என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GD Naidu flyover"

    • பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 10.10 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
    • விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் பெயர் அந்த பாலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் தொடங்கப்பட்டுள்ள பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் அதனை சீரமைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கோவையில் பாலம் அமைந்துள்ள இடத்தில் நீண்ட நாட்களாக பாலம் திறக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 10.10 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.

    தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் உள்ள தொழில் அதிபர்களின் கோரிக்கையை தொடர்ந்து அந்த ஊரை சேர்ந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் பெயர் அந்த பாலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

    அங்கு உப்பிலிபாளையம் பகுதியில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அங்குள்ள ரவுண்டானா பகுதியில் சாலை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அங்கு விபத்துகள் ஏற்படாமல் இருக்க கோரிக்கை வருகிறது.

    அதே போல பாலம் கட்டப்பட்ட பிறகு விமானநிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படலாம் என்று கூறியதால் அங்கு ரப்பர் வேக தடை அமைக்கப்பட உள்ளதோடு, சிக்னல் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உயர்மட்ட பாலத்துக்கு விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்டியுள்ளார்.
    • கோவை வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஜி.டி.நாயுடு குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.

    கோவை அவினாசி சாலையில் 10.1 கிலோ மீட்டர் நீளத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்துக்கு கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்டியுள்ளார். தொடர்ந்து மேம்பாலத்தை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    இதற்காக கோவை வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஜி.டி.நாயுடு குடும்பத்தினர் சந்தித்து பேசினர். அப்போது விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் பெயரை மேம்பாலத்துக்கு சூட்டியதற்காக அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

    • ஜி.டி. நாயுடுவாக என் அன்பு நண்பன் மாதவன் நடிக்கிறார்.
    • மிகப்பெரிய மேம்பாலத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி.டி. நாயுடு பெயர் சூட்டி மகிழ்கிறார்.

    கோவை மாவட்டம் அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,791.23 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 10.10 கி.மீ. நீளம் கொண்ட 4 வழித்தட மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில்,

    நான் இப்போது கோயம்புத்தூரில் இருக்கிறேன். நான் ஷூட்டிங்கிற்காக இங்கு வந்து இருக்கிறேன். படத்தின் பெயர் ஜி.டி. நாயுடு. தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்த மாதிரி, ஜி.டி. நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறோம்.

    இதில் ஜி.டி. நாயுடுவாக என் அன்பு நண்பன் மாதவன் நடிக்கிறார். கிருஷ்ணா இயக்குகிறார். வர்கீஸ் தயாரிக்கிறார். நான் ராமையா பிள்ளை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

    இப்போது கோயம்புத்தூரில் ஜி.டி. நாயுடு படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் இதே நேரத்தில், ஒரு மிகப்பெரிய மேம்பாலத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி.டி. நாயுடு பெயர் சூட்டி மகிழ்கிறார். அதற்காக கோயம்புத்தூர்காரன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன்.

    எங்கள் படக்குழுவின் சார்பில் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜி.டி. நாயுடு அவர்களின் குடும்பத்தாருக்கும் எங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • சுமார் 10.10 கி.மீ. நீளம் கொண்ட 4 வழித்தட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • மேம்பாலத்தில் பாதுகாப்பு சுவர்கள், ரோலர் தடுப்பு கருவிகள், உலக தரமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    கோவையில் ரூ.1,791 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 10.10 கி.மீ. நீளம் கொண்ட 4 வழித்தட மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டு கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை- அவினாசி ரோடு மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

    தமிழகத்தின் மிக நீளமான சாலை மேம்பாலமாக மதுரை-நத்தம் மேம்பாலம் சுமார் 7.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளது. அதனை மிஞ்சும் வகையில் கோவையில் அவினாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய தரைவழிப்பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

    கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க குறைந்தது 45 நிமிடங்கள் ஆகிறது. இந்த பாலம் திறக்கப்பட்டதும் 10 நிமிடங்களில் இந்த தூரத்தை கடக்கலாம்.

    குறிப்பாக விமான நிலையம், கொடிசியா, ஹோப் காலேஜ், நவ இந்தியா, லட்சுமி மில்ஸ், அண்ணாசிலை மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய சந்திப்புகளில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே கடந்த 2020-ம் ஆண்டு இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. அதில் ஒரு ரெயில்வே கிராசிங்கும் வருகிறது. மேம்பாலத்திற்காக மொத்தம் சுமார் 4.90 ஏக்கர் நிலம் ரூ.228 கோடி மதிப்பில் கையகப்படுத்தப்பட்டது. இந்த மேம்பால கட்டுமானம் முன்னேற்பாடு பணி, அதாவது ப்ரீகாஸ்ட் முறையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்த மேம்பாலம் மூலம் நகரில் இருந்து விமான நிலையம் மட்டுமின்றி சேலம், ஈரோடு, திருப்பூர், அவினாசி ஆகிய பகுதிகளுக்கும் இனி விரைவாக செல்ல முடியும். இந்த மேம்பாலத்தில் கோவை விமான நிலையம், ஹோப் காலேஜ், நவ இந்தியா மற்றும் அண்ணா சிலை என 4 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்கு தளம் அமைக்கப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் முதல் முறையாக பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலத்தில் பாதுகாப்பு சுவர்கள், ரோலர் தடுப்பு கருவிகள், உலக தரமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    ×