என் மலர்
நீங்கள் தேடியது "வரலட்சுமி"
- பூஜைக்கு வந்த சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- கலசத்து நீரை துளசி செடியில் ஊற்றி விட வேண்டும்.
சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் கடைப்பிடிக்கும் விரதங்களுள் முக்கியமானது வரலட்சுமி விரதம். இது கணவனின் ஆயுள், ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் வரலட்சுமியை என்றென்றும் தங்கள் வீட்டிலேயே தங்க வைப்பதற்காக மேற்கொள்ளும் விரதம். ஆண்டுதோறும் ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக் கிழமை அன்று வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வரலாறு: சவுராஷ்டிராவை ஆண்ட பத்ரச்ரவா மன்னனின் மனைவி கசந்திரிகா. இவர்களுக்கு ஏழு ஆண் மகன்கள் ஒரு பெண் குழந்தை. கசந்திரிகாவின் நற்குணங்களால் கவரப்பட்ட மகாலட்சுமி, அவள் மீது கொண்ட கருணையால் அருளாசி வழங்கும் எண்ணத்தில் கசந்திரிகாவின் வீடு தேடி ஒரு பழுத்த சுமங்கலிப் பெண்ணாகச் சென்றாள்.
அந்தப் பெண்ணைப் பார்த்ததும், "அம்மா, நீங்கள் யார்? என்று வினவினாள் கசந்திரிகா. அதற்கு அந்த சுமங்கலிப் பெண், "உத்தமியே மகாலட்சுமி அவதரித்த இந்த துவாதசி வெள்ளிக்கிழமையன்று நன்றாக உண்டு, தாம்பூலம் தரித்துக் கொண்டு, பகல் வேளையில் உறங்கிக் கொண்டிருக்கிறாயே?" என்று கேட்டாள். தவறை சுட்டிக் காட்டியதும் ஆணவம் கண்ணை மறைக்க கோபமே கொள்ளாத கசந்திரிகா சுள்ளென்று சினம் கொண்டாள்.
கோபத்தின் உச்சியில் என்ன செய்கிறோம் என்ற நினைவின்றி அந்தப் பழுத்த சுமங்கலியின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு, "எனக்கே புத்தி சொல்கிறாயா? என் கண் முன் நிற்காமல் உடனே ஓடி விடு" என்று கூறி துரத்தி விட்டாள். அழுதபடி வெளியே வந்த அந்த அம்மணியைக் கண்ட கசந்திரிகாவின் மகள் சியாமா, 'அம்மா ஏன் அழுகிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்" என்று கேட்டாள்.
"பெண்ணே, உன் தாயாருக்கு நல்லது சொன்னேன். அதற்காக என்னை அடித்து அவமானப்படுத்தி துரத்தி விட்டாள். அதனால்தான் இங்கிருந்து திரும்பிப் போகிறேன்" என்றாள். உடனே சியாமா அந்தப் பெண்ணை ஆசுவாசப்படுத்தி அமரச் செய்து, "அந்த நல்லதை எனக்குச் சொல்லுங்கள். நான் கேட்கிறேன்" என்றாள். மனம் குளிர்ந்த மகாலட்சுமி, அந்தக் கன்னிப் பெண் சியாமாவுக்கு வரலட்சுமி விரதத்தின் மகிமை மற்றும் அதை அனுஷ்டிக்கும் வழிமுறைகளைப் பற்றி எடுத்து கூறினாள்.
மகாலட்சுமி எடுத்து தந்த நோன்பு முறையை இம்மி பிசகாமல் கடைப்பிடித்து வந்தாள் சியாமா. அதனால் அந்த வீட்டிலேயே வரலட்சுமி தங்கிவிட, அங்கே செல்வமும், அமைதியும் நிலையாகக் குடியிருந்தன.
சியாமா, திருமணப் பருவம் எட்டியதும் மாலாதரன் என்ற மன்னனுக்கு மணமுடித்துக் கொடுத்தான் பத்ரச்ரவா. அதையடுத்து கணவனின் கரம்பிடித்து புகுந்த வீட்டுக்குச் சென்ற சியாமா, இத்தனை நாள் பூஜித்து வந்த வரலட்சுமி தேவியின் திருமுகத்தையும் தன்னுடன் எடுத்து சென்றாள்.

புகுந்த வீட்டிலும் வரலட்சுமி விரதத்தைத் தவறாது கடைப்பிடித்தாள். அதனால் அவர்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகின. ஆனால் கசந்திரிகாவோ மகாலட்சுமியை அவமானப்படுத்தி துரத்தி விட்டதால் அவளை விட்டு நீங்கி நிரந்தரமாக சியாமா வீட்டிலேயே தங்கி விட்டாள் வரலட்சுமி. இதனால் பத்ரச்ரவாவும் கசந்திரிகாவும் பகைவர்களால் விரட்டப்பட்டு காட்டுக்குள் ஓடி ஒழிந்து உணவுக்குக்கூட வழியற்று பராரியாகத் திரிந்தனர்.
அவர்களுக்காக சியாமா அனுப்பி வைத்த தங்கக்காசுகளும், கரித்துண்டுகளாக மாறின. சியாமாவுக்கு தனது தாய், சுமங்கலிப் பெண்ணாக வந்த மகாலட்சுமியை அவமதித்தது நினைவுக்கு வந்தது. அம்மாவிடம் நடந்தவைகளை நினைவுப்படுத்தி, அவள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, நோன்பின் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தாள். அதன்படியே கசந்திரிகாவும் வரலட்சுமி நோன்பு இருக்கத் தொடங்கினாள்.
அதன்பிறகு அவர்கள் வாழ்வில் வசந்தம் திரும்ப, இழந்த செல்வங்களும் அதிகாரமும் மீண்டும் கிடைத்தன.
மகாலட்சுமியே நேரடியாக வந்து விரதமுறைகளைச் சொல்லிக் கொடுத்து மேற்கொள்ளச் செய்ததால். இந்த விரதத்தை அனுசரிப்பவர்களும் குரு முகமாக, யாரேனும் பெரியவர்கள் எடுத்து கொடுக்க அதை தீக்ஷையாகப் பெற்று விரதத்தை மேற்கொள்வது வழக்கம். இதற்காக திருமணமாகிப் புகுந்த வீட்டுக்குச் சென்ற பெண்ணை ஆடி நோன்புக்காக மறுவீடு அழைத்து வந்து, நோன்பு நோற்கும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து நோன்பு நோற்கச் செய்வார்கள்.
இதில் வெள்ளியிலான அம்மன் முகத்தை கலசத்தில் வைத்து அலங்கரித்தல், செம்பில் அம்மன் முகத்தை வரைதல், சுவற்றில் அம்மன் ரூபத்தை தீட்டுதல் என்று பல்வேறு முறைகள் உள்ளன. அந்தந்த வீட்டு வழக்கப்படி நோன்பு முறைகளைக் கற்றுக் கொள்ளும் பெண்கள் தங்கள் வீட்டில் தொடர்ந்து நோன்பைக் கடைப்பிடிப்பார்கள்.
மண்டபம் அமைத்தல்: முதல் நாள் வியாழக்கிழமையே வீட்டை சுத்தப்படுத்தி, தோரணங்கள் கட்டி அழகுப்படுத்த வேண்டும். மரத்தாலான இருக்கையை (ஸ்டூல்) நன்கு கழுவி காயவைத்து அதில் மண்டபம் அமைப்பது வழக்கம். சில வீடுகளில் இதற்காகவே தனியாக ஒரு மர இருக்கையை ஒதுக்கி வைத்திருப்பார்கள். அதற்கு வெள்ளையடித்து காவி வர்ணம் பூசி, மண்டபம் அமைக்கும் இடத்தில் கொண்டுவந்து கிழக்கு முகமாகப் போட வேண்டும்.
அதன்மேல் ஒரு பட்டாடையை விரித்து நான்குபுறமும் மாவிலைத் தோரணங்களை சுற்றிக் கட்ட வேண்டும். நான்கு கால்களிலும் சிறிய வாழைக் கன்றுகளைக் கட்டி அலங்கரிக்கவும். இருக்கையின் உட்புறம் இரு கால்களுக்கு இடையில் ஒரு மனைப்பலகையைப் போட்டு அதில் மாக்கோலமிட்டு மண்டபத்தை தயார்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.
அம்மனின் திருமுகத்தில் காதோலை, கருகமணி அணிவித்தல் மற்றும் இன்னபிற அலங்காரங்களையும்கூட செய்து வைத்து கொள்ளலாம். இதில் சிலர் மண்டபம் எதுவும் அமைக்காமல் வெறுமனே மனை மீது கலசம் அமைப்பவர்களும் உண்டு, இன்னும் சிலர் சுவற்றில் கஜலட்சுமி உருவத்தை வரைந்து வைத்து நோன்பு நோற்பதும் உண்டு. அவர்கள் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். இதுபோக நோன்பு சரடுகள் மற்றும் கோடி தந்தம் போன்றவற்றையும் தயாராகச் செய்து வைத்து கொள்ளலாம்.
விரத பூஜை: வெள்ளிக்கிழமை காலையில் எழுந்ததும் எண்ணெய் தேய்த்து குளித்து தூய ஆடையணிந்து பூஜைக்குத் தயாராக வேண்டும். பூஜையறையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து, மண்டபத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் மனை மீது இலை விரித்து பச்சரிசியைப் பரப்ப வேண்டும். கலசம் வைக்கும் தாம்பாளத்தில் நெல் அல்லது கோதுமையைப் பரப்பி அதன்மீது நீர் அல்லது தானியம் நிரப்பிய பூரண கலசக் கும்பத்தை வைக்கவும்.
முகம் வைக்கும் பழக்கம் இருப்பவர்கள் தேங்காய் மீது அம்மனின் முகத்தைக் கட்டலாம். செம்பு மீது அம்மன் உருவத்தை வரைபவர்கள் சுண்ணாம்பைக் கரைத்து அம்மனின் முகத்தை வரையலாம். அந்தத் தாம்பாளத்தை வீட்டின் மையக் கூடத்தில் போடப்பட்டிருக்கும் ஒரு மனை மீது வைத்து, சுமங்கலிப் பெண்கள் இருபுறமும் பிடித்து தூக்கிக் கொண்டு, வரலட்சுமி அம்மனை வீட்டுக்குள் அழைக்கும் பாடலை பாடியபடி மண்டபம் வைத்திருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து மண்டபத்தில் பரப்பியிருக்கும் அரிசி மீது கலச ஸ்தாபனம் செய்ய வேண்டும்.
ஒரு வெற்றிலை மீது மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து, பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு அருள் புரிய வேண்டி விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். பூர்வாங்க பூஜையைத் தொடர்ந்து வரலட்சுமியைக் கலசத்தில் ஆவாஹனம் (எழுந்தருளச்) செய்து, பிரதான பூஜையைத் தொடங்க வேண்டும்.
நைவேத்திய பதார்த்தங்கள்: பூஜை முடிந்ததும் நைவேத்யமாக இட்லி, அன்னம், பருப்பு, சாம்பார், ரசம், மோர்க் குழம்பு, அவியல், கூட்டு, கறி வகைகள், வடை, சர்க்கரைப்பொங்கல், பாயசம், வெள்ளரிக்காய் மற்றும் நெல்லிக்காய் பச்சடி, தேங்காய் பூரணம்-எள்ளு பூரணம் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை, கோசம்பரி, வாழைப்பழம், கொய்யா, மாதுளை, நாவல் பழங்கள் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம்.
இத்தனை வகைகள் முடியாவிட்டால் பழ வகைகள் மற்றும் பாயாசம் மட்டும் கூட படைக்கலாம்.
நிவேதனம் முடிந்ததும், தீப, தூபங்கள் காட்டி வணங்க வேண்டும். பிறகு அம்மனை மனதாரப் பிரார்த்திக் கொண்டு, நோன்புச் சரடை முதலில் அம்மனுக்கு மாலையாக அணிவிக்க வேண்டும். அதன்பிறகு வீட்டின் மூத்த பெண்மணிக்கு அணிவித்துவிட்டு, வரிசையாக எல்லோருக்கும் அணிவிக்க வேண்டும். சரடு கட்டிக் கொள்ளும்போது ஒரு மூடி தேங்காய், ஒரு வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை கைகளில் ஏந்திக் கொண்டு வலது கையில் சரடைக் கட்டிக் கொள்ள வேண்டும்.
இவ்விதமாய் எல்லாம் சுபமாய் முடிந்ததும் அம்மனுக்கு மங்கள ஆரத்தி எடுத்து, வாசலில் போட்டிருக்கும் கோலத்தின் நடுவில் ஆரத்தி கலவையை ஊற்ற வேண்டும். பிறகு அனைவரும் கூடியிருந்து பிரசாதங்களை உண்ட பிறகு. பூஜைக்கு வந்த சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாலை ஆரத்தி: மாலையில் விளக்கேற்றி அஷ்டோத்திரம் சொல்லி, பாடல்கள் பாடி பூஜை செய்து, அவல், வெல்லம் அல்லது ஏதேனும் சுண்டல் வகைகளை நைவேத்யம் செய்தல் வேண்டும். தீபம் காட்டி மங்கள ஆரத்தி எடுத்து அம்மனை நித்திரை கொள்ள செய்ய வேண்டும். இரவில் பிரசாதங்களை மட்டும் உண்டுவிட்டு உறங்க வேண்டும்.
புனர் பூஜை: மறுநாள் காலையில் புனர் பூஜை செய்து பால், பழம், கல்கண்டு ஆகியவற்றைப் படைத்து தீபம் காட்டிவிட்டு, மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும். அதன்பிறகு அம்மனை கலசத்துடன் எடுத்து கதவுக்கு பின்புறமாய் வைத்துவிட வேண்டும் அல்லது வீட்டின் அரிசிப் பெட்டிக்குள் வைத்து மூடி விடவேண்டும். இதை அவரவர் வீட்டு வழக்கப்படி செய்வது உத்தமம். இப்படிச் செய்வதால் நம் வீட்டுக்கு வந்த வரலட்சுமி அம்மன் நம்மோடு நம் வீட்டிலேயே தங்கி விடுவதாக ஐதீகம்.
சிறிது நேரம் கழித்து கலசத்தை கலைத்து அம்மன் முகத்தை பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும். கலசத்து நீரை துளசி செடியில் ஊற்றி விட வேண்டும். (கலசத்தில் தானியங்கள் போட்டிருந்தால் அதை நாம் சமைக்கும் தானியத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.) கலசத்தில் போட்டிருந்த நாணயத்தைப் பணப் பெட்டிக்குள் வைத்துக் கொள்வது வழக்கம். அதன்பிறகு மண்டபத்தை கலைத்து பூஜையறையை சுத்தம் செய்து கொள்ளலாம். இவ்விதமாய் வரலட்சுமி விரத பூஜையை சுபமாய் நிறைவேற்றிட வீட்டில் என்றும் செல்வமும் வளமும் நிலைத்திருக்கும்.
- திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
- செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது.
மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் எல்லா வளமும் கிடைக்கும். லட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்க 12 வழிகள் உள்ளன.
1. தன்னம்பிக்கை மற்றும் தெய்வநம்பிக்கை வேண்டும்.
2. சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.
3. காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும்.
4. வரும் சந்தர்ப்பங்களை நழுவவிடக்கூடாது.
5. உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும்.
6. தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.
7. செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.
8. திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
9. செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது.
10. லாபத்தால் மகிழ்ச்சியும், நஷ்டம் வந்தால் வருத்தமும் அடையக்கூடாது.
11. சுயநலம் அறவே இருக்கக் கூடாது.
12. எந்த சூழலிலும் கடன் வாங்கவே கூடாது.
மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே லட்சுமியின் அருளைப் பெற முடியும்.
- தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான்.
- விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.
லட்சுமி நெல்லி மரத்திலும் வாசம் செய்கிறாள். அந்த ''நெல்லி'' அருநெல்லி மரமல்ல, சாதாரண பெருநெல்லி மரமே ஆகும். நெல்லிக் கனியை ஆமலகம் என்று கூறுவார்கள். நெல்லியை அரைத்து தேய்த்துக் குளித்தால் உடம்பின் அழுக்குகளையும், நெல்லிக்கனியை சாப்பிட்டால் நம் உடம்புக்குள் உள்ள அழுக்குகளையும் நீக்கும்.
அதனாலயே அப்பழுக்கற்ற தூய தலைவன் விஷ்ணுவுக்கு அமலன் என்ற பெயர் உண்டு. அதுமட்டுமல்ல தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான். தாத்ரீ என்ற பதம் பூமாதேவியை குறிக்கும். ஆம் பூமாதேவியும் தேவியின் அம்சம்தானே.
ஹரிபலம் என்றாலும் நெல்லிக்கனிதான் இது விஷ்ணுவைக் குறிக்கும் பெயராகும். எனவே பல இடங்களில் விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.
நெல்லி மரத்தின் நிழலில் நின்று தானம் செய்வதும் அன்னமளிப்பதும் மிகுந்த சிறப்புமிக்கது. அதிக பலன்களை தரக்கூடியது. நெல்லி இலைகளால் விஷ்ணுவையும் மகாலட்சுமியையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்.
- துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.
- துளசியில் கருந்துளசி எனும் கிருஷ்ண துளசி, வெள்ளை துளசி, காட்டுத் துளசி எனப் பலரகங்கள் உள்ளன.
துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும். துளசியை துளசி, திருத்துழாய் என்றும் சொல்வார்கள். இந்த சொற்களுக்கு தெய்வீக சக்தி என்பதே பொருளாகும். துளசியில் கருந்துளசி எனும் கிருஷ்ண துளசி, வெள்ளை துளசி, காட்டுத் துளசி எனப் பலரகங்கள் உள்ளன.
பாற்கடலில் அமிர்தம் கடைந்த காலத்தில் விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீதன்வந்த்ரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அப்போது ஏற்பட்ட ஆனந்த மிகுதியால் விஷ்ணுவுக்கு ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட்டு அதில் சில துளிகள் அமிர்த கலசத்தினுள் விழுந்தது. அதுவே மரகதப் பச்சை நிறத்தில் ஸ்ரீதுளசி தேவியாக உருவெடுத்தது என்று சொல்வார்கள். அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்ள தேவர்களும் அசுரர்களும் சண்டையிட்ட போது அந்த அமிர்த கலசத்திலிருந்து மேலும் சில துளிகள் பூமியில் விழ அவையே பூமியெங்கும் துளசிச் செடிகளாக உற்பத்தியாயின என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
துளசிதேவி பகவானிடம் பெற்ற வரத்தின்படியே வீட்டில் துளசி மாடம் வைத்து அதற்கு பூஜை செய்பவர்களுக்கும், துளசி பறித்து அதன் திவ்யதளங்களால் விஷ்ணுவை லட்சுமியை அர்ச்சிப்பவர்களுக்கும், இருவரும் சகல சவுபாக்கியங்களையும் தந்து நிறைவில் விஷ்ணு லோகத்திலும் இடம் தந்து அருளுகின்றார்கள்.
நம்மைப் பெற்றெடுத்து வளர்த்து பேணிக்காத்த நம் தாயாரை மதித்துக் காப்பாற்றி அவள் அருளாசிகளைப் பெறுவதும், தந்தையை பக்தி சிரத்தையுடன் உபசரித்து ஆசி பெறுவதும், துளசிச்செடி வைத்து அதற்கு பூஜித்து சேவைகள் புரிவதும் இம்மூன்றும் மனிதருக்கு உத்தம கதியை தரவல்ல சேவைகள் என மகான்கள் கூறி உள்ளனர்.
- அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும்.
- வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையில் இருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்க வேண்டும்.
எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
கொஞ்சம் சாஸ்திரபடி விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விநாயகர் பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணபிரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.
இந்த விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து சகல சவுபாக்கியங்களையும் பெற்றனர்.
ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம். அருகம்புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம் என்பது சான்றோர் வாக்கு!
கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இடவேண்டும். கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும். மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும்.
அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும். நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும். பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும். உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகுதான் நாம் நிவேதனம் உண்ண வேண்டும். அன்று முழுவதும் பக்தி சிந்தனையுடன் அஷ்டலட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம். அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்தரமாக நிறைந்திருக்கும்! அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயாசம் செய்யலாம். இவ்விரதத்தை கடைபிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் உண்டாகும். வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சவுபாக்கியங்களையும் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.
- அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது.
- விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்-செல்வ வளம் சேரும்.
வரலட்சுமி விரதம் இருக்க வீடு அல்லது கோவில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும்.
சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம், குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேசபூஜை செய்ய வேண்டும்.
அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள் கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும். நைவேத்தியமாக கொழுக்கட்டை படைக்கலாம்.
பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும். இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்- செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் உண்டாகும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித செல்வங்கள் கிடைக்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும்.
- நடிகை வரலட்சுமி தற்போது 'கொன்றால் பாவம்' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'கொன்றால் பாவம்'.

கொன்றால் பாவம்
1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையான இந்த திரைப்படம் மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கொன்றால் பாவம்
பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்நிலையில், 'கொன்றால் பாவம்' படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 1-ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகை வரலட்சுமி தற்போது 'கொன்றால் பாவம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'கொன்றால் பாவம்'. இதில், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

வரலட்சுமி - சந்தோஷ் பிரதாப்
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பேசியதாவது, "'கொன்றால் பாவம்' உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் நீண்ட நாட்கள் கழித்து ஒரு கதாநாயகிக்கு முழு நீளமாக நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம் என்று சொல்வேன். நாம் நிறைய படங்களில் நடிப்போம். ஆனால் திருப்தி என்பது சில படங்களில் தான் கிடைக்கும். அப்படியான ஒரு நிறைவு இந்த படத்தில் எனக்கு கிடைத்தது. 'விக்ரம் வேதா' படத்திற்கு பிறகு ஒரு மிரட்டலான இசையை இந்த படத்தில் சாம் கொடுத்துள்ளார்.

படத்தின் கதாநாயகன் சந்தோஷ் மிகவும் அமைதியானவர் இந்த 14 நாட்களும் நாங்கள் எல்லாருமே ஒன்றாகவே இருந்து குடும்பம் போலவே ஆனோம். இயக்குனர் தயாள் சாரும் என்னைப் போலவே மிகவும் துறுதுறுப்பாக இருப்பார். மூன்று நான்கு டேக் என்று போகாமல் அந்த காட்சிக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிகச் சரியாக எடுப்பார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குனர் கிடைத்துள்ளார். சின்ன படம் பெரிய படம் என்பதை எல்லாம் தாண்டி கதைக்காக இந்த படம் வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறேன். அப்பாவுக்கும் நன்றி. நான் சினிமாவில் வந்த போது அவர் எனக்கு பின்புலமாக இருந்தார். ஆனால் உண்மையிலேயே எந்த பின்புலமும் இல்லாமல் அவர் இந்த உயரத்தை அடைந்திருப்பது என்பது எனக்கு பெருமையான விஷயம்" என்றார்.
- விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது.
- சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார். தற்போது இவர் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்த வரலட்சுமி.
அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே சமயம் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.
அதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 4 - வது முறையாக பதவியேற்கவுள்ளவருமான சந்திரபாபு நாயுடு அவர்களை இன்று டெல்லியில் நேரில் சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து, மகள் வரலஷ்மி சரத்குமாரின் திருமண அழைப்பிதழை வழங்கி வழங்கினர்.
இந்த அழைப்பிதழ் வழங்கிய புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 4 - வது முறையாக பதவியேற்கவுள்ளவருமான திரு.சந்திரபாபு நாயுடு அவர்களை இன்று டெல்லியில் நேரில் சந்தித்து, தேர்தலில்… pic.twitter.com/kRYBPdzeAD
— R Sarath Kumar (மோடியின் குடும்பம்) (@realsarathkumar) June 9, 2024
- சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்
- வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் , சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.
இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அந்த வகையில் இவர் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
அடுத்ததாக இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஜூலை 26 அன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே தனது திருமணத்திற்காக திரைப் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கனவே ரஜினி, கமல் போன்றோருக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவர்களைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த்தையும் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் வரலட்சுமி தற்போது தனது முதல் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவரது மனைவி நடிகை நயன்தாராவிற்கும் தனது சித்தி ராதிகாவுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- வரலட்சுமி சரத்குமாருக்கு பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.
வரலட்சுமி சரத்குமாருக்கு பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் , சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.
இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அந்த வகையில் இவர் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
அடுத்ததாக இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஜூலை 26 அன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே தனது திருமணத்திற்காக திரைப் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கனவே ரஜினி, கமல், சிரஞ்சீவி போன்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து சரத்குமார் அழைப்பிதழ் கொடுத்த நிலையில், தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலருக்கு திருமண அழைப்பிதழை வழங்கினர்.
- பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கி உள்ளனர்.
புதுடெல்லி:
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தைப் பெற்றார். தற்போது இவர் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி.
அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம், வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லிக்கு நேரடியாக சென்று பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமண அழைப்பிதழையும் வழங்கினர்.
பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடிஜி அவர்களை இன்று காலை டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற இல்லத்தில் குடும்பத்தினருடன் சென்று சந்தித்து பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
— R Sarath Kumar (@realsarathkumar) June 28, 2024
நானும், எனது மனைவி திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்து,… pic.twitter.com/J03SHZER6t






