என் மலர்
நீங்கள் தேடியது "Beauty notes"
- ஐ-லைனரை கண்ணின் ஓரத்திலிருந்து போடாமல் நடுவில் இருந்து போடவேண்டும்.
- ப்ளெண்ட் செய்யும்போது முழு அழுத்தத்தையும் முகத்தில் காட்டாமல், ப்ளெண்டரில் காட்டவேண்டும்.
மஞ்சள் கொத்து இல்லையென்றால் பொங்கல் வைக்க முடியாது என்று தைப்பொங்கலன்று சிலர் வாக்குவாதம் செய்வர். அப்படி மேக்கப் இல்லையென்றால் தற்போது திருமணம் கிடையாது என்பதுபோல, ஒப்பனை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது திருமணத்தில். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு சடங்குமுறையை பின்பற்றுவர். அவ்வாறு அவர்களது திருமண முறையும் மாறுபடும். திருமண முறைகளுக்கு ஏற்றவாறு மேக்கப் முறைகளும் வந்துவிட்டன. அந்தவகையில் சிம்பிள் கிறிஸ்டியன் மேக்கப் போடுவது எப்படி என விளக்கியுள்ளார் அழகு கலை நிபுணர் உமா. ராணி ஆன்லைனுக்கு அளித்த நேர்காணல் மூலம் அவர் கூறிய ப்ரைடல் மேக்கப் வழிமுறைகளை காணலாம்.
CTM (Cleansing, Toning and Moisturizing) பிராசஸ்
முதலில் கிளென்சிங் பண்ணவேண்டும். ஏனென்றால், பார்லர் வரும்போதே சிலர் மேக்கப் போட்டிருப்பார்கள். அதனை முதலில் நீக்கவேண்டும். கிளென்சிங் செய்தபிறகு டோனர். ஓபன் போர்செஸ் இருப்பவர்களுக்கு டோனர் பயன்படுத்தலாம். டோனர் ஸ்பிரே காய்ந்தபின்பு, மாய்ச்சுரைஸர். அடுத்து கன்சீலர். கன்சீலருக்கு பின் ஃபவுண்டேஷன். எப்போதுமே ஃபவுண்டேஷன் ப்ரைடலின் நிறத்தைவிட கொஞ்சம் ஃபேராக இருக்குமாறு போட்டுக்கொள்ள வேண்டும். மூன்று ஃபவுண்டேஷன்களை எடுத்து எது அவர்களின் நிறத்தைவிட கொஞ்சம் ஃபேராக இருக்கிறதோ அதை பயன்படுத்தலாம். சிலர் ஐ-மேக்கப் போட்டுவிட்டு, ஃபேஸ் மேக்கப் போடுவார்கள். ஃபேஸ் மேக்கப் போட்டுவிட்டும், ஐ-மேக்கப் போடலாம். இப்படித்தான் போடவேண்டும் என்று இல்லை. நான் எப்போதும் ஃபேஸ் மேக்கப் போட்டுவிட்டுதான் ஐ-மேக்கப் போடுவேன். பிரஷ், பியூட்டி ப்ளெண்டர் என எது உங்களுக்கு நன்றாக இருக்கிறதோ, அதிலே ப்ளெண்ட் செய்யலாம். எந்தளவு பிளெண்ட் செய்கிறோமோ அந்தளவிற்கு மேக்கப் நன்றாக வரும்.
ப்ளெண்ட் செய்யும்போது...
ப்ளெண்ட் செய்யும்போது முழு அழுத்தத்தையும் ப்ரைடலின் முகத்தில் காட்டாமல், பிளெண்டரில் காட்டவேண்டும். ஏனெனில் நாம் வேகமாக அழுத்தும்போது விரலின் அழுத்தம் முகத்தில் படும்போது அவர்களுக்கு வலிக்கும். கண்ணிற்கு கீழ் க்ரீஸ் லைன் வரும். அப்போது மேலே பார்க்கசொல்லி, மெதுவாக ப்ளெண்ட் செய்யவேண்டும். அடுத்தது ஃபவுண்டேஷனுக்கு எந்த ஷேடு எடுத்தோமோ அதனைவிட டார்க்கர் ஷேடு எடுத்து காண்டோரிங் செய்யவேண்டும். நீங்கள் எது செய்வதாக இருந்தாலும், ப்ரைடுக்கு விருப்பமா எனக்கேட்டு செய்யுங்கள். ஃபவுண்டேஷன் அப்ளை செய்தபிறகு, பேக் செய்யவேண்டும்.
ஐ-லென்ஸ்
மேக்கப்பிற்கு முன்பு ஐ-லென்ஸ் வைக்கவேண்டும். லென்ஸ் போடுவதற்கு முன்பு ப்ரைடலிடம் கேட்கவேண்டும். அவர்கள் ஐ-லென்ஸ், முன்பு போட்டிருக்கிறார்களா என்று? ஏனெனில் சிலருக்கு தலைவலிக்கும், சிலருக்கு கண் சென்சிட்டிவாக இருக்கும். லென்ஸ் போட்டுக்கொண்டே லைட் வெளிச்சத்தை எல்லாம் பார்த்தால், கண்கலங்கும். எப்போதும் பயன்படுத்துபவர்கள் என்றால் பிரச்சனை இல்லை. அதனால் ப்ரைடலிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
ஐ-மேக்கப்
அடுத்தது ஐ-மேக்கப். நமக்கு எந்த ஐ-ஷேடோ வேண்டுமோ, அதை எடுத்துக்கொண்டு பிளெண்ட் செய்யலாம். அடுத்தது கிளிட்டர். எப்போதும் ஐ-லைனரை ஓரத்திலிருந்து போடாமல் நடுவில் இருந்து போடவேண்டும். அப்போது ப்ளெண்ட் செய்ய நன்றாக இருக்கும். அடுத்தது காஜல். எப்போதுமே கண் புருவத்திற்கு கருப்பு நிறத்தை பயன்படுத்துவதைவிட, நம் இந்தியர்களின் நிறத்திற்கேற்ப ப்ரவுன் ஷேடு பயன்படுத்தலாம். அடுத்தது காண்டோரிங். அடுத்தது ப்ளஷ் மற்றும் ஹைலைட்டர். பின்னர் லிப்லைனர். லிப்லைனர் அப்ளை செய்துவிட்டு, லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளலாம். கடைசியாக செட்டிங், ஃபிட்டிங் ஸ்பிரே அடித்துக் கொள்ளலாம்.
- முடிஉதிர்வு பிரச்சினை மன உளைச்சலை ஏற்படுத்திவிடும்.
- வழுக்கை விழுந்த தலையில் கூட முடிவளரும்.
பொதுவாக தலைமுடி உதிர்வதை ஒரு வயதிற்கு மேல் நம்மால் நிறுத்தமுடியாது. குழந்தைப்பேறு, வயோதிகம், உடல்நலப்பிரச்சினை, சத்துக்கள் குறைவது போன்ற காரணங்களால் முடி உதிர்வை தடுக்க முடியாது. பலபேருக்கு அதுவே மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். இப்படி முடி அதிகமாக கொட்டுகிறதே என்ன செய்வது என்று புரியாமல் யோசித்துக்கொண்டு இருப்பார்கள்.
கைமேல் பலன் தரக்கூடிய மிக அருமையான தீர்வை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வழுக்கை விழுந்த தலையில் கூட முடிவளரும் அளவுக்கு இந்த தீர்வு இருக்கும். நமது வீட்டு அடுப்படியில் இருக்கும் சின்ன வெங்காயம் தான் இந்த தீர்வை தருகிறது. இதில் இருக்கக்கூடிய சல்பர் தான் முடிவளச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
சல்பர் நம் தலையில் ஏற்படக்கூடிய புண், பொடுகு மற்றும் முடிகொட்டுவதற்கு காரணமான தொற்றுகளை அழிப்பதற்கு இந்த சல்பர் உதவுகிறது. இந்த சின்னவெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்வேண்டும் என்றால் இதனை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பசைபோல் அரைத்து எடுக்க வேண்டும்.
இதில் உள்ள சாறினை பிழிந்து எடுத்து அதனை தலையில் உள்ள முடிகள் மற்றும் அதன் வேர்களில் படுமாறு நன்றாக தேய்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் ஒரு 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிறகு ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். புண். பொடுகுத்தொல்லை இருப்பவர்கள் கொஞ்சம் அரிப்பு காணப்படும். அதை பொறுத்துக்கொண்டு ஒருமணிநேரம் ஊறவைக்க வேண்டும். கண் எரிச்சல் இருக்கும் அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. அதன்பிறகு ஒரு மைல்டான ஷாம்பு போட்டு தலைமுடியை அலச வேண்டும்.
சிலர் எனக்கு சளித்தொல்லை, சைனஸ் பிரச்சினை இருக்கிறது. நாங்கள் எப்படி ஊறவைத்து குளிப்பது என்று கேட்கலாம். அவர்களை இந்த சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து தடவுவதற்கு பதிலாக அவர்கள் சின்ன வெங்காயத்தை சிறிதளவு ஒன்றிரண்டாக தட்டி அதனை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி அதனை தடவி வரலாம்.
இதனுடன் சேர்த்து எலுமிச்சை சாறு அல்லது புதினா சாறு ஆகியவற்றையும் தலையில் தடவி வரலாம். இதனை சாறு எடுத்து தடவி வந்தால் மட்டுமே முடியில் எந்த வெங்காய சக்கைகளும் படியாமல் இருக்கும். இதனை தொடர்ந்து ஒரு 6 மாதத்திற்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வது குறைந்து முடிவளர ஆரம்பிக்கும். முடி இல்லாமல் வழுக்கை விழுந்தவர்கள் கூட தொடர்ந்து இந்த மாதிரி பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை பெறலாம்.






