கர்நாடகாவில் ஏரியில் மூழ்கி 4 பள்ளி சிறுவர்கள் பலி

சிறுவனை காப்பாற்ற அடுத்தடுத்து இறங்கிய சிறுவர்களும் சேற்றில் சிக்கி உயிரிழப்பு.சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
கர்நாடகாவில் ஏரியில் மூழ்கி 4 பள்ளி சிறுவர்கள் பலி
Published on

கர்நாடகாவில் திம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்ற 4 பள்ளி சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஒரே கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சிறுவன் சேற்றில் சிக்கிய நிலையில், அந்த சிறுவனை காப்பாற்ற அடுத்தடுத்து இறங்கிய சிறுவர்களும் சேற்றில் சிக்கிய பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் ஜீவன் (13), சாத்விக் (11), விஷ்வா (12), பிருத்வி (12) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com