search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாடிக்கையாளர் தவறவிட்ட கை பையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பேக்கரி பணியாளர்
    X

    கைப்பையை காவலரிடம் ஒப்படைத்தக் காட்சி.

    வாடிக்கையாளர் தவறவிட்ட கை பையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பேக்கரி பணியாளர்

    • 1 மடிக்கணினி,8 வங்கி பணமாற்ற அட்டைகள், (ஏடிஎம் கார்டு ) உள்ளிட்டவை இருந்தது.
    • பல்லடம் போலீஸ் நிலையம் வந்து, தன்னுடைய கைப்பையை அடையாளம் காட்டி பெற்றுச் சென்றார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை தனியார் பேக்கரியில், நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தேநீர் அருந்திவிட்டு அவர் கொண்டு வந்த, கை பையை மறந்து விட்டு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வந்த பேக்கரி ஊழியர் பிரவீன் கைப்பை இருப்பதைப் பார்த்தவர், அதனை எடுத்துக் கொண்டு பல்லடம் போலீஸ் நிலையத்தில், நடந்த சம்பவத்தை கூறி ஒப்படைத்தார். போலீசார் அந்த கைப்பையை சோதனை யிட்டபோது அதில் 1 மடிக்கணினி,8 வங்கி பணமாற்ற அட்டைகள், (ஏடிஎம் கார்டு ) உள்ளிட்டவை இருந்தது.

    இதையடுத்து அதில் இருந்த முகவரியை பார்த்தபோது, சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ஆசாத் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர். இதையடுத்து நேற்று அவர் பல்லடம் போலீஸ் நிலையம் வந்து, தன்னுடைய கைப்பையை அடையாளம் காட்டி பெற்றுச் சென்றார். மேலும் கைப்பையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பேக்கரி ஊழியருக்கு நன்றி தெரிவித்தார். போலீசார் மற்றும் அங்கிருந்தவர்கள் பேக்கரி ஊழியரை பாராட்டினர்.

    Next Story
    ×