என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India China"

    • சீனாவின் நீண்ட தூர HQ-9 தரை-வான் ஏவுகணைகளுக்கு ஏற்றவையாக இருக்கும்.
    • இந்தியாவின் நியோமா போர் விமான தளத்திற்கு எதிரே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாடு கொடு அமைந்துள்ள திபெத்தில் தங்கள் பக்கம் உள்ள பகுதியில் சீனா கட்டுமானங்களை செய்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.

    இந்நிலையில் திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை சீனா கட்டி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

    2020இல் திபெத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி 20 இந்திய வீரர்களை கொன்ற இடத்தில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் இந்த சீன வான் பாதுகாப்பு வளாக கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

    இந்த வளாகத்தில் மறைவான ஏவுகணை ஏவுதளங்கள் இடம்பெற்றுள்ளது. இங்கு ஏவுகணைகளை ஏற்றிச் சென்று சுடும் வாகனங்களை பாதுகாத்து மறைத்துவைக்க கூரைகள் பொருத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. கூரைகள் திறக்கப்பட்டவுடன் ஏவுகணைகளைச் சுட அனுமதிக்கிறது. இதன்பின் எதிர்தாக்குதலில் இருந்து தப்பிக்க கூரைகள் மீண்டும் மூடப்படும்.

    இந்த பாதுகாப்பு அமைப்பு, சீனாவின் நீண்ட தூர HQ-9 தரை-வான் ஏவுகணைகளுக்கு ஏற்றவையாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

    இந்த வடிவமைப்பைக் கொண்ட ஒரு மாதிரி வளாகம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள கார் கவுண்டியில், இந்தியாவின் நியோமா போர் விமான தளத்திற்கு எதிரே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவ உள்கட்டமைப்பைத் தொடர்ந்து பலப்படுத்தி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

    • டெல்லியில் இருந்து இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:50 மணிக்கு குவாங்சோ சென்றடையும்.
    • ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும்.

    கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.

    எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

    சமீபத்தில் சீனாவில் நடந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து சீனாவுக்கும் இடையே நேரடி விமானங்களை நவம்பர் 10 முதல் இயக்க உள்ளதாக இந்திய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo) அறிவித்துள்ளது.

    அதன் அறிவிப்பின்படி, புதிய நேரடி தினசரி விமானங்கள் டெல்லி மற்றும் சீனாவின் குவாங்சோ நகருக்கு இடையே நவம்பர் 10 முதல் தொடங்கவுள்ளன.

    ஏற்கனவே அக்டோபர் 26 முதல் கொல்கத்தா மற்றும் குவாங்சோ இடையே தினசரி விமானப் சேவையை தொடங்குவதாக இண்டிகோ அறிவித்திருந்த நிலையில் தற்போது டெல்லியில் இருந்தும் நேரடி விமான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி தினசரி, இண்டிகோ விமானம், டெல்லியில் இருந்து இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:50 மணிக்கு குவாங்சோ சென்றடையும்.

    பின்னர் குவாங்சோவில் இருந்து அதிகாலை 5:50 மணிக்கு புறப்பட்டு காலை 10:10 மணிக்கு டெல்லி வந்துசேரும்.

    அதேபோல் டெல்லி மற்றும் வியட்நாமின் ஹனோய் நகருக்கு இடையே புதிய நேரடி தினசரி விமானச் சேவை டிசம்பர் 20 முதல் தொடங்கவுள்ளதாகவும் இண்டிகோ இன்று அறிவித்துள்ளது.

    இந்த இரண்டு வழித்தடங்களிலும் இண்டிகோவின் ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும்.

    "உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா இடையேயான சேவைகள் மீண்டும் தொடங்குவது, கலாச்சார பரிமாற்றம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு அபரிமிதமான ஆற்றலை வழங்குகிறது" என்று இண்டிகோவின் விற்பனைப் பிரிவுத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு 50% கூடுதல் வரி விதித்த பிறகு இந்தியா-சீனா உறவு வலுப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. 

    • கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர்.
    • பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கை நேரில் சென்று சந்தித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.

    எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட  கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

     இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

    சமீபத்தில் சீனாவில் நடந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு  உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி  சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை  நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சேவை அக்டோபர் 26 முதல் தொடங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

     ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு 50% கூடுதல் வரி விதித்த பிறகு இந்தியா-சீனா உறவு வலுப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. 

    • சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் நடந்த ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.

    ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பின் இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.

    இந்நிலையில் 5 வருடங்களுக்கு முன் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்களை உயிருடன் உருகச் செய்யும் மிகவும் ஆபத்தான மின்காந்த ஆயுதத்தை சீனா பயன்படுத்தியதாக அமெரிக்காவின் ஆளும் குடியரசுக் கட்சி செனட்டர் பில் ஹாகெர்டி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    டென்னசி மாகாண செனட்டர் பில் ஹாகெர்டி பேசுகையில், "சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நீண்ட காலமாக மனக்கசப்புகளும் அவநம்பிக்கையும் உள்ளன.

    சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவும் இந்தியாவும் ஒரு சர்ச்சைக்குரிய எல்லையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன, அப்போது சீனா இந்திய வீரர்களை உருக்க ஒரு மின்காந்த ஆயுதத்தைப் பயன்படுத்தியது" என்று தெரிவித்தார்.

    பெயரை குறிப்பிடவில்லை எனினும், இது 2020 இல் நடந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அவர் மறைமுகமாகக் கூறினார். 

    • சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் சென்றுள்ளார்.
    • டிராகனும் யானையும் கைகோர்ப்பது காலத்தின் தேவை என்று ஜி ஜின்பிங் கூறினார்.

    அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார்.

    சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சீனா சென்றார்.

    இதனிடையே இன்று நடந்த பிரதிநிதிகள் மட்ட இரு தரப்பு சந்திப்பு கூட்டத்தின்போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

    சீன அதிபர் மோடிக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இந்தியாவின் தலைமைக்கு ஆதரவையும் தெரிவித்தார்.

    பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் சீனாவுடன் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் கூட்டத்தில் தெரிவித்தார்.

    இதற்கிடையில், டிராகனும் யானையும் கைகோர்ப்பது காலத்தின் தேவை என்று ஜி ஜின்பிங் கூறினார்.

    இந்த ஆண்டு சீன-இந்திய ராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்றும் ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.  

    • பிரதமர் மோடி இன்று ஜி ஜின்பிங்குடனான சந்திப்பை பின்வரும் சூழலில் மதிப்பிட வேண்டும்.
    • யார்லுங் சாங்போவில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீர் மின் திட்டத்தை அறிவித்துள்ளது.

    7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நேற்று பிரதமர் மோடி சீனா சென்றார். ஷாங்காய் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த அவர் இரு நாட்டு உறவுகளை மீட்டெடுப்பது குறித்து அதிபர் ஜி ஜிங் பிங் உடன் விவாதித்தார்.

    இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்புக்கு மத்தியில் இந்தியா-சீனாவின் நெருக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்நிலையில் இந்த இணக்கம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி இன்று ஜி ஜின்பிங்குடனான சந்திப்பை பின்வரும் சூழலில் மதிப்பிட வேண்டும்.

    ஜூன் 2020 இல், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பு தாக்குதல் நமது துணிச்சலான ஜவான்களில் 20 பேரின் உயிரை பறித்தது.

    இருப்பினும், சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கு பதிலாக, ஜூன் 19, 2020 அன்று, பிரதமர் மோடி சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். லடாக்கில் சீனாவுடனான எல்லையில் தற்போதைய நிலையை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என ராணுவத் தலைவர் கோரினார்.

    ஆனால் அதை மீட்டெடுப்பதற்கு பதிலாக சீனா தனது ஆக்கிரமிப்பை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு எதுவாக மோடி அதை சட்டபூர்வமாக்கினார்.

    ஜூலை 4, 2025 அன்று, ராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுடனான சீனாவின் கூட்டணி குறித்து வலுவாகவும் வெளிப்படையாகவும் பேசினார்.

    இதற்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் அந்த கூட்டணியை அமைதியாக ஏற்றுக்கொண்டு, இப்போது அரசு முறை பயணங்கள் மூலம் சீனாவின் நன்மைக்கு பணியாற்றி வருகிறது.

    யார்லுங் சாங்போவில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீர் மின் திட்டத்தை அறிவித்துள்ளது. இது நமது வடகிழக்கு பகுதிக்கு மிகவும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்த விஷயத்தில் மோடி அரசு ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    சீனாவிலிருந்து கட்டுப்பாடற்ற வகையில் குப்பை போல இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், நமது சிறுகுறு தொழில்களை (MSME-களை) தொடர்ந்து அழித்து வருகிறது.

    மற்ற நாடுகளைப் போலல்லாமல், சீன இறக்குமதியாளர்களுக்கு கட்டுப்பாடற்ற சுந்திரத்தை நாம் வழங்கி வருகிறோம்,

    சீன ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்கம், நமது அரசாங்கத்தின் முதுகெலும்பற்ற தன்மை ஆகியவற்றால் நமது 'புதிய இயல்பு' வரையறுக்கப்படுகிறதா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

    • அமெரிக்கா அறுவடை செய்து வருவதாகவும், இப்போது வரிகளை மிரட்டும் கருவியாக பயன்படுத்துவதாகவும்" விமர்சித்தார்.
    • இந்தியா-சீனா சந்தைகள் ஒன்றிணைந்தால், அது பெரும் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும்.

    ரஷிய எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளித்து உதவுவதாக அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரிவிதித்தது. இது வரும் 27 ஆம் தேதி அமலுக்கு வரும்.

    இந்நிலையில் இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சுதந்திர வர்த்தகத்தின் முழுப் பலன்களையும் அமெரிக்கா அறுவடை செய்து வருவதாகவும், இப்போது வரிகளை மிரட்டும் கருவியாக பயன்படுத்துவதாகவும்" விமர்சித்தார்.

    மேலும், "மௌனம், அச்சுறுத்துபவர்களை மேலும் வலிமையாக்குகிறது. சீனா எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கும். சீன சந்தையில் அதிகமான இந்திய பொருட்கள் வரவேற்கப்படுகின்றன.

    தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் மற்றும் உயிரி மருத்துவப் பொருட்களின் உற்பத்தியில் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

    மின்னணு உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானத்தில் சீனா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

    இந்தியா-சீனா சந்தைகள் ஒன்றிணைந்தால், அது பெரும் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். சீனாவில் மேலும் பல இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    சீன நிறுவனங்களுக்கு இந்தியாவும் இதேபோன்ற சலுகையை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று சீனத் தூதர் கூறினார். 

    • இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவைகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
    • சீன குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை இந்தியா மீண்டும் தொடங்கியது.

    அமெரிக்கா இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்ததில் இருந்து சர்வதேச அரசியலில் காட்சிகள் மாறி வருகின்றன.

    ஜூன் 2020 இல் கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பகையை மறந்து இந்தியா சீனாவுக்கு நட்புக் கரம் நீட்டியுள்ளது.

    வரும் ஆகஸ்ட் 31 அன்று சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டுக்கு பிரதமர் மோடி பயணப்படுகிறார். இதற்கிடையே நிறுத்திவைக்கப்பட்ட இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவைகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சூழலில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அடுத்த வாரம் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக, வாங் யி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து முக்கியமாக எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிப்பார். பின்னர், இருதரப்பு பிரச்சினைகள் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனும் பேச்சுவார்த்தை நடத்துவார்.

    இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்புப் பிரதிநிதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    முன்னதாக அஜித் தோவல் டிசம்பரில் சீனாவுக்குச் சென்று வாங் யியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு, சீன குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை இந்தியா மீண்டும் தொடங்கியது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுடன் வெடித்த மோதலில் சீனா தங்களுக்கு உதவியதாக பாகிஸ்தான் தலைவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
    • 2019 க்குப் பிறகு சீனாவிற்கு மோடி மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.

    அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியாவும் சீனாவும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் குறுகிய காலத்தில் சீனாவிற்கு விமானங்களை இயக்க தயாராக இருக்குமாறு இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

    முன்னதாக கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான இணைப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    ஜூன் 2020 இல் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன மற்றும் இந்திய  ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பிறகு இந்தியா-சீனா உறவுகள் விரிசல் அடைந்தன.

    இந்நிலையில் இந்தியா மீதான டிரம்ப் உடைய 50 சதவீத வரிவிதிப்பு இந்தியாவையும் சீனாவையும் ஒரே கோட்டில் நிறுத்தியுள்ளன.

    இந்த மாத இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது 2019 க்குப் பிறகு சீனாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.

    • SCO உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வரும் இந்தியப் பிரதமரை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது.
    • சீண்டிப் பார்ப்பவர்களுக்கு 1 அங்குலம் இடம் கொடுத்தால் அவர்கள் 1 மைல் தூரம் செல்வார்கள்

    ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இந்நிலையில் அவரை வரவேற்று சீனா அதிகாரபூர்வ அழைப்பு விடுத்துள்ளது.

    2020 ஆம் ஆண்டு இந்திய சீன வீரர்கள் மோதிக்கொண்ட கல்வான் மோதலுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

    SCO உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வரும் இந்தியப் பிரதமரை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது.

    சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் பேசுகையில், "இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனா தியான்ஜினில் SCO உச்சிமாநாட்டை நடத்தும். SCO தியான்ஜின் உச்சிமாநாட்டிற்காக சீனா, பிரதமர் மோடியை வரவேற்கிறது.

    அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சியுடன், தியான்ஜின் உச்சிமாநாடு ஒற்றுமை, நட்பு மற்றும் பலனளிக்கும் முடிவுகளின் சங்கமமாக இருக்கும்.

    SCO அதிக ஒற்றுமை, ஒருங்கிணைப்பு மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் உயர்தர வளர்ச்சியின் புதிய கட்டத்தில் நுழையும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக, ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தை சீனா விமர்சித்தது. "நம்மை சீண்டிப் பார்ப்பவர்களுக்கு 1 அங்குலம் இடம் கொடுத்தால் அவர்கள் 1 மைல் தூரம் செல்வார்கள்" என இந்தியாவுக்கான சீன தூதர் Xu Feihong தெரிவித்திருந்தார். 

    • ரஷியா, சீனா மற்றும் பிரேசில் நிதி அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை.
    • இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதம்.

    பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசில் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார்.

    இன்று மற்றும் நாளை பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார்.

    மேலும், இந்த மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

    அப்போது, மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷியா, சீனா மற்றும் பிரேசில் நிதி அமைச்சர்களுடனும், இந்தோனேசியாவின் துணை நிதி அமைச்சருடனும் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ரஷிய நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ் உடனான சந்திப்பின்போது, "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ரஷிய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி" என தெரிவித்தார். அப்போது, இந்தியா- ரஷியா இடையிலான நீண்டகால கூட்டாண்மை குறித்து விவாதித்தனர்.

    இதேபோல் சீன நிதி அமைச்சர் லான் போனுடன் இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர் விவாதித்தார்.

    மேலும், இந்தோனேசியாவின் துணை நிதி அமைச்சர் தாமஸ் ஜிவாண்டோனோ மற்றும் பிரேசில் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் ஆகியோரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

    • அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டுள்ளது
    • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் பெயரிட சீனா தொடர்ந்து அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக உள்ளது, எப்போதும் இருக்கும். கற்பனையான பெயர் சூட்டல்களால் இந்தியாவின் பகுதியை ஒரு போதும் சீனா சொந்தம் கொண்டாட முடியாது" என்று தெரிவித்தது.

    மேலும், சீன அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகையின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

    ×