search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள்வேலை திட்டத்தில் பெண்களிடம், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டார்.
    X
    100 நாள்வேலை திட்டத்தில் பெண்களிடம், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டார்.

    பெண்களிடம் குறை கேட்ட எம்.எல்.ஏ.

    100 நாள்வேலை திட்டத்தில் பெண்களிடம், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டார்.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இடைக்காட்டூர், பதினெட்டாங்கோட்டை, பச்சேரி, பெரியகோட்டை, வேம்பத்தூர், வி.புதுக்குளம் மற்றும் மிக்கேல்பட்டினம், கல்லூரணி, பாப்பாங்குளம், இந்திராநகர், லட்சுமிபுரம், அண்ணாநகர் ஆகிய பகுதியில்   அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் சுற்றுபயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளைகேட்டார்.     

    அப்பகுதியில் 100 நாள்வேலை திட்டத்தில் பணி செய்து கொண்டிருந்த    பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

    அப்போது குடிநீர் தட்டுப்பாடு   உள்ளதாகவும், எனவே தட்டுப்பாடுயின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை     எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். 

    அதற்கு பதில் அளித்த செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குடிநீர் பிரச்சனை குறித்து  மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

    அப்போது மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், வடக்கு  ஒன்றிய செயலாளர் சிவசிவஸ்ரீதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×