search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ladies"

    • பெண்கள் பல சாதனைகளை புரிய கல்வி மிகவும் அவசியம்.
    • மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் இன்னர் வீல் சங்கம் சார்பாக பெண்களை வளப்படுத்த தேசத்தை மேம்படுத்துங்கள் என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்லூரியின் முதல்வர் சிவகுருநாதன் வரவேற்றார்.

    கல்லூரி இயக்குனர் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளி தாளாளர் த.விஜயசுந்தரம் பெண்களுக்கான விழிப்புணர்வு பற்றி வாழ்த்துரை வழங்கினார்.

    அப்பொழுது அவர் பேசுகையில் பெண்களின் வளம் தேசத்தை மேம்படுத்த செய்யும் என்றும், ஆணுக்கு இணையாக பெண்கள் அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கி வருவதாகவும் கூறினார்.

    விழாவில் இன்னர்வீல் சங்கம் அதிகாரி மாலதி செல்வம் தலைமை வகித்தார்.

    நேதாஜி கல்வி குழுமத்தின் தாளாளர் வெங்கட்ராஜலு, சுந்தர்ராஜ் செயலர், நிர்மலா ஆனந்த் செயல் அதிகாரி வாழ்த்துக்களை கூறினர்.

    விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக முனைவர் சுதா பொருளாதாரத் துறை பேராசிரியர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் பெண்கள் பல துறையில் வளர்ந்து வருகிறார்கள்.

    இன்னும் பல சாதனைகளை புரிய கல்வி மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

    பாலின பாகுபாடு இன்றி பெண்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் பெண்கள் குடும்ப வாழ்க்கையிலும் சமூகத்திலும் சிறந்து விளங்க மற்றும் வீரம் நிறைந்த பல சாதனை மிகுந்த பெண்களின் பெயர்களை எடுத்துக்காட்டாக கொண்டு பேசினார்.

    மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கப்பட்டது.

    முடிவில் பவானி பாண்டியன் நன்றி கூறினார்.

    சங்க உறுப்பினர்கள் கல்லூரியின் துணை முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கல்பனா சாவ்லா விருது, இந்த ஆண்டுக்கு வருகிற சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட உள்ளது.
    • ஏதேனும் ஒரு வகையில் துணிச்சலான முறையில் ஈடுபட்டு செயலாற்றிய தமிழகத்தை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்பனா சாவ்லா விருது, இந்த ஆண்டுக்கு வருகிற சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பாராட்டத்தக்க வகையில் வீர, தீர செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு வகையில் துணிச்சலான முறையில் ஈடுபட்டு செயலாற்றிய தமிழகத்தை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://award.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக வருகிற 5-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நல அலுவலகத்தில் 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 0421 2971168 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • மதுரை நகைக்கடைகளில் கைவரிசை காட்டிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • நகைக்கடை பஜாருக்கு சென்றனர்.

    மதுரை

    மதுரை கீழவெளிவீதி கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது59). இவர் தெற்கா வணி மூல வீதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு 2பெண்கள் வந்த னர். அவர்கள் கடையில் ½பவுன் தோடு வாங்குவது போல் நடித்து அதனை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து செல்வராஜ் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.

    இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பின் காம ராஜர் சாலை ரெங்கநாயகி தெருவை சேர்ந்த சிவகுமார் (48) என்பவர் தெற்கு சித்திரை வீதியில் நடத்தி வரும் கடையில் 2 பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து ¾பவுன் தோடு திருடிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்தும் கடை உரிமையாளர் சிவக்குமார் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ேமலும் கடை உரிமை யாளர்களும், போலீசாரும் கடையில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 கடைகளிலும் நகையை திருடிச்சென்றது அதே பெண்கள் தான் என தெரியவந்தது.

    அவர்கள் யார்? என்று போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே திருடி மாட்டிக் கொள்ளா ததால் தங்களை அடையா ளம் தெரியவில்லை என அந்த திருடிகள் நம்பியுள்ள னர். இதனால் தைரியமாக மீண்டும் கைவரிசை காட்டு வதற்காக நகைக்கடை பஜாருக்கு சென்றனர்.

    ஏற்கனவே திருடிய நகைக்கடை வழியாக சென்றபோது கடையின் உரிமையாளர்கள் அவர்களை அடையாளம் கண்டு விரட்டிப்பிடித்தனர். பின்னர் அவர்களை விளக்குத்தூண் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசாரின் விசாரணை யில், அவர்கள் ஒத்தக்கடை அய்யப்பன் நகர் 4-வது தெருவை சேர்ந்த செல்லம் மகள் தரணி (32), சக்கரா நகரை சேர்ந்த ஜெகதீஷ குமார் மனைவி சந்தியா (27) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என டி.எஸ்.பி. பிரீத்தி கூறியுள்ளார்.
    • நான் சைக்கிளில் செல்லும் வழியில் பொதுமக்கள், காவல் துறையினர் எனக்கு நல்ல வரவேற்பு அளித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்

    மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆயிசா மால்வியா (வயது24) உடற்கல்வி ஆசிரியரான இவர் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை பறைசாற்றவும், பெண்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வர முடிவு செய்தார்.

    இதற்காக அவர் கடந்த ஆண்டு நவம்பர் 14-ந் தேதி மத்தியபிரதேசத்தில் இருந்து தன்னந்தனியாக சைக்கிளில் பயணத்தை தொடர்ந்தார். அங்கிருந்து மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கோவா, கர்நாடகா, கேரளா சென்று விட்டு தமிழகம் வழியாக வடமாநிலங்கள் நோக்கி செல்லும் அவர் ராஜபாளையம் வந்தடைந்தார்.

    அவருக்கு ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள காவல்துணை கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் ஆயிசா மால்வியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நமது நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

    வழியில் எந்த விதமான அச்சுறுத்தலோ, இடையூறோ ஏற்பட்டதில்லை. இந்தியா வில் நடு இரவில் பெண்கள் அச்சமின்றி எப்போது நடமாட முடிகிறதோ? அப்போது தான் இந்தியா சுதந்திரம் பெற்ற முழு பயனை அடைய முடியும் என மகாத்மா காந்தி வலியுறுத்தினார். அவரது கனவு நனவாகி விட்டது.

    நான் சைக்கிளில் செல்லும் வழியில் பொதுமக்கள், காவல் துறையினர் எனக்கு நல்ல வரவேற்பு அளித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். இது மகிழ்ச்சியாக உள்ளது. எந்த நோக்கத்திற்காக சைக்கிள் பயணத்தை தொடங்கினேனோ அதில் எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்ய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சேரன்குளம் அரசு பள்ளி மாணவர் மாணவிகளின் சிலம்பம், வாள்வீச்சு, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சேரன்குளம் ஆழ்காட்டியம்மன் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதில் பேசிய மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்களா பாலு மனதை நாம் சரியாக வைத்துக்கொண்டால் எந்த பெண்ணையும் யாரும் தொந்தரவு செய்ய முடியாது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் சேரன்குளம் அரசு பள்ளி மாணவர் மாணவிகளின் சிலம்பம், வாள்வீச்சு, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன்குலம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மாணவ மாணவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • மேலப்பாட்டத்தில் கடந்த 5 மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை வழங்கவில்லை.
    • எங்கள் பகுதிக்கு 100 நாள் வேலை திட்டத்தை நிரந்தரமாக தர வேண்டும் என மனு அளித்தனர்.

    நெல்லை:

    பாளை அருகே உள்ள மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 5 மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை வழங்கவில்லை.

    இதனால் எங்களின் வாழ்வா தாரம் பாதிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து எங்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டோம். அப்போது 30 முதல் 40 பேருக்கு மட்டுமே வேலை இருப்பதால் சுழற்சி முறையில் பணி வழங்குவதாக கூறுகிறார்கள்.

    ஆனால் சுழற்சி அடிப்படையில் கூட கடந்த 5 மாதங்களாக எங்கள் பகுதியை சேர்ந்த யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை.

    ஏற்கனவே எங்கள் பகுதியில் விவசாயம் பொய்த்துவிட்டதால் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு 100 நாள் வேலை திட்டத்தை நிரந்தரமாக தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    • வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • 70 வயதுக்கு மேல் உள்ள தம்பதிகளுக்கு பொட்டு போட்டு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை உருமாண்டம்பா–ளையம் பண்ணாரியம்மன் கோவிலில் 3-வது ஆடி–வெள்ளியை முன்னிட்டு வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் காலை 10 மணியளவில்கல்யாண விநாயகர் மற்றும் பண்ணாரியம்மனுக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் நடைபெற்றன.

    அதற்கு பிறகு மதியம் 1 மணியளவில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், விரளி மஞ்சள், மஞ்சள் அரிசி, தாலி மஞ்சள் சரடு, வளையல், மிட்டாய், பூக்கள், துணிப்பைகள் வைத்து அணிக்கூடையில் கு–ழந்தைகள் எடுத்துச்செல்ல சிறப்பு பூஜை–கள் செய்யப்பட்டன.

    அதில் விநாயகர், வில்வ–மரம், சுற்றுப்பூஜைகள் நடைபெற்றன. அப்போது அம்மனுக்கு உகந்த கொம்பு ஊதுதல் மற்றும் மத்தளம் அடிக்கப்பட்டன. பூசாரி வாய்க்கட்டு பூட்டு போட்டு சிறப்பு வரலட்சுமி நோன்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் பிரசா–தங்கள் வழங்கப்பட்டன.

    மேலும் ஊரில் உள்ள பேரன், பேத்தி எடுத்த 70 வயதுக்கு மேல் உள்ள தம்பதிகளுக்கு பொட்டு போட்டு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.

    அதன்பிறகு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் வரலட்சுமி பூஜையின்போது, அணிக்கூடையில் கொண்டு–வரப்பட்ட எலுமிச்சை பழம் உள்ளிட்டவைகளை மஞ்சள் பையில் போட்டு வழங்கப்ட்டன. மேலும் வயதான தம்பதிகள் வந்திருந்த சுமங்கலி பெண்கள் மற்றும் அனைத்து பக்தர்களுக்கும் மஞ்சள் பச்சரிசி மற்றும் பூக்கள் தூவி ஆசீர்வாதம் செய்தனர். பக்தர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மன் அருள் பெற்றனர். 

    • 5 நபா்கள் (50 சதவிகிதம் பெண்கள்) கொண்ட உள்ள புகாா் குழு ஒன்றை அமைக்க வேண்டும்
    • பெண்கள் பாதுகாப்பு குறித்து புகாா் வரும் பட்சத்தில் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் :

    பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்து கருத்தரங்கு, பாதுகாப்பு பெட்டி அறிமுக விழா, கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த சமூக நலத்துறை அலுவலா்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரையில் நடைபெற்றது.

    இதற்கு மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ். குமரி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை இயக்குநா் த.ரத்னா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்துறை இயக்குநா் வே.அமுதவல்லி, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநா் எஸ்.வளா்மதி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை கூடுதல் இயக்குநா் எஸ்.பி.காா்த்திகா ஆகியோா் தலைமை வகித்தனா்.

    நிகழ்ச்சியை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் துவக்கி வைத்தனா்.மாவட்ட கலெக்டர் வினீத், செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    பெண் தொழிலாளா்கள் அதிகமாக பணிபுரிவது திருப்பூா் மாவட்டத்தில்தான். அந்த வகையில் அனைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், நிறுவனங்களில் பாதுகாப்பு பெட்டி வைக்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் 10 பெண் தொழிலாளா்கள் பணிபுரியும் இடத்திலும் பாதுகாப்பு பெட்டி வைக்கப்படும் என்றாா்.

    அமைச்சா் பி.கீதாஜீவன் பேசியதாவது:-

    ஒவ்வொரு அரசு மற்றும் தனியாா் நிறுவனமும் அந்தந்த அலுவலகங்களில் 5 நபா்கள் (50 சதவிகிதம் பெண்கள்) கொண்ட உள்ள புகாா் குழு ஒன்றை அமைக்க வேண்டும். நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து புகாா் வரும் பட்சத்தில் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொழிற்சாலைகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடா்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றாா்.

    இதையடுத்து அமைச்சா்கள் புதிய திருப்பூா் நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பாதுகாப்பு பெட்டியை வழங்கி ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து சமூக நலத்துறையில் சிறந்த பணியாளா்களுக்கான விருது பெற்ற 3 நபா்களுக்கு ரூ.5ஆயிரத்துக்கான ரொக்கப் பரிசு, மாற்றுத் திறனாளிகளின் நலத் துறை சாா்பில் 18 நபா்களுக்கு ரூ.12,500 மதிப்பில் செல்போன் உள்ளிட்டவற்றை அமைச்சா்கள் வழங்கினா்.

    இதில் திருப்பா் மேயா்தினேஷ்குமாா், மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மகளிா் ஆணைய உறுப்பினா் கீதா நடராஜன், திருமுருகன்பூண்டி நகா்மன்றத் தலைவா் குமாா், மாவட்ட சமூக நலத்துறை அலுவலா்கள், ராமகிருஷ்ணன் (பனியன் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்க பொது செயலாளா்), திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் எம்.ராஜாசண்முகம், ஏ.சி.ஈஸ்வரன் (சைமா தலைவா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    பெண்கள் விரும்பும் நவீன பொருட்களில் சிலவற்றை நீங்களும் பரிசளிக்கலாம். அல்லது உங்கள் மனைவி, சகோதரிக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் அன்பளிப்பாக அனுப்பலாம்.
    பரிசளிப்பது என்பது மிகவும் சிறந்த கலை. பரிசளிப்பதன் மூலம் உங்களின் அன்பை வெளிப்படுத்த முடியும். எனவே நீங்கள் விரும்புவோருக்கு பரிசளியுங்கள், அவர்களின் நன்மதிப்பை பெறுங்கள். நவீன பெண்கள் விரும்பும் நவீன பொருட்களில் சிலவற்றை நீங்களும் பரிசளிக்கலாம். அல்லது உங்கள் மனைவி, சகோதரிக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் அன்பளிப்பாக அனுப்பலாம்.

    மொபைல் சார்ஜிங் பர்ஸ்

    இன்றைய நவ நாகரிக யுகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத பெண்களே கிடையாது. ஸ்மார்ட்போன் மற்றும் அது சார்ந்த உதிரி பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், அதேசமயம் மற்றவர்களின் பார்வைக்கும் அழகான தோற்றம் தருவது மொபைல் சார்ஜிங் பர்ஸ். ஸ்மார்ட்போன், சார்ஜிங் கேபிள் உள்ளிட்டவற்றை அழகாக வைக்க, இந்த வகை பர்ஸ் உதவும்.

    சென்சார் கண்ணாடி

    பெண்கள் அதிக நேரம் செலவழிப்பது கண்ணாடி முன்புதான். தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அவர்கள் அதிக அக்கறை செலுத்துவர். நவீன காலத்தில் பழைய கால முகம் பார்க்கும் கண்ணாடியை விட சென்சார் என்ற உணர் கருவி கொண்ட கண்ணாடி மிகவும் ஏற்றது. இத்தகைய சென்சார் கண்ணாடி பெரும்பாலான இணையதளங்களிலும் கிடைக்கிறது.

    ஆல் இன் ஒன் ஹேர் ஸ்டைலர்

    சிகை அலங்காரத்துக்கு மிகவும் ஏற்றது ஹேர் டிரையர் உள்ளிட்ட நவீன சாதனங் களாகும். அனைத்து வகை யான கூந்தல் பராமரிப்புக்கும் ஏற்ற ஹேர் ஸ்டைலரை வாங்கி பரிசளியுங்கள். இதை விரும்பாத பெண்கள் மிக மிகக் குறைவு.

    இ-ரீடர்

    வழக்கமாக ஸ்மார்ட்போன்களில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிப்பதை விட இ-ரீடர் எனப்படும் கிண்டில் போன்ற இ-புத்தகங்கள் மிகவும் சிறந்தது. இதுவும் பெண்களுக்கு பரிசளிக்க ஏற்றது. இதை எடுத்துச் செல்வதும் எளிது. விரும்பிய நேரத்தில் படிக்க உதவியாக இருக்கும்.

    ஸ்மார்ட் வாட்ச்

    நவீன பெண்களுக்கு நவீன கைக்கடிகாரம்தான் ஸ்மார்ட்வாட்ச். மிகவும் சிக்கலான, அதிக செயல்பாடுகளைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களை விட, பெண்களுக்கு உதவும் வகையில், எளிய செயல்பாடு மூலம் சிறப்பாக இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்களை வாங்கி பரிசளிக்கலாம். இதையும் பெண்கள் விரும்புவர்.

    பரு நீக்கி (பிம்பிள் ஸாப்பர்)

    இளம் பெண்களுக்கு மிகவும் உபயோகமானது. சருமத்தில் ஊடுருவி பரு உண்டாக்கும் பாக்டீரியாவை அழித்துவிடும். பருவினால் உண்டாகும் தழும்புகளை மறையச் செய்யும். பரிசளிக்கும் பெண்ணின் சருமத்துக்கேற்ற ஸாப்பரை வாங்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.



    யுனிவர்சல் சார்ஜர்

    நவ-நாகரிக பெண்கள் மின்னணு சாதனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு மிகவும் ஏற்றது. ஒரே சமயத்தில் பல மின்னணு சாதனங்களை சார்ஜ் ஏற்ற உதவும் வகையிலான யுனிவர்சல் சார்ஜரையும் பெண்களுக்கு பரிசாக அளிக்கலாம். வயர்லெஸ் சாதனமாக இருப்பின் இது மிகவும் சிறந்தது. இதில் மிகவும் சிறந்த பிராண்டுள்ள, விரைவாக சார்ஜ் ஏறக்கூடியதை வாங்கி பரிசளிக்கலாம்.

    இயர் பட்

    காதில் தோடு அணிகிறார்களோ இல்லையே, இந்தக் கால நவ-நாகரிக பெண்கள் இயர்போன் அணிவதை பார்க்கலாம். இதனால் மிகவும் நவீனமாக, காதை உறுத்தாத, இனிய இசையை வழங்கக் கூடிய வெளிப்புற இசையை துண்டித்து, ஸ்மார்ட்போனிலிருந்து வரும் விரும்பிய இசையைக் கேட்க உதவும் இயர்போனை நீங்கள் பரிசளிக்கலாம்.

    மேக் அப் பிரஷ்

    பெரும்பாலும் விசேஷங்கள், வெளியூருக்கு பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் உபயோகமானது. இத்தகைய பிரஷ்கள் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. இதில் பேட்டரியில் இயங்கும் பிரஷ், நேரத்தை மிச்சப்படுத்தும். இத்தகயை பிரஷ்கள் அனைத்து ஆன்லைன் இணையதளங்களிலும் கிடைக்கிறது.

    இன்ஸ்டன்ட் கேமரா

    எவ்வளவுதான் ஸ்மார்ட்போன் வந்தாலும். புகைப்படங்களை பார்க்கும் சந்தோஷமே தனி. புகைப்படம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை கிடையாது.அந்த வகையில் உடனடியாக பிரிண்ட் போட்டுத் தரும் கேமராவும் பரிசளிக்க சிறந்த பொருள்தான்.

    கண் மசாஜர்

    பெண்கள் தங்கள் கண்களை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவர். இத்தகையோருக்கு மிகவும் ஏற்றது கண் மசாஜர். கண்ணில் ரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்யும் இந்த மசாஜரை சிறிது நேரம் அணிந்தால் கண் புதுப் பொலிவுடன் தோற்றமளிக்கும். இதை அணிவதன் மூலம் தலைவலி போன்ற பிரச்சினையையும் தவிர்க்க முடியும். இது மன இறுக்கத்தையும் போக்க வல்லது. இதையும் பரிசளிக்கலாம்.

    பாதுகாப்பு கருவி


    பெண்கள் அழகை மேம்படுத்த மட்டுமின்றி அவர்களை பாதுகாக்க உதவும் கருவிகளுள் இதுவும் ஒன்று. தனியாக இருக்கும் சந்தர்ப்பங்கள், வெளியிடங்களுக்கு சென்று திரும்புகையில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியது. இதில் உள்ள பாதுகாப்பு பொத்தானை அழுத்தினால் அது உடனடியாக செய்தியை பாதுகாவலருக்கு அனுப்பும். பெண்களை பாதுகாக்க நினைப்பவர்கள் அவசியம் வாங்கி பரிசளிக்க வேண்டிய சாதனங்களுள் மிகவும் முக்கியமானது இது.

    பெண்களுக்கு அழகு சேர்க்கும் சாதனங்களுடன் அவர்களை பாதுகாக்கும் கருவிகளும் வந்துள்ளன. அவற்றையும் வாங்கி அளிப்பது நீங்கள் அவர்கள் மீது வைத்துள்ள அக்கறையை வெளிப்படுத்த உதவும்.
    பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர். பெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
    பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர். அந்த கையில் அவர்களது ஆடைகள், நகைகள் பெரும்பாலும் பயன்படுத்தும் பல பொருட்கள் அனைத்திலும் மயில்கள் பிரதான வடிவமைப்பு பொருளாக அலங்கரிக்கின்றன. குறிப்பாக பெண்கள் அணியும் தங்க நகைகளில் மயில் டிசைன் நகைகள் என்றவாறு பிரத்யேக அணிவகுப்பு நகைகள் உள்ளன. இவை மயில்களின் அலங்கார அணிவகுப்பு, வண்ண தோகை அலங்காரம், அழகிய வளைவுகள் என்றவாறு கைநுணுக்க வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகின்றன.

    பெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. பழங்கால ஆண்டிக் நகைகள் முதல் நவீன கால் வடிவமைப்பு நகைகள் வரை அனைத்திலும் மயில்களின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.

    மயில்கள் அணிவகுக்கும் ஆன்டிக் ஆரம் :

    ஆன்டிக் நகைகள் பெரிய பிரம்மாண்ட தோற்றத்துடன் காணப்படும் நகை. அதன் வடிவங்கள் சிற்ப வேலைப்பாடு பழமையின் பிரதான சின்னங்களுடன் கூடுதல் உழைப்புடன் காணப்படுபவை. ஆன்டிக் நகைகள், பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷ நகையாக உள்ளன. மயில்கள் இருபுறமும் வரிசை கிரமமாய் தோகை விரித்தப்படி அணிவகுக்க அதன் இரு பெரிய மயில்கள் தொங்குவது போன்ற பதக்க அமைப்பு, பதக்க ஓரப்பகுதியில் இலை மோடிப் கொண்டவாறும், கீழ் மணி உருளைகள் தொங்குகின்றன. பதக்கத்தின் நடுப்பகுதியில் கற்கள் பதித்த மயில் வண்ணமாய் நடனமிடுகிறது. ஆன்டிக் மயில் ஆரத்தில் எட்டு தங்க மயில் வடிவங்களும், ஒன்பதாவதாக கல் மயில் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மயில்களின் கூடாரமாய் திகழும் இந்த ஆரம் பெண்களின் கழுத்திற்கு மயில் தோரணமாய் அலங்கரிக்கின்றன.



    வண்ணமயமான நாக்ஷி- போல்கி மயில் ஆரங்கள் :

    தங்கத்தில் அழகிய தோகையுடன் கூடிய மயில் உருவத்தின் ஓரப்பகுதி, தலை பகுதி, தோகைப்பகுதியில் அன்-கட் டைமண்ட் மற்றும் வண்ணக் கற்கள் மணிகள் பதித்து மயிலை அழகுற வடிவமைத்து உள்ளன. இந்த மயில்கள் இருபுறமும் வண்ணமா ஜொலிக்க நடுவே பெரிய இருமயில்கள் வளைந்தவாறு தொங்கும் அமைப்பில் கற்கள், மணிகள் தொங்க விடப்பட்டபடி உள்ளன. பெரிய வெள்ளைக்கற்கள் மற்றும் மோல்கி வடிவமைப்பில் பெரிய அகலமான ஆரங்கள் கைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இருமயில் தோகைகளுடன் இணைந்த ஆரமும் அற்புதம்.

    பச்சை வண்ண மயில் காதணிகள் :

    மயில்கள் வெள்ளை மற்றும் பச்சை கற்கள் பதித்தவாறு வளைந்தவாறும் தொங்கும் அமைப்பிலும் உள்ள காதணிகள் அழகோ அழகு. இதில் தோகை பகுதியில் பச்சை நிற கற்கள் பதித்தவாறு கீழ் பகுதியும், கொண்டை மற்றும் முகப்பகுதியில் வேறு வண்ண கற்கள் காதுடன் பொருந்தும் பகுதியாகவும், உடல் பகுதியில் வெள்ளை கற்கள் பதிய விடப்பட்டுள்ளன. தோகைகள் சுருள் அமைப்பு, நீள் அமைப்பு, வளைந்த அமைப்பு பல வகை வடிவத்துடன் மயில்கள் மாறுபட்டவாறு டிசைன் செய்யப்பட்டுள்ளன.



    இரட்டை மயில்கள் நடனமாடும் வளையல்கள் :

    முழுக்க முழுக்க தங்கத்தில் சிற்ப வேலைப்பாடு கொண்ட ஆன்டிக் வளையல்கள் அகலமாய், இடையில் கொடிகள் ஓடுவது போன்று டிசைன் செய்யப்பட்டு உள்ளன. அதுபோல் கம்பி வளையல் அமைப்பின் நடுப்பகுதியில் மட்டும் கல் பதித்த மயில்கள் நடனமாடுவதுபோன்றும், தோகையுடன் ஜொலிப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்ாய் தங்க உடல் பகுதியில் கொண்டை, கண், தோகை அனைத்தும் மாறுபட்ட வண்ணத்தில் எனாமல் பூசப்பட்ட மயில் வளையல்கள் வர்ணஜாலம் நிகழ்த்துகின்றன. அதுபோக 'பென்டன்ட் எனும் பதக்க அமைப்புகள் தனிப்பட்ட டாலர் அமைப்பாய் மயில் உருவத்துடன் கிடைக்கின்றன.
    ×