search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "handbag"

    • பைக்கில் வந்த வாலிபர் திடீரென சிந்தியா வைத்திருந்த கைபையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை தென்னஞ்சாலை ரோடு சஞ்சய்காந்தி நகரை அடுத்த டாக்டர் காலனியை சேர்ந்தவர் பீட்டர். இவரது மனைவி சிந்தியா(வயது70). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இவரும் துபாயில் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீட்டர் இறந்து விட்டார். இதனால் சிந்தியா தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில்  சிந்தியா புதுவை-கடலூர் சாலையில் உள்ள தேவாலயத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். தென்னஞ்சாலை ரோட்டில் உள்ள ஏ.ஜி.சபை அருகே வந்த போது பின்னால் பைக்கில் வந்த வாலிபர் திடீரென சிந்தியா வைத்திருந்த கைபையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். சிந்தியா அந்த கைபையில் ரூ.ஆயிரம் ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் வீட்டு சாவியை வைத்திருந்தார்.

    இதுகுறித்து சிந்தியா உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 17 வயது சிறுவன் கைபையை பறித்து சென்றது பதிவாகியிருந்தது.

    இதனை வைத்து அந்த சிறுவனை போலீசார் பிடித்தனர்.

    அவனிடம் இருந்து கைபை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • 1 மடிக்கணினி,8 வங்கி பணமாற்ற அட்டைகள், (ஏடிஎம் கார்டு ) உள்ளிட்டவை இருந்தது.
    • பல்லடம் போலீஸ் நிலையம் வந்து, தன்னுடைய கைப்பையை அடையாளம் காட்டி பெற்றுச் சென்றார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை தனியார் பேக்கரியில், நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தேநீர் அருந்திவிட்டு அவர் கொண்டு வந்த, கை பையை மறந்து விட்டு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வந்த பேக்கரி ஊழியர் பிரவீன் கைப்பை இருப்பதைப் பார்த்தவர், அதனை எடுத்துக் கொண்டு பல்லடம் போலீஸ் நிலையத்தில், நடந்த சம்பவத்தை கூறி ஒப்படைத்தார். போலீசார் அந்த கைப்பையை சோதனை யிட்டபோது அதில் 1 மடிக்கணினி,8 வங்கி பணமாற்ற அட்டைகள், (ஏடிஎம் கார்டு ) உள்ளிட்டவை இருந்தது.

    இதையடுத்து அதில் இருந்த முகவரியை பார்த்தபோது, சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ஆசாத் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர். இதையடுத்து நேற்று அவர் பல்லடம் போலீஸ் நிலையம் வந்து, தன்னுடைய கைப்பையை அடையாளம் காட்டி பெற்றுச் சென்றார். மேலும் கைப்பையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பேக்கரி ஊழியருக்கு நன்றி தெரிவித்தார். போலீசார் மற்றும் அங்கிருந்தவர்கள் பேக்கரி ஊழியரை பாராட்டினர்.

    • சாலையில் கிடந்த பையில் ரூ.3,200, ஆதார் கார்டு, குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கி புத்தகம் இருந்தது.
    • அந்த பெண்ணிடம் சப்-இன்ஸ்பெக்டர் யாதவ் கிருஷ்ணன், தலைமை காவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தவறவிட்ட பை, பணம், ஆவணங்களை ஒப்படைத்தனர்.

    அரவேணு:

    கோத்தகிரி மார்க்கெட் பகுதியில், போலீஸ் ஏட்டு பாலசுப்பிரமணியம் என்பவர் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையின் கீழே ஒரு பை கிடந்ததை பார்த்தார்.

    பின்னர் அதை எடுத்து பார்த்த போது, உள்ளே ரூ.3,200, ஆதார் கார்டு, குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கி புத்தகம் இருந்தது. புத்தகத்தை திருப்பி பார்த்தபோது, அதில் கோத்தகிரி ஓரசோலை காமராஜர் நகரை சேர்ந்த சரஸ்வதி என பெயர் இருந்தது.

    தொடர்ந்து அந்த பையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து காவலர் ஆதார் அட்டையில் உள்ள முகவரி மூலம் சம்பந்தப்பட்ட பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர்.

    பின்னர் அந்த பெண்ணிடம் சப்-இன்ஸ்பெக்டர் யாதவ் கிருஷ்ணன், தலைமை காவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தவறவிட்ட பை, பணம், ஆவணங்களை ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்ட அந்த பெண் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

    நம்முடன் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட கைப்பைகளில் நமது தேவைகள் மட்டுமல்லாது, ஆரோக்கியமும் ஒளிந்திருக்கிறது. கைப்பைகளின் ஆரோக்கியத்திற்கும், சுத்தத்திற்கும் சில வழிகள்...
    அழகிய கைப்பை உங்கள் அடையாளங்களில் ஒன்று. அன்றாடத் தேவை என்றாலும், அவசரத் தேவையென்றாலும், நமது கைகள் முதலில் தேடுவது கைப்பையைத்தான். ஏனெனில் பணமாக இருக்கலாம் அல்லது அடையாள அட்டையாக, உணவுப் பொருளாக, மேக்கப் உபகரணங்களாக, இப்படி தேவையான எதுவாக இருந்தாலும், எல்லாம் கைப்பைக்குள்தான் அடைக்கலமாகி இருக்கும். நம்முடன் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட கைப்பைகளில் நமது தேவைகள் மட்டுமல்லாது, ஆரோக்கியமும் ஒளிந்திருக்கிறது. நாம் கைப்பைகளை கவனமாக பாதுகாப்பதுடன், சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும். கைப்பைகளின் ஆரோக்கியத்திற்கும், சுத்தத்திற்கும் சில வழிகள்...

    எங்கே வைக்கிறோம்?

    உணவு விடுதிக்குச் செல்கிறீர்கள் அல்லது பொது இடங்களில் அமர்கிறீர்கள், அல்லது வேலைக்குச் சென்று சோர்வாக வீடு திரும்பியதும் நீங்கள் செய்யும் முதல் வேலை, அருகில் உள்ள மேஜையில் அல்லது தரையில் உங்கள் கைப்பையை வைப்பீர்கள், அப்படித்தானே? ஆரோக்கியம் விரும்புபவர்கள் இனி அப்படிச் செய்ய வேண்டாம். உலகில் அதிகமான கிருமிகள் தங்குமிடமாக இருப்பது இந்த மேஜை மற்றும் தரைப் பரப்புதான். வெளியே சென்றால் கைப்பையை உங்கள் மடியிலேயே வைத்துக் கொள்ளலாம். அல்லது அதை மேஜையில் தொங்கவிடும் கொக்கி (ஹூக்) சாதனத்தை வாங்கி பயன்படுத்துங்கள். வீட்டிற்கு வந்தால் ஹேங்கரில் தொங்கவிடலாம். அதற்கு முன்பாக, பையின் உள்ளே கனமான பொருட்கள் இருந்தால் எடுத்துவிடுங்கள். அது பையின் ஆயுளை நீட்டிக்கும்.

    சுத்தம் செய்கிறீர்களா?

    நாம் துவைத்துப் பயன்படுத்தாத பொருட்களில் கைப்பையும் ஒன்றாக இருக்கலாம். பலவித கைப்பைகள் துவைத்து பயன் படுத்த முடியாத பொருட்களால் தயாரிக்கப்பட்டிருக்கலாம். முடிந்தவரை துவைத்துப் பயன்படுத்தும் வகையிலான பைகளை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்தவகை கைப்பையாக இருந்தாலும் பருத்தித் துணி கொண்டு துடைத்துப் பயன்படுத்தலாம். சிலவகை பைகளை எண்ணெய் தொட்டு அல்லது அதற்கான பாலிஷ் கொண்டு துடைத்தால் மினுமினுப்பு பெற்றுவிடும். துவைக்க முடிந்த கைப்பைகளை அவ்வப்போது சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். கைப்பையின் உள்ளே மேக்கப் சாதன பொருட்களால் கசிவு, கறை, அழுக்குகள் படிந்திருந்தால் நிச்சயம் துவைத்துப் பயன்படுத்துங்கள். குறிப்பாக கைப்பிடியில் சுத்தத்தை பராமரிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.

    எல்லா கைப்பைகளும் ஒன்றல்ல...


    ஒவ்வொரு கைப்பையின் தரமும், தன்மையும் மாறுபடும். தோல்பை, துணிப்பை, ரெக்சின் பை, சணல்பை என ஒவ்வொரு வகை பையும் வேறுபட்ட தன்மையும், தரமும் கொண்டிருக்கும். அவற்றின் தன்மைக்கேற்ப பராமரித்து பயன்படுத்த வேண்டும். அதுதான் அதன் ஆயுளை நீட்டிக்கும். உதாரணமாக தோல் பைகளை சுத்தம் செய்ய தனியே ‘லெதர் கிளீனர்’கள் கிடைக்கின்றன. அதன் மூலம் சுத்தம் செய்தால்தான் அது புதிதுபோல பளிச்சிடும்.

    பாதுகாப்பு உறை அவசியம்...

    கைப்பையில் வைக்கும் அனைத்து பொருளுக்கும் பாதுகாப்பு உறை அவசியம். உதாரணமாக, ரசாயனங்கள், திரவங்கள் போன்ற பொருட்களை கைப்பையில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதை ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது காகித உறை சுற்றி உள்ளே பாதுகாப்பாக வைக்கலாம். மேக்கப் உபகரணங்களைக்கூட இப்படி ஒரு பாதுகாப்பு உறையுடன் கைப்பையில் வைத்தால் அது பையின் ஆயுளை அதிகமாக்கும். கறைகளும், அழுக்குகளும் படியாது. பல்வேறு கைப்பைகள், கறை காக்கும் உறையுடன் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. ‘டிஸ்யூ பேப்பர்’களை கறைபடியாமல் தடுக்க பயன்படுத்தலாம்.



    கவனமாக திறந்து மூடுங்கள்...


    ஜிப்களின் பலமே கைப்பைகளின் ஆயுளை தீர்மானிக்கின்றன. கைப்பைகளை திறக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது சமதள பரப்பில் வைத்து நிதானமாக ஜிப்பை திறந்து மூட வேண்டும். சாய்வாக வைத்துக் கொண்டோ, தொங்கவிட்டுக் கொண்டோ திறக்கக்கூடாது. திறப்பின் இரு பக்கங்களும் நேராக இல்லாமல் வைத்துக் கொண்டு மூடுவது எளிதில் ஜிப்கள் பழுதாகிவிட காரணமாகும். உள்ளே அதிக எடையுள்ள பொருட்களை வைத்துக் கொண்டு தொங்கவிடுவதாலும் ஜிப் எளிதில் பழுதாகிவிடும்.

    கசியும் பொருட்களும், அறையும்...

    கசியும் பொருட்களே சீக்கிரம் கைப்பைகளை மாற்றவேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு விதமான பொருட்களை வைப்பதற்கும் தனித்தனி பிரிவுகள், அறைகள் கொண்ட கைப்பைகள் என்றால் இந்தப் பிரச்சினையை குறைக்கலாம். சிந்தும், கசியும் பொருட்களை அதற்குரிய அறையில் வைத்து பராமரிக்கலாம். அறைகள் இல்லாத கைப்பைகளில் பகுதிகளை பிரிப்பதற்காக ‘ேஹண்ட்பேக் லைனர்’ சாதனங்கள் சந்தையில் கிடைக்கும். அதனை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

    ஆரம்பத்திலேயே சரி செய்வது...

    ரெடிமேடு துணிகளைப்போல, கைப்பைகளையும் வாங்கிய உடன் கூடுதலாக ஒரு தையல் போட்டு பயன்படுத்த முடிந்தால் நீண்ட ஆயுளுடன் உழைக்கும். அதே நேரத்தில் தையலில் விரிசல், ஜிப் சிக்கல், கைப்பிடியின் இணைப்புகளில் விரிசல் ஏற்படுவது போன்ற பழுதுகளை ஆரம்பத்திலேயே சரிசெய்வதும் கைப்பையின் ஆயுளை அதிகரிக்கும்.

    மாற்றிக் கொண்டே இருங்கள்...


    கைப்பையில் வைக்கும் பொருட்களை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். இடம் மாற்றம் செய்து, எடுத்து வையுங்கள். நீங்கள் அதிகமாக கைப்பையை பயன்படுத்த வேண்டியதிருந்தால் கூடுதல் பைகளை பயன்படுத்துவதுடன், அவ்வப்போது பைகளை மாற்றி பயன்படுத்துங்கள். குறிப்பாக ஷாப்பிங் செல்ல, காய்கறி வாங்க, உறவினர் வீட்டிற்கு, வேலை தொடர்பான ஆவணங்களை சுமக்க என அந்தந்த சூழலுக்கேற்ற தரமான பைகளை பயன்படுத்துவது நல்லது.

    வழக்கமாக செய்யும் தவறுகள்...

    எப்போதும் பைகளை தோளில் சுமப்பது, தரையில் வைப்பது, அதிக எடையை பையில் சுமப்பது, தாழ்வாக தொங்கவிடுதல், கைப்பிடியின் உறுதியை சோதிக்காமல், மெல்லிய கைப்பிடியில் அதிக பாரம் ஏற்றுதல், எல்லாவற்றையும் ஒரே பையில் திணித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவற்றைத் தவிர்த்தால் கைப்பை களின் ஆயுள் கெட்டியாகும். 
    அழகிய கைப்பை உங்கள் அடையாளங்களில் ஒன்று. பெண்கள் கைப்பைகளை வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அழகிய கைப்பை உங்கள் அடையாளங்களில் ஒன்று. அன்றாடத் தேவை என்றாலும், அவசரத் தேவையென்றாலும், நமது கைகள் முதலில் தேடுவது கைப்பையைத்தான். ஏனெனில் பணமாக இருக்கலாம் அல்லது அடையாள அட்டையாக, உணவுப் பொருளாக, மேக்கப் உபகரணங்களாக, இப்படி தேவையான எதுவாக இருந்தாலும், எல்லாம் கைப்பைக்குள்தான் அடைக்கலமாகி இருக்கும்.

    கைப்பைகளை வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்...

    கைப்பிடியை முதலில் கவனியுங்கள். உறுதியான கைப்பிடி அவசியம். உங்கள் வசதிக்கேற்ற நீளத்தில் கைப்பிடி இருக்கிறதா என பாருங்கள்.

    தையல்கள், இணைப்புகளை சோதித்துப் பாருங்கள்.

    உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகிறதா என்பதை கவனியுங்கள். அதில் சமரசம் செய்ய வேண்டாம்.



    வடிவமும், அளவும், அழகும் அவசியம். உங்கள் தேவைக்கேற்ற அளவில், நீங்கள் விரும்பும் அழகில் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். உள்ளே உங்களுக்கு போதுமான அளவுக்கு அறை, ஜிப்கள் இருக்கிறதா என்பதையும் கவனித்து வாங்குங்கள்.

    தரம் மற்றும் உறுதிக்கு சான்றிதழ், ‘வாரண்டி, கியாரண்டி’ ஏதும் தருகிறார்களா? என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    விலை குறைந்ததை வாங்கிவிட்டு, ஒருசில மாதங்களிலே அதனை பரணில் ஒதுக்கிப் போட்டு விடுவதை தவிர்க்க, விலை சற்று அதிகமாக இருந்தாலும் தரமானதை தேர்ந்தெடுங்கள்.

    புதிய மாடல், புதிய பொருளில் தயாரிக்கப்பட்ட பைகளை வாங்கினால், அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான உபகரணங்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். 
    ×