search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathyaraj"

    • சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-Everything for everyone” சென்னையில் தொடங்கப்பட்டது.
    • இந்த OTT தளம்தான் உலகின் முதல் சமூக நீதிக்கான தளமாகும்.

     திராவிடர் இயக்க வரலாற்றில் புதிய முயற்சியாக சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-Everything for everyone" சென்னையில் தொடங்கப்பட்டது.

    இந்த OTT தளத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். திரைப்படங்களுக்கான OTT தளத்தை நாம் அறிவோம். சமூக நீதிக்கான OTT தளத்தையும் இனி தெரிந்து கொள்வோம். "PERIYAR VISION- Everything for everyone" என்ற இந்த OTT தளம்தான் உலகின் முதல் சமூக நீதிக்கான தளமாகும்.

    தி.க. தலைவர் கி.வீரமணி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த OTT தளத்தைத் தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்வில் கனிமொழி எம்பி பேசுகையில், லிபர்ட்டி இன்று இந்த நாட்டில் யாருக்கும் இல்லாத சூழலில் இந்த திடலில்தான் அதை உருவாக்க முடியும் என்று நிரூபித்து உள்ளோம். அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் யாருக்கும் பேச்சுரிமை கிடையாது. சிந்தனை உரிமை கிடையாது எந்த லிபர்ட்டியும் கிடையாது. எல்லாருடைய லிபர்ட்டிக்காகவும் பாடுபட்ட பெரியார் கருத்துக்களை பதிவு செய்ய OTT தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கும் அற்புதமான செயல்.

    கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் OTT தளம் இதுவாகதான் இருக்கும். அனைத்திலும் முன்னோடியாக இருக்கக்கூடிய திராவிடர் இயக்கம் இதிலும் முன்னோடியாக இருக்கிறது என்று பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    இவ்விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், "ஓடிடி தளம் இன்று மிகவும் முக்கியமான ஒன்று. சென்சார் போர்டில் இருக்கும் அளவிற்குப் பிரச்னைகள், கட்டுப்பாடுகள் இதில் இல்லை. 'பராசக்தி' படத்தில் ஆரம்பித்து, இப்போது நான் நடித்திருக்கும் 'சேகுவேரா' படம் வரை சென்சார் போர்டின் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இளைஞராக இருக்கும்போது இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை சென்சார் போர்டில் பிரச்சனைகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஓடிடி-யில் இப்போது அந்தப் பிரச்னைகள் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால், ஓடிடி-யைக் குறைந்தபட்ச சுதந்திரத்துடன் படைப்பாளிகளால் பயன்படுத்த முடிகிறது.

    இந்த ஓடிடியைப் பயன்படுத்தி திராவிட சித்தாந்தத்தை, பெரியார் கொள்கையை, சமத்துவ சிந்தனைகளை தலைமுறைகள் கடந்து நாம் எடுத்துச் செல்ல வேண்டும். பெரியாரை, அவரது சமத்துவ சிந்தனையை விஞ்ஞானப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. என்று கூறினார்.

    கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஓடிடி மக்களிடையே பரவி அதற்கான ஆதரவு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ஓடிடியில் வெளிவரும் கண்டண்ட்டுகளை பார்க்கும் மக்கள் இந்த ஓடிடி- யில் வரும் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் குறும் படங்களை பார்த்து ஆதரிக்க வேண்டும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது.

    படத்தின் டிரைலர் லான்ச் ஈவண்ட் தற்பொழுது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. படத்தில் நடித்த பிரபலங்கள் இவ்விழாவில்  கலந்துக் கொண்டுள்ளனர். எப்பொழுதும் திரை பிரபலங்கள் அவர்களது பட நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக புதுப்புது கெட்டப்பில் வருவார்கள்.

    ஆனால் இம்முறை விஜய் ஆண்டனி யாரும் வராத ஒரு புதிய கெட்டப்பில் வந்துள்ளார். ஒரு பக்க முகம் மற்றும் கைகளில் கருப்பு சாயம் பூசியது போன்ற தோற்றம். அதற்கு காரணம் மற்றொரு படத்தின் ஷூட்டிங்கிள் இருந்து அப்படியே வந்ததால் இப்படி இருக்கிறது என்று கூறினார்.

     

    படத்தின் டிரைலர்  தற்பொழுது வெளியாகியுள்ளது. படம் வரும் ஜூலை மாதம்  திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது.

    சில நாட்களுக்கு முன் படத்தின் சென்சார்ஷிப் போர்ட் U/A சான்றிதழை வழங்கியது என்ற அப்டேட்டை கொடுத்து இருந்தனர். தற்பொழுது படத்தின் டிரைலர் குறித்து அப்டேட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் டிரைலர் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் விரைவில் திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு  மொழிகளிலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்."
    • இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து இன்று படத்தின் முதல் பாடலான `தீரா மழை' இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி மற்றும் அச்சு ராஜமணி இணைந்து இசையமைத்துள்ளனர்.

    இந்த படத்தின் ரிலீஸ் தேதி உள்பட படம், தொடர்பான இதர அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்தும், சத்யராஜும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.
    • புரளியை கிளப்பியவர்கள் யார் என்று தெரியவில்லை.

    ரஜினிகாந்தும், சத்யராஜும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வந்த மிஸ்டர் பாரத் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

    அதன்பிறகு சேர்ந்து நடிப்பதை நிறுத்தி விட்டனர். சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடிக்க சத்யராஜ் மறுத்து விட்டார். ரஜினிக்கும், சத்யராஜுக்கும் தகராறு என்றும், இதனாலேயே சேர்ந்து நடிக்க மறுக்கிறார்கள் என்றும் தகவல்கள் பரவி வந்தன.

    இந்த நிலையில் தற்போது நிருபர்களை சந்தித்த சத்யராஜிடம் ரஜினியுடன் உங்களுக்கு தகராறா? என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறும்போது, "ரஜினிகாந்துடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்குள் தகராறு என்று புரளியை கிளப்பியவர்கள் யார் என்று தெரியவில்லை.

    ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மிஸ்டர் பாரத் படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம் அமைந்தது. அந்த படத்துக்கு பிறகு ரஜினியுடன் நடிப்பதாக இருந்தால் அதையும் தாண்டி வலுவான கதாபாத்திரமாக இருக்க வேண்டும்.

    சிவாஜி, எந்திரன் படங்களில் எதிர்பார்த்த வலுவான கதாபாத்திரம் அமையாததால் நடிக்க மறுத்தேன். வேறு எந்த பிரச்சினையும் இல்லை'' என்றார்.

    தற்போது 38 ஆண்டுகளுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினியும், சத்யராஜும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் பரவி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
    • இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

    இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

    இந்த படத்தின் ரிலீஸ் தேதி உள்பட படம், தொடர்பான இதர அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
    • பிரதமர் மோடியின் பயோபிக்-ல் நான் நடிக்கவில்லை.

    விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில், இயக்குநர் மில்டன், விஜய் ஆண்டனி, மெகா ஆகாஷ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அந்நிகழ்வில் கலந்து கொண்ட சத்யராஜிடம் மோடி பயோபிக் படத்தில் நடிப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "பிரதமர் மோடியின் பயோபிக்-ல் நான் நடிக்கவில்லை. அப்படியே நடித்தாலும் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் படத்தை இயக்க முன் வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மோடி பயோபிக்-ஐ என் நண்பர் மணிவண்ணன் போன்ற இயக்குனர் இயக்கினால் அப்படியே தத்ரூபமாக எடுப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரோமியோ திரைப்பட வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்".
    • கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ளனர்

    ரோமியோ திரைப்பட வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் மே 29 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் ஆண்டனி ஒரு சிறிய நாய் குட்டி மற்றும் பக்கத்தில் குடையை வைத்துக் கொண்டு அமர்ந்து இருக்கிறார். இப்படம் எவ்விதமான கதைக்களத்துடன் அமைந்து இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இந்த படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் தொடர்பான இதர அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 1986-ல் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'மிஸ்டர் பாரத்' படம் பெரும் வரவேற்பை பெற்றது.
    • ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா...’ என்ற பாடல் பெரும் வரவேற்பினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'. இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

    இந்த கூலி படத்தின் டீசரில் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'தங்கமகன்' படத்தில் இடம்பெற்று இருந்த 'வா வா பக்கம் வா' என்ற பாடலின் இசை இடம்பெற்று இருந்தது. 'தங்கமகன்' படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜாதான் இசையமைத்து இருந்தார். இதனையடுத்து தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்த இசையை கூலி டீசரில் பயன்படுத்தி இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

    கூலி டீசரில் இடம்பெற்று இருக்கும் 'வா வா பக்கம் வா' என்ற பாடலின் இசையை பயன்படுத்த உரிய அனுமதி வாங்கவேண்டும். அப்படி வாங்கவில்லை என்றால் அந்த டீசரில் இருந்து அந்த இசையை நீக்கவேண்டும். அப்படி எதுவும் செய்யாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாகவும் அந்த நோட்டிசில் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


    இந்நிலையில், கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகர் சத்யராஜ் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியுடன் சத்யராஜ் நடிப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

    இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கவில்லை என்றும் ரஜினிகாந்தின் நண்பராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, 1986-ல் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'மிஸ்டர் பாரத்' படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சத்யராஜ், அம்பிகா, கவுண்டமணி, எஸ்.வி.சேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் சத்யராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த்- சத்யராஜ் கூட்டணி இப்படத்திற்கு பலத்தை கொடுத்தது. 'என்னம்மா கண்ணு சௌக்கியமா...' என்ற பாடல் பெரும் வரவேற்பினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
    • கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை கார்த்தி 26 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர்.

    நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் இவருடைய 25 ஆவது படமான ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

    அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடித்துள்ளார். சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி.

    இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 'கார்த்தி 26' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை கார்த்தி 26 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர். படத்திற்கு 'வா வாத்தியார்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

    போஸ்டரில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்த பல கதாப்பாத்திரங்களின் வேடத்தில்  நிற்கின்றனர். கார்த்தி வித்தியாசமான போலிஸ் கெட்டப்பில் சிவப்பு நிற கண்ணாடியை அணிந்து காணப்படுகிறார். எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார் என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 'கார்த்தி 26' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

    நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் இவருடைய 25 ஆவது படமான ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

    அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடித்துள்ளார். சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி.

    இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 'கார்த்தி 26' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்  தற்பொழுது கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை கார்த்தி 26 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படம் விஜய்மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது.
    • இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் மே 29 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

     


    இந்த படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் தொடர்பான இதர அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×