என் மலர்
நீங்கள் தேடியது "வரலட்சுமி விரதம்"
- பூஜைக்கு வந்த சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- கலசத்து நீரை துளசி செடியில் ஊற்றி விட வேண்டும்.
சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் கடைப்பிடிக்கும் விரதங்களுள் முக்கியமானது வரலட்சுமி விரதம். இது கணவனின் ஆயுள், ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் வரலட்சுமியை என்றென்றும் தங்கள் வீட்டிலேயே தங்க வைப்பதற்காக மேற்கொள்ளும் விரதம். ஆண்டுதோறும் ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக் கிழமை அன்று வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வரலாறு: சவுராஷ்டிராவை ஆண்ட பத்ரச்ரவா மன்னனின் மனைவி கசந்திரிகா. இவர்களுக்கு ஏழு ஆண் மகன்கள் ஒரு பெண் குழந்தை. கசந்திரிகாவின் நற்குணங்களால் கவரப்பட்ட மகாலட்சுமி, அவள் மீது கொண்ட கருணையால் அருளாசி வழங்கும் எண்ணத்தில் கசந்திரிகாவின் வீடு தேடி ஒரு பழுத்த சுமங்கலிப் பெண்ணாகச் சென்றாள்.
அந்தப் பெண்ணைப் பார்த்ததும், "அம்மா, நீங்கள் யார்? என்று வினவினாள் கசந்திரிகா. அதற்கு அந்த சுமங்கலிப் பெண், "உத்தமியே மகாலட்சுமி அவதரித்த இந்த துவாதசி வெள்ளிக்கிழமையன்று நன்றாக உண்டு, தாம்பூலம் தரித்துக் கொண்டு, பகல் வேளையில் உறங்கிக் கொண்டிருக்கிறாயே?" என்று கேட்டாள். தவறை சுட்டிக் காட்டியதும் ஆணவம் கண்ணை மறைக்க கோபமே கொள்ளாத கசந்திரிகா சுள்ளென்று சினம் கொண்டாள்.
கோபத்தின் உச்சியில் என்ன செய்கிறோம் என்ற நினைவின்றி அந்தப் பழுத்த சுமங்கலியின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு, "எனக்கே புத்தி சொல்கிறாயா? என் கண் முன் நிற்காமல் உடனே ஓடி விடு" என்று கூறி துரத்தி விட்டாள். அழுதபடி வெளியே வந்த அந்த அம்மணியைக் கண்ட கசந்திரிகாவின் மகள் சியாமா, 'அம்மா ஏன் அழுகிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்" என்று கேட்டாள்.
"பெண்ணே, உன் தாயாருக்கு நல்லது சொன்னேன். அதற்காக என்னை அடித்து அவமானப்படுத்தி துரத்தி விட்டாள். அதனால்தான் இங்கிருந்து திரும்பிப் போகிறேன்" என்றாள். உடனே சியாமா அந்தப் பெண்ணை ஆசுவாசப்படுத்தி அமரச் செய்து, "அந்த நல்லதை எனக்குச் சொல்லுங்கள். நான் கேட்கிறேன்" என்றாள். மனம் குளிர்ந்த மகாலட்சுமி, அந்தக் கன்னிப் பெண் சியாமாவுக்கு வரலட்சுமி விரதத்தின் மகிமை மற்றும் அதை அனுஷ்டிக்கும் வழிமுறைகளைப் பற்றி எடுத்து கூறினாள்.
மகாலட்சுமி எடுத்து தந்த நோன்பு முறையை இம்மி பிசகாமல் கடைப்பிடித்து வந்தாள் சியாமா. அதனால் அந்த வீட்டிலேயே வரலட்சுமி தங்கிவிட, அங்கே செல்வமும், அமைதியும் நிலையாகக் குடியிருந்தன.
சியாமா, திருமணப் பருவம் எட்டியதும் மாலாதரன் என்ற மன்னனுக்கு மணமுடித்துக் கொடுத்தான் பத்ரச்ரவா. அதையடுத்து கணவனின் கரம்பிடித்து புகுந்த வீட்டுக்குச் சென்ற சியாமா, இத்தனை நாள் பூஜித்து வந்த வரலட்சுமி தேவியின் திருமுகத்தையும் தன்னுடன் எடுத்து சென்றாள்.

புகுந்த வீட்டிலும் வரலட்சுமி விரதத்தைத் தவறாது கடைப்பிடித்தாள். அதனால் அவர்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகின. ஆனால் கசந்திரிகாவோ மகாலட்சுமியை அவமானப்படுத்தி துரத்தி விட்டதால் அவளை விட்டு நீங்கி நிரந்தரமாக சியாமா வீட்டிலேயே தங்கி விட்டாள் வரலட்சுமி. இதனால் பத்ரச்ரவாவும் கசந்திரிகாவும் பகைவர்களால் விரட்டப்பட்டு காட்டுக்குள் ஓடி ஒழிந்து உணவுக்குக்கூட வழியற்று பராரியாகத் திரிந்தனர்.
அவர்களுக்காக சியாமா அனுப்பி வைத்த தங்கக்காசுகளும், கரித்துண்டுகளாக மாறின. சியாமாவுக்கு தனது தாய், சுமங்கலிப் பெண்ணாக வந்த மகாலட்சுமியை அவமதித்தது நினைவுக்கு வந்தது. அம்மாவிடம் நடந்தவைகளை நினைவுப்படுத்தி, அவள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, நோன்பின் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தாள். அதன்படியே கசந்திரிகாவும் வரலட்சுமி நோன்பு இருக்கத் தொடங்கினாள்.
அதன்பிறகு அவர்கள் வாழ்வில் வசந்தம் திரும்ப, இழந்த செல்வங்களும் அதிகாரமும் மீண்டும் கிடைத்தன.
மகாலட்சுமியே நேரடியாக வந்து விரதமுறைகளைச் சொல்லிக் கொடுத்து மேற்கொள்ளச் செய்ததால். இந்த விரதத்தை அனுசரிப்பவர்களும் குரு முகமாக, யாரேனும் பெரியவர்கள் எடுத்து கொடுக்க அதை தீக்ஷையாகப் பெற்று விரதத்தை மேற்கொள்வது வழக்கம். இதற்காக திருமணமாகிப் புகுந்த வீட்டுக்குச் சென்ற பெண்ணை ஆடி நோன்புக்காக மறுவீடு அழைத்து வந்து, நோன்பு நோற்கும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து நோன்பு நோற்கச் செய்வார்கள்.
இதில் வெள்ளியிலான அம்மன் முகத்தை கலசத்தில் வைத்து அலங்கரித்தல், செம்பில் அம்மன் முகத்தை வரைதல், சுவற்றில் அம்மன் ரூபத்தை தீட்டுதல் என்று பல்வேறு முறைகள் உள்ளன. அந்தந்த வீட்டு வழக்கப்படி நோன்பு முறைகளைக் கற்றுக் கொள்ளும் பெண்கள் தங்கள் வீட்டில் தொடர்ந்து நோன்பைக் கடைப்பிடிப்பார்கள்.
மண்டபம் அமைத்தல்: முதல் நாள் வியாழக்கிழமையே வீட்டை சுத்தப்படுத்தி, தோரணங்கள் கட்டி அழகுப்படுத்த வேண்டும். மரத்தாலான இருக்கையை (ஸ்டூல்) நன்கு கழுவி காயவைத்து அதில் மண்டபம் அமைப்பது வழக்கம். சில வீடுகளில் இதற்காகவே தனியாக ஒரு மர இருக்கையை ஒதுக்கி வைத்திருப்பார்கள். அதற்கு வெள்ளையடித்து காவி வர்ணம் பூசி, மண்டபம் அமைக்கும் இடத்தில் கொண்டுவந்து கிழக்கு முகமாகப் போட வேண்டும்.
அதன்மேல் ஒரு பட்டாடையை விரித்து நான்குபுறமும் மாவிலைத் தோரணங்களை சுற்றிக் கட்ட வேண்டும். நான்கு கால்களிலும் சிறிய வாழைக் கன்றுகளைக் கட்டி அலங்கரிக்கவும். இருக்கையின் உட்புறம் இரு கால்களுக்கு இடையில் ஒரு மனைப்பலகையைப் போட்டு அதில் மாக்கோலமிட்டு மண்டபத்தை தயார்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.
அம்மனின் திருமுகத்தில் காதோலை, கருகமணி அணிவித்தல் மற்றும் இன்னபிற அலங்காரங்களையும்கூட செய்து வைத்து கொள்ளலாம். இதில் சிலர் மண்டபம் எதுவும் அமைக்காமல் வெறுமனே மனை மீது கலசம் அமைப்பவர்களும் உண்டு, இன்னும் சிலர் சுவற்றில் கஜலட்சுமி உருவத்தை வரைந்து வைத்து நோன்பு நோற்பதும் உண்டு. அவர்கள் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். இதுபோக நோன்பு சரடுகள் மற்றும் கோடி தந்தம் போன்றவற்றையும் தயாராகச் செய்து வைத்து கொள்ளலாம்.
விரத பூஜை: வெள்ளிக்கிழமை காலையில் எழுந்ததும் எண்ணெய் தேய்த்து குளித்து தூய ஆடையணிந்து பூஜைக்குத் தயாராக வேண்டும். பூஜையறையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து, மண்டபத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் மனை மீது இலை விரித்து பச்சரிசியைப் பரப்ப வேண்டும். கலசம் வைக்கும் தாம்பாளத்தில் நெல் அல்லது கோதுமையைப் பரப்பி அதன்மீது நீர் அல்லது தானியம் நிரப்பிய பூரண கலசக் கும்பத்தை வைக்கவும்.
முகம் வைக்கும் பழக்கம் இருப்பவர்கள் தேங்காய் மீது அம்மனின் முகத்தைக் கட்டலாம். செம்பு மீது அம்மன் உருவத்தை வரைபவர்கள் சுண்ணாம்பைக் கரைத்து அம்மனின் முகத்தை வரையலாம். அந்தத் தாம்பாளத்தை வீட்டின் மையக் கூடத்தில் போடப்பட்டிருக்கும் ஒரு மனை மீது வைத்து, சுமங்கலிப் பெண்கள் இருபுறமும் பிடித்து தூக்கிக் கொண்டு, வரலட்சுமி அம்மனை வீட்டுக்குள் அழைக்கும் பாடலை பாடியபடி மண்டபம் வைத்திருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து மண்டபத்தில் பரப்பியிருக்கும் அரிசி மீது கலச ஸ்தாபனம் செய்ய வேண்டும்.
ஒரு வெற்றிலை மீது மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து, பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு அருள் புரிய வேண்டி விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். பூர்வாங்க பூஜையைத் தொடர்ந்து வரலட்சுமியைக் கலசத்தில் ஆவாஹனம் (எழுந்தருளச்) செய்து, பிரதான பூஜையைத் தொடங்க வேண்டும்.
நைவேத்திய பதார்த்தங்கள்: பூஜை முடிந்ததும் நைவேத்யமாக இட்லி, அன்னம், பருப்பு, சாம்பார், ரசம், மோர்க் குழம்பு, அவியல், கூட்டு, கறி வகைகள், வடை, சர்க்கரைப்பொங்கல், பாயசம், வெள்ளரிக்காய் மற்றும் நெல்லிக்காய் பச்சடி, தேங்காய் பூரணம்-எள்ளு பூரணம் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை, கோசம்பரி, வாழைப்பழம், கொய்யா, மாதுளை, நாவல் பழங்கள் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம்.
இத்தனை வகைகள் முடியாவிட்டால் பழ வகைகள் மற்றும் பாயாசம் மட்டும் கூட படைக்கலாம்.
நிவேதனம் முடிந்ததும், தீப, தூபங்கள் காட்டி வணங்க வேண்டும். பிறகு அம்மனை மனதாரப் பிரார்த்திக் கொண்டு, நோன்புச் சரடை முதலில் அம்மனுக்கு மாலையாக அணிவிக்க வேண்டும். அதன்பிறகு வீட்டின் மூத்த பெண்மணிக்கு அணிவித்துவிட்டு, வரிசையாக எல்லோருக்கும் அணிவிக்க வேண்டும். சரடு கட்டிக் கொள்ளும்போது ஒரு மூடி தேங்காய், ஒரு வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை கைகளில் ஏந்திக் கொண்டு வலது கையில் சரடைக் கட்டிக் கொள்ள வேண்டும்.
இவ்விதமாய் எல்லாம் சுபமாய் முடிந்ததும் அம்மனுக்கு மங்கள ஆரத்தி எடுத்து, வாசலில் போட்டிருக்கும் கோலத்தின் நடுவில் ஆரத்தி கலவையை ஊற்ற வேண்டும். பிறகு அனைவரும் கூடியிருந்து பிரசாதங்களை உண்ட பிறகு. பூஜைக்கு வந்த சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாலை ஆரத்தி: மாலையில் விளக்கேற்றி அஷ்டோத்திரம் சொல்லி, பாடல்கள் பாடி பூஜை செய்து, அவல், வெல்லம் அல்லது ஏதேனும் சுண்டல் வகைகளை நைவேத்யம் செய்தல் வேண்டும். தீபம் காட்டி மங்கள ஆரத்தி எடுத்து அம்மனை நித்திரை கொள்ள செய்ய வேண்டும். இரவில் பிரசாதங்களை மட்டும் உண்டுவிட்டு உறங்க வேண்டும்.
புனர் பூஜை: மறுநாள் காலையில் புனர் பூஜை செய்து பால், பழம், கல்கண்டு ஆகியவற்றைப் படைத்து தீபம் காட்டிவிட்டு, மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும். அதன்பிறகு அம்மனை கலசத்துடன் எடுத்து கதவுக்கு பின்புறமாய் வைத்துவிட வேண்டும் அல்லது வீட்டின் அரிசிப் பெட்டிக்குள் வைத்து மூடி விடவேண்டும். இதை அவரவர் வீட்டு வழக்கப்படி செய்வது உத்தமம். இப்படிச் செய்வதால் நம் வீட்டுக்கு வந்த வரலட்சுமி அம்மன் நம்மோடு நம் வீட்டிலேயே தங்கி விடுவதாக ஐதீகம்.
சிறிது நேரம் கழித்து கலசத்தை கலைத்து அம்மன் முகத்தை பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும். கலசத்து நீரை துளசி செடியில் ஊற்றி விட வேண்டும். (கலசத்தில் தானியங்கள் போட்டிருந்தால் அதை நாம் சமைக்கும் தானியத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.) கலசத்தில் போட்டிருந்த நாணயத்தைப் பணப் பெட்டிக்குள் வைத்துக் கொள்வது வழக்கம். அதன்பிறகு மண்டபத்தை கலைத்து பூஜையறையை சுத்தம் செய்து கொள்ளலாம். இவ்விதமாய் வரலட்சுமி விரத பூஜையை சுபமாய் நிறைவேற்றிட வீட்டில் என்றும் செல்வமும் வளமும் நிலைத்திருக்கும்.
- திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
- செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது.
மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் எல்லா வளமும் கிடைக்கும். லட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்க 12 வழிகள் உள்ளன.
1. தன்னம்பிக்கை மற்றும் தெய்வநம்பிக்கை வேண்டும்.
2. சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.
3. காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும்.
4. வரும் சந்தர்ப்பங்களை நழுவவிடக்கூடாது.
5. உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும்.
6. தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.
7. செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.
8. திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
9. செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது.
10. லாபத்தால் மகிழ்ச்சியும், நஷ்டம் வந்தால் வருத்தமும் அடையக்கூடாது.
11. சுயநலம் அறவே இருக்கக் கூடாது.
12. எந்த சூழலிலும் கடன் வாங்கவே கூடாது.
மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே லட்சுமியின் அருளைப் பெற முடியும்.
- வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது.
- லட்சுமியின் கைகளில் இருந்தே வில்வம் தோன்றியது என்று காத்யாயனர் கூறுகிறார்.
லட்சுமிக்கு மிகவும் பிடித்தமான இலை வில்வம் என்பது பலருக்குத் தெரியாது. திருவஹிந்திரபுரத்தில் தாயாருக்கு வில்வ அர்ச்சனையே செய்யப்படுகிறது.
வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது. சவுபாக்கிய சஞ்சீவினியில் லட்சுமி வில்வக்காட்டில் மரத்தடியில் தவம் செய்பவளாக வருணிக்கப் பட்டுள்ளது.
வாமன புராணத்தில் லட்சுமியின் கைகளில் இருந்தே வில்வம் தோன்றியது என்று காத்யாயனர் கூறுகிறார்.
காளிகா புராணத்தில் லட்சுமி வில்வமரங்கள் அடங்கிய காட்டிலேயே தவம் செய்தாள் என்று குறிப்பிடுகிறது.
- தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான்.
- விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.
லட்சுமி நெல்லி மரத்திலும் வாசம் செய்கிறாள். அந்த ''நெல்லி'' அருநெல்லி மரமல்ல, சாதாரண பெருநெல்லி மரமே ஆகும். நெல்லிக் கனியை ஆமலகம் என்று கூறுவார்கள். நெல்லியை அரைத்து தேய்த்துக் குளித்தால் உடம்பின் அழுக்குகளையும், நெல்லிக்கனியை சாப்பிட்டால் நம் உடம்புக்குள் உள்ள அழுக்குகளையும் நீக்கும்.
அதனாலயே அப்பழுக்கற்ற தூய தலைவன் விஷ்ணுவுக்கு அமலன் என்ற பெயர் உண்டு. அதுமட்டுமல்ல தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான். தாத்ரீ என்ற பதம் பூமாதேவியை குறிக்கும். ஆம் பூமாதேவியும் தேவியின் அம்சம்தானே.
ஹரிபலம் என்றாலும் நெல்லிக்கனிதான் இது விஷ்ணுவைக் குறிக்கும் பெயராகும். எனவே பல இடங்களில் விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.
நெல்லி மரத்தின் நிழலில் நின்று தானம் செய்வதும் அன்னமளிப்பதும் மிகுந்த சிறப்புமிக்கது. அதிக பலன்களை தரக்கூடியது. நெல்லி இலைகளால் விஷ்ணுவையும் மகாலட்சுமியையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்.
- துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.
- துளசியில் கருந்துளசி எனும் கிருஷ்ண துளசி, வெள்ளை துளசி, காட்டுத் துளசி எனப் பலரகங்கள் உள்ளன.
துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும். துளசியை துளசி, திருத்துழாய் என்றும் சொல்வார்கள். இந்த சொற்களுக்கு தெய்வீக சக்தி என்பதே பொருளாகும். துளசியில் கருந்துளசி எனும் கிருஷ்ண துளசி, வெள்ளை துளசி, காட்டுத் துளசி எனப் பலரகங்கள் உள்ளன.
பாற்கடலில் அமிர்தம் கடைந்த காலத்தில் விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீதன்வந்த்ரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அப்போது ஏற்பட்ட ஆனந்த மிகுதியால் விஷ்ணுவுக்கு ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட்டு அதில் சில துளிகள் அமிர்த கலசத்தினுள் விழுந்தது. அதுவே மரகதப் பச்சை நிறத்தில் ஸ்ரீதுளசி தேவியாக உருவெடுத்தது என்று சொல்வார்கள். அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்ள தேவர்களும் அசுரர்களும் சண்டையிட்ட போது அந்த அமிர்த கலசத்திலிருந்து மேலும் சில துளிகள் பூமியில் விழ அவையே பூமியெங்கும் துளசிச் செடிகளாக உற்பத்தியாயின என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
துளசிதேவி பகவானிடம் பெற்ற வரத்தின்படியே வீட்டில் துளசி மாடம் வைத்து அதற்கு பூஜை செய்பவர்களுக்கும், துளசி பறித்து அதன் திவ்யதளங்களால் விஷ்ணுவை லட்சுமியை அர்ச்சிப்பவர்களுக்கும், இருவரும் சகல சவுபாக்கியங்களையும் தந்து நிறைவில் விஷ்ணு லோகத்திலும் இடம் தந்து அருளுகின்றார்கள்.
நம்மைப் பெற்றெடுத்து வளர்த்து பேணிக்காத்த நம் தாயாரை மதித்துக் காப்பாற்றி அவள் அருளாசிகளைப் பெறுவதும், தந்தையை பக்தி சிரத்தையுடன் உபசரித்து ஆசி பெறுவதும், துளசிச்செடி வைத்து அதற்கு பூஜித்து சேவைகள் புரிவதும் இம்மூன்றும் மனிதருக்கு உத்தம கதியை தரவல்ல சேவைகள் என மகான்கள் கூறி உள்ளனர்.
- ஓம் அம்ருதலட்சுமியே போற்றி ஓம் அனந்தலட்சுமியே போற்றி
- ஓம் சத்யலட்சுமியே போற்றி ஓம் சர்வலட்சுமியே போற்றி
ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்தர சதநாமாவளி
ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அத்ரூஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அன்னலட்சுமியே போற்றி
ஓம் அபயலட்சுமியே போற்றி
ஓம் அலங்காரலட்சுமியே போற்றி
ஓம் அஸ்வாரூடலட்சுமியே போற்றி
ஓம் அஷ்டபுஜலட்சுமியே போற்றி
ஓம் அஷ்டாதசபுஜலட்சுமியே போற்றி
ஓம் அம்ருதலட்சுமியே போற்றி
ஓம் அனந்தலட்சுமியே போற்றி
ஓம் ஆதிலட்சுமியே போற்றி
ஓம் ஆனந்தலட்சுமியே போற்றி
ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
ஓம் இந்திரலட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வர்யலட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார ரூபியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கனகலட்சுமியே போற்றி
ஓம் கற்பகலட்சுமியே போற்றி
ஓம் கனகாபிஷேகலட்சுமியே (20) போற்றி
ஓம் கன்யாலட்சுமியே போற்றி
ஓம் கமலாலட்சுமியே போற்றி
ஓம் கிருபாலட்சுமியே போற்றி
ஓம் கீர்த்திலட்சுமியே போற்றி
ஓம் கோலட்சுமியே போற்றி
ஓம் கோலாபுரிலட்சுமியே போற்றி
ஓம் சத்யலட்சுமியே போற்றி
ஓம் சர்வலட்சுமியே போற்றி
ஓம் சம்பத்ஸ்வரூபியே போற்றி
ஓம் சந்தானலட்சுமியே (30) போற்றி
ஓம் சாந்தலட்சுமியே போற்றி
ஓம் சாகரோத்பவலட்சுமியே போற்றி
ஓம் சித்தலட்சுமியே போற்றி
ஓம் சிவானந்தலட்சுமியே போற்றி
ஓம் சுபலட்சுமியே போற்றி
ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
ஓம் சுவர்ணலட்சுமியே போற்றி
ஓம் சுஸ்மிதலட்சுமியே போற்றி
ஓம் சுகாசனலட்சுமியே போற்றி
ஓம் சௌபாக்யலட்சுமியே (40) போற்றி
ஓம் ஸ்திதலட்சுமியே போற்றி
ஓம் சௌந்தர்யலட்சுமியே போற்றி
ஓம் சுவர்க்கலட்சுமியே போற்றி
ஓம் ஸைன்யலட்சுமியே போற்றி
ஓம் ஜயலட்சுமியே போற்றி
ஓம் ஜகல்லட்சுமியே போற்றி
ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
ஓம் ஜேஷ்டலட்சுமியே போற்றி
ஓம் ஷ்ட்புஜலட்சுமியே போற்றி
ஓம் ஷோடசலட்சுமியே (50) போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தனதலட்சுமியே போற்றி
ஓம் தயாலட்சுமியே போற்றி
ஓம் தான்யலட்சுமியே போற்றி
ஓம் த்ரிகுணலட்சுமியே போற்றி
ஓம் த்வாரலட்சுமியே போற்றி
ஓம் த்விபுஜலட்சுமியே போற்றி
ஓம் த்விபுஜவீரலட்சுமியே போற்றி
ஓம் திவ்யலட்சுமியே போற்றி
ஓம் தீபலட்சுமியே (60) போற்றி
ஓம் தைர்யலட்சுமியே போற்றி
ஓம் துளசிலட்சுமியே போற்றி
ஓம் துக்கநிவாரணியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் நித்தியலட்சுமியே போற்றி
ஓம் பாலலட்சுமியே போற்றி
ஓம் பங்கஜலட்சுமியே போற்றி
ஓம் பிரம்மசோதரியே (70) போற்றி
ஓம் பிரசன்னலட்சுமியே போற்றி
ஓம் பிரகாசலட்சுமியே போற்றி
ஓம் பில்வலட்சுமியே போற்றி
ஓம் பூலட்சுமியே போற்றி
ஓம் புவனலட்சுமியே போற்றி
ஓம் பூஜ்யலட்சுமியே போற்றி
ஓம் பூர்ணலட்சுமியே போற்றி
ஓம் போகலட்சுமியே போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் மாயாலட்சுமியே (80) போற்றி
ஓம் மோஷலட்சுமியே போற்றி
ஓம் மோஹனலட்சுமியே போற்றி
ஓம் யக்ஞலட்சுமியே போற்றி
ஓம் யந்திரலட்சுமியே போற்றி
ஓம் யோகலட்சுமியே போற்றி
ஓம் யௌவனலட்சுமியே போற்றி
ஓம் ராஜலட்சுமியே போற்றி
ஓம் ராஜ்யலட்சுமியே போற்றி
ஓம் ரம்யலட்சுமியே போற்றி
ஓம் ரூபலட்சுமியே (90) போற்றி
ஓம் லட்சுமியே போற்றி
ஓம் லங்காதகனியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஓம் வரதலட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் விஸ்வலட்சுமியே போற்றி
ஓம் வித்யாலட்சுமியே போற்றி
ஓம் வீரலட்சுமியே போற்றி
ஓம் வீர்யலட்சுமியே போற்றி
ஓம் ஞானலட்சுமியே போற்றி
ஓம் ஹம்சவாகினியே போற்றி
ஓம் ஹருதயலட்சுமியே போற்றி
ஓம் ஹிரண்யலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீசக்ரலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீசூக்தலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீப்ரதனாலட்சுமியே போற்றி
- ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
- வாசலில் நின்ற வரலட்சுமியை பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள்.
ஒரு சமயம் லட்சுமிதேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வந்தாள். ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருந்தது.
மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தாள். நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து அந்த இல்லத்தரசி சுலோகங்களாக சொல்லிக் கொண்டு இருந்தாள்.
வாசலில் நின்ற வரலட்சுமியை பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள். மனையை போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அந்த சுமங்கலி இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடந்தது. அதாவது லட்சுமிதேவி எங்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வருவாள்.
- ஒரு கலசத்தை எடுத்து, அதனை சுற்றி மஞ்சள் கயிற்றை கட்ட வேண்டும்.
- குத்துவிளக்கேற்றி வைத்து, கலசத்துக்கு மலர்மாலை கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் சுமங்கலிப் பெண்கள் பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து அழகாக அலங்கரிக்க வேண்டும். பூஜை அறையை மெழுகி கோலமிட்டு மண்டபம் அமைக்க வேண்டும். அதன்பின் வரலட்சுமியின் படம் வைத்து, அதற்கு அலங்காரம் செய்ய வேண்டும். வரலட்சுமி படத்தின் முன்னர் ஒரு வாழை இலையை விரித்து, அதன்மேல் பச்சரிசியை பரப்ப வேண்டும். அதன்மேல் தேங்காய், எலுமிச்சை, பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து, லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும்.
ஒரு கலசத்தை எடுத்து, அதனை சுற்றி மஞ்சள் கயிற்றை கட்ட வேண்டும். அந்த கலசத்தில் அரிசியை நிரப்பி, அதன் மேலே குங்குமம் தடவிய முழுத் தேங்காயை வைக்க வேண்டும். அந்த கலசத்தை இலையில் பரப்பிய அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பூஜையில் மஞ்சள் தடவிய ஒன்பது இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்பு சரடை வைக்க வேண்டும். மஞ்சள் கயிறு என்பது மங்கலத்தின் அறிகுறி ஆகும். வரலட்சுமியுடன் அஷ்ட லட்சுமிகளையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது.
குத்துவிளக்கேற்றி வைத்து, கலசத்துக்கு மலர்மாலை கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் மீது மகாலட்சுமியின் முக பிம்பத்தை பதிக்கலாம். முதலில் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு பூஜையை தொடங்க வேண்டும். பின்பு வரலட்சுமி தேவிக்கான பாடலை பாடி, பூக்களை தூவி தீபங்கள் காட்ட வேண்டும். பூஜையின் முடிவில் ஒன்பது முடிச்சு போட்ட மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பின்பு அனைவருக்கு பிரசாதங்கள் வழங்கலாம்.
வரலட்சுமி விரதமிருந்து வழிபட்டால் அஷ்ட லட்சுமிகளான ஆதி லட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெய லட்சுமி, சந்தான லட்சுமி, கஜ லட்சுமி, வித்யா லட்சுமி ஆகியோரை வணங்கிய பலன்கள் ஒருசேர கிடைக்கும் என்பது ஐதீகம்.
வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பதால், மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும், குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும், கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடு நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். வரலட்சுமியை வழிபட்டு அஷ்ட ஐஸ்வரியங்களையும், வாழ்வின் அனைத்து வளங்களையும் பெறுவோம்.
- சாருமதி தினமும் லட்சுமி தேவியை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
- தன் பெற்றோரின் நிலைமையை அறிந்த சியாமபாலா, ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள்.
வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும், அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்க வேண்டியும் சுமங்கலிப் பெண்கள் கடைப்பிடிக்கும் விரதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு பெண்கள் கடைப்பிடிக்கும் முக்கிய விரதங்களில் இந்த வரலட்சுமி விரதமும் ஒன்று. இந்த வரலட்சுமி விரதம் உருவானது குறித்து பல புராணக் கதைகள் கூறப்படுகிறது.
மகத நாட்டில் குந்தினபுரம் என்ற ஊரில் சாருமதி என்ற பெண், தன் கணவன், மாமனார், மாமியார் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். சாருமதி தினமும் லட்சுமி தேவியை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் தன் குடும்பத்தில் உள்ளவர்களையும் இறை அம்சமாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். இதனால் மனம் மகிழ்ந்த வரலட்சுமி, அவளது கனவில் தோன்றி, ''உனது பக்தியால் மனம் மகிழ்ந்தோம். என்னை நினைத்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் குடிகொள்வேன்'' என்றார். மேலும் கனவில் வரலட்சுமி விரதம் இருப்பதற்கான வழிமுறைகளையும் தேவி அருளினார்.
மறுநாள் அதிகாலையில் கண் விழித்ததும், தன் கனவில் கண்டவற்றை குடும்பத்தினரிடம் கூறினாள் சாருமதி. இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனைவரும் இந்த சிறப்புவாய்ந்த வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டனர். அதன்படி விரதம் இருந்து வரலட்சுமியின் அருளை பெற்றனர். இவர் விரதம் இருந்து பெற்ற நன்மைகளை பார்த்த அந்நாட்டு மக்கள் ஒவ்வொரு வரும் அந்த வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க தொடங்கினர்.
பத்ரச்ரவஸ் என்ற மன்னன், மகாவிஷ்ணுவின் தீவிர பக்தனாக இருந்தார். அவரது மனைவி சுரசந்திரிகா. இந்த தம்பதிகளுக்கு சியாமபாலா என்ற மகள் இருந்தாள். இவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். தன் மகள் மீது அதிக அன்பு கொண்டிருந்த சுரசந்திரிகா அவளது பிரிவு தாங்காமல் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தாள்.
ஒரு சமயம் மகாலட்சுமி தேவி, வயதான சுமங்கலியின் வேடத்தில் சுரசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தார். மகாலட்சுமி, சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாக கூறி, அதை கடைப்பிடிக்கும் படி எடுத்து கூறினார். ஆனால் தன் மகளை பிரிந்த வருத்தத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ யாசகம் கேட்டு வந்திருப்பதாக கருதி அவமானப்படுத்தி வெளியே விரட்டி விட்டாள்.
விரட்டப்பட்ட லட்சுமி தேவியை, அரசியின் மகளான சியாமபாலா சமாதானப்படுத்தினாள். அத்துடன், லட்சுமி தேவியிடம் இருந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கான முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்றாள். இதையடுத்து பக்தியுடன் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தாள். விரதத்தின் மகிமையில் அவள் செல்வ செழிப்பு பெற்று சிறப்பாக வாழ்ந்து வந்தாள். ஆனால் லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோர், எல்லாவற்றையும் இழந்து வறுமையின் பிடியில் சிக்கி ஏழ்மையில் வாடத் தொடங்கினர்.
தன் பெற்றோரின் நிலைமையை அறிந்த சியாமபாலா, ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால் இங்கிருந்த அனுப்பிய தங்கம் எல்லாம் அவர்கள் செய்த தீவினையால் கரியாக மாறி போனது. இதை கேள்விப்பட்டு வருந்திய சியாமபாலா, தன் தாயான சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப் பற்றி சொல்லி பூஜை செய்யும்படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்து பூஜை செய்தாள். அதன்பிறகு விரதத்தின் பலனால் இழந்த செல்வங்கள் பெற்று மீண்டும் சுகவாழ்வு வாழ தொடங்கினாள்.
சித்திரநேமி என்றவள் தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள், தேவர்களுக்கிடையே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நடுவராக இருந்து நியாயமான தீர்ப்பு வழங்குவாள். ஒரு சமயம் கயிலாயத்தில் சிவ பெருமானும், பார்வதி தேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பார்வதி தேவி, ''நாதா நான் உங்களை ஜெயித்து விட்டேன்'' என்றார். ஆனால் அதை மறுத்தார் சிவபெருமான். இதனால் சிவனுக்கும், பார்வதி தேவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியில் இருவரும் சித்திரநேமியிடம் இதற்கான தீர்ப்பை கேட்டனர். அவள், பரமசிவன் தான் போட்டியில் வெற்றி பெற்றதாக கூறினார். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, ''நீ பொய் சொன்னதால் குஷ்டரோகியாகி பொலிவிழந்து தவிப்பாயாக'' என்று சாபமிட்டார். இதையடுத்து தன்னை மன்னித்து அருளும்படி வேண்டினாள் சித்திரநேமி. உடனே மனம் இரங்கிய பார்வதி தேவி, ''நதிக்கரையில் வரலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் உனக்கு ஏற்பட்ட இந்த நிலை மாறும்'' என்று சாபவிமோசனம் அருளினார். சித்திரநேமியும் அவ்வாறே விரதம் இருந்து வரலட்சுமியை வழிபட்டு நோய் நீங்கி சாபவிமோசனம் பெற்றாள்.
- பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கவேண்டும்.
- பூஜை செய்பவர் வலதுபுறமாக இருந்து பூஜை செய்யவேண்டும்.
வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீட்டின் தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து, அதில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். அங்கு சுவற்றில் படமாகவோ அல்லது வெள்ளியில் கிடைக்கும் வரலட்சுமி தேவியின் திருமுகத்தை வைக்க வேண்டும். வரலட்சுமிக்கு ஆடை, ஆபரணங்கள் அணிவிக்க வேண்டும்.
மண்டபத்தில் வாழை இலையின் மீது ஒரு படி அரிசியை பரப்பி, அம்மன் கலசத்தை தாமிர செம்பிலோ அல்லது வெள்ளியால் ஆன செம்பிலோ வைக்க வேண்டும்.
அந்த செம்பின் மீது சந்தனத்தை பூசி, அதன் மீது வரலட்சுமி அம்மனின் முகத்தை வரையலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் அம்மன் முகத்தை வாங்கி வந்து பதியலாம்.
கலசத்தின் உள்ளே தேவையான அளவு அரிசியைக் போட்டு அதன் வாய்ப்பகுதியில் மாவிலைகளை சுற்றி வைத்து நடுவில் ஒரு தேங்காயை வைக்கவேண்டும்.
அந்த தேங்காய்க்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு இட்டு பூ சூட்ட வேண்டும். இவை எல்லாவற்றையுமே முதல் நாள் மாலையிலேயே செய்து விட வேண்டும்.
மறுநாள், வரலட்சுமி விரதம் அன்று பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கவேண்டும். பூஜை செய்பவர் வலதுபுறமாக இருந்து பூஜை செய்யவேண்டும்.
சாதம், பாயாசம், வடை, கொழுக்கட்டை, இட்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து நிவேதனம் செய்யவேண்டும். ஐந்து முக விளக்கை ஏற்றி வைக்கவேண்டும்.
எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.
அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்து விட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.
பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயாசம் செய்து நிவேதனம் செய்யலாம்.
இந்த விரதம் மேற்கொள்வதால் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும்.
தர்ப்பண பூஜை
தர்ப்பண பூஜை என்பது இறந்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்யும் பூஜைகள் ஆகும். நம் மூதாதையர்கள் எல்லாருமே பித்ரு லோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது. மனிதனாக, புல், பூண்டாக, விலங்குகளாக, தாவரங்களாகப் பலர் பிறப்பெடுக்கலாம். அவரவர் தீவினைக் கர்மங்களுக்கு ஏற்ப ஆவி ரூப பிறவிகளும் கொண்டிருக்கலாம்.
நம் மூதாதையர்களான பித்ருக்கள் அனைவரும் நினைத்தபடியெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, இறந்த திதி, மாதப்பிறப்பு, மாளய பட்ச நாட்கள் போன்ற புனித தினங்களில் மட்டும் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, அவர்கள் சூட்சும தேகத்தில் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் தர்ப்பண பூஜைகளைத் செய்தால் அவர்கள் அவற்றை இங்கு நேரடியாகப் பெற்று ஆசி அளிப்பார்கள்.
தர்ப்பண பூஜை நாட்களில் நாம் யாருக்காக, எந்தக் காரணத்துக்காகத் தர்ப்பணம் அளிக்கின்றோமோ, அதைப் பொறுத்து தர்ப்பண பூஜை முறைகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு தர்ப்பண பூஜை முறைக்கும் வெவ்வேறு விதமான சிறப்புப் பெயரும் உண்டு. அதைப்போலவே இறந்தவருடைய வாழ்க்கை முறை, செய்து வந்த தொழில், உத்தியோகம், அவரது உயிர் பிரிந்த விதம் இவ்வாறு எத்தனையோ காரண, காரியங்களைக் கொண்டு அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதற்கான வெவ்வேறு விதமான தர்ப்பண பூஜை முறைகளைச் சித்த புருஷர்கள் அருளியுள்ளனர்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை யாராலும் யூகிக்க இயலாது. விபத்து, தற்கொலை, உறவினர், நண்பர்கள் தரும் வேதனைகள், வறுமை, கொடிய நோய் போன்ற பல காரணங்களால் மரணம் ஏற்படுவதுண்டு.
ஏன், நம் தினசரி வாழ்க்கையில் கூட எத்தனையோ கொசுக்கள், வண்டுகள், ஈக்கள், புழு, பூச்சிகள், எறும்புகள் போன்ற எத்தனையோ உயிரினங்களின் மரணத்திற்கு நாம் காரணமாகி விடுகின்றோம்.
நாம் முறையாக நம் பித்ருக்களுக்கு சிரார்த்தம், திவசம் மற்றும் தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றினால் தான் இவ்வாறாக விதவிதமான முறைகளில் உயிர் விட்ட அனைத்து ஜீவன்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் எந்த அளவிற்கு நம்முடன் வாழ உரிமை பெற்றிருக்கும் சக ஜீவன்களின் நல்வாழ்விற்காக நாம் மனதாலும், உடலாலும் சேவை, பூஜை, வழிபாடு, தான தர்மங்கள் ஆகியவற்றைச் செய்கின்றோமோ, அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும் மேம்படும்.
தற்காலத்தில் அனைவரும் சிரார்த்தத்துக்கும், தர்ப்பணத்துக்கும் வித்தியாசம் தெரியாது இவை இரண்டுமே ஒன்று என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். சிரார்த்தம், தர்ப்பணம் ஆகிய இரண்டு பூஜைகளுமே இறந்த நம் முன்னோர்களின் திதியன்று செய்யப்படுபவை என்றாலும் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.
சிரார்த்தம், திவசம் என்றால் இறந்தோருக்குப் பிரியமான உணவு, உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் ஆகும்.
ஆனால் தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு முறையான தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி வார்த்து பித்ருக்களை திருப்தி செய்தல் என்று பொருள்.
- ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
- ஒளவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும்.
தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.
சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.
மழைக் காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் கூழும் அம்மனுக்கு விருப்பமானவைகளே. இவை உடல் நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.
ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப்பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.
ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச்சீர் செய்து மாப்பிள்ளை - பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.
ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத் தான் இவை). இதை இன்னமும் பின்பற்றுகின்றனர். இதனால் 'ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.
ஆடி மாதப் பழமொழிகள் பல. 'ஆடிப் பட்டம் தேடி விதை', 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்', 'ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', 'ஆடிச் செவ்வாய் தேடிக்குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்'.
ஆடிச் செவ்வாய்
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்நாட்களில் பெண்கள் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆடிச் செவ்வாய் ஒளவையாருக்குச் செய்யும் விரத பூஜையாகும். ஒளவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும்.
பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து உப்பில்லாமல் செய்யும் கொழுக்கட்டைதான் நோன்பின் சிறப்பு பிரசாதமாகும். இதைப் பெண்கள் மட்டும்தான் செய்வார்கள். அன்று இரவு 10.00 மணியளவில் வீட்டில் உள்ள மூத்த வயதான பெண் தலைமையில் அத்தெருவில் உள்ள பெண்கள் அவர் வீட்டில் கூடுவார்கள். அதற்கு முன் ஆண்கள் - சிற ஆண்பிள்ளைகள் உட்பட வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் பார்க்கவோ, கேட்கவோ, பிரசாதம் சாப்பிடவோ கூடாது.
பின் பூஜை நடைபெறும். ஒளவையார் கதையையும் அம்மன் கதையையும் வயதான பெண்மணி கூறுவார். சிறு பெண் குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவரும் கலந்து கொண்டு பூஜை முடிப்பார்கள். பின் கொழுக்கட்டைகளை மீதமின்றி சாப்பிட்டு முடித்து, வீட்டைத் தூய்மைப்படுத்திய பின்தான் காலையில் ஆண்கள் அங்கு வர வேண்டும். இதுதான் ஒளவை நோன்பு.
ஆடி வெள்ளி
அன்றைய தினம் வாசலில் கோலமிட்டு பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.
ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும். சில வருடங்களில் இது ஆவணியிலும் அமைந்துவிடும். இவ்வாண்டு ஆவணி முதல் வெள்ளியில் வரலட்சுமி விரதம் வருகிறது.
பொதுவாக ஆடி வெள்ளிகளில் மாலை ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.
- கல்வி ஞானம் பெருகும்.
- பகை அழிந்து அமைதி உண்டாகும்.
மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தந்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள்.
என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பென் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள். அதை அப்படியே செய்தாள் சாருமதி. இப்படித் தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.
லட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் பதினைந்து பெறுகள்:
1.உடல் அழகு பெற்று ஒளிமயமாகும்.
2.பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்.
3.பகை அழிந்து அமைதி உண்டாகும்.
4.கல்வி ஞானம் பெருகும்.
5. பலவிதமான ஐசுவரியங்கள் செழிக்கும்.
6.நிலைத்த செல்வம் அமையும்.
7.வறுமை நிலை மாறும்.
8.மகான்களின் ஆசி கிடைக்கும்.
9.தானிய விருத்தி ஏற்படும்.
10.வாக்கு சாதுரியம் உண்டாகும்.
11.வம்ச விருத்தி ஏற்படும்.
12.உயர் பதவி கிடைக்கும்.
13.வாகன வசதிகள் அமையும்.
14.ஆட்சிப்பொறுப்பெற்கும் யோகம் கிடைக்கும்.
15.பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.
வரலட்சுமி விரதம் இருப்பது எப்படி?
வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும்.
விரத பூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.
ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகிய நிவேதனப் பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம்.
அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் செய்ய வேண்டும்.
இப்போது மகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும். அப்போது மங்களகரமான தோத்திரங்களை சொல்லலாம். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம்.
இதையடுத்து நோன்புக் கயிறை கும்பத்தை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் சொல்லலாம். `மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும்' என்று மனம் உருக வணங்க வேண்டும்.
பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.






