என் மலர்
நீங்கள் தேடியது "Varalakshmi"
- தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான்.
- விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.
லட்சுமி நெல்லி மரத்திலும் வாசம் செய்கிறாள். அந்த ''நெல்லி'' அருநெல்லி மரமல்ல, சாதாரண பெருநெல்லி மரமே ஆகும். நெல்லிக் கனியை ஆமலகம் என்று கூறுவார்கள். நெல்லியை அரைத்து தேய்த்துக் குளித்தால் உடம்பின் அழுக்குகளையும், நெல்லிக்கனியை சாப்பிட்டால் நம் உடம்புக்குள் உள்ள அழுக்குகளையும் நீக்கும்.
அதனாலயே அப்பழுக்கற்ற தூய தலைவன் விஷ்ணுவுக்கு அமலன் என்ற பெயர் உண்டு. அதுமட்டுமல்ல தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான். தாத்ரீ என்ற பதம் பூமாதேவியை குறிக்கும். ஆம் பூமாதேவியும் தேவியின் அம்சம்தானே.
ஹரிபலம் என்றாலும் நெல்லிக்கனிதான் இது விஷ்ணுவைக் குறிக்கும் பெயராகும். எனவே பல இடங்களில் விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.
நெல்லி மரத்தின் நிழலில் நின்று தானம் செய்வதும் அன்னமளிப்பதும் மிகுந்த சிறப்புமிக்கது. அதிக பலன்களை தரக்கூடியது. நெல்லி இலைகளால் விஷ்ணுவையும் மகாலட்சுமியையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்.
- நடிகை வரலட்சுமி தற்போது 'கொன்றால் பாவம்' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'கொன்றால் பாவம்'.

கொன்றால் பாவம்
1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையான இந்த திரைப்படம் மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கொன்றால் பாவம்
பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்நிலையில், 'கொன்றால் பாவம்' படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 1-ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகை வரலட்சுமி தற்போது 'கொன்றால் பாவம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'கொன்றால் பாவம்'. இதில், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

வரலட்சுமி - சந்தோஷ் பிரதாப்
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பேசியதாவது, "'கொன்றால் பாவம்' உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் நீண்ட நாட்கள் கழித்து ஒரு கதாநாயகிக்கு முழு நீளமாக நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம் என்று சொல்வேன். நாம் நிறைய படங்களில் நடிப்போம். ஆனால் திருப்தி என்பது சில படங்களில் தான் கிடைக்கும். அப்படியான ஒரு நிறைவு இந்த படத்தில் எனக்கு கிடைத்தது. 'விக்ரம் வேதா' படத்திற்கு பிறகு ஒரு மிரட்டலான இசையை இந்த படத்தில் சாம் கொடுத்துள்ளார்.

படத்தின் கதாநாயகன் சந்தோஷ் மிகவும் அமைதியானவர் இந்த 14 நாட்களும் நாங்கள் எல்லாருமே ஒன்றாகவே இருந்து குடும்பம் போலவே ஆனோம். இயக்குனர் தயாள் சாரும் என்னைப் போலவே மிகவும் துறுதுறுப்பாக இருப்பார். மூன்று நான்கு டேக் என்று போகாமல் அந்த காட்சிக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிகச் சரியாக எடுப்பார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குனர் கிடைத்துள்ளார். சின்ன படம் பெரிய படம் என்பதை எல்லாம் தாண்டி கதைக்காக இந்த படம் வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறேன். அப்பாவுக்கும் நன்றி. நான் சினிமாவில் வந்த போது அவர் எனக்கு பின்புலமாக இருந்தார். ஆனால் உண்மையிலேயே எந்த பின்புலமும் இல்லாமல் அவர் இந்த உயரத்தை அடைந்திருப்பது என்பது எனக்கு பெருமையான விஷயம்" என்றார்.
- விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது.
- சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார். தற்போது இவர் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்த வரலட்சுமி.
அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே சமயம் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.
அதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 4 - வது முறையாக பதவியேற்கவுள்ளவருமான சந்திரபாபு நாயுடு அவர்களை இன்று டெல்லியில் நேரில் சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து, மகள் வரலஷ்மி சரத்குமாரின் திருமண அழைப்பிதழை வழங்கி வழங்கினர்.
இந்த அழைப்பிதழ் வழங்கிய புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 4 - வது முறையாக பதவியேற்கவுள்ளவருமான திரு.சந்திரபாபு நாயுடு அவர்களை இன்று டெல்லியில் நேரில் சந்தித்து, தேர்தலில்… pic.twitter.com/kRYBPdzeAD
— R Sarath Kumar (மோடியின் குடும்பம்) (@realsarathkumar) June 9, 2024
- சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்
- வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் , சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.
இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அந்த வகையில் இவர் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
அடுத்ததாக இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஜூலை 26 அன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே தனது திருமணத்திற்காக திரைப் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கனவே ரஜினி, கமல் போன்றோருக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவர்களைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த்தையும் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் வரலட்சுமி தற்போது தனது முதல் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவரது மனைவி நடிகை நயன்தாராவிற்கும் தனது சித்தி ராதிகாவுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- வரலட்சுமி சரத்குமாருக்கு பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.
வரலட்சுமி சரத்குமாருக்கு பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் , சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.
இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அந்த வகையில் இவர் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
அடுத்ததாக இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஜூலை 26 அன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே தனது திருமணத்திற்காக திரைப் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கனவே ரஜினி, கமல், சிரஞ்சீவி போன்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து சரத்குமார் அழைப்பிதழ் கொடுத்த நிலையில், தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலருக்கு திருமண அழைப்பிதழை வழங்கினர்.
- பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கி உள்ளனர்.
புதுடெல்லி:
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தைப் பெற்றார். தற்போது இவர் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி.
அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம், வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லிக்கு நேரடியாக சென்று பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமண அழைப்பிதழையும் வழங்கினர்.
பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடிஜி அவர்களை இன்று காலை டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற இல்லத்தில் குடும்பத்தினருடன் சென்று சந்தித்து பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
— R Sarath Kumar (@realsarathkumar) June 28, 2024
நானும், எனது மனைவி திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்து,… pic.twitter.com/J03SHZER6t
- சமீப காலமாக பலராலும் சூர்யவம்சத்தில் வரும் காட்சியை ரீ-கிரியேட் செய்து வருகின்றனர்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை வரட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக தாய்லாந்தில் நடைபெற்றது. அதன்பின்னர் சில நிகழ்ச்சிகளில் மட்டும் நடிகை வரலட்சுமி பங்கேற்று வந்தார். கடந்த ஆண்டு தல தீபாவளியை நடிகை வரலட்சுமி கணவருடன் சென்னையில் கொண்டாடினார்.
இந்த நிலையில், நேற்று தல பொங்கலையும் நடிகை வரலட்சுமி குடும்பத்துடன் கொண்டாடினார். அப்போது சூர்யவம்சம் படத்தில் வரும் ஒரு காட்சியை மாப்பிள்ளையை வைத்து சரத்குமார் குடும்பத்தினர் ரீ-கிரியேட் செய்துள்ளனர். 'எல்லாரும் வந்துட்டாங்களா... என ஒருவர் கூற, ராதிகா ஏங்க சின்ராசு என்று கூறுகிறார். அதற்கு சரத்குமார் எங்க குடும்பத்துல எல்லாரும் வந்தாச்சு சீக்கிரம் எடு என்கிறார். அப்போது மாப்பிள்ளை நிக்கோலாய் சச்தேவ் பாவமாக ஓரமாக நிற்கிறார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக பலராலும் சூர்யவம்சத்தில் வரும் காட்சியை ரீ-கிரியேட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
Girls just wanna have fun.!!!! Heheheh so much fun doing my own stunts for my movie #chasing totally worth all the hard work.. thank you #supersubbarayan master.. directed by @Veeraku94850140 dop @krishnasamy_e#shootinprogress#fightsequence#norope please don’t try this at home pic.twitter.com/3eUgLykPDt
— varalaxmi sarathkumar (@varusarath) May 29, 2019

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் from our team #Chasing shoot in progress#Malaysia
— varalaxmi sarathkumar (@varusarath) April 14, 2019
Directed by #Veerakumar
Producer #Balachandran
DOP @krishnasamy_e
Music #Dhasi@Bala_actor@YAMUNA7102#actorjerrold#ActorSwissRaghu@MachendranRamya@jaya_stylist@Aadhi86200835@onlynikilpic.twitter.com/jywuXv9vcF







