என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவகிரியில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.
சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
- தென்காசி மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
- வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., ராயகிரி பேரூர் செயலாளர் குருசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் மருதப்பன், யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவர் சரவண குமார், தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், துணைத் தலைவர் மாடசாமி, செயலாளர் பொன் செந்தில்குமார், கவுன்சிலர்கள், பெரி யாண்டவர், பாலமுருகன், தங்க ரத்தினராஜ், நெல் கட்டும்செவல் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி யராஜா, கவுன்சிலர்கள், உள்ளார் தளவாய்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா கணேசன், துணைத் தலைவர் ரமேஷ், செயலாளர் பொறுப்பு சண்முகையா, கவுன்சிலர்கள், வாசுதேவநல்லூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத் தலைவர் லைலா பானு, செயல் அலுவலர் மோகனா மாரியம்மாள் மற்றும் வார்டு உறுப்பி னர்கள், விஸ்வை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிமணிகண்டன், செயலர் உமாமகேஸ்வரி, கவுன்சிலர்கள், சிவகிரி ஆயில் ராஜா பாண்டியன், மருதுபாண்டியன், மாரித்துரை, சி.எஸ்.மணி, வார்டு உறுப்பினர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், விக்னேஷ், முத்துலட்சுமி தங்கராஜ், பாலகுரு, அவைத்தலைவர் துரைராஜ், புல்லட் கணேசன், ராமச்சந்திரன், இளையராஜா, உரக்கடை சக்திவேல், முத்துராஜ், மணிகண்டன், விக்கி, முனியராஜ், மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள், தென்காசி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த திருவேங்கடம், குருவிகுளம், சங்கரன்கோவில் வடக்கு தெற்கு அனைத்து பகுதியி லிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகிரி நீதிமன்றம் அருகே மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் மருதப்பன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் முத்துவேலன், வேலாயுதம், வன்னிராஜா, பேட்ரிக்பாபு, சின்னத்துரை, மாலாதேவி, முருகேசன், குமஸ்தாக்கள் கருப்பையா, ராமராஜ், செல்வகுமார், தங்கப்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே எஸ்.டி.குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் தலைமையில், சேர்மன் எஸ்.டி.முருகேசன் முன்னிலையில் முதல்-அமைச்சருக்கு மலர்க்கொத்து அளித்து வரவேற்பு அளிக்க ப்பட்டது. இதில் ஒருங்கி ணைப்பாளர் அகஸ்டின், ஆசிரி யர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.






