search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welcome"

    • பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே பா.ஜ.க. பேனர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

    வேலூர்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வேலூர் மாவட்டத்திற்கு நடைபயணம் வருகிறார். இதனை வரவேற்று பா.ஜ.க. நிர்வாகிகள் தொண்டர்கள் பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

    வேலூர் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் வேலூர் அண்ணா சாலையில் ராஜா தியேட்டர் மற்றும் காட்பாடி ரோட்டில் உள்ள நேஷனல் சர்க்கிள் பகுதிகளில் இருந்த டிஜிட்டல் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

    பா.ஜ.க டிஜிட்டல் பேனர்கள் இன்று காலையில் காட்பாடி சாலை ஓரம் உள்ள கால்வாயில் வீசப்பட்டு கிடந்தன.

    இதனைக் கண்டு பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    நள்ளிரவில் வேண்டுமென்றே மர்ம கும்பல் அதனை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    இது தொடர்பாக பா.ஜ.க.வினர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே பா.ஜ.க. பேனர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
    • ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 70). இவரது மனைவி கருப்பாயம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருமே ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் முதல் மகனான கண்ணன் கடந்த 19-வது வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். 28 ஆண்டுகள் தனது பணியை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிய அவருக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மிகப்பெரிய தலைவருக்கு அளிக்கப்படும் வரவேற்பை போல நகர் முழுவதும் பிரம்மாண்ட பேனர்கள் வைத்து கண்ணனுக்கு மாலை அணிவித்து அதிர்வேட்டுகள் வெடித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். இது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து ராணுவ வீரர் கண்ணன் கூறுகையில், கடந்த 1995ம் ஆண்டு 19வது வயதில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தேன். 28 ஆண்டுகள் நல்ல முறையில் நாட்டுக்காக சேவையாற்றி தற்போது பணி முடித்து ஊருக்கு திரும்பியுள்ளேன்.

    எனக்கு நித்யதாரணி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனது பணியின் போது உயர் அதிகாரிகள் பல முறை என்னை சிறப்பாக பணியாற்றியதற்காக கவுரவித்துள்ளனர். குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. நாட்டிற்காக பணியாற்றிய போது கிடைத்த மகிழ்ச்சியை போல் தற்போது கிராம மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    பள்ளி படிப்பின் போதே எனது நண்பர்கள் பலர் டாக்டர், கலெக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று பேசி வந்தனர். அப்போதிருந்தே எனக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருந்தது. எனது ஆசைக்கு எனது பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர்.

    ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    தனது மகனுக்கு அளித்த வரவேற்பு குறித்து தந்தை ராஜ் தெரிவிக்கையில்,

    எனது 3 மகன்களையுமே ராணுவத்தில் சேர்த்துள்ளேன். அவர்கள் இதன் மூலம் நாட்டுக்கு சேவையாற்றுவதுடன் ஒழுக்கத்துடன் வாழ கற்றுக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ராணுவத்தில் இருந்து திரும்பிய எனது மகனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்னை கண் கலங்க வைத்தது. இதன் பிறகு எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ராணுவத்தில் பணியாற்ற அவன் உதவ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    • பந்தலூர் பகுதியிலும் அவரை வரவேற்க ஏராளமான குழந்தைகள், காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
    • தனியார் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவை தொடங்கி வைக்கிறார்.

    ஊட்டி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு பாராளுமன்ற தொகுதி எம்.பியுமான ராகுல்காந்தி கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு, கண்ணூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு நேற்று வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் தனது தொகுதியான வயநாடு பகுதிக்கு சென்றார்.

    வயநாடு தொகுதிக்குட்பட்ட மலப்புரம் மாவட்டம் நிலம்பூர், எடக்கரா பகுதிகளில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    பின்னர் அவர் அங்கிருந்து காரில் தமிழக கேரள எல்லையான நாடுகாணி, சேரம்பாடி வழியாக வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரிக்கு சென்றார்.

    முன்னதாக மாநில எல்லையான நாடுகாணி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கோஷி பேபி, கூடலூர் நகராட்சி துணைத்தலைவர் சிவராஜ் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்திக்கு சால்வை அணிவித்தும், பூங்கொதது அளித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி தொண்டர்களுடனும் கைகுலுக்கினார். அப்போது தொண்டர்கள் சிலர் ராகுலுடன் போட்டி, போட்டு செல்பி புகைப்படம் எடுத்தனர்.

    தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர், கூடலூர் நிலபிரச்சினைக்கு தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என ராகுல்காந்தியிடம் முறையிட்டனர். அதனை கேட்டு கொண்ட ராகுல்காந்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    இதேபோல் பந்தலூர் பகுதியிலும் அவரை வரவேற்க ஏராளமான குழந்தைகள், காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

    அப்போது குழந்தைகள் ராகுல் ஜி, ராகுல் ஜி என சத்தமாக அழைத்தனர். இதை கேட்ட ராகுல்காந்தி காரை நிறுத்துமாறு கூறி விட்டு, காரை விட்டு கீழே இறங்கினார்.

    அவரை குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ராகுல்காந்தி குழந்தைகளுடன் கைகுலுக்கி புகைப்படமும் எடுத்து கொண்டார்.

    பின்னர் ராகுல்காந்தி, காரில் ஏறி கையை அசைத்தவாறு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். தொடர்ந்து அவர் இரவில் சுல்தான்பத்தேரியில் தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று அவர் தனியார் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவை தொடங்கி வைக்கிறார். வயநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

    வயநாட்டில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நாளை கொச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    • 7 பெண்களுக்கு கறவை மாடு வாங்க வங்கி கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
    • அண்ணாமலைக்கு மகளிர் குழுவினர் அணிவகுத்து நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அடுத்த கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவனத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வினோபாஜியின் 41-ம் ஆண்டு நினைவு தினம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் உதவி வழங்கும் விழா தொண்டு நிறுவன தலைவர் மாவடியான் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 9 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.95 லட்சத்து 40 ஆயிரம் வங்கி கடன் உதவி வழங்கினார்.

    மேலும், பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அகரப்பேட்டையை சேர்ந்த ஒருவருக்கு ரூ.10 லட்சம் கடன் உதவி, ஏழை பெண்களுக்கு வேஷ்டி- சேலை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து, 7 பெண்களுக்கு கறவை மாடு வாங்க வங்கி கடன் உதவிகளும் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன செயலாளர் கருணாமூர்த்தி, பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில விவசாய பிரிவு செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ஜீவா சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    முன்னதாக கவ்டெசி தொண்டு நிறுவனத்திற்குள் வந்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு மகளிர் குழுவினர் அணிவகுத்து நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • பெரம்பலூரில் தி.மு.க. பைக் பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது
    • அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் தி.மு.க.வினர் வரவேற்றனர்

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்குட்பட்ட மருதையான் கோவிலுக்கு  தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு பைக் பேரணி வந்தடைந்தது. அங்கு  போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு  அளித்தனர். அதன் பின்னர் பைக் பேரணியானது  பெரம்பலூர் மாவட்டத்தை வலம் வந்தது. 

     

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, கோவையில் இருந்து சேலத்திற்கு சாலை மார்க்கமாக சென்றார். கரூர் - கோவை நெடுஞ்சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • முத்தமிழ் தேர் அல ங்கார ஊர்தி ஈரோடு மாவட்டத்தில் இருந்து புன்னம் சத்திரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தடைந்தது.
    • புன்னம் சத்திரம் அரசினர் மேல்நிலைபள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை பார்வை யிடுவத ற்காக வருகை தந்து பார்வையிட்டனர் .

    வேலாயுதம்பாளை யம்,

    கரூர் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா, எழுத்தா ளர் கலைஞர் குழுவின் மூலம் முத்தமிழ் தேர் அல ங்கார ஊர்தி ஈரோடு மாவட்டத்தில் இருந்து புன்னம் சத்திரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தடைந்தது.

    நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், அரவக்கு றிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், துணைத் தலைவர் பிரதாபன் ,நக ராட்சி கவுன்சிலர்கள் மற்று ம் தி.மு.க. ஒன்றிய செய லாளர், தி.மு.க.வின் மாவ ட்ட, ஒன்றிய, கிளை , நகர, நிர்வாகிகள், தொண்ட ர்கள், பொதும க்கள் மற்றும் புன்னம் சத்திரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தனியார் பள்ளிகள், மற்றும் புன்னம் சத்திரம் அரசினர் மேல்நிலைபள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை பார்வை யிடுவத ற்காக வருகை தந்து பார்வையிட்டனர் .

    இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் அருகே முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி வந்த போது கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. தலைமையில் கரூர் மாநகராட்சி மேயர் மற்றும் கட்சி பொறுப்பா ளர்கள், பொதுமக்கள் ,வரவேற்ற னர்.கட்சி பொ றுப்பாளர்கள் அதேபோல் தளவாபாளையம் பகுதிக்கு வந்த கருணாநிதி நூற்றா ண்டு விழா எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை தனி துணை ஆட்சியர் சைபுதீன் ,புகழூர் தாசில்தார் முருகன், மண்மங்கலம் தாசில்தார் குமரேசன் , புகலூர் கிராம நிர்வாக அலுவலர் தனபால்,புஞ்சை தோட்ட க்குறிச்சி பேரூராட்சித் தலைவர் ரூபா, பேரூர் செயலாளர் முரளிராஜா தலைமையில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி கவுன்சிலர்கள் ,வார்டு செயலாளர்கள் ,அந்த பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பொறுப்பாளர்கள், வருவாய்த் துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வரவேற்றனர்.

    வரவேற்பு நிகழ்ச்சியில் கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பார்வை யிட்டனர். அதனைத் தொ டர்ந்து கலைஞர் நூற்றாண்டு தமிழ் தேர் நாமக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றது. பாது காப்பு பணியில் வேலா யுதம்பா ளையம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • மாணவிகள் மலர்தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
    • கருணாநிதியின் எழுத்துக்களை படித்து மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற கலெக்டர் அறிவுரை

    சூலூர்,

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநி தியின் நூற்றாண்டு விழா வையொட்டி, அவரது பன்முகத்தன்மையை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், எழுத்தாளா் கலைஞா் குழுவின் மூலம் முத்தமிழ்த்தோ் என்னும் அலங்கார ஊா்தி தமிழகம் முழுவதும்

    கடந்த 4-ந் தேதி கன்னி யாகுமரியில் தொடங்கிய இந்த பயணம், அனைத்து மாவட்டத்துக்கும் சென்று, டிசம்பர் 4 -ந் தேதி சென்னையில் நிறைவடைகி றது. கருணாநிதி பயன்ப டுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஊா்தி, இன்று காலை கோவை மாவட்டம் சூலூர் புதிய பஸ் நிலையம் வந்தடைந்தது. அலங்கரி க்கப்பட்ட முத்தமிழ் தேர் ஊர்திக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, அரசு அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் திரண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பேனா வடிவிலான ஊர்தியை பார்த்ததும் உற்சாகமடைந்த பள்ளி மாணவிகள் மலர் தூவி மகிழ்ச்சியை வெளி ப்படுத்தினர்.

    இதையடுத்து ஊா்தியில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கலெக்டர் கிராந்தி குமார் பாடி, முன்னாள் முதல்-அ மைச்சர் கருணாநி தியின் எழுத்துக்களை மாணவர்கள் படித்து அதில் உள்ள நெறிகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். தொடர்ந்து முத்தமிழ் தேரை பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செ ன்றனர்.

    இதைத்தொடர்ந்து முத்த மிழ் தேர் அலங்கார ஊர்தி கோவை கொடிசியா வளா கத்துக்கு வந்தது. அங்கும் தி.மு.க.வினர், அதிகாரிகள் மற்றும் மாணவ-மாண விகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரணியை தொடங்கி வைத்தார்.

    மூலனூர்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, மாநில உரிமை மீட்புக்கான தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17 -ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இருசக்கர வாகனப்பேரணி கன்னியாகுமரியில் தொடங்கியது. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே தி.மு.க. இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரணியை தொடங்கி வைத்தார்்.

    அதை தொடர்ந்து பெரியார் மண்டலத்தில் திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மூலனூர் பேரூராட்சி மூலனூர் வருகை தந்த வாகன பேரணியை தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மாவட்ட தி.மு.க செயலாளராகிய இல.பத்மநாபன் வரவேற்றனர். இதில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர , பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்று தொடர்ந்து 3 நாட்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
    • சுற்றுலா பயணிகள் அருவியில் ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை, கவியருவி, டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்க ளுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலாபயணிகள் வருகை அதிகளவு உள்ளது.

    இதில் ஆழியாருக்கு உள்ளூர் சுற்று வட்டார பகுதியிலிருந்தும் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், பழனி, கேரள உள்பட வெளியூ ர்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அதிலும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும். ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையின் நீர்தேக்க பகுதியை பார்வையிட்டு பின், பூங்காவில் சென்று குடும்பத்துடன் பொழுதை கழிக்கின்றனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 11-ந்தேதியில் இருந்து விடுமுறை என்பதால் ஆழியாரில் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது.

    நேற்று தொடர்ந்து 3 நாட்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். அங்கு வந்த பயணிகளின் வாகனங்கள் பூங்கா அருகே உள்ள சாலையோரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.

    இதனால் அடிக்கடி போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. எப்போதும் இல்லாத வகையில் 3 நாட்களில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்திருந்தனர் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதுபோல் ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கு கடந்த 3 வாரமாக வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கடந்த 3 நாட்களாக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து கவியருவிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    அவர்கள், அருவியில் ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர்.

    வெகு நாட்களுக்கு பிறகு கவியருவியில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால், தடை விதிக்கப்பட்ட நவமலை வனப்பகுதிக்கு விதிமீறி பயணிகள் செல்கின்றார்களா என வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்சாயத்து, பேரூர் கடை வீதியில் தனியார் கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது.
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தையால், டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்பட்டு, பேரூர் கள்ளை நெடுஞ்சாலையில் புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

    கரூர்

    குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்சாயத்து, பேரூர் கடை வீதியில் தனியார் கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இங்கு மதுவாங்கி குடிப்பவர்கள், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து வந்தனர்.

    இந்நிலையில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொது மக்கள், பா.ஜ., மக்கள் பிரதிநிதிகள் சார்பில் கடை முற்றுகை, கடைஅடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையால், டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்பட்டு, பேரூர் கள்ளை நெடுஞ்சாலையில் புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திற்கு பஞ்., நிர்வாகம் மற்றும் பா.ஜ.,வினர், பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • சிவகங்கைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மானாமதுரையில் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான செந்தில் நாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்ற அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிவகங்கை மாவட்டம் சார் பில் மானாமதுரையில் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான செந்தில் நாதன் தலைமையில் வர வேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன் னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாகராஜன், கற்பகம் இளங்கோ, மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கருணாகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், நகர் செயலாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பெண்மணிபாஸ் கரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, மண்டல தகவல் தொழில் நுட்ப அணி தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள். செல்வமணி, பழனிச்சாமி, அருள்ஸ்டிபன், சேவியர் தாஸ், ஸ்ரீ தரன், கோபி, ஜெகதீஸ்வரன், ஜெயபிர காஷ், மாவட்ட பாசறை இணை செயலாளர் பிரபு, கூட்டுறவு வங்கி தலைவர் சகாயசெல்வராஜ், சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, நாலு கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், வழக்கறிஞர் மணிமாறன், மாவட்ட தக வல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர் ராமநாதன், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன் மற்றும் ஏராளமானோர் நிர் வாகிகள் கலந்து கொண்ட னர்.

    ×