search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Book release"

    • இந்தியா மற்றும் உலக நாடுகளில் 150-க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலையினை நிறுவி தமிழுக்கு பெருமைச் சேர்த்து வருகிறோம் என்றார்.
    • நூலின் முதல் பிரதியை ரோமா குழும இயக்குநா் ஆர்.வி.எம்.ஏ. ராஜன் பெற்றுக் கொண்டார்.

    சென்னை:

    வி.ஜி.பி. குழுமத் தலைவரும், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரு மான டாக்டர் வி.ஜி சந்தோசத்தின் 87 -வது பிறந்த நாள் விழாவில் திராவி டர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி, டாக்டர் வி.ஜி. சந்தோசம் எழு திய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் நூலினை வெளியிட்டு பேசுகையில், வி.ஜி.சந்தோசம் பிறந்த நாள் விழாவில் அவரை வாழ்த்துவதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து வருகை புரிந்து சிறப்பித்தது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நூலிற்கு பொருத்தமானது. வி.ஜி.சந்தோசம் உலகெங்கிலும் திரு வள்ளுவர் சிலையை நிறுவி, தமிழா்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது என்றார். நூலின் முதல் பிரதியை ரோமா குழும இயக்குநா் ஆர்.வி.எம்.ஏ. ராஜன் பெற்றுக் கொண்டார்.

    மூன்று தமிழறிஞர்களுக்கு வி.ஜி.பி. இலக்கிய விருதினையும், பொற்கிழியையும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கி வாழ்த்தி பேசினார். ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் மல்லை தமிழ்ச் சங்கத் தலைவருமான மல்லை சி.ஏ.சத்யா, செய்யூா் சட்ட மன்ற உறுப்பினா் பனையூர் பாபு இணைந்து ஆதரவற்றோருக்கு தையல் இயந்திரத்தை வழங்கினார்கள். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் அருட்தந்தை ஆரோக்கியராஜ், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் ஏ.எம். விக்கிரம ராஜா, சென்னை வளர்ச்சிக் கழகத் தலைவர் வி.ஆா்.எஸ் சம்பத், பிலிப்பைன்ஸ் கிங்க்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டேவிட் பிள்ளை வாழ்த்திப்பேசி னார்கள். வி.ஜி.சந்தோசம் பிறந்த நாள் கேக் வெட்டி ஏற்புரை ஆற்றுகையில் நாம் அனை வரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் பின்பு தொழில் செய்து தொண்டு செய்ய வேண்டும். தொடர்ந்து வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் சார்பாக, இந்தியா மற்றும் உலக நாடுகளில் 150-க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலையினை நிறுவி தமிழுக்கு பெருமைச் சேர்த்து வருகிறோம் என்றார்.

    இவ்விழாவில் இலங்கை, அமெரிக்கா, தைவான், மலேசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு தமிழறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வரவேற்புரையை வி.ஜி.பி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் வி.ஜி.பி. ரவிதாசும், நன்றியுரையை வி.ஜி.பி. முதன்மை இயக்குநர் வி.ஜி.பி .ராஜா தாசும் வழங்கினர்.

    • நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
    • 200-க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மொழிஞாயிறு தேவநேயப் பாவணாரின் பாவாணரியல் நூல்கள் வெளியீட்டு விழா மதுரை அண்ணாநகர் அருகே உள்ள அவரது மணிமண்ட பத்தில் நடை பெற்றது. உலக தமிழ் கழக தலைவர் நிலவழகன் தலை மை வகித் தார். பொது செயலாளர் இளந்திரையன் வரவேற் றார்.

    நெறியாளர் கதிர் முத்தை யன் கொடியேற்றினார். இணத்தலைவர் தமிழ் வாணன், இணை பொதுச் செயலாளர் இளங்கோவன், துணைத் தலைவர் சக்கர பாணி, தலைமையக செய லாளர் கீரைத்தமிழன், கணக் காய்வாளர் இளஞ் சேட் சென்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்-இந்தோ ஐரோப் பிய வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி திட்ட இயக்குநர் பூங்குன்றன் பாவாணரியல் நூல்களை வெளியிட முதல் பிரதியை சிறப்பு நிலை பதிப்பாசிரியர் ஆல்துரை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பாவேந்தர் பாரதிதாசன் பேரவை செந்திலை கவுதமன் சிறப்பு ரையாற்றினார்.

    உலக தமிழர் கழக தலைமையக செயலாளர் மன்னர் மன்னன், மதுரை மாவட்ட அமைப்பாளர் சீவா பாவா ணர் (எ)சோழன்( பாவாணர் பேரன்) ஆகியோர் நிகழ்ச்சி யை ஒருங்கிணைத்தனர். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    ×