என் மலர்
நீங்கள் தேடியது "LAC"
- சீனாவின் நீண்ட தூர HQ-9 தரை-வான் ஏவுகணைகளுக்கு ஏற்றவையாக இருக்கும்.
- இந்தியாவின் நியோமா போர் விமான தளத்திற்கு எதிரே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாடு கொடு அமைந்துள்ள திபெத்தில் தங்கள் பக்கம் உள்ள பகுதியில் சீனா கட்டுமானங்களை செய்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.
இந்நிலையில் திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை சீனா கட்டி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
2020இல் திபெத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி 20 இந்திய வீரர்களை கொன்ற இடத்தில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் இந்த சீன வான் பாதுகாப்பு வளாக கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.
இந்த வளாகத்தில் மறைவான ஏவுகணை ஏவுதளங்கள் இடம்பெற்றுள்ளது. இங்கு ஏவுகணைகளை ஏற்றிச் சென்று சுடும் வாகனங்களை பாதுகாத்து மறைத்துவைக்க கூரைகள் பொருத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. கூரைகள் திறக்கப்பட்டவுடன் ஏவுகணைகளைச் சுட அனுமதிக்கிறது. இதன்பின் எதிர்தாக்குதலில் இருந்து தப்பிக்க கூரைகள் மீண்டும் மூடப்படும்.

இந்த பாதுகாப்பு அமைப்பு, சீனாவின் நீண்ட தூர HQ-9 தரை-வான் ஏவுகணைகளுக்கு ஏற்றவையாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த வடிவமைப்பைக் கொண்ட ஒரு மாதிரி வளாகம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள கார் கவுண்டியில், இந்தியாவின் நியோமா போர் விமான தளத்திற்கு எதிரே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவ உள்கட்டமைப்பைத் தொடர்ந்து பலப்படுத்தி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- 19-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி என காங்கிரஸ் விமர்சனம்
- சீனா இந்திய எல்லையை தாண்டவில்லை என்றால், பேச்சுவார்த்தை ஏன்?
இந்தியா- சீனா இடையில் எல்லைக் கட்டுப்பாடு கோடு (LAC) தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது இந்திய ராணுவ வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர். இதனால் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. பின்னர், பேச்சுவார்த்தைக்குப்பின் பதற்றம் தணிந்தது.
இந்த சம்பவத்தின்போது சீன ராணுவம் இந்தியாவில் பல மைல் தூரம் நுழைந்து ஆக்கிரமித்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இந்தியாவின் நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது என மோடி அரசு தெரிவித்தது.
எல்லைக் கட்டுப்பாடு கோடு தொடர்பாக இந்தியா- சீனா இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. என்றாலும், இந்தியப் பகுதியில் இருந்து சீனா வெளியேறவில்லை.
இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக இந்தியா- சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 19-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இந்திய எல்லை கட்டுப்பாடு கோட்டை தவிர்த்து மற்ற பிரச்சினைகளை தீர்க்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஆனால், சீனா ஆக்கிரமிப்பு செய்த பகுதியில் இருந்து வெளியேறுவது குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை. இருதரப்பு பேச்சுவார்தை நேர்மறையாக, ஆக்கப்பூர்வமாக, ஆழமானதாக அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 19-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி. பாரத மாதாவை பாதுகாக்க சொல்லாட்சியை தாண்டி எப்போது முன்னோக்கி பயணிப்பீர்கள் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சுர்ஜிவாலா கூறுகையில் ''கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில இருந்து தற்போது மூன்று வருடங்கள், மூன்று மாதங்கள் ஆகியும் முந்தைய நிலை திரும்பவில்லை. டெப்சாங் பகுதியில் இந்தியப் படைகள் 65 பாதுகாப்பு பாயிண்ட்களில் 26-ல் பாதுகாப்பை தொடர் முடியாது.
சீனா, இந்தியாவில் உள்ள ஒய் ஜங்சன் என அழைக்கப்படும் பாட்டல்நெக்கில் இந்திய ராணுவத்தை தடுக்கிறது. சீன ராணுவம் வெட்கமின்றி ஆக்கிரமித்த நமது பகுதியில் இருந்து, எப்போது வெளியேற்றப்படுவார்கள்?
2020 ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலை எப்போது உருவாகும். அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது, இந்திய எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என்று மோடி கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி தெரிவித்தாரே, அதே நிலையில் இருக்கிறாரா? அல்லது நாட்டை தவறாக வழி நடத்தினாரா?
சீனா இந்திய எல்லையை ஆக்கிரமிக்கவில்லை என்றால், ஏன் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள். பாரத மாதாவை பாதுகாக்க சொல்லாட்சியை தாண்டி எப்போது முன்னோக்கி பயணிப்பீர்கள். எல்லையில் எப்போது முந்தைய நிலை திரும்பும்.
இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.






