search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களுக்கு பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்துவிட்டால் அனைத்திலும் சுதந்திரம் கிடைத்துவிடும்.
    • வங்கியில் பெற்ற கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தியவர்கள் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களே.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தனியார் அமைப்பின் சார்பில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த போதிலும் பெண்களுக்கான இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இதில் கலந்து கொண்டுள்ளேன். பெண்களுக்கு பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்துவிட்டால் அனைத்திலும் சுதந்திரம் கிடைத்துவிடும்.

    பெண்கள் தனக்காக கவலைப்படுவதில்லை. தங்கள் குடும்பத்திற்காக தான் கவலைப்படுகின்றனர். ஒரு ஆண் எத்தனை வயது ஆனாலும் ஆணாகவே இருக்கின்றார். உங்கள் வெளி தோற்றத்தை வைத்து பல விமர்சனங்கள் இருந்தாலும் நம் உள்ளே இருக்கும் இரும்பு மனதில் இந்த நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களை இரும்பு பெண்மணியாக மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    வன்முறை என்பது எந்த சமுதாயத்தில் இருந்தாலும் அது தவறு. 10 நபர்களுக்கு கடனுதவி வழங்கினால் அதில் 3 பேர் பெண்களாக இருக்க வேண்டும். அதில் எஸ்.சி, எஸ்.டி சமூகத்தை சேர்ந்தவர் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    வங்கியில் பெற்ற கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தியவர்கள் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களே. அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

    பெண்களின் தேவையை அறிந்து அரசு அவர்களுக்கு முன் உரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இணையதளங்களில் பெண்கள் செய்யும் வணிகம் அதிக அளவில் இடம்பெறுகின்றது. கொரோனா காலகட்டத்தில் ஆண்கள் குடும்பத்தை காப்பாற்றினார்ளோ இல்லையோ பெண்கள் இணையதளம் வாயிலாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்து குடும்பங்களை காப்பாற்றினர்.

    பெண்கள் தற்பொழுது தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியாக இருக்கும். இதில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் வரவேண்டும். சிறிய அளவில் தொடங்கி பெரிய தொழில் முனைவோராக மாற வேண்டும். பெண்களின் கையில் பொருளாதாரம் இருந்தால் வாழ்வாதாரம் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த முகாம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும்.
    • ஓய்வூதியதாரா் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியதாவது:

    தஞ்சை மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வது தொடா்பாக தமிழக முதல்வா் அறிவிப்பின்படி இன்று சிறப்பு முகாம்கள் தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த முகாம் நாளை (சனிக்கிழமை ) மற்றும் நாளை மறுநாள் 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.

    இந்த முகாம்களில் விடுபட்ட விண்ணப்ப தாரா்கள் மற்றும் வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோா் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோா் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரா் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    100 நாள்வேலை திட்டத்தில் பெண்களிடம், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டார்.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இடைக்காட்டூர், பதினெட்டாங்கோட்டை, பச்சேரி, பெரியகோட்டை, வேம்பத்தூர், வி.புதுக்குளம் மற்றும் மிக்கேல்பட்டினம், கல்லூரணி, பாப்பாங்குளம், இந்திராநகர், லட்சுமிபுரம், அண்ணாநகர் ஆகிய பகுதியில்   அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் சுற்றுபயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளைகேட்டார்.     

    அப்பகுதியில் 100 நாள்வேலை திட்டத்தில் பணி செய்து கொண்டிருந்த    பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

    அப்போது குடிநீர் தட்டுப்பாடு   உள்ளதாகவும், எனவே தட்டுப்பாடுயின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை     எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். 

    அதற்கு பதில் அளித்த செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குடிநீர் பிரச்சனை குறித்து  மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

    அப்போது மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், வடக்கு  ஒன்றிய செயலாளர் சிவசிவஸ்ரீதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    எப்போதும் ஸ்டோர் ரூமில் வைக்கும் பொருட்களை, அதன் வகை மற்றும் பயனுக்கு ஏற்ப, தனித்தனி அட்டைப்பெட்டிகளில் அல்லது பைகளில் பிரித்து வைப்பது சிறந்தது.
    வீட்டின் அனைத்து அறைகளையும் பராமரித்து, அவற்றில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை, ஸ்டோர் ரூமில் குவித்து வைத்து விடுவோம். அவசரத் தேவையின்போது, அந்த அறையில் நமக்குத் தேவையான ஒரு பொருளைத் தேடி எடுப்பதற்கு ஒரு நாள் ஆகிவிடும். ஸ்டோர் ரூமை எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்ப்போம்.

    முதலில் ஸ்டோர் ரூமின் அளவை கவனிக்க வேண்டும். அதற்கு ஏற்றார்போல் பொருட்களை அடுக்கி வைக்க வேண்டும். இரண்டாவது அந்த அறையில் போதுமான அளவு வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லது அறையின் இரண்டு புறமும் மின்விளக்குகள் பொருத்துவது சிறந்தது.

    எப்போதும் ஸ்டோர் ரூமில் வைக்கும் பொருட்களை, அதன் வகை மற்றும் பயனுக்கு ஏற்ப, தனித்தனி அட்டைப்பெட்டிகளில் அல்லது பைகளில் பிரித்து வைப்பது சிறந்தது. மேலும், அந்த பைகள் அல்லது அட்டைப்பெட்டியின் மீது உள்ளிருக்கும் பொருட்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை குறிப்பிடுவது நல்லது. இது அவசர நேரத்தில் நாம் தேடும் பொருளை எளிதாக எடுக்க உதவும்.

    ஸ்டோர் ரூமில் பொருட்களை பக்கவாட்டில் அடுக்குவதை விட, நேர்கோடாக அடுக்குவது சிறந்தது. இது இட வசதியை ஏற்படுத்துவதுடன் பொருட்களை வகைப்படுத்தவும் எளிதாக இருக்கும். ஸ்டோர் ரூமில் ஜன்னல் அல்லது 'எக்சாஸ்ட் பேன்' கட்டாயம் இருக்க வேண்டும்.

    அப்போதுதான் அறையினுள் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் நிலவும். இது அறையில் இருக்கும் தூசு வாசனை மற்றும் பழைய பொருட்களின் வாசனையை குறைக்கும். வாரம் ஒரு முறை ஸ்டோர் ரூமை சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் பூச்சிகள், ஒட்டடை மற்றும் தூசுகளிடம் இருந்து பொருளையும், அறையையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஸ்டோர் ரூமில் ஏர் பிரஷ்னர் அல்லது ரூம் பிரஷ்னரை தினமும் பயன்படுத்துவது நல்லது.

    இதனால், தூசு, பழைய பொருள் வாசனையால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வித பாதிப்பும் வராது தடுக்க முடியும். மாதம் ஒரு முறை ஸ்டோர் ரூமில் உள்ள பொருட்களை எடுத்துப் பார்க்கவும். அப்போதுதான் நமக்குத் தேவையில்லாத பொருட்கள் இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடியும்.

    மேலும், நாம் ஸ்டோர் ரூமில் என்னென்ன பொருட்கள் வைத்துள்ளோம் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவில் வைத்துக்கொள்ள உதவும். தனியாக ஸ்டோர் ரூம் இல்லாதவர்கள் வீட்டில் உள்ள பரண் அல்லது ஸ்லாப்களில் தேவையில்லாத பொருட்களை வைத்திருப்பார்கள். அவர்களும் இதே பராமரிப்பு முறையை பின்பற்றலாம்.
    ×