search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India China"

    • எல்லை நிலைமை குறித்து அவர், சீனப்படையினருடன் கலந்துரையாடினார்.
    • எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

    பீஜிங் :

    இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவத்தினர் கொடிய ஆயுதங்களுடன் வந்து, இந்தியப் படைவீரர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்தியப் படை வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தது நாடெங்கும் பெரும்கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது.

    இந்த மோதலின்போது சீனப்படையினர் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த மோதலைத் தொடர்ந்து, லடாக் எல்லையில் இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்ததால் பதற்றம் தொடர்ந்தது. பதற்றத்தைத் தணிப்பதற்கு இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதுவரை 17 சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. இதன் பலனாக மோதல் புள்ளிகளில் சிலவற்றில் இருந்து இரு தரப்பும் படைகளை விலக்கின. ஆனாலும் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. சீனப்படையினர் அங்கு அத்துமீறி கட்டமைப்புகளை ஏற்படுத்த முயற்சிப்பதும், அவர்களை இந்தியப்படையினர் துரத்தியடிப்பதும் தொடர்கதையாக நீளுகிறது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், சீன அதிபர் ஜின்பிங், பீஜிங்கில் உள்ள சீன ராணுவ தலைமையகத்தில் இருந்தவாறு, கிழக்கு லடாக்கில் இந்திய, சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள தனது நாட்டுப்படையினரின் போர் தயார் நிலையை நேற்று காணொலிக்காட்சி வழியாக திடீரென ஆய்வு செய்தார். அப்போது எல்லை நிலைமை குறித்து அவர், சீனப்படையினருடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பகுதி தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதைச் சுட்டிக்காட்டி, இது சீன ராணுவத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து சீனப்படையினரிடம் விசாரித்தார். இதற்கு சீனப் படைவீரர் ஒருவர் பதில் அளிக்கையில், "நாங்கள் தற்போது 24 மணி நேரமும் எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என தெரிவித்தார்.

    அவர்களது அன்றாட பணி நிலைமை பற்றி ஜின்பிங் கேட்டதோடு, விருந்தோம்பல் தன்மையற்ற நிலப்பரப்பில் சாப்பாட்டுக்கு புதிய காய்கறிகள் கிடைக்கின்றனவா என பரிவுடன் விசாரித்து அறிந்தார்.

    இதையொட்டி சீன அரசு தரப்பு ஊடகம் கூறுகையில், "எல்லையில் உள்ள படைவீரர்களிடம் அவர்கள் மேற்கொண்டு வருகிற ரோந்துப்பணிகள், நிர்வாகப்பணிகள் பற்றி அதிபர் ஜின்பிங் கேட்டறிந்தார். சீனப்படை வீரர்கள் எல்லைப் பாதுகாப்பின் மாதிரிகள் என பாராட்டியதுடன், அவர்கள் தொடர்ந்து தங்களது முயற்சிகளில் ஈடுபடவும், புதிய பங்களிப்புகளை வழங்கவும் ஊக்கம் அளித்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவின் எல்லைப்பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்து இருப்பது எதிகாலத்தில் மோதல் நடவடிக்கைக்கு அடித்தளத்தை உருவாக்கும்.
    • ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை சீனா மறுப்பதன் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைத்து வருகிறது.

    புதுடெல்லி:

    இந்திய எல்லைபகுதியான லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக அமெரிக்க ரானுவ அதிகாரி தெரிவித்து இருந்தார். இதை நிரூபிக்கும் வகையில் கிழக்கு லடாக் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    தனது படைகளின் எண்ணிக்கையையும் சீனா அதிகரித்து வருகிறது. பதட்டத்தை தவிர்க்க அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளதாக இந்திய ரானுவ தளபதி நரவானே தெரிவித்து இருந்தார் ஆனாலும் சீனா தனது அத்துமீறலை தொடர்ந்து செய்து வருகிறது.

    இந்தநிலையில் ராகுல் காந்தி எம்.பி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் எல்லைப்பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்து இருப்பது எதிகாலத்தில் மோதல் நடவடிக்கைக்கு அடித்தளத்தை உருவாக்கும்.

    ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை சீனா மறுப்பதன் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். அந்த டுவிட்டர் பதிவில் அவர் அமெரிக்கா அதிகாரி கூறிய கருத்து களையும் சுட்டிகாட்டி உள்ளார்.

    சீனா உருவாக்கியுள்ள கிராமம் அதன் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சீனா, இந்தியாவுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சால பிரதேச எல்லையில் சீனா தனது ராணுவத்தை நிறுத்தி இருக்கிறது.

    இதில் அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. இதையடுத்து அங்கு எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராணுவம் முகாமிட்டு உள்ளனர். இதற்கு முன்பு சீன வீரர்கள் அத்துமீறி அருணாச்சல பிரதேச எல்லையில் நுழைய முயன்றதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.

    தொடர்ந்து சீன வீரர்களின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே சீனா அருணாச்சல பிரதேச எல்லையில் கட்டுமானங்களை செய்து வருகிறது.

    கிழக்கு லடாக்கில் இருந்து அருணாச்சல பிரதேசம் வரை 3,458 கி.மீ. நீளத்துக்கு எல்லை கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ளது. இது இந்திய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை சீனாவிடம் இருந்து பிரிக்கும் எல்லை நிர்ணயமாகும்.

    கடந்த ஆண்டு எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அருணாச்சல பிரதேச எல்லை அருகே சீனா ஒரு கிராமத்தை உருவாக்கியது. சுபன்சிரி மாவட்டத்தில் சாரி சூ ஆற்றின் கரையில் இந்த கிராமத்தை கட்டமைத்தது. இதில் 100 வீடுகள் அமைந்து உள்ளன. இது செயற்கை கோள் படம் மூலம் தெரிய வந்தது.

    இந்தநிலையில் அருணாச்சல பிரதேச எல்லை அருகே சீனா 2-வது கிராமத்தை உருவாக்கி உள்ளது. இந்த 2-வது கிராமம், முதல் கிராமத்தில் இருந்து 93 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    அருணாச்சல பிரதேச எல்லையில் 2-வது கிராமத்தை அமைத்த சீனா

    ஷியோமி மாவட்டத்தில் உள்ள 2-வது கிராமத்தில் மொத்தம் 60 வீடுகள் அமைந்துள்ளன. 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கை கோள் படத்தில் அப்பகுதியில் வீடுகள் எதுவும் இல்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள செயற்கை கோள் படத்தில் ஏராளமான வீடுகள் இருப்பது தெளிவாக தெரிகிறது. சீனா அமைத்துள்ள 2-வது கிராமம் அருணாச்சல பிரதேச எல்லையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

    இந்த இரண்டு கிராமங்களும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் சீன பகுதியில் இருந்தாலும், இந்தியாவுடன் சர்ச்சைக்குரிய பகுதி அருகே அமைந்துள்ளன.

    இதுகுறித்து இந்திய ராணுவம் தரப்பில் கூறும் போது, “சீனா உருவாக்கியுள்ள கிராமம் அதன் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளது. நமது எல்லைக்குள் எந்த ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை. குறிப்பிட்ட இந்த பகுதி எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு வடக்கே உள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேச எல்லை அருகே சீன அதிபர் ஜின்பிங் முதல்முறையாக வந்து ஆய்வுமேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படியுங்கள்...வேளாண் சட்டங்கள் வாபஸ்- பிரதமரின் அறிவிப்பை வரவேற்ற கெஜ்ரிவால்

    இந்தியாவின் பூடான் எல்லைப்பகுதியில் சீனா ஒரு வருடத்தில் 4 கிராமங்களை நிர்மாணித்து உள்ளது. இது குறித்த செயற்கை கோள் படங்கள் வெளியாகி உள்ளன.
    புதுடெல்லி:

    இந்திய எல்லையில்  சீன ராணுவ முன்னேற்றம்  குறித்து முன்னணி செயற்கைக்கோள் பட நிபுணர் ஒருவர் புதிய செயற்கைக்கோள் படங்களை டுவிட் செய்து உள்ளார்.

    இன்டெல் ஆய்வகத்தின் உலகளாவிய ஆராய்ச்சியாளர்  வெளியிட்டு உள்ள இந்த செயற்கைக்கோள்படம்  புவிசார் அரசியல் புலனாய்வு நிபுணர்களின் ஆழமான பகுப்பாய்வுகளைக் கொண்டுள்ளது.

    அதில் சீனா கடந்த ஆண்டு பூடான் பிரதேசத்தில் 4 கிராமங்களை நிர்மாணித்ததாகக் கூறப்படுகிறது. ஏறக்குறைய 100 சதுர கி.மீ பரப்பளவில் பல புதிய கிராமங்கள் பரவி காணப்படுகின்றன.  இந்த சர்ச்சைக்குரிய நிலம் டோக்லாம் பீடபூமிக்கு அருகில் உள்ளது. 

    அங்கு 2017 ஆம் ஆண்டில் இந்தியாவும் சீனாவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன, அதன் பிறகு இந்தியா மற்றும் சீனா  இடையேயான சர்ச்சை பகுதியில் சாலை கட்டுமான நடவடிக்கைகளை சீனா  மீண்டும் தொடங்க இந்திய பாதுகாப்புகளைத் தவிர்த்தது.

    பூடான் மண்ணில் புதிய கட்டுமானம் இந்தியாவிற்கு கவலையளிப்பதாக உள்ளது. ஏனெனில் இந்தியா வரலாற்று ரீதியாக பூடானுக்கு  அதன் ஆயுதப் படைகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது. 

    பூடான் தனது நில எல்லைகளை மறுபரிசீலனை செய்ய தொடர்ந்து சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. 

    இந்த கிராமங்கள் மே 2020 மற்றும் நவம்பர் 2021 க்கு இடையில் கட்டப்பட்டு உள்ளன.


    இந்தியா-சீனா இடையேயான சுமுக உறவு மேம்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். #DefenceMinister #NirmalaSitharaman
    சென்னை:

    சீன நாட்டு படிப்புகளுக்கான சென்னை மையம், தேசிய கடல்வழி அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் சீனாவின் செயல்பாடு, மாற்றம் மற்றும் வணிகம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது. கருத்தரங்கை மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு முன்பு வரை சீனா பல்வேறு துறைகளில் வெகுவான வளர்ச்சியை எட்டி இருந்தது. இப்போது ராணுவத்தில் புதிய தொழில்நுட்பங்களை சீனா புகுத்தி உள்ளது. விமானப்படை, கடலோர காவல்படை, ராக்கெட் ஏவுதளம் போன்ற பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவந்துள்ளது. இவற்றையெல்லாம் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    பாகிஸ்தான்-சீனா இடையேயான உறவை இந்தியா-சீனாவுடனான உறவுடன் ஒப்பிடக்கூடாது. பிரதமர் மோடி, சீன அதிபரை சந்தித்து பேசி உள்ளார். இதன்மூலம் இந்தியா-சீனா இடையேயான சுமுக உறவு மேம்பட்டு வருகிறது. இதன்மூலம் எதிர்காலத்தில் இன்னும் மேம்பாடு ஏற்படும்.

    சீனாவில் ஏற்பட்டுள்ள தொழில் மேம்பாடு காரணமாக அங்கு மனிதவளம் குறைந்து எந்திரமயம் அதிகமாகி வருகிறது. இந்தியா விவசாயம், தொழில்நுட்பம், மென்பொருள் போன்ற துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது. உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சிக்காக இந்தியாவில் ஆண்டுக்கு பல லட்சம் கோடி செலவிடப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவின் தொழில் வளர்ச்சி குறித்து சிறந்த முறையில் கட்டுரை எழுதிய கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நிர்மலா சீதாராமன் பரிசு வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் கணபதி, சீன நாட்டு படிப்புகளுக்கான சென்னை மையத்தின் நிர்வாகிகள் ராகவன், சூரியநாராயணன், ஆர்.எஸ்.வாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். #DefenceMinister #NirmalaSitharaman
    ×