search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varalaxmi"

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நடிகர் விஜய் ஹைதராபாத் பயணித்துள்ளார். அதே விமானத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பயணம் செய்துள்ளார். அப்போது விஜய் உடன் எடுத்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார்.


    விஜய் - வரலட்சுமி

    அந்த பதிவில், "ஹைதராபாத்திற்கு இவ்வளவு நல்ல விமானம் இதுவரை இருந்ததில்லை. எனக்கு பிடித்த நடிகர் விஜய் எனக்குப் பக்கத்தில். ஒரு நல்ல நாள். கூடவே நிறைய அரட்டையும் சிரிப்பும் கொஞ்சம் லூடோவும் மொத்தத்தில் நல்ல விமானப்பயணம்" என்று வரலட்சுமி பதிவிட்டுள்ளார்.

    விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, அடுத்ததாக ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் நடிக்கிறார். #Varalakshmi
    நடிகை வரலட்சுமி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்கள், டிவி நிகழ்ச்சி என பிசியாகவே உள்ளார். தனி கதாநாயகியாக ‘டேனி’, ‘வெல்வெட் நகரம்‘, ராஜபார்வை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    இவை தவிர பிக்பாஸ் ஐஸ்வர்யா, சுபிக்‌ஷா, ஆஷ்னா சவேரியுடன் கன்னித்தீவு, விமலுடன் கன்னிராசி, ஜெய்யுடன் ‘நீயா 2’, வைபவுடன் காட்டேரி, தெலுங்கில் சந்தீப் கி‌ஷணுடன் தெனாலி ராமன் பி.ஏ.பி.எல், கன்னடத்தில் ரணம் எனப் பல படங்களில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நாயகியாகவும் நடித்து வருகிறார்.



    இந்நிலையில் வீரக்குமார் இயக்கத்தில் தஷி இசையமைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் `சேஸிங்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தமிழ்ப் புத்தாண்டையொட்டு வெளியிடப்பட்டது. ஆக்‌‌ஷன் திரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.
    சண்டக்கோழி 2 படத்தை தொடர்ந்து சர்கார் படத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி, அமைதிக்கு மறுபெயர் விஜய் என்று கூறியிருக்கிறார். #Vijay #Sarkar #Varalakshmi
    சண்டக்கோழி2-வில் அதிரடி வில்லியாக நடித்த வரலட்சுமிக்கு அடுத்து விஜய்யுடன் நடிக்கும் 'சர்கார்' படம் வெளியாக இருக்கிறது.

    விஜய் பற்றி அவர் அளித்த பேட்டியில், 'அமைதிக்கு மறுபெயர் விஜய். நான் அதுக்கு நேரெதிர். படப்பிடிப்பில் எல்லோரிடமும் பேசி சிரிச்சுக்கிட்டு இருப்பேன். மாறாக, `சர்கார்’ ஆடியோ லான்ச்லதான் அமைதியா இருந்தேன். நாம பேசுறது அங்கே இருக்கிற பெரிய ஆள்களுக்கெல்லாம் புரியணும்ங்கிறதுக்காக பொறுமையாக பேசினேன்.

    விஜய் சார், என்னோட கதாபாத்திரத்துல வேறு யாரும் இவ்வளவு திறம்பட நடிச்சிருக்க முடியாதுன்னு மேடையில சொன்ன பாராட்டை வாழ்நாளில் மறக்க முடியாது. லாஸ் வேகாஸ்ல `சர்கார்’ சூட்டிங்ல இருந்தப்போ, நான் இங்கே இருந்து தனியாதான் டிராவல் பண்ணிப்போனேன்.

    முருகதாஸ் என்கிட்ட, `எப்போ பார்த்தாலும் பேசிக்கிட்டே இருப்பியேம்மா; இப்போ எப்படி தனியா வந்த; டிராவல்ல யார்கிட்ட பேசிக்கிட்டிருந்தன்னு கேட்டார். `விமானத்துல பக்கத்து சீட்ல இருந்தவரோட பேசிக்கிட்டிருந்தேன் சார்’னு சொன்னேன். முருகதாஸ் சார் செம ஜாலி டைப். ஸ்பாட்ல அவரும் நானும் விஜய் சாரை கலாய்ச்சுக்கிட்டே இருப்போம்’ என்று கூறி உள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகளாக இருக்கும் விஷால், வரலட்சுமி, பிரசன்னா ஆகியோர் கமல் வழியை பின்பற்றி வருகிறார்கள். #Kamal
    கமல்ஹாசன் சினிமாவில் பிசியாக இருக்கும்போதே டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 சீசன்களையும் அவரே தொகுத்து வழங்கினார்.

    அவர் வழியில் தற்போது விஷால் ஒரு தனியார் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறி இருக்கிறார். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. அடுத்து கமல், விஷால் வரிசையில் வரலட்சுமியும் இணைந்துள்ளார். அவரும் ஒரு டிவியில் சமூக சேவை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார்.



    நடிகர் பிரசன்னாவும் தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறி இருக்கிறார். சிவகார்த்திகேயன், மாகாபா.ஆனந்த், ரோபோ சங்கர் என டிவியில் இருந்து சினிமாவுக்கு ஆட்கள் வந்த நிலைமை மாறி சினிமாவில் இருந்து பிரபலங்கள் டிவி பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள்.
    விஜய்யின் சர்கார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், தீபாவளிக்கு பட்டாச ரெடி பண்ணுங்க என்று டுவிட் போட்டிருக்கிறார். #Sarkar #Varalaxmi
    விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். அரசியல் கதையாக உருவாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. 

    விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில், தற்போது பேட்ச் ஒர்க்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இன்று முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக நடிகை வரலட்சுமி அறிவித்திருக்கிறார். மேலும், ‘இப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குனர் முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. விஜய்யுடன் நடிக்க இருந்த என் கனவு நினைவாகி இருக்கிறது. தீபாவளிக்கு பட்டாச ரெடி பண்ணுங்க’ என்று கூறியிருகிறார்.



    சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், அக்டோபர் 2-ம் தேதி ஆடியோ வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். #Sarkar
    மா மற்றும் லட்சுமி குறும்படங்களை இயக்கி பிரபலமான சர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Echarikkai
    தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி. அதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால்' விஜய்சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன்', 'கோலிசோடா 2' போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து பாராட்டிததுடன் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார்.

    டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். யூடியூப்பில் பிரபலமான மா, லஷ்மி ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    இவர் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்தப் படத்தின் சிறப்பையும் மா, லஷ்மி படங்களின் நேர்த்தியையும் கேள்விப்பட்ட அறம் குலேபகாவலி படங்களின் தயாரிப்பாளர் ராஜேஷ், நயன்தாரா இருவரும் அவர் சொன்ன வித்தியாசமான கதையை கேட்டு உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.



    எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் பற்றி இவர் கூறும்போது, ‘இது கிரைம் திரில்லர் படம். எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்கிற டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம். சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக தூள் கிளப்பி இருக்கிறார். கிட்நாப் பற்றி இதில் சொல்லி இருக்கிறோம். பாண்டிச்சேரி, சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

    படத்தை பார்த்த கிளாப் போர்டு சத்யமூர்த்தி பாராட்டியதோடு மொத்தமாக வாங்கி ரிலீஸ் செய்கிறார். இப்படம் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக இருக்கிறது’ என்றார்.
    பல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, படப்பிடிப்பின் போது, 7 கிலோமீட்டர் நடந்து செல்லும் பள்ளி சிறுமிகளுக்கு உதவியிருக்கிறார். #Varalaxmi
    ‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. 

    தற்போது வரலட்சுமி சரத்குமார், ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘ சண்டக்கோழி-2’ விஜய்யின் ‘சர்கார்’, ‘வெல்வெட் நகரம்’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.



    இந்நிலையில், இவர் படப்பிடிப்பு தளத்தில் தினமும் 7 கிலோமீட்டர் நடந்து செல்லும் பள்ளி சிறுமிகளை சந்தித்திருக்கிறார் வரலட்சுமி. உடனே அவர்களை தன்னுடைய காரில் ஏற்றிக் சென்று இறக்கி விட்டிருக்கிறார். மேலும் இந்த சிறுமிகளை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
    தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, தான் நடித்துள்ள ஒரு படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். #VaralaxmiSarathkumar #VelvetNagaram
    ‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. 

    தற்போது வரலட்சுமி சரத்குமார், ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’, ‘சர்கார்’, ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    இதில் வெல்வெட் நகரம் படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கியுள்ளார். கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார்.



    தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் டப்பிங் பணிகள் முடிந்து விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இப்படத்தை வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #VaralaxmiSarathkumar #VelvetNagaram
    ‘இரும்புத்திரை’ வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஷால், நான் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணை தினமும் பார்த்துக் கொண்டுத்தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
    அண்மையில் வெளியான 'இரும்புத்திரை' படம் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான படமாக எடுக்கப்பட்டு இருந்தது. ஆதார் அட்டை முதல் தேர்தல் முறை வரை எல்லா மின்னணு செயல்பாடுகளில் இருக்கும் சிக்கல்களை அலசி இருந்தது. படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான விஷால் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசினார். 

    அப்போது மின்னணி வாக்குப்பதிவு எந்திரம் பற்றி கேட்டபோது, ‘எனக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. வாக்குசீட்டு முறையை தான் நம்புகிறேன். என்னிடம் ஆதார் அட்டை இருக்கிறது. ஆனால் இன்னும் வங்கியில் அதை இணைக்கவில்லை. முன்பைவிட இப்போது இன்னும் விழிப்புணர்வோடு இருக்கிறேன்.

    மெர்சல் அளவுக்கு இந்த படத்துக்கு பிரச்னை யாரும் பண்ணவில்லையே என்றால் அதற்கு காரணம் நாங்கள் உண்மையை தான் சொல்லி இருக்கிறோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்று பொருள்’ என்று பதிலளித்தார். விஷால் அடுத்து அரசியலுக்கு வரும் திட்டத்தில் இருக்கிறார்.



    அதற்கு முன்பாக ஜனவரியில் நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டு அடுத்த முகூர்த்த நாளிலேயே அங்கே தனது திருமணம் நடக்கும் என்றும் கூறினார். மணப்பெண் யார் என்று கேட்டதற்கு ‘அவரை தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்’ என்று மறைமுகமாக சொன்னார். விஷாலும் வரலட்சுமியும் காதலிப்பதாக சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×