search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சியான வரவேற்பு அளிக்க வேண்டும்
    X

    ராமநாதபுரத்தில் நடந்த தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் பேசினார்.

    மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சியான வரவேற்பு அளிக்க வேண்டும்

    • மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சியான வரவேற்பு அளிக்க வேண்டும் என மாவட்ட தி.மு.க. செயலாளர் பேசினார்.
    • மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரவீன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் பட்டினம்காத்தான் தனியார் மகாலில் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் அவைத்த லைவர் சத்தியமூர்த்தி தலைமையில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் வருகிற 30-ந்தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகை தரும் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் பேசிய தாவது:-

    முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகை தரும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை மாவட்ட எல்லையான பார்த்தி பனூரில் எழுச்சியோடு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி குறைந்தபட்சம் 25 ஆயிரம் தொண்டர்கள் வருகை தர வேண்டும்.

    நாம் அளிக்கும் சிறப்பான வரவேற்பு எட்டு திக்கும் பரவ வேண்டும். மன கசப்புகளை தள்ளி விட்டு அனைவரும் ஒன்றிணைந்து வரவேற்பதற்கு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    மாவட்ட பொருளாளர் முருகேசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.-மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் நல்ல சேதுபதி, செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மாவட்ட துணைச்செயலாளர் ஆதித்தன், மாநில இலக்கிய அணி பெருநாழி போஸ், ராமேசுவரம் நகர்மன்ற தலைவர் நாசர்கான், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மண்டபம் பேரூர் செயலாளர் ரகுமான் மரைக்காயர், கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அகமது, இளைஞரணி அமைப்பாளர் ஹமீது சுல்தான், மாணவரணி அமைப்பாளர் இப்திகார், கவுன்சிலர் சுகைபு உள்பட ஏராளமான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தி.மு.க.வில் இணைந்தனர். அனைவருக்கும் மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து வரவேற்றார்,

    மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரவீன் நன்றி கூறினார்.

    Next Story
    ×