search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kavundampalayam"

    • மழையின் காரணமாக சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
    • 3 வருடங்களாக பாலம் வேலை நடைபெறுகிறது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மேட்டுப்பா ளையம் சாலையில் ஜி.என்.மில்ஸ் அருகே கடந்த 3 வருடங்களாக பாலம் வேலை நடைபெறுவதால் அருகிலுள்ள சர்வீஸ் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.

    கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இரவில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர்.

    வெள்ளக்கிணர் பிரிவு அருகே கோவையில் இருந்து வந்த தனியார் பஸ் நேற்று மாலை குழியில் சிக்கிக்கொண்டது. பொதுமக்கள் மற்றும் பலர் அதனை ஒருமணி நேரம் போராட்டி வெளியே கொண்டு வந்தனர். இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறும்போது, பாலம் வேலைகள் நடைபெறுவதால் சர்வீஸ் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது.

    அதனை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் வேலை ஆரம்பித்த காலத்தில் இருந்தே போடவில்லை. அதிலேயே வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பலத்த மழையின் காரணமாக மேலும் அந்த சாலைகள் பழுதடைந்துள்ளது.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம் சாலையில் அத்திகடவு குடிநீர் விரிவு படுத்துவதற்கும், கேஸ் பைப் அமைக்க தொண்டப்பட்ட குழிகளும் மூடப்படுவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நேரில் பார்வையிட்டு சாலையை செப்பினிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வரும் பால வேலையை விரைவாக முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    • கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நாடு முழுவதும் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
    • சிறுவர்கள் அதில் இருந்த வெண்ணையை போட்டி போட்டு எடுத்து ரசித்து ருசித்தனர்.

    கவுண்டம்பாளையம்

    கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நாடு முழுவதும் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கிராமத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    அதிகாலை கணபதி ஹோமத்து டன் விழா தொட ங்கியது. அபிஷேக பூஜை, சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாலை நடைபெற்ற உரியடி நிகழ்ச்சியில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் பங்கேற்றனர். உரியடிப்பவர்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி உரியை அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டனர்.

    வெண்ணை நிரப்பட்ட உரி பானையை அடித்து உடைத்த சிறுவர்கள் அதில் இருந்த வெண்ணையை போட்டி போட்டு எடுத்து ரசித்து ருசித்தனர். மேலும் உரிய அடித்த சிறுவர் மற்றும் பெண்களுக்கு பரிசுகள் விழா குழுவினர் சார்பாக வழங்கினர்.

    தொடர்ந்து 40 அடி உயரம் கொண்ட வழுக்கு மரம் தயார் செய்யப்பட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடைபெற்றது. எண்ணை, கடுகு, அரப்பு, கற்றாளை உள்ளிட்டவைகளைக் கொண்டு வழுக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மரத்தில் சிறுவர்கள், இளை ஞர்கள் போட்டி போட்டு ஏறினர். இறுதியில் ஒரு இளைஞர் 40 அடி உயர வழுக்கு மரத்தில் ஏறி உச்சியில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருட்களை எடுத்தார். இதை சுற்று வட்டாரங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்தனர்.தொடர்ந்து அலங்கரிக்க ப்பட்ட வாகனத்தில் கிருஷ்ணர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணர் கோவில் இறைவழிபாடு விழாகுழுவினர் செய்திருந்தனர்.

    • வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • 70 வயதுக்கு மேல் உள்ள தம்பதிகளுக்கு பொட்டு போட்டு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை உருமாண்டம்பா–ளையம் பண்ணாரியம்மன் கோவிலில் 3-வது ஆடி–வெள்ளியை முன்னிட்டு வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் காலை 10 மணியளவில்கல்யாண விநாயகர் மற்றும் பண்ணாரியம்மனுக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் நடைபெற்றன.

    அதற்கு பிறகு மதியம் 1 மணியளவில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், விரளி மஞ்சள், மஞ்சள் அரிசி, தாலி மஞ்சள் சரடு, வளையல், மிட்டாய், பூக்கள், துணிப்பைகள் வைத்து அணிக்கூடையில் கு–ழந்தைகள் எடுத்துச்செல்ல சிறப்பு பூஜை–கள் செய்யப்பட்டன.

    அதில் விநாயகர், வில்வ–மரம், சுற்றுப்பூஜைகள் நடைபெற்றன. அப்போது அம்மனுக்கு உகந்த கொம்பு ஊதுதல் மற்றும் மத்தளம் அடிக்கப்பட்டன. பூசாரி வாய்க்கட்டு பூட்டு போட்டு சிறப்பு வரலட்சுமி நோன்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் பிரசா–தங்கள் வழங்கப்பட்டன.

    மேலும் ஊரில் உள்ள பேரன், பேத்தி எடுத்த 70 வயதுக்கு மேல் உள்ள தம்பதிகளுக்கு பொட்டு போட்டு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.

    அதன்பிறகு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் வரலட்சுமி பூஜையின்போது, அணிக்கூடையில் கொண்டு–வரப்பட்ட எலுமிச்சை பழம் உள்ளிட்டவைகளை மஞ்சள் பையில் போட்டு வழங்கப்ட்டன. மேலும் வயதான தம்பதிகள் வந்திருந்த சுமங்கலி பெண்கள் மற்றும் அனைத்து பக்தர்களுக்கும் மஞ்சள் பச்சரிசி மற்றும் பூக்கள் தூவி ஆசீர்வாதம் செய்தனர். பக்தர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மன் அருள் பெற்றனர். 

    ×