search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு
    X

    பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

    பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு

    • பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சேரன்குளம் அரசு பள்ளி மாணவர் மாணவிகளின் சிலம்பம், வாள்வீச்சு, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சேரன்குளம் ஆழ்காட்டியம்மன் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதில் பேசிய மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்களா பாலு மனதை நாம் சரியாக வைத்துக்கொண்டால் எந்த பெண்ணையும் யாரும் தொந்தரவு செய்ய முடியாது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் சேரன்குளம் அரசு பள்ளி மாணவர் மாணவிகளின் சிலம்பம், வாள்வீச்சு, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன்குலம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மாணவ மாணவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    Next Story
    ×