search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு விழா அழைப்பிதழில் எம்.பி.க்களின் பெயர்கள் புறக்கணிப்பு-சபாநாயகருக்கு கடிதம்
    X

    அரசு விழா அழைப்பிதழில் எம்.பி.க்களின் பெயர்கள் புறக்கணிப்பு-சபாநாயகருக்கு கடிதம்

    • விருதுநகரில் நடைபெற்ற அரசு விழா அழைப்பிதழில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டது.
    • ஜனநாயக பிரதிநிதித்துவ கொள்கைகளுக்கு முரணானது என மக்களவை சபாநாயகருக்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகரில் நடைபெற்ற நிதியமைச்சர் பங்கேற்க உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு பொது விழாவின் போது அதிகாரப்பூர்வ வழி காட்டுதல்கள் மீறப்பட்டுள்ளது தொடர்பான தீவிரமான கவலையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக எழுதுகிறேன்.

    விருதுநகரை பிரதிநிதித் துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், மேற்படி நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் எனது பெயர் விடுபட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வது வருத்தமளிக்கிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள மேலும் இரண்டு எம்.பி.க்களின் (தனுஷ்குமார், நவாஸ்கனி) பெயர்களும் அழைப்பிதழில் இல்லை என்பது என் கவனத்துக்கு வந்தது.

    இப்படி மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைப்பிதழில் புறக்கணிப்பது ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தின் கொள்கைகளுக்கு முரணானது மட்டுமல்லாமல், நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடை யேயான உத்தியோக பூர்வ பரிவர்த்தனைகள் குறித்த ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களுக்கு எதிரானது.

    அரசாங்க அலுவலகங்களால் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாமல் அழைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அலுவலக குறிப்பாணையினை உங்களது கவனத்தை ஈர்க்கிறேன். அழைப்பிதழ் அட்டைகளில் எங்கள் பெயர்கள் விடுபட்டிருப்பது இந்த வழிகாட்டு தல்களுக்கு முரணானது.

    இந்த விஷயத்தைச் சீர் செய்வதில் உங்கள் அவசரத் தலையீடு தேவை என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன். வழிகாட்டுதல்களில்படி, அமைப்பாளர்கள் பரிந்து ரைக்கப்பட்ட நடைமுறை களை கடைபிடிப்பதையும், சம்பந்தப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பி தழ்களை வழங்குவதையும் உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்.இந்த விஷயத்தில் உங்கள் உடனடி கவனத்தை நான் பாராட்டுகிறேன். மற்றும் தேர்ந்தெ டுக்கப்பட்ட பிரதி நிதிகளின் கண்ணி யத்தை நிலை நிறுத்தவும், ஜனநாயகக் கொள்கைகளின் ஒரு மைப்பாட்டைப் பேணவும் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகி றேன். இந்த சிக்கலைத் தீர்ப்பதில் உங்கள் புரிதலுக்கும் விரைவான நடவ–டிக்க்கும் நன்றி.

    இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×