என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "School children"
- பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் சிரமப்பட்டு செல்கின்றனர்.
- மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கணவாய்புதூர் ஊராட்சியில் வீராச்சியூர், பூமருத்துவர், கண்ணப்பாடி, கோவில்பாடி, சுரக்காப்பட்டி, கொலகூர், கரடியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகளுடன் இன்று காலை கணவாய்புதூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், வனத்துறையினர், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் கூறுகையில், கணவாய்புதூர் பகுதியில் இருந்து கண்ணப்பாடிக்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இங்கு தார் சாலை அமைக்கப்பட்டு சுமார் 7 வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில் சாலை முழுவதும் பழுதடைந்து உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் விடுமுறை நாட்களில் கர்நாடகா, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் கணவாய் புதூர் வழியாக ஏற்காடு சென்று வருகின்றனர். இந்த பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் சிரமப்பட்டு செல்கின்றனர்.
எனவே சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
- வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
- வாகன ஓட்டுனர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை:
சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆட்டோ மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டு நர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்டோ மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டுனர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்து லட்சுமி, கண்காணிப்பாளர் செந்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் மற்றும் வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை விதிமுறைகளை பின்பற்றுவதும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
- ஆட்டோவில் பள்ளி மாணவர்களை அதிக அளவில் ஏற்றுவதால் ஏற்படும் சிக்கல்களும், விபத்துகளும் குறித்து ஓட்டுனருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
வீரபாண்டி,
திருப்பூர் பல்லடம் சாலை வீரபாண்டி பிரிவில் உள்ள திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் ஆட்டோ ஓட்டுனருக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பாதுகாப்பான பயணம் செய்வதும், விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை விதிமுறைகளை பின்பற்றுவதும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், ஆட்டோவில் பள்ளி மாணவர்களை அதிக அளவில் ஏற்றுவதால் ஏற்படும் சிக்கல்களும், விபத்துகளும் குறித்து ஓட்டுனருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ஆட்டோவில் அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஓட்டுனரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தெரிவித்தார்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மலா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பலரும் கலந்து கொண்டனர்.
- 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
- சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஏராளமான மீனவர் கிராமங்கள் உள்ளது. இங்கு ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும்.
அப்போது கடற்கரை ஒட்டியுள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க பல்வேறு இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்து கடல் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று காலையிலும் கடல்சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
சின்ன முட்டம், குளச்சல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள் அந்த பகுதியில் நங்கூரம் பாய்த்து நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு சில வள்ளங்களில் மட்டும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
கடல் அலைகள் 15 அடி முதல் 20 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. ராட்சத அலைகள் கடற்கரையொட்டி உள்ள தூண்டில் வளைவுகள் மீது வேகமாக மோதி சென்றன. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடல் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொல்லங்கோடு தூத்தூர் இரையுமன் துறை வள்ளவிளை சின்னத்துறை போன்ற கடற்கரை கிராமங்களில் கடல்சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. இன்று காலையிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரையையொட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் வேகமாக மோதியது. தூண்டில் வளைவு இல்லாத பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி-கேரளாவை இணைக்கும் தூத்தூர்-பொழியூர் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராட்சத அலைகள் அந்த சாலைகளை இழுத்துச்சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரத்தில் அடுக்கப்பட்டு இருந்த கற்களையும் அலைகள் கடலுக்குள் இழுத்துச்சென்றது.
இந்த சாலையை குமரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள மீனவர்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். இங்கிருந்து அவர்கள் கேரளாவுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு இந்த சாலை மிகவும் வசதியாக உள்ளது.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இதை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை தற்போது துண்டிக்கக்கூடிய சூழலில் உள்ளது. பள்ளி வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இதுவரை பள்ளியில் சேராத குழந்தை கள், புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரையும், பள்ளியில் சேர்க்க அரசுத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது.
- பள்ளிச் செல்லா குழந்தைகளை கண்காணிக்க, பள்ளி அளவிலான குழு, வட்டார அளவிலான குழு மற்றும் மாவட்ட அளவிலான குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 6 முதல் 12 வயதுடைய அனைத்து இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், இதுவரை பள்ளியில் சேராத குழந்தை கள், புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரையும், பள்ளியில் சேர்க்க அரசுத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்துப் பேசியதாவது:-
பள்ளிச் செல்லா குழந்தைகளை கண்காணிக்க, பள்ளி அளவிலான குழு, வட்டார அளவிலான குழு மற்றும் மாவட்ட அளவிலான குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 15 ஒன்றியத்திற்கும் கண்கா ணிப்பு அலுவலர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், 2022–-23ல் மேற்கொள்ளப் பட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப் பில் 4,950 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில், 2,995 குழந்தைகள் பள்ளியில் சேர்க்க வேண்டும். பிறதுறை அலுவலர்கள் இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க, தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும்.
நாமக்கல் ஒன்றியத்தில், வார்டு எண், 37, 38 நரிக்குறவர் காலனி மற்றும் கீரம்பூர் சுரக்காபாளையம், எருமப்பட்டி ஒன்றியத்தில் பொட்டிரெட்டிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் ஒன்றியத்தில் சாலையூர், மலை வேப்பன் குட்டை, மல்லசமுத்திரம் ஒன்றியம், நாயக்கர் வளவு, ஜக்கம்மா தெரு, கபிலர் மலை ஒன்றியம் பல்லா பாளையம் ஆகிய பகுதி களில், இடைநின்ற மாண வர்கள் அதிகம் உள்ளனர். இந்த பகுதிகளில், தொழிலா ளர் நலத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தைகள் உதவி மையம் மற்றும் போலீசார் இணைந்து களப்பணி மேற்கொண்டு, குழந்தை களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.டி.ஏ திட்ட இயக்குனர் சிவக்கு மார், முதன்மை கல்வி அலு வலர் மகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவ லர் சுகந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மாணவிகள் வழக்கம்போல் இன்று ஆட்டோவில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.
- பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் விபத்துக்குள்ளான சிறுமிகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை கடற்கரை சாலையையொட்டி ஓய்ட் டவுன் பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளிக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் ஆட்டோக்கள் மூலம் சென்று வருகின்றனர். 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மூலக்குளம் மற்றும் அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த மாணவிகள் வழக்கம்போல் இன்று ஆட்டோவில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.
புஸ்ஸி வீதியில் வந்த ஆட்டோவும் அரசு மருத்துவ மனையிலிருந்து எதிரே வந்த தனியார் பஸ்சும் எதிர்பாராத விதமாக வேகமாக மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் விக்னேஷ்(22), பள்ளி குழந்தைகள் கோபாலன் கடையை சேர்ந்த தக்கிதா(9), மூலக்குளத்தை சேர்ந்த ஹர்ஷீதா(7), அரும்பார்த்த புரத்தை சேர்ந்த தீக்க்ஷா(6), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த கிரண்யா(10), மூலக்குளத்தை சேர்ந்த பூர்ணிகா (7), நிக்கிஷா (10), அவந்திகா (10), திஷா (10) ஆகிய 8 சிறுமிகளுக்கு தலை, கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. பள்ளி குழந்தைகள் விபத்தில் சிக்கியதால் அலறி கூச்சலிட்டனர்.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் விபத்துக்குள்ளான சிறுமிகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் நிக்கிஷா(10), அவந்திகா (10) ஆகியோர் தலையில் படுகாயமடைந்திருந்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற சிறுமிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்து அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டு கண்ணீர் விட்டு கதறியழுதனர்.
இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்- அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக வந்தனர். குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
- அறிக்கையின் அடிப்படையில் அந்தியூர் தாசில்தார் மற்றும் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
- மேலும் சமையலர் வள்ளியம்மாளை சஸ்பெண்டு செய்தும் உத்தரவிட்டார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி அருகே கரட்டூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி யில் 157 மாணவ-மாணவி கள் படித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியை விஜய லட்சுமி உள்பட 5 ஆசிரி யர்கள் பணியாற்றி வரு கின்றனர். அத்தாணி பகுதி யை சேர்ந்த ஜவகர் என்பவர் சத்துணவு அமைப்பாளராகவும், கரட்டூர் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் சமையல ராக கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 132 மாணவ-மாணவிகள் வழக்கம் போல மதிய உணவு சாப்பிட சென்றனர். அவர்களுக்கு வெஜிடபிள் சாப்பாடு கொடுக்கப்பட்டது.
இந்த உணவை சாப்பிட்ட ஒரு சில மாணவிகள் உணவில் ஏதோ கிடப்பதாக சமையலர் வள்ளியம்மா ளிடம் கூறினர். இதையடுத்து அவர் மற்ற மாணவர்களிடம் உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறி நிறுத்தி விட்டார்.
இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மதிய உணவில் பல்லி கிடந்ததாக பெற்றோரிடம் கூறினர். அப்போது மாணவர்கள் சிலர் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர்.
இதையடுத்து ஒரு சில பள்ளி குழந்தைகளை பெற்றோர் கள் மீட்டு அத்தாணி கருவல்வாடி புதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்துக்கு சிகிச்சை க்காக அழைத்துச் சென்ற னர்.
இந்த தகவல் பரவியதும் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 100-க்கும் மேற் பட்ட மாணவர்களும் கருவல்வாடிபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்துக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
மேலும் அந்தியூர் அரசு மருத்துவ மனையில் 29 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இது பற்றி தகவல் அறிந்த தும் அந்தியூர் தாசில்தார், கல்வி அதிகாரிகள் மற்றும் பவானி டி.எஸ்பி. ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் கரட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் மதிய உணவுகளின் மாதிரிகளை எடுத்து இந்த உணவில் விஷத்தன்மை கலந்து உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் கோவையில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதன் அறிக்கை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அந்தியூர் தாசில்தார் மற்றும் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த அறிக்கையின் படி அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிலிங்கம் அந்த பள்ளி யின் சத்துணவு அமைப்பாளர் ஜவகர் என்பவரை பணியிடை மாற்றம் செய்து உத்தர விட்டார்.
மேலும் சமையலர் வள்ளியம்மாளை சஸ்பெண்டு செய்தும் உத்தரவிட்டார்.
- வாந்தி, வயிற்று வலி, மயக்கம் இருந்ததாக அந்தியூர் அரசு மருத்துவமனையில் 29 மாணவர்கள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
- இச்சம்பவம் குறித்து அந்தியூர் தாசில்தார் மற்றும் பவானி டி.எஸ்பி. தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி அருகே கரட்டூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 157 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
தலைமையாசிரியர் விஜயலட்சுமி உள்பட 5 ஆசிரியர்கள் பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். கரட்டூர் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் சமையலராக கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 132 மாணவ-மாணவிகள் நேற்று வழக்கம் போல 12 மணிக்கு மதிய உணவு சாப்பிட சென்றனர். வெஜிடபிள் சாப்பாடு மதிய உணவாக சமைக்கப்பட்டது.
அப்போது ஒரு சில மாணவிகள் உணவில் ஏதோ கிடப்பதாக எடுத்து வந்து சமையலர் வள்ளியம்மாளிடம் கொடுத்த போது மீதி உள்ள உணவை யாரும் சாப்பிட வேண்டாம் என்று அவர் நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய ஒரு சில மாணவ, மாணவிகள் மதிய உணவில் பல்லி கிடந்ததாக அவரவர் வீட்டில் பேசி வரும் போது வாந்தி, மயக்கம் வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு சில பள்ளி குழந்தைகளை பெற்றோர்கள் அத்தாணி கருவல்வாடிபுதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இத்தகவல் பரவிய நிலையில் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை பெற்றோர்கள் கருவல்வாடிபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை அழைத்து சென்னர்.
இதைத்தொடர்ந்து வாந்தி, வயிற்று வலி, மயக்கம் இருந்ததாக அந்தியூர் அரசு மருத்துவமனையில் 29 மாணவ, மாணவிகள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இத்தகவலறிந்த அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்ததோடு, குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இச்சம்பவம் குறித்து அந்தியூர் தாசில்தார் மற்றும் பவானி டி.எஸ்பி. தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் மதிய உணவுகளின் மாதிரிகளை எடுத்து இந்த உணவில் விஷத்தன்மை கலந்து உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் கோவையில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக ஆப்பக்கூடல் போலீசார் தெரிவித்தனர்.
பரிசோதனைக்கு பின்னரே மதிய உணவில் பல்லி விழுந்து விஷம் கலந்து இருக்குமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்று தெரியவரும்.
- மாவட்ட அளவி லான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- 3 நிலைகளில் குழுக்கள் அமைத்து மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளிச் செல்லாக் குழந்தை களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்து மாவட்ட அளவி லான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் 6 வயது முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளி யில் சேர்ப்பது தொடர்பாக வருகிற 19ம் தேதிமுதல் 11.01.2023 வரை ஆசிரியர், பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் குடியிருப்பு வாரியாக பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணியினை மேற்கொள்ள வும், குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தை தொழிலாளராக மாறிய குழந்தைகளை மீட்டெடுத்து அவர்கள் பள்ளிகள் செல்வ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பல்வேறு துறை யின் களப்பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்திட வும், அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் தங்கள் பஞ்சாயத்து க்குட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் இல்லை என்ற நிலையை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றிடவும், பள்ளி செல்லா குழந்தை களை கண்டறிவதற்கான பள்ளி அளவில், வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் என 3 நிலைகளில் குழுக்கள் அமைத்து மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் செந்தி வேல்முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல் உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இதனால் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும், மழை கோர்ட் அணிந்தபடியும் பள்ளிக்கு வந்தனர்.
திண்டுக்கல்:
வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல் உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் திண்டுக்கல்லில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை பெய்தது. இன்றுகாலையிலும் மழை தொடர்ந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டது.
ஆனால் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும், மழை கோர்ட் அணிந்தபடியும் பள்ளிக்கு வந்தனர். சிறிய குழந்தைகளை பெற்றோர்கள் பைக்கில் அமரவைத்து சிரமத்துடன் பள்ளியில் வந்து விட்டுச்சென்றனர். ஒரு சில பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இருந்தபோதும் குழந்தைகள் அந்த நீரை கடந்து வகுப்பறைக்கு சென்றனர்.
மழை காரணமாக காலையில் பல்வேறு முக்கிய சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதனையும் கடந்து மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிக்கு வந்தனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் மேலத்தெருவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இந்த தெருவை கடந்துதான் செல்ல வேண்டியது உள்ளது. இதனால் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
மேலும் தா.பழூர் பகுதிக்கான ரேஷன் கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மின்வாரிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் விஸ்வநாதர் கோவில் ஆகியவையும் இந்தப் பகுதியிலேயே உள்ளன. இதனால் அலுவலகங்கள் மற்றும் கோவிலுக்கு இந்த பாதையை கடந்து செல்லும்போது முதியவர்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது.
மேலும் தண்ணீர் வடிவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் மேலத்தெருவில் உள்ள தார் சாலை சிதிலமடைந்து போக்குவரத்திற்கு பயன்பாடற்ற சாலையாக மாறிவிட்டது. குண்டும், குழியுமாக இருக்கும் இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்று அச்சத்தால் பிள்ளைகளை பெற்றோர்கள் தயக்கத்துடனேயே பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் பள்ளியின் அருகில் மழைநீர் தேங்கி, டெங்கு போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்பு உள்ளதால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே பள்ளி செல்லும் பாதையில் நீர் தேங்காமல் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றும், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
So proud of these girls who walk everyday 7km to school..today was car pool day.decided to pick them up and drop them..so much excitement n happiness on their faces..makes my heart melt..god bless them..so amazing to see them feel so proud when they get of car..makes me wonder(1) pic.twitter.com/ybmRID01e4
— varu sarathkumar (@varusarath) July 25, 2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்