என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சல்மான் கான்"

    • ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது
    • பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    பாலிவுட் நடிகர் சல்மான் கான் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

    ரியாத் நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், "நீங்கள் ஒரு இந்தித் திரைப்படம் எடுத்து இங்கு (சவுதி அரேபியா) வெளியிட்டால், அது ஒரு சூப்பர் ஹிட் ஆகும்.

    தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படத்தை உருவாக்கினால் அது பல நூறு கோடிகளை சம்பாதிக்கும். ஏனெனில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர்.

    இங்கு பலூசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அனைவரும் இங்கு வேலை செய்கிறார்கள்" என பாகிஸ்தானையும், பலுசிஸ்தானையும் இருவேறு பகுதிகளாக பிரித்து பேசியிருந்தார்.

    இதன் விளைவாக, பாகிஸ்தான் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் 4வது அட்டவணையில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள விளக்கத்தில், "சல்மான் கானின் பெயர் பாகிஸ்தானின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையத்தின் (NACTA) தடைசெய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் இல்லை. உள்துறை அமைச்சகத்திடமிருந்தோ அல்லது மாகாண அரசிடமிருந்தோ அவர் 4வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் இல்லை.

    தற்போதைய செய்திகள் அனைத்தும் இந்திய ஊடகங்கள் அளித்த தவறான செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு தொடர்புடைய நிறுவனங்களையோ அல்லது அதிகாரப்பூர்வ வெளியீடுகளையோ யாரும் தொடர்பு கொள்ளவில்லை," என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. 

    • ரியாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் 3 கான்களும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
    • நாங்கள் ஒருபோதும் ஸ்டார்கள் என்று கருத்திக்கொண்டதில்லை என்று சல்மான் கான் தெரிவித்தார்.

    பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் ஒன்றாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், "எங்கள் மூவரையும் (ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர் கான்" நாங்கள் ஒருபோதும் ஸ்டார்கள் என்று கருத்திக்கொண்டதில்லை" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து பேசிய ஷாருக் கான், "அமீர்கான் மிகசிறந்த நடிகர். ஒரு கதையைச் சொல்ல அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். சல்மான் கான் அவரது இதயத்திலிருந்து மிக சுதந்திரமாக வேலையை செய்கிறார். நான் இந்த இரண்டையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இறுதியாக பேசிய அமீர் கான், "நாங்கள் மூவரும் ஒரே படத்தில் ஒன்றாக நடிக்க தயாராக இருக்கிறோம். அதற்கேற்ற சரியான கதை அமைந்தால் நாங்கள் மூவரும் ஒரே படத்தில் நடிப்போம்" என்று தெரிவித்தார். 

    • ‘சிக்கந்தர்’ தோல்விக்கு சல்மான்கான் தான் காரணம் என ஏ. ஆர் முருகதாஸ் பேசியது பேசுபொருளானது.
    • ஏ.ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படத்தை இயக்கினார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கினார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

    இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சிக்கந்தர் படத்தின் தோல்வியை குறித்து ஏ. ஆர் முருகதாஸ் கூறியபோது "சிக்கந்தர் படத்தின் கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. ஆனால் நான் நினைத்த கதையை என்னால் திரையில் கொண்டு வரமுடியவில்லை. அதற்கு நான் மட்டும் பொறுப்பாக முடியாது.

    சல்மான் கானுக்கு மிரட்டல் இருந்ததால் அவரை வைத்து பகலில் படப்பிடிப்பு நடத்த முடியாது. இரவில் தான் படப்பிடிப்பு நடத்த முடியும். பகல் காட்சியாக இருந்தாலும், அதனை இரவில் தான் படமாக்க முடியும்.

    எல்லாமே கம்ப்யூட்டர் கிராபிக்சிலும், கிரீன் மேட்டிலும் எடுக்க வேண்டியதாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கும் தாமதமாக தான் வருவார். என்னால் என்ன செய்ய முடியும்?" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

    'சிக்கந்தர்' தோல்விக்கு சல்மான்கான் தான் காரணம் என ஏ. ஆர் முருகதாஸ் பேசியது பெரும் பேசுபொருளானது.

    இதனை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில், சிக்கந்தர் படம் குறித்த ஏ. ஆர் முருகதாஸ் விமர்சனத்திற்கு சல்மான்கான் பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய சல்மான்கான், 'சிக்கந்தர்' படம் குறித்து மக்கள் எதிர்மறையாக கூறுகின்றனர். ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ளமாட்டேன். சிக்கந்தர் படத்தின் ஒன்லைன் மிகச்சிறப்பானது.

    ஆனால் நான் படப்பிடிப்பில் இரவு 9 மணிக்கு தான் கலந்துகொள்வேன். அது பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அதை தான் சொன்னார். அப்போது எனது விலா எலும்பு உடைந்திருந்தது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அண்மையில் 'மதராஸி' என்ற பெரிய படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் நாயகன் காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். ஆனால், அதே சமயம் மதராஸி படம் சிக்கந்தர் படத்தை விட பெரிய ப்ளாக்பஸ்டர் ஆகிவிட்டது" என மதராஸி படத்தின் தோல்வி குறித்து கிண்டலாக தெரிவித்தார். 

    • தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ்
    • . திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கினார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். திரைபப்டம் வெளியாகி மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

    இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சிக்கந்தர் படத்தின் தோல்வியை குறித்து ஏ. ஆர் முருகதாஸ் கூறியபோது "சிக்கந்தர் படத்தின் கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. ஆனால் நான் நினைத்த கதையை என்னால் திரையில் கொண்டு வரமுடியவில்லை. அதற்கு நான் மட்டும் பொறுப்பாக முடியாது அதற்கு படக்குழுவும் ஒரு காரணம்,  ஆதிக்கம் செலுத்தும் வகையில் என்னிடம் ஒரு யூனிட் மற்றும் குழு இருந்தால் அதை சாத்திய படுத்திருக்கலாம். அதனால் இது என்னுடைய தோல்வியல்ல" என கூறியுள்ளார்.

    • ஐபிஎல் தொடர் 2008-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற டென்னிஸ் பந்து T10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார்.

    ஐபிஎல் தொடர் 2008-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 18 சீசன் நடந்து முடிந்துள்ளது. இதில் மும்பை, சென்னை அணிகள் தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.அதற்கு அடுத்தப்படியாக கொல்கத்தா 3 முறை கோப்பை வென்றுள்ளது.

    மற்ற அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் ஜார்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜாராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றி உள்ளது. அடுத்த சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு என பல விஷயங்கள் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) என்ற டென்னிஸ் பந்து T10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது சல்மான் கானிடம் ஐபிஎல் அணிகளை வாங்கும் எண்ணம் உள்ளாதா என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு சல்மான் கான் கூறியதாவது:-

    ஐபிஎல் அணியை வாங்க எனக்கு இப்போது வயதாகிவிட்டது. 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் அணியை வாங்குவதற்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் அதை ஏற்கவில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்று பதிலளித்தார்.

    • வெளியில் சென்றிருந்த ஆதித்யா ராய் கபூர் வீட்டிற்கு திரும்பினார்.
    • நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒரு ஆணும் பெண்ணும் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூரின் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக துபாயைச் சேர்ந்த ஒரு பெண்ணை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

    நேற்று (திங்கள்கிழமை) மாலை, ஆதித்யா ராய் கபூரின் வீட்டிற்கு அந்தப் பெண் வந்து, அவருக்கு உடைகள் மற்றும் பரிசுகளை வழங்க வந்ததாக கூறியுள்ளார். நடிகருடன் முன்கூட்டியே ஒரு சந்திப்பு இருப்பதாக அவர் கூறிய பிறகு, வீட்டுப் பணிப்பெண் அப்பேனை உள்ளே அனுமதித்தார்.

    வெளியில் சென்றிருந்த ஆதித்யா ராய் கபூர் வீட்டிற்கு வந்த பிறகு, ஊழியர்கள் அந்தப் பெண்ணின் வருகை குறித்து அவருக்குத் தெரிவித்தனர். இருப்பினும், அப்பெண் யார் என்று தனக்குத் தெரியாது என்று கபூர் கூறியுள்ளார். இதனால் எச்சரிக்கை அடைந்த வீட்டு ஊழியர்கள், அவர் ஆதித்யாவை நெருங்க முயன்றபோது அவரைத் தடுத்தனர்.

    உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவரின் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

    மும்பையில் சமீப காலமாக பிரபல நடிகர்களின் வீடுகளுக்குள் மர்ம நபர்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒரு ஆணும் பெண்ணும் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கினார்
    • ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த மார்ச் 30-ந்தேதி உலக அளவில் வெளியானது.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கினார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த மார்ச் 30-ந்தேதி உலக அளவில் வெளியானது.

    இதனை தொடர்ந்து, திரையரங்கில் வெளியான 'சிக்கந்தர்' படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லாதது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்தது. திரைப்படம் மக்களிடமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    திரைப்படம் இன்று நள்ளிரவு முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • மிரட்டல் வந்த எண்ணை வைத்து அடையாளம் தெரியாத நபரை வோர்லி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
    • அவரது வீட்டின் பால்கனியின் கண்ணாடி கூட குண்டு துளைக்காததாக மாற்றப்பட்டுள்ளது.

    பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பையில் வோர்லி போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸப் எண்ணுக்கு, சல்மான் கானை அவரது இல்லத்தில் வைத்து கொலை செய்துவிட்டு அவரது வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த போவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளது. மிரட்டல் வந்த எண்ணை வைத்து அடையாளம் தெரியாத நபரை வோர்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் மிரட்டல் விடுத்ததாக அடையாளம் காணப்பட்ட குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த  மயங்க் பாண்டியா என்ற 26 வயது இளைஞரை வோர்லி போலீசார் இன்று  கைது செய்தனர். ஆனால் அவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர்போல் காணப்பட்டுள்ளார். இதனால் ஒரு நோட்டீசுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.

    முன்னதாக மும்பையில் உள்ள சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மெண்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பைக் ஓட்டுநர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

    இதன் பின்னர், அவரது வீட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, அவரது நெருங்கிய நண்பரும் என்சிபி தலைவருமான பாபா சித்திக் கடந்த வருடம் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதிருந்து, சல்மானின் பாதுகாப்பு மிகவும் இறுக்கமாக செய்யப்பட்டுள்ளது, அவரது வீட்டின் பால்கனியின் கண்ணாடி கூட குண்டு துளைக்காததாக மாற்றப்பட்டுள்ளது.

    கடந்த 1998-ஆம் ஆண்டு சல்மான்கான் ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அப்போது அரிய வகை பிளாக் பக் மான்களை அவர் வேட்டையாடியதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கில் சல்மான் கான் நீதிமன்றத்தை நாடி ஜாமின் பெற்றார். பிஷ்னோய் மக்களின் குருவான 16-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறு வடிவமாக அந்த அரியவகை மான்கள் கருதப்பட்டுகிறது. இதனால் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து சல்மான் கானுக்கு மிரட்டல் விடுகின்றனர்.

    • கேலக்ஸி அபார்ட்மெண்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பைக் ஓட்டுநர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
    • பிஷ்னோய் மக்களின் குருவான 16-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறு வடிவமாக அந்த அரியவகை மான்கள் கருதப்பட்டுகிறது.

    பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பையில் வோர்லி போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸப் எண்ணுக்கு, சல்மான் கானை அவரது இல்லத்தில் வைத்து கொலை செய்துவிட்டு அவரது வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த போவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளது. மிரட்டல் வந்த எண்ணை வைத்து அடையாளம் தெரியாத நபரை வோர்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    முன்னதாக மும்பையில் உள்ள சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மெண்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பைக் ஓட்டுநர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

    இதன் பின்னர், அவரது வீட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, அவரது நெருங்கிய நண்பரும் என்சிபி தலைவருமான பாபா சித்திக் கடந்த வருடம் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதிருந்து, சல்மானின் பாதுகாப்பு மிகவும் இறுக்கமாக செய்யப்பட்டுள்ளது, அவரது வீட்டின் பால்கனியின் கண்ணாடி கூட குண்டு துளைக்காததாக மாற்றப்பட்டுள்ளது.

    கடந்த 1998-ஆம் ஆண்டு சல்மான்கான் ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அப்போது அரிய வகை பிளாக் பக் மான்களை அவர் வேட்டையாடியதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கில் சல்மான் கான் நீதிமன்றத்தை நாடி ஜாமின் பெற்றார். பிஷ்னோய் மக்களின் குருவான 16-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறு வடிவமாக அந்த அரியவகை மான்கள் கருதப்பட்டுகிறது. இதனால் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து சல்மான் கானுக்கு மிரட்டல் விடுகின்றனர்.

    • ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
    • படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

    இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.

    படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சில விஷயங்களை சல்மான் கான் கூறியதாவது " ரஜினிகாந்த், சிரஞ்சீவி காரு, சூர்யா, ராம் சரண் படங்களை நாங்கள் இங்கு பார்க்கிறோம். நன்றாக ஓடுகின்றன. ஆனால் எங்கள் இந்தி திரைப்படங்களை அவர்களின் ரசிகர்கள் பார்க்கச் செல்வதில்லை. அவர்களின் ஊர்களுக்கு நான் செல்லும்போதெல்லாம், "பாய்.. பாய்" என என்னை அழைப்பார்கள். ஆனால் தியேட்டருக்கு செல்வதில்லை" என அவரது கருத்தை பதிவிட்டுள்ளார்.

    • ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.

    இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.

    படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

     

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சல்மான் கான் , அமீர் கான் மற்றும் ஏ. ஆர் முருகதாஸ் இணைந்து கலந்துரையாடல் செய்து வீடியோ உருவாக்கியுள்ளனர். தன் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அமீர் கான் ஏ.ஆர் முருகதாஸை பார்த்து எங்கள் இருவரின் யார் உண்மையான சிக்கந்தர் என கேள்வி கேட்கிறார் அதற்கு பதி சொல்ல முடியாமல் ஏ.ஆர் முருகதாஸ் முழிக்கிறார். இதன் வீடியோ விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    அமீர் கான் நடிப்பில் இந்தியில் கஜினி திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் ரம்ஜான் பண்டிகையையொட்டி வருகிற 31-ந்தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.

    மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ரம்ஜான் பண்டிகையையொட்டி வருகிற 31-ந்தேதி வெளியாகவுள்ளது.

    இதனை தொடர்ந்து, இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்று இருந்தனர்.

    அப்போது இந்நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவர் சல்மான் கானிடம், உங்களுக்கும் ராஷ்மிகாவுக்கும் 31 வயது வித்தியாசம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு சல்மான் பதிலளித்தபோது, இதில் கதாநாயகிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, அவரது தந்தைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாதபோது, உனக்கு என்ன தம்பி பிரச்சனை? நடிப்பில் ராஷ்மிகாவின் அர்பணிப்பை பார்க்கும்போது எனது குழந்தை பருவம் நினைவுக்கு வரும். அந்தளவு அர்ப்பணிப்புடன் செயல்படுவார் என்று கூறினார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×