என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வான் தாக்குதல்"

    • சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 114 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், ஏற்றுமதி வெறும் 14.25 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது.
    • மூலோபாய கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, உலகளாவிய தெற்கு போன்ற அலங்கார சொற்களுக்கு அப்பால் பார்த்தால்...

    ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இந்தியா - சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

    இந்த ஆண்டு அமைக்கப்பட்ட கல்வான் தாக்குதல் நினைவுச் சின்னம்

    2024 அக்டோபரில் ரஷியாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர்.

     லடாக் எல்லையில் நிலவிய நான்கு ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வாக, ரோந்து பணிகளை மீண்டும் தொடங்குவது மற்றும் தத்தமது படைகளை தங்கள் எல்லைக்குள் மீண்டும் பின்வாங்க செய்வது உள்ளிட்டவை குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் 2025-ல் செயல்படுத்தப்பட்டன.

    அதேநேரம் இந்த ஆண்டில் ஆகஸ்ட்டில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.

    சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அங்கு நடந்த சந்திப்பில் ஓரளவு உறுதியான சில முடிவுகள் எட்டப்பட்டன என்றே சொல்லலாம். 2018-க்குப் பிறகு பிரதமர் இந்த ஆண்டுதான் மீண்டும் சீனா சென்றிருந்தார்.

    இந்த பேச்சுவார்த்தையின் நேரடி விளைவாக மோதல் மற்றும் கொரோனாவால் 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியா- சீனா நேரடி விமான சேவை கடந்த அக்டோபரில் மீண்டும் தொடங்கப்பட்டது. அக்டோபர் 26 அன்று இண்டிகோ நிறுவனம் கொல்கத்தா மற்றும் குவாங்சூ இடையே தனது சேவையைத் தொடங்கியது.

    மேலும் லிபுலேக் மற்றும் நாது லா போன்ற முக்கியமான கணவாய்கள் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

    இந்தியா சீனா நெருங்குவதற்கு முக்கிய காரணம், அமெரிக்க அதிபர் இந்திய பொருட்கள் மீது விதித்த 50 சதவீத வரியே ஆகும்.

    டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் வரிக் கட்டுப்பாடுகள், ஆசியாவின் இரு பெரும் சக்திகளான இந்தியாவையும் சீனாவையும் தங்களுக்குள் வர்த்தகத்தை புதுப்பித்துக்கொள்ள செய்தது.

    இந்த சந்திப்புகள் மூலம் இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் முழுமையான நண்பர்களாக மாறவில்லை என்றாலும், பொருளாதாரத் தேவைகளுக்காகவும், அமெரிக்காவுக்கு எதிரான பிராந்திய ஒற்றுமைக்காகவும் முயற்சியாக அமைந்தது.

    ஆனால் இதுதவிர பெரிய அளவிலான முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக 2024 இல் முடிவெடுக்கப்பட்டபடி தத்தமது படைகளை விலக்கிக் கொண்டாலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இன்னும் சில இடங்களில் பதற்றம் முழுமையாகத் தணியவில்லை.

    எல்லைப் பிரச்சனையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. லடாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாங்காங் ஏரியில் தங்கள் உள்ள பகுதியில் புதிய கட்டமைப்புகளை சீனா உருவாக்கி வருவதும் சாட்டிலைட் ஆதாரம் மூலம் தெரியவந்துள்ளது.

    எல்லையில் வான் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கும் சீனா:

    திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை சீனா கட்டி வருவது கடந்த அக்டோபரில் வெளியான செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்தது.

    2020இல் திபெத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி 20 இந்திய வீரர்களை கொன்ற இடத்தில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் இந்த சீன வான் பாதுகாப்பு வளாக கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

    அருணாச்சல பிரதேச பெண்ணின் கசப்பான அனுபவம்:

    அதேநேரம் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை தங்களுடையது என்றும் சீனா வெளிப்படையாக தெரிவித்தும், வரைபடம் வெளியிட்டும், இந்திய பகுதிகளுக்கு சீன பெயர்களை சூட்டியும் வருகிறது. 2025 மே மாதம், சுமார் 27 இடங்களுக்குச் சீனா புதிய பெயர்களை அறிவித்ததை இந்தியா வன்மையாகக் கண்டித்தது. "பெயர்களை மாற்றுவதால் உண்மை மாறிவிடாது, அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி" என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது.

    ஆனால் இதன் உச்சமாக கடந்த மாதம் லண்டனில் இருந்து ஜப்பான் செல்ல இணைப்பு விமானம் ஏற சீனாவின் ஷாங்காய் விமான நிலயத்தில் காத்திருந்த இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை சீன அதிகாரிகள் 18 மணிநேரம் தடுத்து வைத்தனர். அருணாசல பிரதேசம் சீனாவின் பகுதி என்பதால் அப்பெண்ணின் பாஸ்போர்ட் செல்லாதாம்.. இதில் சீன பாஸ்போர்ட்க்கு அப்ளை பண்ணுங்க என கூறி அப்பெண்ணை கிண்டல் வேறு செய்துள்ளனர் சீன அதிகாரிகள்.

    அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட அப்பெண், சீனாவில் உள்ள இந்திய தூதரக தலையீட்டின் பின் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதோடு நிற்கவில்லை சீனா.

    அருணாச்சலப் பிரதேசம் சீனாவிற்கு சொந்தமானது என சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேட்டி வேறு கொடுத்து இந்த செயலுக்கு விளக்கம் அளித்த கொடுமை நிகழ்ந்தது.

    இந்தியா சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இனியேனும் அருணாச்சல பிரதேச மக்களுக்கு இதுபோல ஏதும் சங்கடம் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் மோடிக்கு வேறு கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்.

    எல்லையில் நிலவும் இந்த இழுபறி நிலை, இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் ஆழமான நம்பிக்கை ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது.

    சரி, பொருளாதார உறவு எப்படி?

    இந்த ஆண்டில் இந்தியா - சீனா இடையிலான வர்த்தகம் சுமார் 127.71 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கொஞ்சம் பொறுங்கள்.. இதில் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவால் உள்ளது.

    சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 114 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், ஏற்றுமதி வெறும் 14.25 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. அதாவது, வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 99.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

    சீனாவிடமிருந்து மின்னணுப் பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களை இந்தியா அதிகம் நம்பியிருப்பது இந்தத் தரவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    ஒரு பக்கம் பிரதமர் மோடியிடம் ஜி ஜிங் பின் நட்பு முகம் காட்டும் வேலையில் மறுபுறம் சீனா தங்கள் நலன்களை முன்னிறுத்தி அதன் வேலையை தொடர்ந்து வருகிறது.

    எனவே மூலோபாய கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, உலகளாவிய தெற்கு போன்ற அலங்கார சொற்களுக்கு அப்பால் பார்த்தால், 2025-ல் இந்தியா-சீனா உறவு சந்திப்புகளில் இணக்கமாக தோன்றினாலும் செயல்கள் அதற்கு நேர்மாறாகவே இருந்து வருகிறது. 

    • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
    • லடாக்கில் உள்ள தர்புக்-ஷியோக்-தௌலத் பேக் ஓல்டி சாலையில் உள்ள KM-120 போஸ்டுக்கு அருகில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.

    ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பின் இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.

    இந்நிலையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஒரு போர் நினைவுச்சின்னத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

    இது உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள போர் நினைவுச்சின்னம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

    உலகின் மிகக் கடினமான பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை, குறைந்த ஆக்ஸிஜன் அளவு கொண்ட இயற்கை சூழலில் அமைந்துள்ள இராணுவப் மண்டலங்களில் ஒன்றான லடாக்கில் உள்ள தர்புக்-ஷியோக்-தௌலத் பேக் ஓல்டி சாலையில் உள்ள KM-120 போஸ்டுக்கு அருகில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.

    தியாகம் மற்றும் வீரத்தை குறிக்கும் வகையில் சிவப்பு மற்றும் வெள்ளை கிரானைட்டால் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம்  திரிசூலம் வடிவத்தில் உள்ளது.

    நினைவுச்சின்னத்தைச் சுற்றி, கால்வான் பள்ளத்தாக்கின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களைக் குறிக்கும் 20 வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

    இந்த போர் நினைவு வளாகத்தில் கல்வான் மோதல், லடாக்கின் இராணுவ வரலாறு அகியவற்றை காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகம் மற்றும் டிஜிட்டல் கேலரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. 

    • சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் நடந்த ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.

    ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பின் இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.

    இந்நிலையில் 5 வருடங்களுக்கு முன் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்களை உயிருடன் உருகச் செய்யும் மிகவும் ஆபத்தான மின்காந்த ஆயுதத்தை சீனா பயன்படுத்தியதாக அமெரிக்காவின் ஆளும் குடியரசுக் கட்சி செனட்டர் பில் ஹாகெர்டி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    டென்னசி மாகாண செனட்டர் பில் ஹாகெர்டி பேசுகையில், "சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நீண்ட காலமாக மனக்கசப்புகளும் அவநம்பிக்கையும் உள்ளன.

    சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவும் இந்தியாவும் ஒரு சர்ச்சைக்குரிய எல்லையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன, அப்போது சீனா இந்திய வீரர்களை உருக்க ஒரு மின்காந்த ஆயுதத்தைப் பயன்படுத்தியது" என்று தெரிவித்தார்.

    பெயரை குறிப்பிடவில்லை எனினும், இது 2020 இல் நடந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அவர் மறைமுகமாகக் கூறினார். 

    • அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர்.
    • 'மறுத்தல், திசைதிருப்புதல், பொய் கூறுதல், நியாயப்படுத்துதல்' என்ற கொள்கையை மோடி அரசு பின்பற்றி வருகிறது.

    "எல்லையில் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டது. அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகி விட்டனர்" என்று 2022 பாரத் ஜோடோ நடைப்பயணத்தின் போது ராகுல் காந்தி பேசியிருந்தார்.

    இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், "ஒரு உண்மையான இந்தியர் எல்லை விவகாரம் பற்றி இவ்வாறு ராணுவத்தை அவதூறு ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட மாட்டார்" என்று தெரிவித்தது.

    இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்,  ஜூன் 15, 2020இல் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களின் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக மோடி அரசு உண்மையை மறைத்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

    அவர் வெளியிட்ட பதிவில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஒவ்வொரு தேசபக்த இந்தியரும் பல கேள்விகளை எழுப்பியுள்ள போதிலும், 'மறுத்தல், திசைதிருப்புதல், பொய் கூறுதல், நியாயப்படுத்துதல்' என்ற கொள்கையை மோடி அரசு பின்பற்றி வருகிறது.

    2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் நாட்டிற்காக வீரதீரமாகப் போராடி தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் பின்னர் பேசிய பிரதமர், சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை என்று கூறினார்.

    பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க மோடி அரசு எந்த சூழ்நிலையையும் உருவாக்கும். ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு சீனா வெளிப்படையாக ஆதரவு அளித்த போதிலும் மோடியிடமிருந்து எந்த பதிலும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 19-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி என காங்கிரஸ் விமர்சனம்
    • சீனா இந்திய எல்லையை தாண்டவில்லை என்றால், பேச்சுவார்த்தை ஏன்?

    இந்தியா- சீனா இடையில் எல்லைக் கட்டுப்பாடு கோடு (LAC) தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது இந்திய ராணுவ வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர். இதனால் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. பின்னர், பேச்சுவார்த்தைக்குப்பின் பதற்றம் தணிந்தது.

    இந்த சம்பவத்தின்போது சீன ராணுவம் இந்தியாவில் பல மைல் தூரம் நுழைந்து ஆக்கிரமித்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இந்தியாவின் நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது என மோடி அரசு தெரிவித்தது.

    எல்லைக் கட்டுப்பாடு கோடு தொடர்பாக இந்தியா- சீனா இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. என்றாலும், இந்தியப் பகுதியில் இருந்து சீனா வெளியேறவில்லை.

    இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக இந்தியா- சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 19-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இந்திய எல்லை கட்டுப்பாடு கோட்டை தவிர்த்து மற்ற பிரச்சினைகளை தீர்க்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஆனால், சீனா ஆக்கிரமிப்பு செய்த பகுதியில் இருந்து வெளியேறுவது குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை. இருதரப்பு பேச்சுவார்தை நேர்மறையாக, ஆக்கப்பூர்வமாக, ஆழமானதாக அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 19-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி. பாரத மாதாவை பாதுகாக்க சொல்லாட்சியை தாண்டி எப்போது முன்னோக்கி பயணிப்பீர்கள் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சுர்ஜிவாலா கூறுகையில் ''கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில இருந்து தற்போது மூன்று வருடங்கள், மூன்று மாதங்கள் ஆகியும் முந்தைய நிலை திரும்பவில்லை. டெப்சாங் பகுதியில் இந்தியப் படைகள் 65 பாதுகாப்பு பாயிண்ட்களில் 26-ல் பாதுகாப்பை தொடர் முடியாது.

    சீனா, இந்தியாவில் உள்ள ஒய் ஜங்சன் என அழைக்கப்படும் பாட்டல்நெக்கில் இந்திய ராணுவத்தை தடுக்கிறது. சீன ராணுவம் வெட்கமின்றி ஆக்கிரமித்த நமது பகுதியில் இருந்து, எப்போது வெளியேற்றப்படுவார்கள்?

    2020 ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலை எப்போது உருவாகும். அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது, இந்திய எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என்று மோடி கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி தெரிவித்தாரே, அதே நிலையில் இருக்கிறாரா? அல்லது நாட்டை தவறாக வழி நடத்தினாரா?

    சீனா இந்திய எல்லையை ஆக்கிரமிக்கவில்லை என்றால், ஏன் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள். பாரத மாதாவை பாதுகாக்க சொல்லாட்சியை தாண்டி எப்போது முன்னோக்கி பயணிப்பீர்கள். எல்லையில் எப்போது முந்தைய நிலை திரும்பும்.

    இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

    ×