என் மலர்
நீங்கள் தேடியது "சத்யராஜ்"
- ஜி.டி. நாயுடுவாக என் அன்பு நண்பன் மாதவன் நடிக்கிறார்.
- மிகப்பெரிய மேம்பாலத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி.டி. நாயுடு பெயர் சூட்டி மகிழ்கிறார்.
கோவை மாவட்டம் அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,791.23 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 10.10 கி.மீ. நீளம் கொண்ட 4 வழித்தட மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில்,
நான் இப்போது கோயம்புத்தூரில் இருக்கிறேன். நான் ஷூட்டிங்கிற்காக இங்கு வந்து இருக்கிறேன். படத்தின் பெயர் ஜி.டி. நாயுடு. தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்த மாதிரி, ஜி.டி. நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறோம்.
இதில் ஜி.டி. நாயுடுவாக என் அன்பு நண்பன் மாதவன் நடிக்கிறார். கிருஷ்ணா இயக்குகிறார். வர்கீஸ் தயாரிக்கிறார். நான் ராமையா பிள்ளை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
இப்போது கோயம்புத்தூரில் ஜி.டி. நாயுடு படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் இதே நேரத்தில், ஒரு மிகப்பெரிய மேம்பாலத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி.டி. நாயுடு பெயர் சூட்டி மகிழ்கிறார். அதற்காக கோயம்புத்தூர்காரன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன்.
எங்கள் படக்குழுவின் சார்பில் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜி.டி. நாயுடு அவர்களின் குடும்பத்தாருக்கும் எங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
- தவறு செய்தவன் திருந்த பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தவர்களுக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய சத்யராஜ், "கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். தவறு என்பது தவறி செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது... தவறு செய்தவன் திருந்த பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும். சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து... சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தப்பு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ... தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ... ச்ச" என்று தெரிவித்தார்.
குறிப்பாக வீடியோ முடிவில் 'ச்ச' என்று வேதனையோடு சத்யராஜ் கூறினார்.
- விஞ்ஞானத்தை பயன்படுத்தினால் தான் நன்றாக வாழ முடியும்.
- வேற்றுமையில் ஒற்றுமை தற்போது மிக அவசிய மாகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் மதத்தால் பிரிந்தாலும் மனதால் இணைவோம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பேசியதாவது:-
விஞ்ஞானத்தை பயன்படுத்தினால் தான் நன்றாக வாழ முடியும். மதத்தால் சண்டையிட்டால் வாழ முடியாது. என்றும் மத நல்லிணக்கம் என்பது தான் முக்கியம். குரங்கை விட மோசமானவனாக மனிதன் உள்ளான். பள்ளியில் படிக்கும் போது இது போன்ற பிரச்சினைகள் கிடையாது. நான் பெரியார் புத்தகங்களை படித்த பிறகு தான் கடவுள் என்பது கற்பனை என உணர்ந்தேன்.
திருப்பூர் எவ்வளவு வளர்ந்து உள்ளது. ஆனால் அமெரிக்காகாரன் திடீரென ஆப்பு வைத்து விட்டான்வடமாநில இளைஞர்களிடம் உங்கள் ஊருக்கு செல்கிறீர்களா? என கேட்டால் அவர்களுக்கு கோபம் வந்து விடும். அந்த அளவுக்கு அவர்கள் இங்கு சிறப்பாக உள்ளனர்.
மும்பையில் பீப் ஸ்டால் இல்லை. அங்கு அவ்வளவு கொடுமை உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டி தான் பேசி வருகிறார்கள். இந்தி எதிர்ப்பு மகாராஷ்டிராவிலும் வளர்ந்துள்ளது. இந்தியாவிற்கு தமிழ்நாடு தான் முன்மாதிரியாக உள்ளது. 2026ல் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை தற்போது மிக அவசிய மாகிறது.
தமிழகத்தில் நீதிக்கட்சி முதல் தி.மு.க., ஆட்சி வரை சமூக நீதி ஆட்சி நடை பெறுகிறது. வடமாநிலங்களில் இன்னும் பெண்ணடிமை, சாதிய மோதல் நிறைந்துள்ளன. தமிழ்நாட்டு சிந்தனைகள்தான் இன்று நாடு முழுவதும் சென்று கொண்டிருக்கிறது. எனக்கு சினிமா மார்க்கெட் உள்ளது. பணம் உள்ளது. யார் ஆட்சி வந்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. 2026ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு பாதுகாப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.
- நான் ராஜமவுலி இயக்கம் முதல் கொண்டு நடித்து பாத்திட்டனுங்க.
- இவருகிட்ட (தனுஷ்) நடிப்பது ரொம்ப சிரமமுங்க.
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் இசை வெளியீடு விழா நடைபெற்றது.
இன்று கோவையில் உள்ள மாலில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சத்யராஜ், கோவை பாஷையில் பேசி அசத்தினார்.
அவர் தனுஷ் மற்றும் இட்லி கடை படம் குறித்து கூறியதாவது:-
நான் ராஜமவுலி இயக்கம் முதல் கொண்டு நடித்து பாத்திட்டனுங்க. இவருகிட்ட நடிப்பது ரொம்ப சிரமமுங்க. இப்படித்தான் நடிக்கனும். இந்த பக்கம், அந்த பக்கம் நகர முடியாதுங்க. ஆனா ஒன்னும் மட்டும் தெரியுதுங்க. இட்லி கடை பட்டைய கௌப்ப போதுங்க. இது கண்டிப்பாக தெரியுதுங்க.
சமீப காலத்தில் எத்தனை டிரைலர் பாத்திருக்கோம்ங்க. எல்லாம் டமால் டுமில்தான் என இருந்திருக்கும்ங்க. ஒரு டைரக்டர் சிரிக்க வேண்டும்னு காட்சி வச்சா சிரிக்கனும்ங்க. அழுகனும்னு காட்சி வச்சா, அழுகனும்ங்க. எகிறி அடிக்கனும்போது கைதட்டனும்னா தட்டனும்ங்க. அதற்கு பெயர்தான் சினிமா. அதுதான் இட்லி கடைங்க..
இவ்வாறு சத்யராஜ் பேசினார்.
- இட்லி படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்களை நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
- இட்லி கடை வரும் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரே எழுதிப் பாடியுள்ள 'எஞ்சாமி தந்தானே' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது.
படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்களை நேற்று மாலை 6 மணி முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக இட்லி கடை படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
இந்நிலையில், இட்லி கடை படத்தில் நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக இன்று போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
- நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார்.
- தமிழில் சாமி, திருப்பாச்சி, சகுனி உள்ளிட்ட படங்களில் கோட்டா சீனிவாசராவ் நடித்துள்ளார்.
நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிர் பிரிந்தது.
கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
தமிழில் சாமி, திருப்பாச்சி, சகுனி உள்ளிட்ட படங்களில் கோட்டா சீனிவாசராவ் நடித்துள்ளார்.
2015இல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகளை கோட்டா சீனிவாசராவ் வென்றுள்ளார்.
இவரது உடலுக்கு பல தெலுங்கு நடிகர்களும் அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆந்திரா துணை முதலமைச்சரான பவன் கல்யாண், நடிகர் பிரம்மானந்தம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் அப்ப்போது அவர்கள் மிகவும் கோட்டா ஸ்ரீனிவாசனைப் பற்றி உருக்கமாக பேசினார்கள்.
நடிகர் சத்யராஜ் அவரது ஆழ்ந்த இரங்கலை விடியோவாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
1999- 2004 வரை விஜயவாடா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக கோட்டா சீனிவாசராவ் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் சத்யராஜுக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது.
- தமிழறிஞர் சண்முகதாசுக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2025-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. வரவேற்று பேசினார்.
இதில் பொதுசெயலாளர் சிந்தனை செல்வன், துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, ஆளுர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாவட்டச்செயலாளர்கள் இளங்கோ, ஜேக்கப், கரிகால்வளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில், ஆந்திராவில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் கே.எஸ்.சலமுக்கு அம்பேத்கர் சுடர் விருது, நடிகர் சத்யராஜுக்கு பெரியார் ஒளி விருது, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகுவுக்கு மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி வைத்திலிங்கத்துக்கு காமராசர் கதிர் விருது, பவுத்த ஆய்வறிஞர் ஜம்புலிங்கத்துக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருது, தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவிக்கு காயிதேமில்லத் பிறை விருது வழங்கப்பட்டது. தமிழறிஞர் சண்முகதாசுக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:- கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதில் நமக்கு பிரச்சனை இல்லை. நமக்கு பிரச்சனையே சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம்...
சாதி வைத்து தமிழ் தேசியம் எப்படி சாத்தியமாகும். ஆணவக் கொலை எப்படி நடக்கிறது? ஒரு தமிழனை இன்னொரு தமிழன் தான் வெட்டுகிறான். சாதி ஒழியாமல் எப்படி தமிழ் தேசியம் மலரும்? சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம்... அதுதான் முக்கியமான கொள்கை.
பெரியாரிடம் ஒருவர் கேட்டார்... ஆத்திகத்துக்கும்- நாத்திகத்துக்கும் என்ன வித்தியாசம் என்று... அதற்கு பெரியார், கோவிலில் கடவுள் சிலைக்கு முன்னாடி ஒரு உண்டியல் வைக்குறீங்க இல்லையா... அதுக்கு பெயர் ஆத்திகம். அந்த கடவுளையை நம்பாமல் அந்த உண்டியலுக்கு பூட்டு போடுறீங்க இல்லையா அதுக்கு பெயர் நாத்திகம். முருகனுக்காக ஒரு மாநாடு நடத்தி இவர்களை ஏமாற்றிவிட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால், முருகன் உங்களை ஏமாற்றிவிடுவார் என்றார்.
- அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.
- படத்தை பார்த்த கார்த்திக் சுப்பராஜ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார்.
அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரசியம் எங்கே இருக்கிறது என்ற கேள்வியுடன் நம் அனைவரின் கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு எதார்த்த கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.
படத்தை பார்த்த கார்த்திக் சுப்பராஜ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் நடிகர் காளி வெங்கட் மற்றும் பிரப திரைப்பட விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் வெளிவந்த திரைப்படத்தில் மெட்ராஸ் மேட்னி திரைப்படம் தான் ஹிட் என கூறினார்.
தற்பொழுது படத்தில் நடித்த சத்யராஜ் படத்தை வெற்றிப்பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் "இப்படத்தை வெற்றி பெற வைத்த தமிழ் மக்களுக்கு மிக்க நன்றி. இந்த மாதிரி திரைப்படம் ஓடினால். கார்த்திகேயன் மாதிரி வித்தியாசமான கதைக்களம் வைத்துள்ள இயக்குநர்களுக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். மெட்ராஸ் மேட்னிக்காக கிடைத்த வெற்றி மட்டும் அல்ல தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த வெற்றியாகும்" என கூறியுள்ளார்.
இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி.கே, இசை கே.சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொண்டுள்ளனர்.
- அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.
- திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி வெளியாகிறது.
அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரசியம் எங்கே இருக்கிறது என்ற கேள்வியுடன் நம் அனைவரின் கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு எதார்த்த கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான `என்னடா பொழப்பு இது'பாடலை படக்குழு வெளியிட்டு அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான உசுரே உன்ன தானே பாடல் இன்று மாலை 7 மணிக்கு படக்குழு வெளியிடவுள்ளது. இப்பாடலை சினேகன் வரிகளில் விஜய் யேசுதாஸ் பாடியுள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி.கே, இசை கே.சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொண்டுள்ளனர்.
- ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் அப்படத்தின் கதாநாயகி நிதி அகர்வால், நடிகர்கள் சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், "இந்த படத்தில் உண்மையான ஹீரோயின் நிதி அகர்வால் இல்லை. நான் தான் இந்த படத்தின் ஹீரோயின். எப்போதுமே படத்தில் ஹீரோவின் வேலை என்ன ஹீரோயினை காப்பாற்றுவது. இந்த படத்தில் பவன் கல்யாண் என்னை தான் காப்பாற்றுகிறார், அப்போ நியாயமா பார்த்தா நான் தானே ஹீரோயின்" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி
- திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி வெளியாகிறது.
அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரசியம் எங்கே இருக்கிறது என்ற கேள்வியுடன் நம் அனைவரின் கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு எதார்த்த கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான `என்னடா பொழப்பு இது'பாடலை படக்குழு வெளியிட்டு அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி.கே, இசை கே.சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொண்டுள்ளனர்.
- அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.
- படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரசியம் எங்கே இருக்கிறது என்ற கேள்வியுடன் நம் அனைவரின் கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு எதார்த்த கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான `என்னடா பொழப்பு இது'பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடலை வைகை புயல் வடிவேலு பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல் வரிகளை சினேகன் எழுதியுள்ளார்.
இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி.கே, இசை கே.சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மெட்ராஸ் மேட்னி திரைப்படம் வரும் ஜூன் மாதம் 6ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.






