன் கூடிய அகலமான பெரிய வளையல்கள் வருகின்றன. அதுபோல் மெல்லிய கம்பி அளவு பட்டு நூல் வளையல்கள் என்பது பல இணைந்தவாறு ஓரப்பகுதி வளையல்கள் கற்கள் வைக்கப்பட்டவாறு பல வளையல் அமைப்புடன் உள்ளன. ஒரே வளையலில் பல வண்ண நூல்கள் சாய்வான அமைப்புடன் உருவான வளையல்கள் ஒளிவெள்ளத்தில் பார்க்கும்போது அழகிய வானவில் போன்று காட்சி அளிக்கிறது.

    பட்டு நூல் வளையல்களில் சிறு சிறு மணிகள் தொங்கியபடி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எந்தவிதமான ஆடை அலங்காரத்திற்கும் ஏற்ற பட்டு நூல் ஆபரணங்கள் பாரம்பரிய பட்டாடைகளுக்கு அணியும்போது தனிப்பட்ட கூடுதல் அழகை தருகின்றது. இளம்பெண்கள் குர்தி போன்ற வண்ண பருத்தி ஆடைகளுக்கும் பட்டு நூல் ஆபரணங்கள் அணிந்து மகிழ்கின்றனர்.
    அழகிய கைப்பை உங்கள் அடையாளங்களில் ஒன்று. பெண்கள் கைப்பைகளை வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அழகிய கைப்பை உங்கள் அடையாளங்களில் ஒன்று. அன்றாடத் தேவை என்றாலும், அவசரத் தேவையென்றாலும், நமது கைகள் முதலில் தேடுவது கைப்பையைத்தான். ஏனெனில் பணமாக இருக்கலாம் அல்லது அடையாள அட்டையாக, உணவுப் பொருளாக, மேக்கப் உபகரணங்களாக, இப்படி தேவையான எதுவாக இருந்தாலும், எல்லாம் கைப்பைக்குள்தான் அடைக்கலமாகி இருக்கும்.

    கைப்பைகளை வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்...

    கைப்பிடியை முதலில் கவனியுங்கள். உறுதியான கைப்பிடி அவசியம். உங்கள் வசதிக்கேற்ற நீளத்தில் கைப்பிடி இருக்கிறதா என பாருங்கள்.

    தையல்கள், இணைப்புகளை சோதித்துப் பாருங்கள்.

    உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகிறதா என்பதை கவனியுங்கள். அதில் சமரசம் செய்ய வேண்டாம்.



    வடிவமும், அளவும், அழகும் அவசியம். உங்கள் தேவைக்கேற்ற அளவில், நீங்கள் விரும்பும் அழகில் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். உள்ளே உங்களுக்கு போதுமான அளவுக்கு அறை, ஜிப்கள் இருக்கிறதா என்பதையும் கவனித்து வாங்குங்கள்.

    தரம் மற்றும் உறுதிக்கு சான்றிதழ், ‘வாரண்டி, கியாரண்டி’ ஏதும் தருகிறார்களா? என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    விலை குறைந்ததை வாங்கிவிட்டு, ஒருசில மாதங்களிலே அதனை பரணில் ஒதுக்கிப் போட்டு விடுவதை தவிர்க்க, விலை சற்று அதிகமாக இருந்தாலும் தரமானதை தேர்ந்தெடுங்கள்.

    புதிய மாடல், புதிய பொருளில் தயாரிக்கப்பட்ட பைகளை வாங்கினால், அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான உபகரணங்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். 
    குடும்பத்தை தூக்கி சுமக்கும் அம்மாக்களுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனாலும் அவர்கள் அழகு, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
    அம்மாக்களுக்கு அழகும் அவசியம். ஆரோக்கியமும் அவசியம். குடும்பத்தை தூக்கி சுமக்கும் அம்மாக்களுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். கழுத்தைப் பிடிக்கிற அளவுக்கு குடும்ப பொறுப்புகளும் இருக்கவே செய்யும். ஆனாலும் அவர்கள் அழகு, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். ஏன்என்றால் அம்மா ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பமே ஆரோக்கியமாக இருக்கும். அம்மாக்களுக்கான சில அழகான ஆலோசனைகள்!

    தினமும் காலையில் எழுந்ததும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, கணவருக்கும், குழந்தைகளுக்குமான மதிய உணவு தயார் செய்வதில்தான் முழு கவனமும் இருக்கும். அதுவே மன நெருக்கடிக்கும் உள்ளாக்கும். வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் அவசரகதியில் கிளம்பும்போது கவனச் சிதறல்கள் ஏற்படும். அதனால் முன்தினம் இரவே மறுநாளுக்காக திட்டமிடவேண்டும். ‘நாளை என்ன சமைக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எந்த மாதிரி அலங்காரம் செய்ய வேண்டும்’ என்று திட்டமிட 10 நிமிடங்கள் செலவிட்டால் போதும். இது காலை நேர பரபரப்பை குறைக்கும். அவசரத்தில் முக்கியமான விஷயங்களை தவறவிடுவதையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.

    இரவில் எல்லா வேலை களையும் முடித்த பின்னர் வெதுவெதுப்பான நீரில் அவசர குளியல் போடலாம். மனதை வருடும் இசை தொகுப்புகளை ரசித்து கேட்டபடி தூங்க செல்லலாம். இவை பெண்களை ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும். மறுநாள் உற்சாகத்துடன் இயங்கவும் உதவி புரியும்.

    கூந்தலை இறுக்கமாக பின்னியிருந்தால், தூங்க செல்வதற்கு முன்னால் அதை தளர்வாக்கிக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் காலையில் எழுந்திருக்கும்போது கூந்தல் சிக்காகுவதை தவிர்த்துவிடலாம். விரைவாக கூந்தல் அலங்காரத்தை முடித்துவிடலாம். சிகை அலங்காரம் செய்வதற்கு போதுமான நேரம் இல்லாவிட்டால் அதற்கான லோஷனை சிறிதளவு கூந்தலில் தடவினால், அலங்காரத்தை விரைவாக முடித்துவிடலாம். தூக்கமின்ைமயால் அவதிப் படுபவர்களின் கண்களை சுற்றி கருவளையத்திற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். ‘ஐ லைனர்’ உபயோகித்து அவைகளை போக்க முயற்சிக்கலாம்.

    பெண்களின் அழகு என்பது அவர்களது ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது. ஆரோக்கியத்திற்காக பெண்கள் தினமும் சமச்சீரான சத்துணவை உண்ணவேண்டும். அளவோடு சாப்பிட்டு, தினமும் உடற்பயிற்சியும் மேற்கொள்ளவேண்டும். நல்ல தூக்கமும், மன அமைதியும் மிக அவசியம். 
    மணப்பெண் அலங்காரத்தில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. அந்த புதுமைகளை பெற்று, தங்களை முழுமையாக அழகுப்படுத்த விரும்பும் பெண்கள் கவனிக்கத்தக்க விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
    மணப்பெண் அலங்காரத்தில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

    திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் அனைவருமே, மணப்பெண் அலங்காரத்தை விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் மணப்பெண் அலங்காரத்திலும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. அந்த புதுமைகளை பெற்று, தங்களை முழுமையாக அழகுப்படுத்த விரும்பும் பெண்கள் கவனிக்கத்தக்க விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

    * எந்த இடத்தில் திருமணம் நடக்கிறதோ அந்த இடத்துக்கு தக்கபடி அலங்கார விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிக மேக்கப் செய்து கொண்டு கோவிலில் எளிமையாக திருமணம் செய்வது முரண்பாடாக அமையும்.

    * ஏ.சி. வசதி இல்லாத இடத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தால் அதற்கு தக்கபடி மேக்கப் செய்து கொள்வது சவுகரியமாக இருக்கும்.

    * நீங்கள் எல்லா நாட்களிலும் எப்படி சிகை அலங்காரம் செய்கிறீர்களோ அதே மாதிரியான அலங்காரத்தைதான் திருமணத்தின்போதும் பின்பற்ற வேண்டும். வழக்கத்துக்கு மாறாக சிகை அலங்காரம் செய்தால் அது ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும்.

    * சிலருக்கு கூந்தலை விதவிதமான ஸ்டைல்களில் அலங்கரித்தால் பார்க்க அழகாக இருக்கும். சிலருக்கு சாதாரணமாக சிகை அலங்காரம் செய்தாலே அருமையாக அமைந்துவிடும். எது பொருத்தமாக இருக்குமோ அதனையே பின்பற்றலாம்.



    * திருமணத்திற்கு முன்பாக கட்டாயம் மேக்அப் ஒத்திகை பார்க்க வேண்டும். ஒரு தடவையாவது எந்த மாதிரியான மேக்கப் செய்வது நன்றாக இருக்கும் என்று பரிசோதித்து பார்த்தால்தான் உங்களுக்கும், அழகுக்கலை நிபுணருக்கும் நம்பிக்கையும், திருப்தியும் ஏற்படும்.

    * மேக்அப் ஒத்திகை செய்யும்போது திருமணத்திற்கு உடுத்தப்போகும் புடவை, அணியும் ஆபரணம் போன்றவற்றை உடன் எடுத்து செல்லவேண்டும். அது மேக்கப்பை முழுமைப்படுத்தும். நிறை, குறைகளை சரி செய்ய உதவியாக இருக்கும். ஜீன்ஸ், டாப் போன்ற மேற்கத்திய ஆடைகளை அணிந்து கொண்டு மேக்கப் ஒத்திகைக்கு சென்றால் பலன் தராது.

    * சிலருக்கு தங்கள் முகத்தில் எந்த உறுப்பு அழகாக இருக்கிறது என்பது தெரியாது. உதடுதான் அழகாக இருப்பதாக நினைப்பார்கள். ஆனால் கண்கள்தான் வசீகரிக்கும் அழகை கொண்டிருக்கும். முகத்தில் எந்த உறுப்பு அழகாக இருக்கிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுதான் ஒப்பனைக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

    * மணப்பெண் அலங்காரம் பெரும்பாலும் காலை வேளையில்தான் அதிகமாக நடக்கிறது. அவசர, அவசரமாக கிளம்பி சென்று சீக்கிரமாக மேக்கப்பை முடித்துவிடுமாறு நிறைய பேர் சொல்கிறார்கள். ஒருவேளை மேக்கப் சரி இல்லை என்றால் அதனை மாற்ற நேரம் இல்லாமல் போய் விடும். அதனால் மேக்கப் செய்ய அழகுக்கலை நிபுணருக்கு போதுமான நேரம் கொடுங்கள்.

    * ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே இளநரை பிரச்சினை இருக்கிறது. அதனை முதலிலேயே சரிபடுத்திவிட வேண்டும். திருமணத்திற்கு முந்தைய நாள் டை அடித்துக்கொள்ளலாம் என்று தள்ளிவைக்காதீர்கள்.

    * ஒருசிலர், ‘நாங்கள் பார்க்க கலராக தெரிய வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்’ என்று அழகுக்கலை நிபுணர்களிடம் சொல்கிறார்கள். அப்படி குறுக்கு வழியில் அழகை கூட்ட நினைப்பது ஆபத்தானது. இயல்பான அழகையும், நிறத்தையும் சற்று மேம்படுத்துவதில் மட்டும் அக்கறைகாட்டுங்கள். 
    பெண்கள் பெரும்பாலும் 30 வயது தொடங்கியவுடன் சிலருக்கு வயதான தோற்றம் வந்துவிடும். உங்கள் சருமம் இளமையாகவே இருக்க இந்த குறிப்பு பயன்படும்.
    பெண்கள் பெரும்பாலும் 30 வயதை கடந்தவுடன் பெரிதாக சதை தொய்வு இருக்காது. அதனால் அப்போது கண்டுகொள்ள மாட்டார்கள். 35 வயது தொடங்கியவுடன் சிலருக்கு வயதான தோற்றம் வந்துவிடும். அதன் பின் அடுத்த பெண்களுடன் கம்பேர் செய்ய ஆரம்பித்து விடுவோம்.

    சரும தொய்வை தடுக்க இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். நல்ல பலன் தரும். 40 களிலும் உங்கள் சருமம் இளமையாகவே இருக்க இந்த குறிப்பு பயன்படும்.

    தேவையான பொருட்கள்  :

    முல்தானி மெட்டி - 1 கப்
    1 ப்ளாக் டீ பேக் - 1
    ஆலிவ் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
    காபித் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
    ஹாஜல் நட் சாறு (Hazelnut juice) - 10 துளிகள்.

    நீரை சுட வைத்து அதில் ப்ளாக் டீ பேக்கை போட வேண்டும். சில நிமிடங்கள் அப்படியே விட்டு அதன் பின் அந்த நிறம் மாறிய நீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

    இந்த நீரில் முல்தானி மெட்டியை சிறிது சிறிதாக கட்டியாகாமல் கலக்க வேண்டும். அது முழுவதும் கரையும் வரை நன்றாக கலக்குங்கள். இந்த கலவையில் காபித் தூள், ஆலிவ் எண்ணெய் மற்றும் ஹாஜல் நட் சாறு ஆகிய மூன்றையும் கலந்து க்ரீம் பதத்திற்கு கொண்டு வாருங்கள்.

    மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது டீ டிகாஷனையோ அல்லது ஆலிவ் எண்ணெயையோ ஊற்றிக் கொள்ளலாம். இந்த கலவையை உங்கள் முகம், வயிறு, கழுத்து மற்றும் தொங்கும் சதையுள்ள கைகளுக்கும் போட வேண்டும்.

    20 நிமிடங்கள் காய வைத்த பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவுங்கள். பின்னர் மிருதுவான துண்டினால் துவட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தாலும் உடனே மாய்ஸ்ரைசர் க்ரீன் போட்டுக் கொள்ளலாம். இல்லையெனில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.

    இவ்வாறு வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை செய்தால் மீண்டும் உங்கள் இருபதுகளில் இருப்பது போல் மாறிவிடுவீர்கள்.

    முகத்திற்கு தினமும் எண்ணெய் தடவுவது கட்டாயமாகும். அதுவும் 30 வயது ஆரம்பித்தவுடன் முகத்தில் வறட்சி ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் உங்கள் சருமம் மிருதுவாக இருக்க வேண்டும்.
    ×