search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடியில், முதல்-அமைச்சருக்கு நகராட்சி தலைவர் தலைமையில் சிறப்பான வரவேற்பு
    X

    புளியங்குடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள்.

    புளியங்குடியில், முதல்-அமைச்சருக்கு நகராட்சி தலைவர் தலைமையில் சிறப்பான வரவேற்பு

    • தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு வருகை தந்தார் .
    • நிகழ்ச்சி முடிந்த பின் புளியங்குடிக்கு வருகை தந்த முதல்- அமைச்சருக்கு புளியங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் மேள தாளங்கள் முழங்க நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு வருகை தந்தார் . நிகழ்ச்சி முடிந்த பின் புளியங்குடிக்கு வருகை தந்த முதல்- அமைச்சருக்கு புளியங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் மேள தாளங்கள் முழங்க நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து முதல்-அமைச்சரை வரவேற்றனர். நகராட்சி சேர்மன் முதல்-அமைச்சருக்கு மலர் கொத்து வழங்கி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, முன்னாள் நகர பொறுப்பாளர் ராஜ்காந்த், நகர் மன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ரெஜிகலா, பீர்பாத் சாகுல்ஹமீது , சித்ரா செல்வக்குமார், செந்தாமரை, மைதீன் அப்துல்காதர், சங்கர நாராயணன், முகமது நைனார், சேக் காதர்மைதீன், நைனார், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் பிச்சையா, குகன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நகர் முழுவதும் சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் நின்று முதல்-அமைச்சரை வரவேற்றனர்.றனர்.

    Next Story
    ×