search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "like"

    • சமூக வலைததளங்களில் நடந்து வரும் இந்த நூதன மோசடியில் ஏமாறாமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழ்நாடு சைபா் கிரைம் போலீசாா் அறிவுறுத்தியுள்ளனா்.
    • இணையம் மூலம் பணம் செலுத்தி அதிக லாபம் பெறலாம் என ஒரு இலக்கை அறிமுகப்படுத்துகிறாா்கள்.

    சென்னை:

    சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் மூலம் குறுஞ் செய்திகள் அல்லது விளம்பரங்கள் வாயிலாக நிதி மோசடி அதிக அளவில் நடை பெறுகிறது. ஒரே ஒரு லைக் போட்டால் ரூ.200 கிடைக்கும் என்று மக்களை மயக்கி ஏமாற்றி நூதனமாக பணம் பறிக்கிறார்கள்.

    சமூக வலைததளங்களில் நடந்து வரும் இந்த நூதன மோசடியில் ஏமாறாமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழ்நாடு சைபா் கிரைம் போலீசாா் அறிவுறுத்தியுள்ளனா்.

    இதுகுறித்து சைபா் கிரைம் போலீசாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மக்களை சமூகவலை தளத்தின் மூலம் தொடா்பு கொண்டு ஏமாற்றும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. முதலில் சில யூடியூப் காணொலிகளுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கும் என பொது மக்களை நம்ப வைக்கின்றனா். அதற்கு சிறிது பணமும் கொடுக்கிறாா்கள். பின்னா், அவா்கள் அனைவரும் ஒரு டெலிகிராம் குழுவில் சோ்க்கப்பட்டு, சில ஓட்டல் பக்கங்கள், நிறுவனங்களுக்கு லைக் செய்ய சொல்லி அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

    இதற்கிடையில் இணையம் மூலம் பணம் செலுத்தி அதிக லாபம் பெறலாம் என ஒரு இலக்கை அறிமுகப்படுத்துகிறாா்கள். அவற்றில் பிட்காயின், கிரிப்டோகரன்சி போன்றவற்றில் மக்களை முதலீடு செய்ய வைக்கின்றனா். இதற்கு பயனாளா் உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கம் செய்கின்றனா்.

    பொதுமக்களை நம்ப வைக்க, மோசடி நபா்கள், தாங்கள் ஏற்கெனவே இதில் முதலீடு செய்து நல்ல லாபம் பெற்றதைப்போல் போலியான ஆதாரங்களைக் காட்டுவா். இதை நம்பி பொதுமக்கள் முதலீடு செய்வா். முதலில் லாபம் வருவதைப்போல் உருவகம் செய்யப்பட்டு மக்களின் முதலீட்டுத் தொகை அதிகரிக்கத் தொடங்கியவுடன் பல்வேறு பொய்களைக் கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனா்.

    எனவே, சமூகவலைதளம் மூலம் அடையாளம் தெரியாத நபா்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்கவோ, லிங்க்கை தொடவோ, தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி மூலம் பெறப் படும் கடவுச்சொல்லை யாருடனும் பகிரவோ வேண்டாம்.

    1930 என்ற உதவி எண்ணை 24 மணி நேரத்துக்குள் தொடா்பு கொண்டால் இழந்த பணத்தை விரைவில் மீட்டெடுக்க முடியும். நிதி இழப்பு அல்லாத பிற புகாா்களுக்குwww.cybercrime.gov.in-ல் உள்நுழைந்து புகாரை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.
    • இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    உத்திரபிரதேசம்:

    இன்ஸ்டாகிராமில் லைக்ஸ், கமெண்ட்ஸ், பெற்று அனைவரிடமும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் எந்த சாகசத்தையும் செய்யத் தயங்குவதில்லை. சிலர் மலைகளில் ஏறி வீடியோ எடுக்கிறார்கள்.

    ரெயில் தண்டவாளத்தில் ஆபத்தான நிலையில் வீடியோ பதிவு செய்கிறார்கள். ஒரு சிலர் ரெயில்வே பிளாட்பாரத்தில் நடனம் ஆடுகின்றனர்.

    இதுபோல பிரபலமாகும் ஆசையில் இளம்பெண் ஒருவர் ரூ.15 ஆயிரம் இழந்துள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், வர்ணிகா பிரயாக் மாவட்டத்தில் உள்ள சிவிலியன் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண்.

    இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என ஆசைப்பட்டார். மணப்பெண் போல் உடை அணிந்து சொகுசு கார் மீது முன்னால் அமர்ந்து பிரபலமான பாடலுக்கு நடனமாடினார். முக்கிய சாலைகளில் சென்று வீடியோவை பதிவு செய்தார்.

    இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டார். இதனை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.

    ஒரு சிலர் இது குறித்து போக்குவரத்து போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

    இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். வீடியோவில் இளம்பெண் அமர்ந்து சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து இளம்பெண்ணின் விவரங்களை கண்டுபிடித்தனர்.

    போக்குவரத்து விதிகளை மீறி இளம்பெண் முக்கிய சாலைகளில் காரின் மீது அமர்ந்து வீடியோ பதிவு செய்ததாக ரூ.15,500 அபராதம் விதித்தனர். இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என இளம்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

    குழந்தைகள் பார்த்து ரசிக்கும் கார்ட்டூன்கள் என்ன வகையாக இருக்கிறது என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் அமர்ந்தும் ரசிக்கலாம்.
    ‘‘பொதுவாகவே, மழலைப்பருவத்தினருக்கு கதைகள் கேட்பது மிகவும் பிடிக்கும். 30, 40 வருடங்களுக்கு முன்னால் இப்போது உள்ளது போல நிறைய டி.வி.சேனல்களோ சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் பார்க்கும் கார்ட்டூன் சேனல்களோ எதுவும் கிடையாது.

    அப்போது இருந்த ஒரே பொழுதுபோக்கு சாதனம் கதைதான். வீட்டில் இருந்த பெரியவர்களும் அதற்கேற்ற வகையில் கதைகள் சொல்வார்கள். பல சமயங்களில் கடவுள், விலங்குகள், கோமாளி, அரக்கர்கள் மாதிரி நடித்தும், விதவிதமான ஓசைகள் எழுப்பியும் குழந்தைகளை மகிழ்ச்சி அடைய செய்தனர். அதன் தொடர்ச்சியாகவே, இன்றைய கார்ட்டூன் சேனல்கள் இருக்கின்றன.

    இவற்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கண்கவர் வண்ணங்கள், சுட்டி எலி, முட்டாள் பூனை, பிரம்மாண்ட யானை, தங்கள் மனதுக்குப் பிடித்த ஹீரோக்கள் சூப்பர் மேன், பேட்மேன் என சுவாரஸ்யமாகவும், விதவிதமாகவும் உலா வருவதால் குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை விரும்புவதும், அவற்றைப் பார்த்து சந்தோஷமாக இருப்பதும் நாளுக்குநாள் அதிகரிக்கிறது.’’

    இன்று வீட்டில் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் யாரும் கிடையாது. பெற்றோர் வேலைக்குச் சென்று விடுகின்றனர். எனவே, குழந்தைகளின் தனிமையைப் போக்க கார்ட்டூன் சேனல்களைப் பார்க்க தாராளமாக அனுமதிக்கலாம். அதேநேரத்தில் வன்முறை சம்பவங்கள், திகிலூட்டும் அதிரடி காட்சிகள், தவறாக வழிநடத்தி உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் மற்றும் தேவையற்ற தீய பழக்கவழக்கங்களைச் சிறுவர், சிறுமியரிடையே ஏற்படுத்தும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது. பெற்றோருக்கு இந்தத்  தெளிவு வேண்டும்.

    குழந்தைகள் பார்த்து ரசிக்கும் கார்ட்டூன்கள் என்ன வகையாக இருக்கிறது என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் அமர்ந்தும் ரசிக்கலாம். இதன்மூலம் குழந்தைகளின் மகிழ்வும் கூடுதலாகும். குழந்தைகள் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்கவும் இது உதவியாக இருக்கும். சராசரியாக, ஒரு நாளில் 45 நிமிடங்கள் கார்ட்டூன்கள் பார்க்க அனுமதிக்கலாம். நேரம் காலம் அறியாமல், மணிக்கணக்காக கார்ட்டூன்கள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.’’

    பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர். பெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
    பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர். அந்த கையில் அவர்களது ஆடைகள், நகைகள் பெரும்பாலும் பயன்படுத்தும் பல பொருட்கள் அனைத்திலும் மயில்கள் பிரதான வடிவமைப்பு பொருளாக அலங்கரிக்கின்றன. குறிப்பாக பெண்கள் அணியும் தங்க நகைகளில் மயில் டிசைன் நகைகள் என்றவாறு பிரத்யேக அணிவகுப்பு நகைகள் உள்ளன. இவை மயில்களின் அலங்கார அணிவகுப்பு, வண்ண தோகை அலங்காரம், அழகிய வளைவுகள் என்றவாறு கைநுணுக்க வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகின்றன.

    பெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. பழங்கால ஆண்டிக் நகைகள் முதல் நவீன கால் வடிவமைப்பு நகைகள் வரை அனைத்திலும் மயில்களின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.

    மயில்கள் அணிவகுக்கும் ஆன்டிக் ஆரம் :

    ஆன்டிக் நகைகள் பெரிய பிரம்மாண்ட தோற்றத்துடன் காணப்படும் நகை. அதன் வடிவங்கள் சிற்ப வேலைப்பாடு பழமையின் பிரதான சின்னங்களுடன் கூடுதல் உழைப்புடன் காணப்படுபவை. ஆன்டிக் நகைகள், பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷ நகையாக உள்ளன. மயில்கள் இருபுறமும் வரிசை கிரமமாய் தோகை விரித்தப்படி அணிவகுக்க அதன் இரு பெரிய மயில்கள் தொங்குவது போன்ற பதக்க அமைப்பு, பதக்க ஓரப்பகுதியில் இலை மோடிப் கொண்டவாறும், கீழ் மணி உருளைகள் தொங்குகின்றன. பதக்கத்தின் நடுப்பகுதியில் கற்கள் பதித்த மயில் வண்ணமாய் நடனமிடுகிறது. ஆன்டிக் மயில் ஆரத்தில் எட்டு தங்க மயில் வடிவங்களும், ஒன்பதாவதாக கல் மயில் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மயில்களின் கூடாரமாய் திகழும் இந்த ஆரம் பெண்களின் கழுத்திற்கு மயில் தோரணமாய் அலங்கரிக்கின்றன.



    வண்ணமயமான நாக்ஷி- போல்கி மயில் ஆரங்கள் :

    தங்கத்தில் அழகிய தோகையுடன் கூடிய மயில் உருவத்தின் ஓரப்பகுதி, தலை பகுதி, தோகைப்பகுதியில் அன்-கட் டைமண்ட் மற்றும் வண்ணக் கற்கள் மணிகள் பதித்து மயிலை அழகுற வடிவமைத்து உள்ளன. இந்த மயில்கள் இருபுறமும் வண்ணமா ஜொலிக்க நடுவே பெரிய இருமயில்கள் வளைந்தவாறு தொங்கும் அமைப்பில் கற்கள், மணிகள் தொங்க விடப்பட்டபடி உள்ளன. பெரிய வெள்ளைக்கற்கள் மற்றும் மோல்கி வடிவமைப்பில் பெரிய அகலமான ஆரங்கள் கைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இருமயில் தோகைகளுடன் இணைந்த ஆரமும் அற்புதம்.

    பச்சை வண்ண மயில் காதணிகள் :

    மயில்கள் வெள்ளை மற்றும் பச்சை கற்கள் பதித்தவாறு வளைந்தவாறும் தொங்கும் அமைப்பிலும் உள்ள காதணிகள் அழகோ அழகு. இதில் தோகை பகுதியில் பச்சை நிற கற்கள் பதித்தவாறு கீழ் பகுதியும், கொண்டை மற்றும் முகப்பகுதியில் வேறு வண்ண கற்கள் காதுடன் பொருந்தும் பகுதியாகவும், உடல் பகுதியில் வெள்ளை கற்கள் பதிய விடப்பட்டுள்ளன. தோகைகள் சுருள் அமைப்பு, நீள் அமைப்பு, வளைந்த அமைப்பு பல வகை வடிவத்துடன் மயில்கள் மாறுபட்டவாறு டிசைன் செய்யப்பட்டுள்ளன.



    இரட்டை மயில்கள் நடனமாடும் வளையல்கள் :

    முழுக்க முழுக்க தங்கத்தில் சிற்ப வேலைப்பாடு கொண்ட ஆன்டிக் வளையல்கள் அகலமாய், இடையில் கொடிகள் ஓடுவது போன்று டிசைன் செய்யப்பட்டு உள்ளன. அதுபோல் கம்பி வளையல் அமைப்பின் நடுப்பகுதியில் மட்டும் கல் பதித்த மயில்கள் நடனமாடுவதுபோன்றும், தோகையுடன் ஜொலிப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்ாய் தங்க உடல் பகுதியில் கொண்டை, கண், தோகை அனைத்தும் மாறுபட்ட வண்ணத்தில் எனாமல் பூசப்பட்ட மயில் வளையல்கள் வர்ணஜாலம் நிகழ்த்துகின்றன. அதுபோக 'பென்டன்ட் எனும் பதக்க அமைப்புகள் தனிப்பட்ட டாலர் அமைப்பாய் மயில் உருவத்துடன் கிடைக்கின்றன.
    ×