search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sarjun"

    சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Airaa #Nayanthara
    நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 



    லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தை மார்ச் மாதம் 28ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். #Airaa #Nayanthara 
    நயன்தாரா நடிப்பில் சர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஐரா படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். #Airaa #Nayanthara
    நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் சென்சார் வெளியாகியுள்ளது.



    சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் மார்ச் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
    சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐரா’ படத்தின் கதை லீக்காகியுள்ளது. #Airaa #Nayanthara
    நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்கிறார். கலெக்டராக வந்த அறம், போதை போருள் விற்பவராக வந்த கோலமாவு கோகிலா படங்கள் வரவேற்பை பெற்றன. ஏற்கனவே மாயா என்ற திகில் படத்தில் நடித்தார். இந்த படத்தில் பேயாக வந்தும் மிரட்டினார். இப்போது ஐரா என்ற இன்னொரு திகில் படத்திலும் நடித்து இருக்கிறார்.

    இந்த படம் விரைவில் திரைக்கு வர தயாராகிறது. நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை சர்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், ‘மறுபடியும் பொட்ட புள்ள பிறந்திருக்குய்யா’ என்றதும் ‘என்னது மறுபடியுமா’ என்று ஒரு பெண் பதறுவதுபோல் பேசுகிறார்.

    “என் தலையெழுத்த யாருன்னே தெரியாத ஆறுபேர் கிறுக்கி எழுதி இருக்காங்க” “உனக்காக நான் வருவேன்னு சொன்னேன்ல” என்ற வசனங்களும் படத்தில் உள்ளன. பெண்சிசு கொலையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளதாக தகவல் பரவி உள்ளது. ஒரு நயன்தாராவுக்காக இன்னொரு நயன்தாரா பழிவாங்குவது கதை என்று தெரிகிறது.



    நயன்தாரா மேக்கப் போடாமல் கருத்த முகத்தோடு இதில் வருகிறார். அவரது விழிகளில் கண்ணீர் நிரம்பி இருக்கிறது. இன்னொரு நயன்தாரா மாடர்ன் உடையில் காட்சியளிக்கிறார். கருப்பு நயன்தாரா பேய் வேடமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
    விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக படத்திற்காக முதல்முறையாக புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். #Nayanthara
    `லட்சுமி', `மா' குறும்படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சர்ஜுன்.கே.எம் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை `கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்' சார்பில் கோட்டப்பாடி.ராஜேஷ் தயாரிக்கிறார். இதில் நயன்தாராவிற்கு ஜோடியாக கலையரசன் நடிக்கிறார்.

    இப்படத்திற்கு ‘ஐரா’ என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள். தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இப்படத்தில் முதல் முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.



    இந்த படத்திற்காக பேய் பங்களா செட் ஒன்றை அமைத்து படக்குழுவினர் சென்னையில் படமாக்கி வருகின்றனர். ஹாரர் மற்றும் திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. #Nayanthara
    மா மற்றும் லட்சுமி குறும்படங்களை இயக்கி பிரபலமான சர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Echarikkai
    தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி. அதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால்' விஜய்சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன்', 'கோலிசோடா 2' போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து பாராட்டிததுடன் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார்.

    டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். யூடியூப்பில் பிரபலமான மா, லஷ்மி ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    இவர் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்தப் படத்தின் சிறப்பையும் மா, லஷ்மி படங்களின் நேர்த்தியையும் கேள்விப்பட்ட அறம் குலேபகாவலி படங்களின் தயாரிப்பாளர் ராஜேஷ், நயன்தாரா இருவரும் அவர் சொன்ன வித்தியாசமான கதையை கேட்டு உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.



    எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் பற்றி இவர் கூறும்போது, ‘இது கிரைம் திரில்லர் படம். எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்கிற டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம். சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக தூள் கிளப்பி இருக்கிறார். கிட்நாப் பற்றி இதில் சொல்லி இருக்கிறோம். பாண்டிச்சேரி, சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

    படத்தை பார்த்த கிளாப் போர்டு சத்யமூர்த்தி பாராட்டியதோடு மொத்தமாக வாங்கி ரிலீஸ் செய்கிறார். இப்படம் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக இருக்கிறது’ என்றார்.
    அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் பிசியாகி இருக்கும் நயன்தாரா, அடுத்ததாக சர்ஜுன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கலையரசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Nayanthara #Kalaiyarasan
    நயன்தாரா மாயா, டோரா படங்களை தொடர்ந்து புதிதாக பேய் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை லக்‌ஷ்மி, மா உள்ளிட்ட குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் கலையரசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது தெரிய வந்துள்ளது.

    அவர் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக பேய் பங்களா செட் ஒன்றையும் படக்குழுவினர் சென்னையில் அமைத்து வருகின்றனர்.



    தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நயன்தாரா, அதைத் தொடர்ந்து 25 நாட்களுக்கு அந்த பேய் பங்களாவில் நடக்கும் காட்சிகளில் நடிக்க உள்ளார். அதன் பிறகு கடைசி கட்ட படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி செல்ல உள்ளனர். #Nayanthara #Kalaiyarasan

    விஸ்வாசம் படத்தில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக நடிக்க இருக்கும் ஹாரர் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. #Nayanthara #Nayan63
    சில மாதங்களுக்கு முன்பாக ‘லட்சுமி’ என்ற குறும்படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு பக்கம் ஆதரவும் மற்றொரு பக்கம் எதிர்ப்பும் ‘லட்சுமி’ குறும்படத்திற்கு அமைந்தது. கலவையான விமர்சனத்தை எதிர்க்கொண்டாலும் மக்களிடையே அதிகமாக சென்றடைந்தது.

    இந்த குறும்படத்தை சர்ஜுன் என்பவர் இயக்கி இருந்தார். இவருடைய இயக்கத்தில் ‘மா’ என்ற குறும்படமும் சில மாதங்களுக்கு முன்பாக வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சர்ஜுன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

    இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஹாரர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.



    இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘நயன் 63’ என்று அழைத்து வருகிறார்கள். 
    ×