என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாவாணரியல் நூல் முதல் பிரதியை ஆல்துரை பெற்றுக்கொண்டார்.
நூல்கள் வெளியீட்டு விழா
- நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
- 200-க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை
மொழிஞாயிறு தேவநேயப் பாவணாரின் பாவாணரியல் நூல்கள் வெளியீட்டு விழா மதுரை அண்ணாநகர் அருகே உள்ள அவரது மணிமண்ட பத்தில் நடை பெற்றது. உலக தமிழ் கழக தலைவர் நிலவழகன் தலை மை வகித் தார். பொது செயலாளர் இளந்திரையன் வரவேற் றார்.
நெறியாளர் கதிர் முத்தை யன் கொடியேற்றினார். இணத்தலைவர் தமிழ் வாணன், இணை பொதுச் செயலாளர் இளங்கோவன், துணைத் தலைவர் சக்கர பாணி, தலைமையக செய லாளர் கீரைத்தமிழன், கணக் காய்வாளர் இளஞ் சேட் சென்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்-இந்தோ ஐரோப் பிய வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி திட்ட இயக்குநர் பூங்குன்றன் பாவாணரியல் நூல்களை வெளியிட முதல் பிரதியை சிறப்பு நிலை பதிப்பாசிரியர் ஆல்துரை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பாவேந்தர் பாரதிதாசன் பேரவை செந்திலை கவுதமன் சிறப்பு ரையாற்றினார்.
உலக தமிழர் கழக தலைமையக செயலாளர் மன்னர் மன்னன், மதுரை மாவட்ட அமைப்பாளர் சீவா பாவா ணர் (எ)சோழன்( பாவாணர் பேரன்) ஆகியோர் நிகழ்ச்சி யை ஒருங்கிணைத்தனர். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.






