search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Invitation"

    • ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    • தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.

    பொள்ளாச்சி:

    தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வா கம், தேர்தல் பிரிவினர் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டு வருகிறது.

    பஸ் நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடக் கூடிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு செல்பி ஸ்பாட் வைத்து விழிப்புணர்வு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வீடியோவும் ஒளிபரப்பப்படுகிறது.

    மேலும் ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அழைப்பது போன்று தேர்தல் தினத்தன்று வாக்களிக்க வருமாறு, அதிகாரிகள் அழைத்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தல்களில் சில இடங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குப்பதிவு இருந்துள்ளது.

    அந்த இடங்களை கண்டறிந்து, அங்கு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, தேர்தல் அதிகாரிகள், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை வைத்து, தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.

    பொள்ளாச்சி சப்-கலெக்டரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கேத்ரின் சரண்யா தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி தேர்தலில் வாக்களிக்க அழைத்தனர். மேலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எரிவாயு சிலிண்டர், பஸ் நிலையம், ரெயில் நிலையம், உணவு விடுதி ஆகியவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஓட்டி வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.
    • தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியரசு தினத்தை யொட்டி 2 மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றியதை பெருமையாக நினைக்கிறேன். முந்தைய முதலமைச்சர் வரமாட்டார். இன்று முதலமைச்சர், அமைச்சர்கள் வந்தனர். மாலை விருந்துக்கும் வருவதாக சொன்னார்கள். கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.

    தெலுங்கானாவில் பலமுறை அழைத்தும் முந்தைய முதலமைச்சர் வரவில்லை. கொள்கைகள்-கட்சிகள் மாறுபடலாம். ஆனால் அழைப்பு விடுத்தால் அன்போடு பங்கேற்க வேண்டும். அதுவே நல்லது. அனைத்து இடத்திலும் அரசியல் புக ஆரம்பித்தால் நட்பு இல்லாமல் போய்விடும்.


    தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.

    விருந்துக்கு வராததையே பெருமையாக கருதக்கூடாது. அவர்கள் வராததால் அதிர்ச்சியோ கவலையோ எனக்கு இல்லை. சாப்பிட வந்தால் மகிழ்ச்சி. அன்பை கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். விருந்துக்கு வரவில்லை என சொல்வதையே நாகரீகமாக சில கட்சிகள் கருதுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

    ஜல்லிக்கட்டு மீட்டுக் கொடுத்தது தி.மு.க. தான் என தமிழ முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மிக முயற்சி செய்தவர் பிரதமர் மோடி. 3 மத்திய மந்திரிகள் ஒரே நாளில் கையெழுத்திட்டு, ஜல்லிக்கட்டுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    தமிழகத்தில் ஆட்சியில் இருப்போரின் கூட்டணி ஆட்சிதான் கர்நாடகத்தில் உள்ளது. மேகதாது குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் நட்பு ரீதியாக சென்று தடுக்க வேண்டும். நட்பு ரீதியாக தடுக்கவில்லை என்றால் அவர்கள் நட்பு தப்பு ரீதியாக உள்ளது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகரில் நடைபெற்ற அரசு விழா அழைப்பிதழில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டது.
    • ஜனநாயக பிரதிநிதித்துவ கொள்கைகளுக்கு முரணானது என மக்களவை சபாநாயகருக்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகரில் நடைபெற்ற நிதியமைச்சர் பங்கேற்க உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு பொது விழாவின் போது அதிகாரப்பூர்வ வழி காட்டுதல்கள் மீறப்பட்டுள்ளது தொடர்பான தீவிரமான கவலையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக எழுதுகிறேன்.

    விருதுநகரை பிரதிநிதித் துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், மேற்படி நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் எனது பெயர் விடுபட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வது வருத்தமளிக்கிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள மேலும் இரண்டு எம்.பி.க்களின் (தனுஷ்குமார், நவாஸ்கனி) பெயர்களும் அழைப்பிதழில் இல்லை என்பது என் கவனத்துக்கு வந்தது.

    இப்படி மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைப்பிதழில் புறக்கணிப்பது ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தின் கொள்கைகளுக்கு முரணானது மட்டுமல்லாமல், நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடை யேயான உத்தியோக பூர்வ பரிவர்த்தனைகள் குறித்த ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களுக்கு எதிரானது.

    அரசாங்க அலுவலகங்களால் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாமல் அழைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அலுவலக குறிப்பாணையினை உங்களது கவனத்தை ஈர்க்கிறேன். அழைப்பிதழ் அட்டைகளில் எங்கள் பெயர்கள் விடுபட்டிருப்பது இந்த வழிகாட்டு தல்களுக்கு முரணானது.

    இந்த விஷயத்தைச் சீர் செய்வதில் உங்கள் அவசரத் தலையீடு தேவை என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன். வழிகாட்டுதல்களில்படி, அமைப்பாளர்கள் பரிந்து ரைக்கப்பட்ட நடைமுறை களை கடைபிடிப்பதையும், சம்பந்தப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பி தழ்களை வழங்குவதையும் உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்.இந்த விஷயத்தில் உங்கள் உடனடி கவனத்தை நான் பாராட்டுகிறேன். மற்றும் தேர்ந்தெ டுக்கப்பட்ட பிரதி நிதிகளின் கண்ணி யத்தை நிலை நிறுத்தவும், ஜனநாயகக் கொள்கைகளின் ஒரு மைப்பாட்டைப் பேணவும் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகி றேன். இந்த சிக்கலைத் தீர்ப்பதில் உங்கள் புரிதலுக்கும் விரைவான நடவ–டிக்க்கும் நன்றி.

    இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.
    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது.

    சென்னை:

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.

    ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டையொட்டி, ஜாதி வேறுபாடுகளை களைந்து, சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, குடும்ப அமைப்பை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி வாழ்க்கை முறை, சமூக ஒழுக்கத்தை ஏற்படுத்துவது ஆகிய ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது. அதை முன்னிட்டு ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரை, வீடு, வீடாகச் சென்று ஸ்ரீராம ஜென்மபூமி படம், அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதையுடன் அழைப்பிதழ் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

    உலகம் தழுவிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்துள்ளது. தமிழகத்தில் பயிற்சி பெற்ற ஊழியர்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

    ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்புக்கு, கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அனுமதி அளித்தார். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி, கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடந்தது.

    இந்த ஆண்டு காவல் துறை அனுமதி மறுத்ததால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி, வருகிற 19-ந் தேதி அணிவகுப்பு நடக்கவுள்ளது. இது தொடர்பாக, டி.ஜி.பி.,யை சந்தித்து பேசியுள்ளோம்.

    ஆகம பயிற்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும், எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.,சின் நிலைப்பாடு. ஆனால், அவர்கள் முறையான ஆகம பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

    அதுபோல, கலப்பு திருமணத்தையும் ஆதரிக்கிறோம். ஆனால், திருமணத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுவதை எதிர்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது, ஆர்.எஸ்.எஸ்., மாநிலச் செயலாளர் ஜெகதீசன், மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2020, ஆகஸ்ட் 5 அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
    • இது ஒன்றும் ஒரு தனி நபர் நிகழ்ச்சி அல்ல என்றார் குர்ஷித்

    உலகெங்கும் உள்ள இந்துக்களின் தெய்வமான ஸ்ரீஇராமபிரான் அவதரித்த தலமான அயோத்தியில் அவருக்கு ஒரு மிக பிரமாண்ட ஆலயத்தை கட்ட முடிவு செய்து 2.77 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ ராம்ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா" (Shri Ramjanmabhoomi Teerth Kshetra) எனும் ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டு அவர்கள் மேற்பார்வையில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது அவை முடியும் தறுவாயில் உள்ளன.

    2020, ஆகஸ்ட் 5 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதற்கான அடிக்கல்லை நாட்டி, கட்டிட திருப்பணிகளை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "பகவான் ஸ்ரீஇராமரின் விக்கிரகம் அடுத்த வருடம் ஜனவரி 22 அன்று இத்திருக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்படும். 'பிரான் பிரதிஷ்டா' எனப்படும் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு டிரஸ்டின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துள்ளோம். அவரும் வருவதாக ஒப்பு கொண்டுள்ளார்", என கடந்த அக்டோபர் 22 அன்று இந்த டிரஸ்டின் பொது செயலாளர் சம்பத் ராய் (Champat Rai) தெரிவித்தார்.

    "சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை எனது பாக்கியமாக கருதுகிறேன்" என இந்த அழைப்பு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த அழைப்பு குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் தெரிவித்திருப்பதாவது:

    ஒரு கட்சிக்கு (பா.ஜ.க.) மட்டும் தான் அழைப்பிதழா? யார் வருவார்கள், வர மாட்டார்கள் என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது. ஆனால், 'கடவுள்' ஒரே ஒரு கட்சிக்கு மட்டும் உரியவராகி விட்டாரா என்ன? அனைத்து கட்சியினரையும் பாகுபாடு இன்றி அழைக்க வேண்டாமா?. இந்த முக்கிய விழா ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமான நிகழ்வாக மாறி விட்டது. இது ஒரு கட்சி நிகழ்வோ, தனி நபர் நிகழ்ச்சியோ அல்ல. அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட வேண்டும்.

    இவ்வாறு குர்ஷித் கூறினார்.

    குடும்பங்களில் முக்கிய நிகழ்வுகளுக்கு அழைக்கப்படாத உறவினர்கள் "எனக்கு ஏன் அழைப்பு வைக்கவில்லை?" என குற்றம் சாட்டுவதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பயனர்கள் குர்ஷித்தின் கருத்து குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • போட்டியில் பங்கேற்க வரும் போது ஆதாா் அட்டை கொண்டுவர வேண்டும்.
    • போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும்.

    திருப்பூர்,ஆக.21-

    கோவை ஈஷா யோகா மையம், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத்தின் செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை ஈஷா யோக மையம், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடிக்கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி வருகிற 26-ந் தேதி காயத்ரி மஹாலில் நடைபெறுகிறது. இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் கபடி அணிகள் கீழ்க்கண்ட விதிகளின்படி பங்கேற்கலாம்.

    அகில இந்திய அமெச்சூா் கபடிக் கழகத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் போட்டியில் பங்கேற்க திருப்பூா் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க வரும் போது ஆதாா் அட்டை கொண்டுவர வேண்டும். ஆண்கள் 85 கிலோவுக்கு மிகாமலும், பெண்கள் 75 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசு ஊழியா்கள், செட்டிங் அணி, நிறுவன அணிகள் பங்கேற்க இயலாது. போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும். இதில், பங்கேற்கவுள்ள அணிகள் ஈஷா யோக மையத்தின் இணையதளத்தில் ஆகஸ்ட் 23 ந் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.12 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் கோப்பை, மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்படும்.

    பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.6 ஆயிரம் மற்றும் கோப்பை, 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்படும்.

    இதில் சிறப்பாக விளையாடும் வீரா், வீராங்கனைகள் தலா 12 போ் தோ்வு குழுவினரால் திருப்பூா் மாவட்ட அணிக்கு தோ்வு செய்யப்படுவாா்கள். தோ்வு செய்யப்பட்ட வீரா், வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தி கோவையில் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான போட்டிக்கு மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 83000-30999 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உசிலம்பட்டியில் அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் வழங்கினார்.
    • இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி உசிலம் பட்டி நகர அலுவலகத்தில் நடந்தது.

    உசிலம்பட்டி

    மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு வருகிற 20- ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி உசிலம் பட்டி நகர அலுவலகத்தில் நடந்தது. நகர செயலாளர் பூமாராஜா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளையும், அழைப்பிதழ்களையும் வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், இளங் கோவன், துரைதனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், மாணவரணி செயலா ளர் மகேந்திர பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் செல்லம்பட்டி ராஜா, சேடபட்டி பிச்சை ராஜன், ஏழுமலை வாசிமலை, நகர நிர்வாகிகள் லட்சுமணன், உக்கிரபாண்டி, ரகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க வெற்றிலை பாக்கு வைத்து செல்லூர் ராஜூ அழைப்பிதழ் கொடுத்தார்.
    • தொண்டர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி மாநாட்டில் உற்சாகமாக பங்கேற்க அழைப்பி தழ்களை வழங்கி வருகிறார்.

    மதுரை

    மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு வருகிற 20-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான தொண்டர்களை மாநாட்டில் பங்கேற்க செய்யும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்றி வருகி றார்கள்.

    மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் அ.தி.மு.க. தொண்டர்களை மாநாட்டில் திரளாக பங்கேற்க செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை சர்வ சமய பிரார்த்தனைகள் செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.

    இன்று காமராஜர் சாலை பகுதியில் உள்ள கோவிலில் அழைப்பிதழ்களை வைத்து சாமி கும்பிட்ட செல்லூர் ராஜூ, அந்த பகுதியில் வீதி வீதியாக சென்று பொது மக்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ்களை வழங்கி னார். அப்போது வியாபா ரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு வெற்றி லை பாக்குடன் அழைப்பி தழை வைத்து கொடுத்து மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம். எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, குமார், சோலை ராஜா, கலைச் செல்வம், சண்முகவள்ளி மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் மாநாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார். பொது மக்களுக்கு மரக்கன்று களை வழங்கி மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்து வரும் ஆர்.பி. உதயகுமார் மதுரை புறநகர் மாவட்டத்தில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை மாநாட்டிற்கு அழைத்துவர திட்டமிட்டு தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நல உதவிகளை வழங்கி மாநாட்டில் பங்கேற்க செய்யும் வகையில் அவர் அழைப்பு விடுத்து வருகிறார். மேலும் இருசக்கர வாகனங்கள், கார்களில் அ.தி.மு.க. மாநாட்டின் லோகோவை ஒட்டியும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கிழக்கு மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி மாநாட்டில் உற்சாகமாக பங்கேற்க அழைப்பி தழ்களை வழங்கி வருகிறார்.

    மதுரை மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான தொண்டர்களை பங்கேற்க செய்யும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தீவிரப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மாநாட்டிற்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் தலைமைகழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தமிழக முழுவதும் கட்சி தொண்டர்களை சந்தித்து மாநாட்டில் பங்கேற்க அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார்கள்.

    • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நாளை நடைபயணத்தை தொடங்க உள்ளார்.
    • ராமநாதபுரத்தில் பா.ஜனதா கட்சியினர் வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் நாளை மறுநாள்  (28-ந்தேதி) பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் நடைபயணத்தை தொடங்க உள்ளார். மத்திய மந்திரி அமித்ஷா நடைபயணத்தை தொடங்கி வைக்க உள்ளார். அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமி உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த நிலையில் இந்த தொடக்க விழாவிற்கான அழைப்பிதழை பாரதிய ஜனதா கட்சியினர் ராமேசுவரத்தில் வீடு, வீடாக வழங்கி வருகின்றனர்.

    ராமேசுவரம் பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் அழைப்பிதழை வழங்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. ராமேசுவரம் நகர் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் நகர் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் வீடு வீடாக சென்று வெற்றிலை, பாக்குடன் அழைப்பிதழை கொடுத்து வருகின்றனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், செயலாளர் கணேசன் அய்யர், பொருளாளர் சுரேஷ், பொதுச்செயலாளர்கள் செல்வம், முருகன் உள்பட பலர் அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர்.

    • தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 31-ந்தேதிக்குள் கொடுக்க–வேண்டும்.

    மதுரை

    தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்க தலைவர் கே.செல்வராஜ் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் 32-ம் ஆண்டு விழாவையொட்டி, வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்பில் தொடர்ந்து பள்ளியில் படித்துவரும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    இதகை ெபற விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், படிக்கும் பள்ளி–யின் தலைமை ஆசிரியர் சான்றிதழ், விண்ணப்பத்துடன் 2 புகைப்படங்கள் ஆகியவற்றை நேரில் வந்து சங்கத்தில் கொடுக்க வேண்டும்.

    மேலும் இலவச தையல் எந்திரம் பெறுவதற்கு தகுதியுடைய பெண்கள், குறிப்பாக விதவை பெண்கள், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தாங்கள் படித்த தையல் கலை சான்றிதழ் நகல் மற்றும் 2 புகைப்படங்களுடன் விண்ணப்பம் எழுதி சங்கத்தில் நேரில் வந்து அதனை வருகிற 31-ந்தேதிக்குள் கொடுக்க–வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதுக்கோட்டையில் 10 நாட்கள் நடைபெற உள்ள கம்பன் பெருவிழா அழைப்பிதழ் வெளியிடபட்டுள்ளது
    • இந்த விழாவுக்கான அழைப்பிதழை கம்பன் கழகத் தலைவர் ச.ராமச்சந்திரன் வெளியிட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா பெற்றுக் கொண்டார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48-ம் ஆண்டு கம்பன் பெருவிழா வருகின்ற ஜூலை மாதம் 14-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 10 நாட்கள் நகர்மன்றத்தில் நடைபெறுகிறது. இப் பெருவிழாவின் தொடக்க நாளில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் பொறுப்பாட்சியர் டாக்டர் ராஜன் நடராஜன் தலைமை ஏற்றுச் சிறப்பிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் எழுச்சி உரையாற்றுகிறார். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் இரண்டு நாட்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.சென்னை பாரதி பாஸ்கர் பட்டிமன்ற நடுவராகப் பொறுப்பு ஏற்கிறார்.

    தமிழ்நாடு  ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு நிறைவு விழாப் பேருரை ஆற்றுகிறார். இந்த விழாவுக்கான அழைப்பிதழை கம்பன் கழகத் தலைவர் ச.ராமச்சந்திரன் வெளியிட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கம்பன் கழகச் செயலாளர் ரா சம்பத்குமார், துணைத் தலைவர் எம் ஆர் எம் முருகப்பன், துணைப் பொருளாளர் கறு. ராமசாமி, கூடுதல் செயலாளர் பாரதி, இணைச் செயலாளர்கள் முனைவர் முருகையன், காடுவெட்டி குமார் மற்றும் விழாக் குழு உறுப்பின ர்கள் பேராசிரியர் ரவிச்சந்திரன், முனைவர் மாரியப்பன், கவிஞர் நிலவை பழனியப்பன் , அனுராதா சீனிவாசன், காசி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • கும்பாபிஷேகத்தன்று மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவிலில், 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

    இந்நிலையில், கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் அச்சிடப்பட்டு அதனை பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி அம்மன், சட்டைநாதர் உள்ளிட்ட சுவாமி சன்னதிகளில் வைத்து வழிபாடு செய்யப்ப ட்டது.

    அதன்பின்னர், அழைப்பிதழை விழாக்குழு வினர் பெற்றுக்கொண்டனர்.

    இதனை அடுத்து, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையிலான விழாக்குழு வினர் கும்பாபிஷேக அழை ப்பிதழை கொடுத்தனர்.

    மேலும், கும்பாபி ஷேகத்தன்று மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ×