search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalaiyarasan"

    • இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புர்கா’.
    • இப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது.

    இயக்குனர் சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'புர்கா'. இப்படத்தில் கலையரசன், மிர்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். எஸ்.கே.எல்.எஸ். கேலக்ஸி மால் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு சிவாத்மிகா இசையமைத்திருந்தார்.


    புர்கா

    இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவின் பின்னணியில் உருவான இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது. இப்படம் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், இஸ்லாமிய பெருமக்களின் இறை நம்பிக்கையையும், அவர்களின் புனித நூலான குரானையும் இழிப்படுத்தும் வகையில், ஓடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள 'புர்கா' திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "நபி பெருமானாரின் நன்மொழிகளால் தொகுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஷரியத் சட்டம் பெண்களுக்குச் சம உரிமை வழங்குவதில் பல முற்போக்கான கருத்துக்களை வலியுறுத்தும் நிலையில், இஸ்லாம் மார்க்கமே பெண்களுக்கு எதிரானது போல் 'புர்கா' திரைப்படம் சித்தரிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.


    புர்கா

    இந்திய பெருநாட்டில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து, அவர்களின் கொடுங்கரங்களில் அதிகாரம் சிக்கியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சமய மக்களை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் போலக் காட்டமுனைவது கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தவே வழிவகுக்கும்.

    நாட்டின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் எவ்வித தீங்கும் ஏற்படாத வண்ணம் படைப்பாளிகள் தங்களின் கடமையை உணர்ந்து, மிகுந்த பொறுப்புணர்வுடன் தங்களது படைப்புகளை வெளிக்கொணர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கைகளை இழிவுப்படுத்தி, அவர்களின் உணர்வுகளைச் சீண்டி, பதற்றமான சூழலை உருவாக்கும் படைப்புகளைப் புறக்கணிக்க வேண்டுமென திரைக்கலை ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.


    சீமான் அறிக்கை

    தற்போது 'ஆகா' ஓடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள 'புர்கா' திரைப்படம் இசுலாமிய பெருமக்களின் இறை நம்பிக்கையையும், அவர்களின் புனித நூலான குரானையும் இழிப்படுத்துவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து அதனைத் தடைசெய்யக் கோரும் இசுலாமிய மக்களின் கோரிக்கையை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து கவனத்தில் எடுக்க வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி போராடும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.


    • பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ்.
    • இவர் தற்போது ‘வாழை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


    மாரி செல்வராஜ்

    இதையடுத்து மாரி செல்வராஜ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'வாழை'. இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


    வாழை படப்பிடிப்பு

    இந்நிலையில், 'வாழை' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "முதற்கட்ட படபிடிப்பு நிறைவடைந்தது- உறுதுணையாய் நின்ற அனைத்துஉள்ளங்களுக்கும் நன்றியும் ப்ரியமும்" என்று பதிவிட்டுள்ளார்.


    வாழை படப்பிடிப்பு

    'வாழை' திரைப்படம் மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுகதையில் வாழைத் தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்களைப் பற்றி எழுதியிருந்தார். எனவே வாழை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.



    • பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ்.
    • இவர் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

    2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தற்போது உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. வாழை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

    இந்நிலையில் இப்படம் சமூகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி வாழை திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுகதையில் வாழைத் தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்களைப் பற்றி எழுதியிருந்தார். எனவே வாழை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    • பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ்.
    • இவர் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

    2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தற்போது உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

     

    வாழை

    வாழை

    இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு வாழை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்ப்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராய குறிச்சியில் இன்று தொடங்கியது. அதனை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கியுள்ள படம் பேட்டைகாளி.
    • இப்படம் வருகிற 21-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பேட்டைக்காளி. இவர் இதற்குமுன்பு தினேஷ் நடிப்பில் வெளியான அண்ணணுக்கு ஜே படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் கலையரசன், ஆண்டனி, கிஷோர், ஷீலா ராஜ்குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வருகிற 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

     

    பேட்டைக்காளி படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்

    பேட்டைக்காளி படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்

    இந்நிலையில் இப்படத்தின் கதாப்பாத்திர அறிகும போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டைக்காளி படத்தில் பாண்டியாக கலையரசனும், செல்வசேகரனாக வேல ராமமூர்த்தியும், தேன்மொழியாக ஷீலா ராஜ்குமாரும், முத்தையாவாக கிஷோரும் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.
    • இதற்கான பணிகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கலையரசனை சந்தித்துள்ளார்.


    லோகேஷ் கனகராஜ் - கலையரசன்

    இது குறித்து கலையரசன் தனது சமூக வலைதளத்தில், "நீண்ட நாட்களுக்கு பின்னர் மச்சி லோகேஷ் கனகராஜை சந்தித்துள்ளேன். எப்போதும் போல் தளபதி 67 படத்திலும் நான் இல்லை என்று கூறினார். அவரது யூனிவர்சின் சிறந்த விஷயங்கள் விரைவில் வரும்" என்று பதிவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


    எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
    நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

    `லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் துவங்கிய நிலையில் மதுரை, குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

    அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

    எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு லாபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #LaabamShootKickStarts
    நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

    `லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையோடு இன்று ராஜபாளையத்தில் துவங்கியது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

    `புறம்போக்கு' படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் - விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LaabamShootKickStarts #VijaySethupathi #ShrutiHaasan

    இயக்குநர் பா.இரஞ்சித்திடம் பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்கவிருக்கும் புதிய படத்தை ரஞ்சித் தயாரிக்க, நாயகனாக நடிக்க கலையரசன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Kalaiyarasan #AravindAkash
    நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியாகிய பரியேறும் பெருமாள் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்ததாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்துள்ளார்.

    இந்த நிலையில், நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஷரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.


    இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் இன்று துவங்கிய நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

    பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இந்த படத்தை இயக்குகிறார். கலையரசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். #Kalaiyarasan #AravindAkash #SureshMari #PaRanjith

    சர்ஜூன்.கே.எம் இயக்கத்தில் நயன்தாரா - கலையரசன், யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஐரா' படத்தின் விமர்சனம். #Airaa #AiraaReview #Nayanthara #Kalaiyarasan #YogiBabu
    பத்திரிகையாளரான நயன்தாராவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்களான ஜெயப்பிரகாஷ் - மீரா கிருஷ்ணன் முடிவு செய்கின்றனர். ஆனால் திருமணத்தின் மீது அதீத நாட்டம் இல்லாத நயன்தாரா சென்னையில் இருந்து தனது பாட்டி வீட்டுக்கு சென்று விடுகிறார்.

    கண் தெரியாத நயன்தாராவின் பாட்டியை யோகி பாபு கவனித்துக் கொள்கிறார். அங்கு சிறுவன் ஒருவனையும் நயன்தாரா சந்திக்கிறார். தனது பாட்டி வீட்டில் தங்கியிருக்கும் நயன்தாராவுக்கு இரவில் ஏதோ கருப்பு உருவம் அங்கு இருப்பது போலவும், அது தன்னை பின்தொடர்வதாகவும் தோன்றுகிறது. அது ஒருவித பயத்தையும் உண்டுபண்ணுகிறது. ஒருகட்டத்தில் பாட்டி மேலே இருந்து கீழேவிழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பின்னர் சிகிச்சை பலனின்றி பாட்டி இறந்துவிடுகிறார்.



    மறுபுறத்தில் இதேபோன்று சில மர்ம மரணங்கள் நிகழ்கிறது. இதில் கலையரசனுக்கு சம்பந்தப்பட்ட ஒருவரும் இறந்துவிட, இந்த மரணங்கள் பற்றி கலையரசன் தகவல் சேகரிக்கிறார்.

    கடைசியில், மர்ம மரணங்களுக்கு பின்னால் இருக்கும் அமானுஷ்ய சக்தி எது? நயன்தாரா பார்க்கும் நிழல் உருவம் என்ன? கலையரசனுக்கும், நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    இருவிதமான தோற்றத்தில் வந்து நயன்தாரா
     அவரது வேலையை சிறப்பாக செய்துவிட்டு போயிருக்கிறார். ஒரு தோற்றத்தில் நகரத்து சாயலிலும், மற்றொரு தோற்றத்தில் கிராமத்து பெண்ணுக்குண்டான சாயல், பேச்சு என வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். கலையரசன் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். பாட்டியாக வரும் குலப்புள்ளி லீலா, யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், மாதீவன், கேப்ரெல்லா என மற்ற கதாபாத்திரங்களும் திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

    எச்சரிக்கை படத்திற்கு பிறகு ஒரு முழு நீள த்ரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார் சர்ஜூன். முதல் பாதி காமெடி கலந்த திகிலாகவும், இரண்டாவது பாதி திகில் கலந்த செண்டிமெண்ட் காட்சிகளாகவும் இருக்கிறது. பொழுபோக்கு அம்சங்கள் குறைவாக இருந்தாலும், படம் முழுக்க பயமுறுத்தும் காட்சிகளாகவே நகர்கிறது. படத்தின் காட்சிகளுக்கு சுந்தரமூர்த்தியின் இசை உயிர்ப்பாக அமைந்திருக்கிறது.



    சுந்தரமூர்த்தி.கே.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. குறிப்பாக இதயத்துடிப்பு போன்ற மெல்லிய இசை திகிலை கூட்டுகிறது. சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. கார்த்திக் ஜோகேஷின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் `ஐரா' திகில்.

    சர்ஜூன். கே.எம். இயக்கத்தில் நயன்தாரா - கலையரசன், யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் `ஐரா' படத்தின் முன்னோட்டம். #Airaa #Nayanthara #Kalaiyarasan #YogiBabu
    கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `ஐரா'.

    நயன்தாரா முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் கலையரசன், யோகிபாபு, ஜே.பீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சுதர்சன் சீனிவாசன், இசை - சுந்தரமூர்த்தி கே.எஸ்., படத்தொகுப்பு - கார்த்திக் ஜோகேஷ், கலை - சிவசங்கர், ஸ்டண்ட்ஸ் - மிராக்கிள் மைக்கேல் ராஜ், ஆடை வடிவமைப்பாளர் - பிரீத்தி நெடுமாறன், நடனம் - விஜி சதீஷ், பாடல்கள் - தாமரை, மதன் கார்கி, கு.கார்த்திக், ஆடியோகிராஃபி - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பாளர் - கோட்டபாடி ஜே.ராஜேஷ், கதை, திரைக்கதை - பிரியங்கா ரவீந்திரன், இயக்கம் - சர்ஜூன். கே.எம்.



    படம் பற்றி இயக்குநர் சர்ஜூன் பேசும் போது,

    ஐரா (யானை) ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். நயன்தாராவின் 63-வது திரைப்படமாகும். படத்தை இயக்கும்போது அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக 'பவானியின்' கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

    ஐரா மார்ச் 28-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Airaa #Nayanthara #Kalaiyarasan #YogiBabu #SarjunKM #AiraaOnMarch28 🦋

    ஐரா டிரைலர்:

    சர்ஜுன்.கே.எம். இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஐரா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. #Airaa #Nayanthara
    லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜூன்.கே.எம். அடுத்ததாக நயன்தாராவை வைத்து ‘ஐரா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

    கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் டீசர் ஜனவரி 5-ஆம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது.


    இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். சுதர்ஷன் சீனிவாசன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார்.

    படம் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் ரிலீசாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த படம் தவிர்த்து நயன்தாரா அஜித்துடன் ‘விஸ்வாசம்‘, விஜய்யுடன் ‘தளபதி 63’, ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சிரஞ்சீவியுடன் ‘சயீரா நரசிம்மரெட்டி’ மற்றும் மேலும் ஒரு படம், நிவின்பாலியுடன் ‘லவ் ஆக்சன் டிராமா’, ‘கொலையுதிர்க்காலம்‘  உள்பட கை நிறைய படங்களை வைத்திருக்கிறார். #Airaa #Nayanthara #SarjumKM #AiraaTeaser

    ×