search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "watch"

    • பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • திருட்டு, மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்க உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் வருகிற 17-ந்தேதி காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3 கி.மீ தூரத்துக்கு கடற்கரையில் தடுப்பு கட்டை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் கடலில் இறங்கி குளிக்காமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. திருட்டு, மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்க உள்ளனர்.

    பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட உள்ளது. டிரோன்கள் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது.

    கடற்கரைக்குப் பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காகக் குழந்தை களுக்கு பாதுகாப்பு கவசம் போன்று அடையாள அட்டைகளை கைகளில் கட்டி விட திட்டமிடப்பட்டு உள்ளது.

    குழந்தைகள் பார்த்து ரசிக்கும் கார்ட்டூன்கள் என்ன வகையாக இருக்கிறது என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் அமர்ந்தும் ரசிக்கலாம்.
    ‘‘பொதுவாகவே, மழலைப்பருவத்தினருக்கு கதைகள் கேட்பது மிகவும் பிடிக்கும். 30, 40 வருடங்களுக்கு முன்னால் இப்போது உள்ளது போல நிறைய டி.வி.சேனல்களோ சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் பார்க்கும் கார்ட்டூன் சேனல்களோ எதுவும் கிடையாது.

    அப்போது இருந்த ஒரே பொழுதுபோக்கு சாதனம் கதைதான். வீட்டில் இருந்த பெரியவர்களும் அதற்கேற்ற வகையில் கதைகள் சொல்வார்கள். பல சமயங்களில் கடவுள், விலங்குகள், கோமாளி, அரக்கர்கள் மாதிரி நடித்தும், விதவிதமான ஓசைகள் எழுப்பியும் குழந்தைகளை மகிழ்ச்சி அடைய செய்தனர். அதன் தொடர்ச்சியாகவே, இன்றைய கார்ட்டூன் சேனல்கள் இருக்கின்றன.

    இவற்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கண்கவர் வண்ணங்கள், சுட்டி எலி, முட்டாள் பூனை, பிரம்மாண்ட யானை, தங்கள் மனதுக்குப் பிடித்த ஹீரோக்கள் சூப்பர் மேன், பேட்மேன் என சுவாரஸ்யமாகவும், விதவிதமாகவும் உலா வருவதால் குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை விரும்புவதும், அவற்றைப் பார்த்து சந்தோஷமாக இருப்பதும் நாளுக்குநாள் அதிகரிக்கிறது.’’

    இன்று வீட்டில் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் யாரும் கிடையாது. பெற்றோர் வேலைக்குச் சென்று விடுகின்றனர். எனவே, குழந்தைகளின் தனிமையைப் போக்க கார்ட்டூன் சேனல்களைப் பார்க்க தாராளமாக அனுமதிக்கலாம். அதேநேரத்தில் வன்முறை சம்பவங்கள், திகிலூட்டும் அதிரடி காட்சிகள், தவறாக வழிநடத்தி உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் மற்றும் தேவையற்ற தீய பழக்கவழக்கங்களைச் சிறுவர், சிறுமியரிடையே ஏற்படுத்தும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது. பெற்றோருக்கு இந்தத்  தெளிவு வேண்டும்.

    குழந்தைகள் பார்த்து ரசிக்கும் கார்ட்டூன்கள் என்ன வகையாக இருக்கிறது என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் அமர்ந்தும் ரசிக்கலாம். இதன்மூலம் குழந்தைகளின் மகிழ்வும் கூடுதலாகும். குழந்தைகள் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்கவும் இது உதவியாக இருக்கும். சராசரியாக, ஒரு நாளில் 45 நிமிடங்கள் கார்ட்டூன்கள் பார்க்க அனுமதிக்கலாம். நேரம் காலம் அறியாமல், மணிக்கணக்காக கார்ட்டூன்கள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.’’

    நவநாகரீக பெண்கள் அணிகின்ற வகையில் அழகிய வடிவமைப்புடன் கடிகாரங்கள் முந்தைய பட்டை அமைப்பிலான ஸ்ட்ராப் டைப் வாட்ச்கள் என்பது மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன.
    நவநாகரீக பெண்கள் அணிகின்ற வகையில் அழகிய வடிவமைப்புடன் கடிகாரங்கள் முந்தைய பட்டை அமைப்பிலான ஸ்ட்ராப் டைப் வாட்ச்கள் என்பது மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இந்த அதிநுட்பமான வேலைப்பாடு மிகுந்த கைக் கடிகாரங்கள் என்பது கணினி உதவியுடன் கண்கவர் வடிவங்கள் உள்ளவாறு உருவாக்கப்படுகின்றன. இதன் சிறப்பம்சம் எனும்போது சிக்கலான சிற்பங்கள் என்பதை வடிவமைப்பாக கொண்டு அழகிய வண்ண கற்கள் பொருத்தப்பட்டவாறு கிடைக்கின்றன. அதாவது பூ வேலைப்பாடு கொண்ட ஸ்ட்ராப் முதல் மேம்பட்ட புதிய டிசைன்கள் பல உள்ளவாறு கைக் கடிகாரங்கள் கிடைக்கின்றன.

    பழங்குடியினர் வளையம் போன்ற கைக் கடிகாரங்கள்

    மேம்பட்ட சிக்கலான வேலைப்பாட்டுடன் அழகிய பழங்குடியினர் வளையம் போன்ற கைக் கடிகாரங்கள் கிடைக்கின்றன. பப்- பிரிண்டட் செய்யப்பட்ட மாசாபா மோதிப்ஸ் டையல் பகுதிகளிலும், சூரிய கதிர் போன்ற பினிஷ் செய்யப்பட்ட ஜலி பேட்டர்ன் அமைப்பு உள்ளது. இதன் சிற்பங்கள் இணைந்த வளையல் அமைப்பு இரு சுழற்சி கொண்டவாறு கடிகாரப்பகுதி ஒரு பக்க இணைப்பில் பற்றியவாறு உள்ளது. அந்த சிற்ப அமைப்பு அழகிய உருளைகள் மற்றும் சிற்பங்கள் இணைந்தவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தின் உலோக வண்ண சாயல் என்பது செம்மை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் உள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வளைய பகுதியும் சிறிய செதுக்கல்கள், உருவ பின்னணி கொண்டவாறு மிக துல்லியமான நுண்ணிய வேலைப்பாடுடன் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது, நீண்ட நாள் உழைக்கக்கூடிய வகையிலான மேற்பூச்சுடன் உள்ளது.

    பூ வேலைப்பாட்டுடன் கூடிய கைக்கடிகாரங்கள்

    முதன்மையான டையல் பகுதி என்பது வட்ட வடிவிலும், ஓவல் மற்றும் மொட்டு அமைப்பிலும் இருக்கும் படியான கடிகார அமைப்பின் ஸ்ட்ராப் என்பது மட்டும் பூ வேலைப்பாட்டுடன் அழகிய வடிவங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூ வேலைப்பாடு பூ பேட்டர்ன் மற்றும் பெசல் அமைப்புடன் கூடிய ஸ்ராப் உள்ளது. இந்த தங்க பூ வடிவ அமைப்பின் நடுவே ஜொலிக்கும் ஸ்வரோஸ்கி கற்கள் பதியப்பட்டுள்ளன.

    வண்ண கற்கள் பதியப்பட்ட கொடி பின்னல் கைக்கடிகாரம்

    வெள்ளை நிற பின்னணியில் தங்க நிற வடிவமைப்பு முதன்மை கடிகாரம் இருக்க வலை பின்னல் அமைப்பிலான ஸ்ட்ராப் வண்ணக்கற்கள் பதியப்பட்டவாறு உள்ளன. அதாவது பட்டையான தங்க தகட்டில் இடைவெளிவிட்டு காற்றோட்டமான அமைப்பில் உருவங்கள் மட்டும் தெரியும் வகையில் உள்ளன. இந்த இடைவெளி விட்ட உருவ அமைப்பில் சிறு சிறு வண்ணங்கள் பூ, இலை, கொடி அமைப்பு என்றவாறு தனி வண்ணங்களில் பதியப்பட்டுள்ளன. முதன்மை கடிகாரப்பகுதி என்பது வட்டவடிவில் மேற்புறம் சிறு வைரக்கற்கள் பதியப்பட்டுள்ளன.



    ஆடை மடிப்பு போன்று கைக்கடிகாரங்கள்

    அழகிய உருளை கம்பி இருபக்கவாட்டு அமைப்புடன் நடுப்பகுதியில் ஆடை மடிப்பு போன்று கம்பிகள் குறுக்குவாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இடைவெளிவிட்டு கம்பி அமைப்பு மேல் எழுந்தவாறு அலை அமைப்புடன் காணப்படுகிறது. அதுபோல் ஒரு கம்பி விட்டு ஒரு கம்பி அமைப்பில் அழகிய இளஞ்சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. ரோஸ் கோல்டு சாயல் கொண்ட வண்ண பின்னணிக்கு ஏற்ப டயல் பகுதியும் அதே வண்ணத்தில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

    கலைநயத்துடன் உருவான பதக்க அமைப்பு கைக்கடிகாரங்கள்

    முதன்மை கடிகாரப்பகுதி என்பது வட்டவடிவில் முல்லை நிற இலை சாயலுடன் உள்ளது. அதுபோல் இதன் ஸ்ட்ராப் பகுதி மீதான வட்ட வடிவ பதக்கங்கள் இணைக்கப்பட்ட அமைப்பில் உள்ளன. வட்ட வடிவ பதக்கம் என்பது இலைப் பிரிவுகளுடன் கூடிய பூவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பூப்பகுதி மட்டும் சிறு கற்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன.

    வெள்ளி நிற பின்னணி கைக்கடிகாரங்கள்

    ஓவல் வடிவ முதன்மை கைக் கடிகாரப்பகுதி என்பது வெளிர் நீல டையல் பின்னணியுடன் காட்சி தருகிறது. அதன் ஸ்ட்ராப் பகுதி சிறு சிறு டப்போதில் மலர் போன்று வெள்ளி கம்பியில் உருவாக்கப்பட்டு அதன் நடுவே ஒற்றை வெள்ளை கல் பதியப்பட்டுள்ளது. வெள்ளி நிற சாயலுடன் வெள்ளை கற்கள் பதியப்பட்ட இந்த கடிகாரம் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

    பிரேஸ்லெட் அமைப்பிலான கைக்கடிகாரங்கள்


    உருளை கம்பியின் ஒரு பகுதி கடிகாரமும், ஒரு பகுதியில் கற்கள் உள்ளவாறு பிரிவுகளுடன் கூடிய பிரேஸ்லெட் கடிகாரம் என்பது அழகுடன் அனைவரது கவனத்தையும் ஈர்க்கின்றது. கம்பி அமைப்பில் மெல்லிய அமைப்பில் டிசைன்கள் செய்யப்பட்டும் அதிலிருந்து மேலே எழுந்தப்படி பூ மொட்டு போல வண்ண கற்கள் பதியப்பட்டுள்ளது. வெள்ளி, தங்க, ரோஸ் கோல்டு வண்ண பின்னணியில் அழகிய பிரேஸ்லெட்-கள் வருகின்றன. பிரேஸ்லெட் போலவும், அதே நேரம் கடிகார தேவையையும் பூர்த்தி செய்யும் இந்த கடிகாரம் அழகின் உச்சம்.
    ×