என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bridal makeup"

    • ஐ-லைனரை கண்ணின் ஓரத்திலிருந்து போடாமல் நடுவில் இருந்து போடவேண்டும்.
    • ப்ளெண்ட் செய்யும்போது முழு அழுத்தத்தையும் முகத்தில் காட்டாமல், ப்ளெண்டரில் காட்டவேண்டும்.

    மஞ்சள் கொத்து இல்லையென்றால் பொங்கல் வைக்க முடியாது என்று தைப்பொங்கலன்று சிலர் வாக்குவாதம் செய்வர். அப்படி மேக்கப் இல்லையென்றால் தற்போது திருமணம் கிடையாது என்பதுபோல, ஒப்பனை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது திருமணத்தில். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு சடங்குமுறையை பின்பற்றுவர். அவ்வாறு அவர்களது திருமண முறையும் மாறுபடும். திருமண முறைகளுக்கு ஏற்றவாறு மேக்கப் முறைகளும் வந்துவிட்டன. அந்தவகையில் சிம்பிள் கிறிஸ்டியன் மேக்கப் போடுவது எப்படி என விளக்கியுள்ளார் அழகு கலை நிபுணர் உமா. ராணி ஆன்லைனுக்கு அளித்த நேர்காணல் மூலம் அவர் கூறிய ப்ரைடல் மேக்கப் வழிமுறைகளை காணலாம்.

    CTM (Cleansing, Toning and Moisturizing) பிராசஸ்

    முதலில் கிளென்சிங் பண்ணவேண்டும். ஏனென்றால், பார்லர் வரும்போதே சிலர் மேக்கப் போட்டிருப்பார்கள். அதனை முதலில் நீக்கவேண்டும். கிளென்சிங் செய்தபிறகு டோனர். ஓபன் போர்செஸ் இருப்பவர்களுக்கு டோனர் பயன்படுத்தலாம். டோனர் ஸ்பிரே காய்ந்தபின்பு, மாய்ச்சுரைஸர். அடுத்து கன்சீலர். கன்சீலருக்கு பின் ஃபவுண்டேஷன். எப்போதுமே ஃபவுண்டேஷன் ப்ரைடலின் நிறத்தைவிட கொஞ்சம் ஃபேராக இருக்குமாறு போட்டுக்கொள்ள வேண்டும். மூன்று ஃபவுண்டேஷன்களை எடுத்து எது அவர்களின் நிறத்தைவிட கொஞ்சம் ஃபேராக இருக்கிறதோ அதை பயன்படுத்தலாம். சிலர் ஐ-மேக்கப் போட்டுவிட்டு, ஃபேஸ் மேக்கப் போடுவார்கள். ஃபேஸ் மேக்கப் போட்டுவிட்டும், ஐ-மேக்கப் போடலாம். இப்படித்தான் போடவேண்டும் என்று இல்லை. நான் எப்போதும் ஃபேஸ் மேக்கப் போட்டுவிட்டுதான் ஐ-மேக்கப் போடுவேன். பிரஷ், பியூட்டி ப்ளெண்டர் என எது உங்களுக்கு நன்றாக இருக்கிறதோ, அதிலே ப்ளெண்ட் செய்யலாம். எந்தளவு பிளெண்ட் செய்கிறோமோ அந்தளவிற்கு மேக்கப் நன்றாக வரும்.

    ப்ளெண்ட் செய்யும்போது...

    ப்ளெண்ட் செய்யும்போது முழு அழுத்தத்தையும் ப்ரைடலின் முகத்தில் காட்டாமல், பிளெண்டரில் காட்டவேண்டும். ஏனெனில் நாம் வேகமாக அழுத்தும்போது விரலின் அழுத்தம் முகத்தில் படும்போது அவர்களுக்கு வலிக்கும். கண்ணிற்கு கீழ் க்ரீஸ் லைன் வரும். அப்போது மேலே பார்க்கசொல்லி, மெதுவாக ப்ளெண்ட் செய்யவேண்டும். அடுத்தது ஃபவுண்டேஷனுக்கு எந்த ஷேடு எடுத்தோமோ அதனைவிட டார்க்கர் ஷேடு எடுத்து காண்டோரிங் செய்யவேண்டும். நீங்கள் எது செய்வதாக இருந்தாலும், ப்ரைடுக்கு விருப்பமா எனக்கேட்டு செய்யுங்கள். ஃபவுண்டேஷன் அப்ளை செய்தபிறகு, பேக் செய்யவேண்டும்.

    ஐ-லென்ஸ்

    மேக்கப்பிற்கு முன்பு ஐ-லென்ஸ் வைக்கவேண்டும். லென்ஸ் போடுவதற்கு முன்பு ப்ரைடலிடம் கேட்கவேண்டும். அவர்கள் ஐ-லென்ஸ், முன்பு போட்டிருக்கிறார்களா என்று? ஏனெனில் சிலருக்கு தலைவலிக்கும், சிலருக்கு கண் சென்சிட்டிவாக இருக்கும். லென்ஸ் போட்டுக்கொண்டே லைட் வெளிச்சத்தை எல்லாம் பார்த்தால், கண்கலங்கும். எப்போதும் பயன்படுத்துபவர்கள் என்றால் பிரச்சனை இல்லை. அதனால் ப்ரைடலிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

    ஐ-மேக்கப்

    அடுத்தது ஐ-மேக்கப். நமக்கு எந்த ஐ-ஷேடோ வேண்டுமோ, அதை எடுத்துக்கொண்டு பிளெண்ட் செய்யலாம். அடுத்தது கிளிட்டர். எப்போதும் ஐ-லைனரை ஓரத்திலிருந்து போடாமல் நடுவில் இருந்து போடவேண்டும். அப்போது ப்ளெண்ட் செய்ய நன்றாக இருக்கும். அடுத்தது காஜல். எப்போதுமே கண் புருவத்திற்கு கருப்பு நிறத்தை பயன்படுத்துவதைவிட, நம் இந்தியர்களின் நிறத்திற்கேற்ப ப்ரவுன் ஷேடு பயன்படுத்தலாம். அடுத்தது காண்டோரிங். அடுத்தது ப்ளஷ் மற்றும் ஹைலைட்டர். பின்னர் லிப்லைனர். லிப்லைனர் அப்ளை செய்துவிட்டு, லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளலாம். கடைசியாக செட்டிங், ஃபிட்டிங் ஸ்பிரே அடித்துக் கொள்ளலாம்.

    • அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விஷயங்களில் மணமகளின் அலங்காரமும் ஒன்று.
    • மணப்பெண்களுக்கான சிகை அலங்காரங்கள் ஏராளமாக இருக்கின்றன.

    திருமண நிகழ்வுக்கு வரும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விஷயங்களில் மணமகளின் அலங்காரமும் ஒன்று, பளபளக்கும் ஆடைகள், ஜொலிக்கும் ஒப்பனை என்பதைத் தாண்டி மணமகளின் சிகை அலங்காரம் பலரின் பார்வைகளில் பட்டுச்செல்லும், இந்திய மணப்பெண்களுக்கான சிகை அலங்காரங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதில் தற்போது டிரெண்டாகும் சில ஹேர் ஸ்டைல்கள்.

     பாலேரினா பன்:

    பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்த இந்த சிகை அலங்காரம், பழங்கால நினைவை தூண்டக்கூடியது. இந்த சிகை அலங்காரத்தை பொறுத்தவரை, அவரவர் கற்பனைத்திறனுக்கு ஏற்ப எந்த வகையான கொண்டையாகவும் போடலாம். அதை இயற்கையான மற்றும் செயற்கையான மலர்கள், சிறிய நகைகள் கொண்டு அலங்கரிக்கலாம். புடவை முதல் மாடர்ன் உடைகள் வரை எந்த வகையான ஆடைகளுக்கும் இந்த சிகை அலங்காரம் பொருந்தும். நீள்வட்ட முக வடிவம். பெரிய கன்னம் உள்ளவர்களுக்கு இவ்வகை அலங்காரம் பொருத்தமாக இருக்கும். இதற்கு கண்களை அழகாய் எடுத்துக் காட்டும் வகையில் மேக்கப் போடலாம்.

     சிக்னான்:

    இது 90-களில் பிரபலமாக இருந்த ஹேர் ஸ்டைல். எந்த வகையான கூந்தல் உள்ளவர்களுக்கும் பொருந்தக்கூடியது. அடிப்படையில் கொண்டை போன்று இருந்தாலும், பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கும். தளர்வாக இருப்பதால், நவீன தோற்றத்தை விரும்பும் பெண்களுக்கு இது ஏற்றது.

    ஆப் பைரட்ஸ்:

    குறைவான நீளமுள்ள கூந்தல் உள்ளவர்களுக்கும் பொருந்தும் வகையிலான சிகை அலங்காரம் இது. முடியின் ஆரம்பத்தில் இருந்து பாதிவரை சில பின்னல்களை போட்டு மிதமுள்ள முடியை அப்படியே விட்டுவிடலாம். இதில் மீதமுள்ள முடியை சுருள் சுருளாக மாற்றினாலும் பார்க்க அழகாக இருக்கும். ரோஜா இதழ்கள், செயற்கையான பூ மொட்டுகள், பூச்சரம் கொண்டு அலங்கரிக்கலாம். இது கூந்தலை அடர்த்தியாக காட்டும்.

     லூஸ் ஹேர்:

    மணமகள் மட்டுமின்றி அனைவரின் தேர்வாகவும் இருப்பது இந்த ஹேர் ஸ்டைல். திறந்தவெளி, கடலோர பகுதிகளில் திருமணம் நடத்த திட்டமிட்டால் கவுன் போன்ற மாடர்ன் உடைகள் அணியும்போது இந்த ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுக்கலாம். இதில் கூந்தல் அலை அலையாக கர்லிங் ஹேர் ஸ்டைலை தேர்வு செய்யலாம். நீண்ட மற்றும் அடர்த்தியான முடி உள்ளவர்களுக்கு இந்த சிகை அலங்காரம் மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த சிகை அலங்காரத்தை மேலும் அழகாய் காட்ட ஃபினிஷிங் ஸ்பிரேயை பயன்படுத்தலாம். கிளிப் பூக்கள், ஹெட் பேண்டுகள் அணிந்தால், வித்தியாசமான தோற்றம் தரும்.

     நீண்ட பின்னல்:

    பாரம்பரிய முறையில் கூந்தலை நீண்ட ஜடைபோல பின்னிக்கொள்ளும் சிகை அலங்காரம் இது, திருமண நாளன்று அழகாக தோற்றமளிக்க இந்த சிகை அலங்காரம் ஏற்றதாக இருக்கும். இதிலும் பிரெஞ்சு முதல் கிளாசிக் திரீ ஸ்ட்ராண்ட் புல் த்ரூ ஜடை டச்சு என பலவகை பின்னல்கள் உள்ளன. இவற்றை மலர்களைக் கொண்டு அலங்கரித்தால், இந்த வகை சிகை அலங்காரம் பலரது கவனத்தையும் ஈர்க்கும்.

    மணப்பெண் அலங்காரத்தில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. அந்த புதுமைகளை பெற்று, தங்களை முழுமையாக அழகுப்படுத்த விரும்பும் பெண்கள் கவனிக்கத்தக்க விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
    மணப்பெண் அலங்காரத்தில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

    திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் அனைவருமே, மணப்பெண் அலங்காரத்தை விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் மணப்பெண் அலங்காரத்திலும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. அந்த புதுமைகளை பெற்று, தங்களை முழுமையாக அழகுப்படுத்த விரும்பும் பெண்கள் கவனிக்கத்தக்க விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

    * எந்த இடத்தில் திருமணம் நடக்கிறதோ அந்த இடத்துக்கு தக்கபடி அலங்கார விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிக மேக்கப் செய்து கொண்டு கோவிலில் எளிமையாக திருமணம் செய்வது முரண்பாடாக அமையும்.

    * ஏ.சி. வசதி இல்லாத இடத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தால் அதற்கு தக்கபடி மேக்கப் செய்து கொள்வது சவுகரியமாக இருக்கும்.

    * நீங்கள் எல்லா நாட்களிலும் எப்படி சிகை அலங்காரம் செய்கிறீர்களோ அதே மாதிரியான அலங்காரத்தைதான் திருமணத்தின்போதும் பின்பற்ற வேண்டும். வழக்கத்துக்கு மாறாக சிகை அலங்காரம் செய்தால் அது ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும்.

    * சிலருக்கு கூந்தலை விதவிதமான ஸ்டைல்களில் அலங்கரித்தால் பார்க்க அழகாக இருக்கும். சிலருக்கு சாதாரணமாக சிகை அலங்காரம் செய்தாலே அருமையாக அமைந்துவிடும். எது பொருத்தமாக இருக்குமோ அதனையே பின்பற்றலாம்.



    * திருமணத்திற்கு முன்பாக கட்டாயம் மேக்அப் ஒத்திகை பார்க்க வேண்டும். ஒரு தடவையாவது எந்த மாதிரியான மேக்கப் செய்வது நன்றாக இருக்கும் என்று பரிசோதித்து பார்த்தால்தான் உங்களுக்கும், அழகுக்கலை நிபுணருக்கும் நம்பிக்கையும், திருப்தியும் ஏற்படும்.

    * மேக்அப் ஒத்திகை செய்யும்போது திருமணத்திற்கு உடுத்தப்போகும் புடவை, அணியும் ஆபரணம் போன்றவற்றை உடன் எடுத்து செல்லவேண்டும். அது மேக்கப்பை முழுமைப்படுத்தும். நிறை, குறைகளை சரி செய்ய உதவியாக இருக்கும். ஜீன்ஸ், டாப் போன்ற மேற்கத்திய ஆடைகளை அணிந்து கொண்டு மேக்கப் ஒத்திகைக்கு சென்றால் பலன் தராது.

    * சிலருக்கு தங்கள் முகத்தில் எந்த உறுப்பு அழகாக இருக்கிறது என்பது தெரியாது. உதடுதான் அழகாக இருப்பதாக நினைப்பார்கள். ஆனால் கண்கள்தான் வசீகரிக்கும் அழகை கொண்டிருக்கும். முகத்தில் எந்த உறுப்பு அழகாக இருக்கிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுதான் ஒப்பனைக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

    * மணப்பெண் அலங்காரம் பெரும்பாலும் காலை வேளையில்தான் அதிகமாக நடக்கிறது. அவசர, அவசரமாக கிளம்பி சென்று சீக்கிரமாக மேக்கப்பை முடித்துவிடுமாறு நிறைய பேர் சொல்கிறார்கள். ஒருவேளை மேக்கப் சரி இல்லை என்றால் அதனை மாற்ற நேரம் இல்லாமல் போய் விடும். அதனால் மேக்கப் செய்ய அழகுக்கலை நிபுணருக்கு போதுமான நேரம் கொடுங்கள்.

    * ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே இளநரை பிரச்சினை இருக்கிறது. அதனை முதலிலேயே சரிபடுத்திவிட வேண்டும். திருமணத்திற்கு முந்தைய நாள் டை அடித்துக்கொள்ளலாம் என்று தள்ளிவைக்காதீர்கள்.

    * ஒருசிலர், ‘நாங்கள் பார்க்க கலராக தெரிய வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்’ என்று அழகுக்கலை நிபுணர்களிடம் சொல்கிறார்கள். அப்படி குறுக்கு வழியில் அழகை கூட்ட நினைப்பது ஆபத்தானது. இயல்பான அழகையும், நிறத்தையும் சற்று மேம்படுத்துவதில் மட்டும் அக்கறைகாட்டுங்கள். 
    ×