search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bouquet"

    • சாயல்குடியில் தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன்- தங்கம் தென்னரசுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
    • தி.மு.க. கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன்ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், மாநில இலக்கிய அணி செயலாளர் பெருநாழி போஸ், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பா ரகு, சாயல்குடி நீர்ப்பாசன சங்கத் தலைவர் ராஜாராம், ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, ஊராட்சி மன்ற தலைவர்கள் இதம்பாடல் மங்கள சாமி, காணிக்கூர் தென்னரசி, செல்லபாண்டியன், ஏ. புனவாசல் ராஜேந்திரன், செஞ்சடைநாதபுரம் லிங்கராஜ், டி. கரிசல்குளம் அப்பனசாமி, எஸ். வாகைக்குளம் ஜெயலட்சுமி, வடமலை மூக்கையூர் தொம்மை, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் எஸ்.வாகைகுளம் பால கிருஷ்ணன், டி.கிருஷ்ணாபுரம் இளங்கோவன், வாலிநோக்கம் வகிதாசகர், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அமீர்ஹம்சா, தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ் செழியன், தி.மு.க. முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் சாயல்குடி ராஜேந்திரன், நரிப்பையூர் ராஜபாண்டியன், நரிப்பையூர் கோகுலம் மொபைல்ஸ் மருதுபாண்டியன், தி.மு.க. கிளைச் செயலாளர் குருவாடி சேதுராமன், மேலக் கிடாரம் குமாரராஜா, காலாகுளம் முருகேசன், ஆர்.சி.புரம் பிரான்சிஸ், பிரதிநிதி பழனிச்சாமி. ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் நாகரத்தினம், இளைஞரணி துணை அமைப்பாளர் நந்தகுமார், பிரமுகர் காலாகுளம் சேகர் உள்ளிட்ட தி.மு.க. கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
    • தொடர்ந்து திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    நாகப்பட்டினம்:

    சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலரை தரிசிக்க வந்தார்.

    சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் நாகை ஆயுதப்படை மைதானம் வந்து இறங்கிய அவரை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அதனைத் தொடர்ந்து கார் மூலம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் சாமி தரிசனம் செய்தார்.

    தரிசனத்தை முடித்து விட்டு நாகை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலமாக சென்னைக்கு செல்கிறார்.

    அதனைத் தொடர்ந்து திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    ×