search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mbappe"

    • பிஎஸ்ஜி அணியில் ஒப்பந்தத்தை நீட்டிக்க எம்பாப்வே விரும்பவில்லை
    • சவுதி அரேபிய அணி எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய விருப்பம்

    பிரான்ஸ் கால்பந்து வீரர் கேப்டன் எம்பாப்பே, உலகளவில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் தற்போது பிரான்சில் உள்ள பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியுடன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் மீதமுள்ளது.

    மேலும், ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி விரும்பியது. ஆனால், எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். இதனால் பிஎஸ்ஜி-யின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை. ஃப்ரீ டிரான்ஸ்பராக செல்ல வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே சவுதி அணியான அல்-ஹிலால் பிஎஸ்ஜி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி 332 மில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் 2700 கோடி ரூபாய்) டிரான்ஸ்பர் ஃபீஸ் செலுத்த முன்வந்தது. எந்தவித ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறினால் பணம் கிடைக்காது என்பதால், பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்தது.

    இந்த நிலையில்தான் அல்-ஹிலால் அணி எம்பாப்பேவை சந்திக்க பிரான்ஸ் சென்றுள்ளனர். ஆனால், எம்பாப்வே அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே அல்-ஹிலால் மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய விரும்பியது. ஆனால், அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு மெஸ்சி சென்றுவிட்டார்.

    • பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர், பிரதரை சந்தித்தார்
    • பிரான்சில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்

    பிரதமர் மோடி பிரான்ஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பிரான்ஸில் வசித்து வரும் இந்தியர்களை சந்தித்து அவர்களுடன் உரையாற்றினார். அப்போது, உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வரும் பிரான்ஸ் நாட்டின் எம்பாப்பே குறித்து பேசினார்.

    எம்பாப்வே குறித்து பிரதமர் மோடி கூறுகையில் ''இந்திய இளைஞர்களிடையே எம்பாப்பே சூப்பர் ஹீரோவா திகழ்கிறார். எம்பாப்பே-ஐ அனேகமாக பிரான்சைவிட இந்திய மக்கள் அதிகமானோருக்கு தெரிந்திருக்கலாம்'' என்றார்.

    பிரெஞ்ச் லீக் மற்றும் சர்வதேச போட்டிகளில் எம்பாப்பே அபாரமாக விளையாடி வருகிறார். உலகக்கோப்பை கால்பந்தில் அர்ஜென்டினாவிற்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அமெரிக்காவில் பேஸ்பால் போட்டிக்கிடையெ கிரிக்கெட்டும் வளர்ந்து வருகிறது என்றார்.

    • ஏழைகளுக்காக, கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்தார்.
    • விளையாட்டில் அவர் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை ஒரு போதும் மறக்க முடியாது

    பீலேவின் மறைவுக்கு பிரேசில் முன்னணி வீரர் நெய்மார் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், 'பீலேவுக்கு முன் கால்பந்து ஒரு விளையாட்டாக மட்டுமே இருந்தது. பீலே அனைத்தையும் மாற்றினார். கால்பந்தை கலையாகவும், பொழுதுபோக்காகவும் மாற்றினார். ஏழைகளுக்காக, கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்தார். அவரால் கால்பந்தும், பிரேசிலும் மேம்பட்டன. அவர் மறைந்து விட்டார். ஆனால் அவரது 'மேஜிக்' எப்போதும் நிலைத்து நிற்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    பீலேவை, 'கால்பந்து விளையாட்டின் ராஜா' என்று வர்ணித்துள்ள பிரான்ஸ் வீரர் எம்பாப்பே, 'விளையாட்டில் அவர் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை ஒரு போதும் மறக்க முடியாது' என்றார்.

    போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ கூறும் போது, 'மறைவில்லா கால்பந்து மன்னர் பீலேவுக்கு சாதாரணமாக 'குட்பை' சொல்வது, கால்பந்து உலகம் முழுவதையும் தற்போது சூழ்ந்திருக்கும் வலியை வெளிப்படுத்த போதுமானதாக இருக்காது. என்றென்றும் பல மில்லியன் மக்களுக்கு அவர் உந்துசக்தியாக இருப்பார். கால்பந்தை நேசிக்கும் நம் ஒவ்வொருவரிடமும் அவரது நினைவுகள் நிலைத்து நிற்கும்' என்றார். அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி, தன்னுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். உலகத் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

    உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரோசியாவை 4-2 என வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. #WorldCup2018 #Pogba
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

    48-வது நிமிடத்தில் குரோசிய வீரர் அடித்த பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் அபாரமாக தடுத்தார். ஒரு கோல் முன்னிலை பெற்றாலும் பிரான்ஸ் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடவில்லை. தொடர்ந்து அட்டக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குரோசிய வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் பந்தை கடத்தும் நோக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    59-வது நிமிடத்தில் போக்பா ஒரு கோல் அடித்தார். பிரான்ஸ் எல்லை அருகில் இருந்து அடித்த பந்தை குரோசியாவின் வலது கார்னர் பக்கம் சென்றது. மப்பே புயல்வேகத்தில் சென்று பந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோல் எல்லைக்குள் வைத்து கிரிஸ்மானிடம் பாஸ் செய்தார். கிரிஸ்மான் அருகில் நின்ற போக்பாவிடம் கடத்தினார். அவர் புயல் வேகத்தில் அடித்தார். பந்து குரோசியா டிபென்டர் மீது பட்டு மீண்டும் போக்பாவிடம் வந்தது. இடது காலால் உதைத்து கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.

    65-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனார் பிரான்ஸ் 4-1 என முன்னிலைப் பெற்றது.



    69-வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிரான்ஸ் கோல் எல்லைக் கோட்டிற்குள் வைத்து பிரான்ஸ் வீரர் பாதிகாப்பாக கோல் கீப்பர் லோரிஸிடம் பந்தை அடித்தார். அதை லோரிஸ் அஜாக்கிரதையாக திருப்பி அடிக்க முயன்றார். அப்போது அருகில் நின்ற குரோசியா வீரர் மாண்ட்சுகிச் மீது பட்டு கோல் கம்பத்திற்குள் புகுந்தது. இதனால் குரோசியா இரண்டு கோல் அடித்தது. பிரான்ஸ் முன்னிலை 4-2 எனக் குறைந்தது.

    அதன்பின் எவ்வளவு போராடியும் குரோசியாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 4-2 என குரோசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    ×