search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dinesh"

    • பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஊர்வசி நடிப்பில் "ஜே பேபி" படம் நாளை வெளியாக உள்ளது.
    • ஹன்சிகா மோத்வானி நடிப்பில் நாளை வெளியாக உள்ளது கார்டியன் திரைப்படம்.

    பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஊர்வசி நடிப்பில் "ஜே பேபி" படம் நாளை வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை சுரேஷ் மாரி இயக்கியுள்ளார். ஒரு தாய் திடீரென்று தன் குடும்பத்தை விட்டு யாரிடமும் சொல்லாமல்  வெளியே செல்கிறார். மகன் எப்படி அவரை கண்டுபிடித்தார் என்பதே கதைக் களம்.

    ஹன்சிகா மோத்வானி நடிப்பில் நாளை வெளியாக உள்ளது கார்டியன் திரைப்படம். இப்படத்தில் ஹன்சிகா திகிலூட்டும் வேடத்தில் நடித்துள்ளார். சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு திகில் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்த ஷில்பா மஞ்சுனாத் அடுத்து சமூத்திரகனியுடன் சேர்ந்து சிங்கப்பெண்ணே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சதீஷ் குமார் இயக்கியுள்ளார். நாளை இந்த படம் வெளியாக இருக்கிறது.

    மேகனா இலன், சார்லி, இமான் அண்ணாச்சி நடிப்பில் நாளை வெளியாகும் படம் "அரிமாபட்டி சக்திவேல்". ரமேஷ் கந்தசாமி என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இயக்குனர் பிரசாத் ராமர் இயக்கத்தில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், தமிழ் செல்வி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே. பாடகர் மற்றும் இசையமைப்பாளார் ப்ரதீப் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படமும் நாளை வெளியாக உள்ளது. 

    • அம்மா மற்றும் அவரது 2 மகன்கள் பற்றிய கதை ஆகும்.
    • சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை மிகுந்த இப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசை.

    இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் J.பேபி படத்தில் நடிகை ஊர்வசி, தினேஷ் மற்றும் மாறன் நடித்து உள்ளனர்.

    இந்த படம் அம்மா மற்றும் அவரது 2 மகன்கள் பற்றிய கதை ஆகும். சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை மிகுந்த படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் 2-வது சிங்கிள் இன்று வெளியிடப்படும் என்று படக்குழு நேற்று அறிவித்தது.

    ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியான நிலையில், இன்று 2-வது சிங்கிளான "லிட்டில் பிட் கிரேசி" பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    வருகிற மார்ச் 8- ந்தேதி பெண்கள் தினத்தையொட்டி இந்த படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • நீலம் புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள புதிய படம் J.பேபி.
    • இந்த படத்தை சுரேஷ் மாரி இயக்கியுள்ளார்.

    இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் J.பேபி படத்தின் 2-வது சிங்கிள் தயாராகி உள்ளது. இந்த படத்தில் நடிகை ஊர்வசி, தினேஷ் மற்றும் மாறன் நடித்து உள்ளனர்.

    இந்த படம் அம்மா மற்றும் அவரது 2 மகன்கள் பற்றிய கதை ஆகும். இது சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை மிகுந்த படமாகும். டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

     


    இந்த படத்தின் 2-வது சிங்கில் நாளை (16-ம் தேதி) வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.

    ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்தது. இப்படத்துக்கு சென்சார் வாரியம் 'யு' சான்றிதழ் வழங்கி உள்ளது. வருகிற மார்ச் 8- ந்தேதி பெண்கள் தினத்தையொட்டி இந்த படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. 

    • தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் 'லப்பர் பந்து'.
    • இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

    கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.



    இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் மேற்கொள்கிறார்.


    லப்பர் பந்து போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஆயுத பூஜையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.


    • தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் ரக்‌ஷிதா மகாலட்சுமி.
    • இவர் தமிழில் பிக்பாஸ் 6-வது சீசனிலும் கலந்து கொண்டார்.

    தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த நடிகர் தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 6-வது சீசனிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போதுதான் இவர் கணவர் தினேஷிடம் இருந்து பிரிந்து வாழ்வது தெரிய வந்தது. பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது பல தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்து வருகிறார்.


    இந்நிலையில், இவர் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவர் தினேஷ் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், தான் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும், கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாசமாக தினேஷ் மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக கூறியுள்ளார். மேலும், தனது செல்போன் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


    இந்த புகாரின் பேரில் போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்தனர். போலீஸ் நிலையம் வந்த தினேஷ், ரக்ஷிதா வேண்டுமானால் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடிக் கொள்ளலாம் என தெரிவித்துவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இருவரையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கி வரும் திரைப்படம் தண்டகாரண்யம்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

    2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து சர்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.


    இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பா.இரஞ்சித், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருந்தார்.


    தற்போது பா.இரஞ்சித் மீண்டும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும் புதிய படத்தை தயாரித்துள்ளார். தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு பிரதிப் கலிராஜா ஒளிப்பதிவு மேற்கொள்ள இசையை ஜஸ்டீன் பிரபாகரன் கவனிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தண்டகாரண்யம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் அதியன் ஆதிரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • இயக்குனர் ராஜ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லோக்கல் சரக்கு’.
    • இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் யோகிபாபு, நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லோக்கல் சரக்கு'. டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ்குமார் இயகியுள்ளார். மேலும், இப்படத்திற்கு சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்துள்ளார்.


    லோக்கல் சரக்கு

    இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் 'லோக்கல் சரக்கு' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். குடியால் சாதாரண மனிதரின் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளை விளக்குவது போன்று உருவாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



    • தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், தினேஷ், கோபி ஆகியோர் மீது நடிகர் விமல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • நடிகர் விமல் கொடுத்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் சினிமா தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், தினேஷ், கோபி ஆகியோர் மீது விருகம்பாக்கம் போலீசார் மோசடி வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கோபி தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

    விமல் - சிங்காரவேலன்

    விமல் - சிங்காரவேலன்

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் கோகுலகிருஷ்ணன், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.வெங்கடேஷ், மனுதாரருக்கு எதிரான புகாரில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று வாதிட்டார்.

    விமல்

    விமல்

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், "விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை போலீசார் நேர்மையாக விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டு முகாந்திரம் இருந்தால், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம், இல்லை என்றால் வழக்கை முடித்து வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

    சக்திவாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் ‘நாயே பேயே’ படத்தின் முன்னோட்டம்.
    கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் படம் ‘நாயே பேயே’.

    நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - நிரன் சந்தர், இசை - என்.ஆர்.ரகுநந்தன், கலை - சுப்பு அழகப்பன், படத்தொகுப்பு - கோபி கிருஷ்ணா, நிர்வாக தயாரிப்பாளர் - சக்கரத்தாழ்வார், ஆக்சன் - ஸ்டான்ட் ஜி.என், நடனம்  தினேஷ், தினா, இணை இயக்குனர் - வே.செந்தில்குமார், தயாரிப்பு மேற்பார்வை - அஸ்கர் அலி, விஜயகுமார், தயாரிப்பு - கோபி கிருஷ்ணா, கலையரசி சாத்தப்பன், டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சக்திவாசன்



    இயக்குனர் சக்திவாசன் படம் பற்றி கூறியதாவது:-

    ‘‘நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறான்.

    இந்த நிலையில், அவன் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக விரும்புகிறான். அவனுக்கு அந்த சந்தர்ப்பம் அமைந்ததா, அதில் அவன் வெற்றி பெற்றானா? என்பதே இந்த படத்தின் கதை என்றார்.

    சக்திவாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் ‘நாயே பேயே’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
    ‘குப்பை கதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடன இயக்குநர் தினேஷ். யதார்த்மான கதையம்சத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது மற்றுமொரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    ‘நாயே பேயே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சக்திவாசன் இயக்குகிறார். ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், சாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.



    இயக்குனர் சக்திவாசன் படம் பற்றி கூறியதாவது:-

    ‘‘நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறான்.

    இந்த நிலையில், அவன் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக விரும்புகிறான். அவனுக்கு அந்த சந்தர்ப்பம் அமைந்ததா, அதில் அவன் வெற்றி பெற்றானா? என்பதே இந்த படத்தின் கதை.

    கோபி கிருஷ்ணா, கலைஅரசி சாத்தப்பன், டாக்டர் ரேவதி ரெங்கசாமி ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

    தினேஷ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு திரைப்படம் திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்திருக்கிறது. #Irandaam_Ulagaporin_Kadaisi_Gundu
    "பரியேறும் பெருமாள்" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து "நீலம் புரொடக்‌ஷன்ஸ்" சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்து வரும் திரைப்படம் "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு".

    நடிகர் தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, லிஜீஷ், மாரிமுத்து ஆகியோர் நடிக்கும் இத்திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார்.



    சென்னை, திண்டிவனம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடந்து வந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. இரண்டு கட்டமாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி படக்குழுவினர் உற்சாகமான கொண்டாட்டத்துடன் நிறைவு செய்தனர்.

    "திட்டமிட்டதை விட சீக்கிரமே படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். அனைவரும் முழு நிறைவாக வேலை செய்திருக்கிறோம். விரைவில் எடிட்டிங், டப்பிங் பணிகள் தொடங்க இருக்கிறது. நிச்சயம் தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலாக இந்தப்படம் இருக்கும்" என்று கூறினார் இயக்குநர் அதியன் ஆதிரை.
    இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கமாண்டோ படை வீரர்கள் சுற்றி வளைத்திருக்கிறார்கள். #Dinesh #Gundu
    நடிகர் தினேஷ் நடிக்கும் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான்விஜய், ஜானிஹரி, வினோத் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். நீலம் புரொடக்சன் சார்பில் பா.இரஞ்சித் தயாரிக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை சண்டைப்பயிற்சியாளர் சாம், மற்றும் இயக்குனர் அதியன் ஆதிரை சென்னை புற நகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் எடுத்துகொண்டிருந்தனர். 

    நாயகன் தினேஷ், வேகமாக செல்லும் லாரியில் தொங்கிக்கொண்டு சண்டைபோடும் காட்சியை படக்குழுவினர் படமாக்கிக் கொண்டிருந்தனர். கேமரா லாரிக்குள் இருந்ததால் ரோட்டில் செல்வோருக்கு நிஜமாக ஏதோ லாரியில் நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் அந்த வழியே வந்த ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள் நிஜமாகவே லாரியில் இரவு நேரத்தில் ஏதோ நடக்கிறது என்று லாரியை சுற்றி வளைத்துப் பிடித்தனர். 



    இதை அறிந்திராத தினேஷ், 'நமக்குத்தெரியாமல் இது என்ன புதுசா கமாண்டோ வீரர்கள் எல்லாம் சீன்ல வராங்களே' இது சீன்லயே இல்லையே என்று அதிர்ச்சியடையாமல் சுற்றி வளைத்த போலீசார் வைத்திருந்த துப்பாக்கிகளை பார்த்து இது என்ன ஒரிஜினல் மாதிரியே இருக்கு? என்று கேட்க.... நிஜ போலீசார் துப்பாக்கியை தினேஷ் மீது குறிவைக்க, இயக்குனர் சூட்டிங், சூட்டிங், என்று சத்தம்போட அதற்குபிறகே தினேஷ் அதிர்சியடைந்திருக்கிறார். நெருங்கி வந்த வீரர்கள் தினேஷ் முகத்தை கவனித்தபிறகே நிஜமான சூட்டிங் என்று உறுதிபடுத்தியுள்ளனர். 
    ×