என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "varalakshmi vratham"

    • வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது.
    • லட்சுமியின் கைகளில் இருந்தே வில்வம் தோன்றியது என்று காத்யாயனர் கூறுகிறார்.

    லட்சுமிக்கு மிகவும் பிடித்தமான இலை வில்வம் என்பது பலருக்குத் தெரியாது. திருவஹிந்திரபுரத்தில் தாயாருக்கு வில்வ அர்ச்சனையே செய்யப்படுகிறது.

    வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது. சவுபாக்கிய சஞ்சீவினியில் லட்சுமி வில்வக்காட்டில் மரத்தடியில் தவம் செய்பவளாக வருணிக்கப் பட்டுள்ளது.

    வாமன புராணத்தில் லட்சுமியின் கைகளில் இருந்தே வில்வம் தோன்றியது என்று காத்யாயனர் கூறுகிறார்.

    காளிகா புராணத்தில் லட்சுமி வில்வமரங்கள் அடங்கிய காட்டிலேயே தவம் செய்தாள் என்று குறிப்பிடுகிறது.

    • தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான்.
    • விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.

    லட்சுமி நெல்லி மரத்திலும் வாசம் செய்கிறாள். அந்த ''நெல்லி'' அருநெல்லி மரமல்ல, சாதாரண பெருநெல்லி மரமே ஆகும். நெல்லிக் கனியை ஆமலகம் என்று கூறுவார்கள். நெல்லியை அரைத்து தேய்த்துக் குளித்தால் உடம்பின் அழுக்குகளையும், நெல்லிக்கனியை சாப்பிட்டால் நம் உடம்புக்குள் உள்ள அழுக்குகளையும் நீக்கும்.

    அதனாலயே அப்பழுக்கற்ற தூய தலைவன் விஷ்ணுவுக்கு அமலன் என்ற பெயர் உண்டு. அதுமட்டுமல்ல தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான். தாத்ரீ என்ற பதம் பூமாதேவியை குறிக்கும். ஆம் பூமாதேவியும் தேவியின் அம்சம்தானே.

    ஹரிபலம் என்றாலும் நெல்லிக்கனிதான் இது விஷ்ணுவைக் குறிக்கும் பெயராகும். எனவே பல இடங்களில் விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.

    நெல்லி மரத்தின் நிழலில் நின்று தானம் செய்வதும் அன்னமளிப்பதும் மிகுந்த சிறப்புமிக்கது. அதிக பலன்களை தரக்கூடியது. நெல்லி இலைகளால் விஷ்ணுவையும் மகாலட்சுமியையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்.

    • துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.
    • துளசியில் கருந்துளசி எனும் கிருஷ்ண துளசி, வெள்ளை துளசி, காட்டுத் துளசி எனப் பலரகங்கள் உள்ளன.

    துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும். துளசியை துளசி, திருத்துழாய் என்றும் சொல்வார்கள். இந்த சொற்களுக்கு தெய்வீக சக்தி என்பதே பொருளாகும். துளசியில் கருந்துளசி எனும் கிருஷ்ண துளசி, வெள்ளை துளசி, காட்டுத் துளசி எனப் பலரகங்கள் உள்ளன.

    பாற்கடலில் அமிர்தம் கடைந்த காலத்தில் விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீதன்வந்த்ரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அப்போது ஏற்பட்ட ஆனந்த மிகுதியால் விஷ்ணுவுக்கு ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட்டு அதில் சில துளிகள் அமிர்த கலசத்தினுள் விழுந்தது. அதுவே மரகதப் பச்சை நிறத்தில் ஸ்ரீதுளசி தேவியாக உருவெடுத்தது என்று சொல்வார்கள். அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்ள தேவர்களும் அசுரர்களும் சண்டையிட்ட போது அந்த அமிர்த கலசத்திலிருந்து மேலும் சில துளிகள் பூமியில் விழ அவையே பூமியெங்கும் துளசிச் செடிகளாக உற்பத்தியாயின என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    துளசிதேவி பகவானிடம் பெற்ற வரத்தின்படியே வீட்டில் துளசி மாடம் வைத்து அதற்கு பூஜை செய்பவர்களுக்கும், துளசி பறித்து அதன் திவ்யதளங்களால் விஷ்ணுவை லட்சுமியை அர்ச்சிப்பவர்களுக்கும், இருவரும் சகல சவுபாக்கியங்களையும் தந்து நிறைவில் விஷ்ணு லோகத்திலும் இடம் தந்து அருளுகின்றார்கள்.

    நம்மைப் பெற்றெடுத்து வளர்த்து பேணிக்காத்த நம் தாயாரை மதித்துக் காப்பாற்றி அவள் அருளாசிகளைப் பெறுவதும், தந்தையை பக்தி சிரத்தையுடன் உபசரித்து ஆசி பெறுவதும், துளசிச்செடி வைத்து அதற்கு பூஜித்து சேவைகள் புரிவதும் இம்மூன்றும் மனிதருக்கு உத்தம கதியை தரவல்ல சேவைகள் என மகான்கள் கூறி உள்ளனர்.

    • ஓம் அம்ருதலட்சுமியே போற்றி ஓம் அனந்தலட்சுமியே போற்றி
    • ஓம் சத்யலட்சுமியே போற்றி ஓம் சர்வலட்சுமியே போற்றி

     ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்தர சதநாமாவளி

    ஓம் அஷ்டலட்சுமியே போற்றி

    ஓம் அத்ரூஷ்டலட்சுமியே போற்றி

    ஓம் அன்னலட்சுமியே போற்றி

    ஓம் அபயலட்சுமியே போற்றி

    ஓம் அலங்காரலட்சுமியே போற்றி

    ஓம் அஸ்வாரூடலட்சுமியே போற்றி

    ஓம் அஷ்டபுஜலட்சுமியே போற்றி

    ஓம் அஷ்டாதசபுஜலட்சுமியே போற்றி

    ஓம் அம்ருதலட்சுமியே போற்றி

    ஓம் அனந்தலட்சுமியே போற்றி

    ஓம் ஆதிலட்சுமியே போற்றி

    ஓம் ஆனந்தலட்சுமியே போற்றி

    ஓம் இஷ்டலட்சுமியே போற்றி

    ஓம் இந்திரலட்சுமியே போற்றி

    ஓம் ஐஸ்வர்யலட்சுமியே போற்றி

    ஓம் ஓங்கார ரூபியே போற்றி

    ஓம் கஜலட்சுமியே போற்றி

    ஓம் கனகலட்சுமியே போற்றி

    ஓம் கற்பகலட்சுமியே போற்றி

    ஓம் கனகாபிஷேகலட்சுமியே (20) போற்றி

    ஓம் கன்யாலட்சுமியே போற்றி

    ஓம் கமலாலட்சுமியே போற்றி

    ஓம் கிருபாலட்சுமியே போற்றி

    ஓம் கீர்த்திலட்சுமியே போற்றி

    ஓம் கோலட்சுமியே போற்றி

    ஓம் கோலாபுரிலட்சுமியே போற்றி

    ஓம் சத்யலட்சுமியே போற்றி

    ஓம் சர்வலட்சுமியே போற்றி

    ஓம் சம்பத்ஸ்வரூபியே போற்றி

    ஓம் சந்தானலட்சுமியே (30) போற்றி

    ஓம் சாந்தலட்சுமியே போற்றி

    ஓம் சாகரோத்பவலட்சுமியே போற்றி

    ஓம் சித்தலட்சுமியே போற்றி

    ஓம் சிவானந்தலட்சுமியே போற்றி

    ஓம் சுபலட்சுமியே போற்றி

    ஓம் சுந்தரலட்சுமியே போற்றி

    ஓம் சுவர்ணலட்சுமியே போற்றி

    ஓம் சுஸ்மிதலட்சுமியே போற்றி

    ஓம் சுகாசனலட்சுமியே போற்றி

    ஓம் சௌபாக்யலட்சுமியே (40) போற்றி

    ஓம் ஸ்திதலட்சுமியே போற்றி

    ஓம் சௌந்தர்யலட்சுமியே போற்றி

    ஓம் சுவர்க்கலட்சுமியே போற்றி

    ஓம் ஸைன்யலட்சுமியே போற்றி

    ஓம் ஜயலட்சுமியே போற்றி

    ஓம் ஜகல்லட்சுமியே போற்றி

    ஓம் ஜோதிலட்சுமியே போற்றி

    ஓம் ஜேஷ்டலட்சுமியே போற்றி

    ஓம் ஷ்ட்புஜலட்சுமியே போற்றி

    ஓம் ஷோடசலட்சுமியே (50) போற்றி

    ஓம் தனலட்சுமியே போற்றி

    ஓம் தனதலட்சுமியே போற்றி

    ஓம் தயாலட்சுமியே போற்றி

    ஓம் தான்யலட்சுமியே போற்றி

    ஓம் த்ரிகுணலட்சுமியே போற்றி

    ஓம் த்வாரலட்சுமியே போற்றி

    ஓம் த்விபுஜலட்சுமியே போற்றி

    ஓம் த்விபுஜவீரலட்சுமியே போற்றி

    ஓம் திவ்யலட்சுமியே போற்றி

    ஓம் தீபலட்சுமியே (60) போற்றி

    ஓம் தைர்யலட்சுமியே போற்றி

    ஓம் துளசிலட்சுமியே போற்றி

    ஓம் துக்கநிவாரணியே போற்றி

    ஓம் நாகலட்சுமியே போற்றி

    ஓம் நித்தியலட்சுமியே போற்றி

    ஓம் பாலலட்சுமியே போற்றி

    ஓம் பங்கஜலட்சுமியே போற்றி

    ஓம் பிரம்மசோதரியே (70) போற்றி

    ஓம் பிரசன்னலட்சுமியே போற்றி

    ஓம் பிரகாசலட்சுமியே போற்றி

    ஓம் பில்வலட்சுமியே போற்றி

    ஓம் பூலட்சுமியே போற்றி

    ஓம் புவனலட்சுமியே போற்றி

    ஓம் பூஜ்யலட்சுமியே போற்றி

    ஓம் பூர்ணலட்சுமியே போற்றி

    ஓம் போகலட்சுமியே போற்றி

    ஓம் மகாலட்சுமியே போற்றி

    ஓம் மாயாலட்சுமியே (80) போற்றி

    ஓம் மோஷலட்சுமியே போற்றி

    ஓம் மோஹனலட்சுமியே போற்றி

    ஓம் யக்ஞலட்சுமியே போற்றி

    ஓம் யந்திரலட்சுமியே போற்றி

    ஓம் யோகலட்சுமியே போற்றி

    ஓம் யௌவனலட்சுமியே போற்றி

    ஓம் ராஜலட்சுமியே போற்றி

    ஓம் ராஜ்யலட்சுமியே போற்றி

    ஓம் ரம்யலட்சுமியே போற்றி

    ஓம் ரூபலட்சுமியே (90) போற்றி

    ஓம் லட்சுமியே போற்றி

    ஓம் லங்காதகனியே போற்றி

    ஓம் வரலட்சுமியே போற்றி

    ஓம் வரதலட்சுமியே போற்றி

    ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி

    ஓம் விஜயலட்சுமியே போற்றி

    ஓம் விஸ்வலட்சுமியே போற்றி

    ஓம் வித்யாலட்சுமியே போற்றி

    ஓம் வீரலட்சுமியே போற்றி

    ஓம் வீர்யலட்சுமியே போற்றி

    ஓம் ஞானலட்சுமியே போற்றி

    ஓம் ஹம்சவாகினியே போற்றி

    ஓம் ஹருதயலட்சுமியே போற்றி

    ஓம் ஹிரண்யலட்சுமியே போற்றி

    ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி

    ஓம் ஸ்ரீசக்ரலட்சுமியே போற்றி

    ஓம் ஸ்ரீசூக்தலட்சுமியே போற்றி

    ஓம் ஸ்ரீப்ரதனாலட்சுமியே போற்றி

    • ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
    • வாசலில் நின்ற வரலட்சுமியை பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள்.

    ஒரு சமயம் லட்சுமிதேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வந்தாள். ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருந்தது.

    மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தாள். நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து அந்த இல்லத்தரசி சுலோகங்களாக சொல்லிக் கொண்டு இருந்தாள்.

    வாசலில் நின்ற வரலட்சுமியை பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள். மனையை போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அந்த சுமங்கலி இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடந்தது. அதாவது லட்சுமிதேவி எங்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வருவாள்.

    • ஒரு கலசத்தை எடுத்து, அதனை சுற்றி மஞ்சள் கயிற்றை கட்ட வேண்டும்.
    • குத்துவிளக்கேற்றி வைத்து, கலசத்துக்கு மலர்மாலை கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

    வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் சுமங்கலிப் பெண்கள் பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து அழகாக அலங்கரிக்க வேண்டும். பூஜை அறையை மெழுகி கோலமிட்டு மண்டபம் அமைக்க வேண்டும். அதன்பின் வரலட்சுமியின் படம் வைத்து, அதற்கு அலங்காரம் செய்ய வேண்டும். வரலட்சுமி படத்தின் முன்னர் ஒரு வாழை இலையை விரித்து, அதன்மேல் பச்சரிசியை பரப்ப வேண்டும். அதன்மேல் தேங்காய், எலுமிச்சை, பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து, லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும்.

    ஒரு கலசத்தை எடுத்து, அதனை சுற்றி மஞ்சள் கயிற்றை கட்ட வேண்டும். அந்த கலசத்தில் அரிசியை நிரப்பி, அதன் மேலே குங்குமம் தடவிய முழுத் தேங்காயை வைக்க வேண்டும். அந்த கலசத்தை இலையில் பரப்பிய அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பூஜையில் மஞ்சள் தடவிய ஒன்பது இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்பு சரடை வைக்க வேண்டும். மஞ்சள் கயிறு என்பது மங்கலத்தின் அறிகுறி ஆகும். வரலட்சுமியுடன் அஷ்ட லட்சுமிகளையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது.

    குத்துவிளக்கேற்றி வைத்து, கலசத்துக்கு மலர்மாலை கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் மீது மகாலட்சுமியின் முக பிம்பத்தை பதிக்கலாம். முதலில் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு பூஜையை தொடங்க வேண்டும். பின்பு வரலட்சுமி தேவிக்கான பாடலை பாடி, பூக்களை தூவி தீபங்கள் காட்ட வேண்டும். பூஜையின் முடிவில் ஒன்பது முடிச்சு போட்ட மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பின்பு அனைவருக்கு பிரசாதங்கள் வழங்கலாம்.

    வரலட்சுமி விரதமிருந்து வழிபட்டால் அஷ்ட லட்சுமிகளான ஆதி லட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெய லட்சுமி, சந்தான லட்சுமி, கஜ லட்சுமி, வித்யா லட்சுமி ஆகியோரை வணங்கிய பலன்கள் ஒருசேர கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பதால், மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும், குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும், கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடு நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். வரலட்சுமியை வழிபட்டு அஷ்ட ஐஸ்வரியங்களையும், வாழ்வின் அனைத்து வளங்களையும் பெறுவோம்.

    • சாருமதி தினமும் லட்சுமி தேவியை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
    • தன் பெற்றோரின் நிலைமையை அறிந்த சியாமபாலா, ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள்.

    வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும், அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்க வேண்டியும் சுமங்கலிப் பெண்கள் கடைப்பிடிக்கும் விரதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு பெண்கள் கடைப்பிடிக்கும் முக்கிய விரதங்களில் இந்த வரலட்சுமி விரதமும் ஒன்று. இந்த வரலட்சுமி விரதம் உருவானது குறித்து பல புராணக் கதைகள் கூறப்படுகிறது.

    மகத நாட்டில் குந்தினபுரம் என்ற ஊரில் சாருமதி என்ற பெண், தன் கணவன், மாமனார், மாமியார் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். சாருமதி தினமும் லட்சுமி தேவியை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் தன் குடும்பத்தில் உள்ளவர்களையும் இறை அம்சமாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். இதனால் மனம் மகிழ்ந்த வரலட்சுமி, அவளது கனவில் தோன்றி, ''உனது பக்தியால் மனம் மகிழ்ந்தோம். என்னை நினைத்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் குடிகொள்வேன்'' என்றார். மேலும் கனவில் வரலட்சுமி விரதம் இருப்பதற்கான வழிமுறைகளையும் தேவி அருளினார்.

    மறுநாள் அதிகாலையில் கண் விழித்ததும், தன் கனவில் கண்டவற்றை குடும்பத்தினரிடம் கூறினாள் சாருமதி. இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனைவரும் இந்த சிறப்புவாய்ந்த வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டனர். அதன்படி விரதம் இருந்து வரலட்சுமியின் அருளை பெற்றனர். இவர் விரதம் இருந்து பெற்ற நன்மைகளை பார்த்த அந்நாட்டு மக்கள் ஒவ்வொரு வரும் அந்த வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க தொடங்கினர்.

    பத்ரச்ரவஸ் என்ற மன்னன், மகாவிஷ்ணுவின் தீவிர பக்தனாக இருந்தார். அவரது மனைவி சுரசந்திரிகா. இந்த தம்பதிகளுக்கு சியாமபாலா என்ற மகள் இருந்தாள். இவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். தன் மகள் மீது அதிக அன்பு கொண்டிருந்த சுரசந்திரிகா அவளது பிரிவு தாங்காமல் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தாள்.

    ஒரு சமயம் மகாலட்சுமி தேவி, வயதான சுமங்கலியின் வேடத்தில் சுரசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தார். மகாலட்சுமி, சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாக கூறி, அதை கடைப்பிடிக்கும் படி எடுத்து கூறினார். ஆனால் தன் மகளை பிரிந்த வருத்தத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ யாசகம் கேட்டு வந்திருப்பதாக கருதி அவமானப்படுத்தி வெளியே விரட்டி விட்டாள்.

    விரட்டப்பட்ட லட்சுமி தேவியை, அரசியின் மகளான சியாமபாலா சமாதானப்படுத்தினாள். அத்துடன், லட்சுமி தேவியிடம் இருந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கான முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்றாள். இதையடுத்து பக்தியுடன் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தாள். விரதத்தின் மகிமையில் அவள் செல்வ செழிப்பு பெற்று சிறப்பாக வாழ்ந்து வந்தாள். ஆனால் லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோர், எல்லாவற்றையும் இழந்து வறுமையின் பிடியில் சிக்கி ஏழ்மையில் வாடத் தொடங்கினர்.

    தன் பெற்றோரின் நிலைமையை அறிந்த சியாமபாலா, ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால் இங்கிருந்த அனுப்பிய தங்கம் எல்லாம் அவர்கள் செய்த தீவினையால் கரியாக மாறி போனது. இதை கேள்விப்பட்டு வருந்திய சியாமபாலா, தன் தாயான சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப் பற்றி சொல்லி பூஜை செய்யும்படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்து பூஜை செய்தாள். அதன்பிறகு விரதத்தின் பலனால் இழந்த செல்வங்கள் பெற்று மீண்டும் சுகவாழ்வு வாழ தொடங்கினாள்.

    சித்திரநேமி என்றவள் தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள், தேவர்களுக்கிடையே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நடுவராக இருந்து நியாயமான தீர்ப்பு வழங்குவாள். ஒரு சமயம் கயிலாயத்தில் சிவ பெருமானும், பார்வதி தேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பார்வதி தேவி, ''நாதா நான் உங்களை ஜெயித்து விட்டேன்'' என்றார். ஆனால் அதை மறுத்தார் சிவபெருமான். இதனால் சிவனுக்கும், பார்வதி தேவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இறுதியில் இருவரும் சித்திரநேமியிடம் இதற்கான தீர்ப்பை கேட்டனர். அவள், பரமசிவன் தான் போட்டியில் வெற்றி பெற்றதாக கூறினார். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, ''நீ பொய் சொன்னதால் குஷ்டரோகியாகி பொலிவிழந்து தவிப்பாயாக'' என்று சாபமிட்டார். இதையடுத்து தன்னை மன்னித்து அருளும்படி வேண்டினாள் சித்திரநேமி. உடனே மனம் இரங்கிய பார்வதி தேவி, ''நதிக்கரையில் வரலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் உனக்கு ஏற்பட்ட இந்த நிலை மாறும்'' என்று சாபவிமோசனம் அருளினார். சித்திரநேமியும் அவ்வாறே விரதம் இருந்து வரலட்சுமியை வழிபட்டு நோய் நீங்கி சாபவிமோசனம் பெற்றாள்.

    • அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது.
    • விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்-செல்வ வளம் சேரும்.

    வரலட்சுமி விரதம் இருக்க வீடு அல்லது கோவில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும்.

    சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம், குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேசபூஜை செய்ய வேண்டும்.

    அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள் கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும். நைவேத்தியமாக கொழுக்கட்டை படைக்கலாம்.

    பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும். இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்- செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

    சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் உண்டாகும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித செல்வங்கள் கிடைக்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும்.

    • பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கவேண்டும்.
    • பூஜை செய்பவர் வலதுபுறமாக இருந்து பூஜை செய்யவேண்டும்.

    வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    வீட்டின் தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து, அதில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். அங்கு சுவற்றில் படமாகவோ அல்லது வெள்ளியில் கிடைக்கும் வரலட்சுமி தேவியின் திருமுகத்தை வைக்க வேண்டும். வரலட்சுமிக்கு ஆடை, ஆபரணங்கள் அணிவிக்க வேண்டும்.

    மண்டபத்தில் வாழை இலையின் மீது ஒரு படி அரிசியை பரப்பி, அம்மன் கலசத்தை தாமிர செம்பிலோ அல்லது வெள்ளியால் ஆன செம்பிலோ வைக்க வேண்டும்.

    அந்த செம்பின் மீது சந்தனத்தை பூசி, அதன் மீது வரலட்சுமி அம்மனின் முகத்தை வரையலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் அம்மன் முகத்தை வாங்கி வந்து பதியலாம்.

    கலசத்தின் உள்ளே தேவையான அளவு அரிசியைக் போட்டு அதன் வாய்ப்பகுதியில் மாவிலைகளை சுற்றி வைத்து நடுவில் ஒரு தேங்காயை வைக்கவேண்டும்.

    அந்த தேங்காய்க்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு இட்டு பூ சூட்ட வேண்டும். இவை எல்லாவற்றையுமே முதல் நாள் மாலையிலேயே செய்து விட வேண்டும்.

    மறுநாள், வரலட்சுமி விரதம் அன்று பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கவேண்டும். பூஜை செய்பவர் வலதுபுறமாக இருந்து பூஜை செய்யவேண்டும்.

    சாதம், பாயாசம், வடை, கொழுக்கட்டை, இட்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து நிவேதனம் செய்யவேண்டும். ஐந்து முக விளக்கை ஏற்றி வைக்கவேண்டும்.

    எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.

    அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்து விட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.

    பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயாசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

    இந்த விரதம் மேற்கொள்வதால் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும்.

    தர்ப்பண பூஜை

    தர்ப்பண பூஜை என்பது இறந்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்யும் பூஜைகள் ஆகும். நம் மூதாதையர்கள் எல்லாருமே பித்ரு லோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது. மனிதனாக, புல், பூண்டாக, விலங்குகளாக, தாவரங்களாகப் பலர் பிறப்பெடுக்கலாம். அவரவர் தீவினைக் கர்மங்களுக்கு ஏற்ப ஆவி ரூப பிறவிகளும் கொண்டிருக்கலாம்.

    நம் மூதாதையர்களான பித்ருக்கள் அனைவரும் நினைத்தபடியெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, இறந்த திதி, மாதப்பிறப்பு, மாளய பட்ச நாட்கள் போன்ற புனித தினங்களில் மட்டும் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, அவர்கள் சூட்சும தேகத்தில் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் தர்ப்பண பூஜைகளைத் செய்தால் அவர்கள் அவற்றை இங்கு நேரடியாகப் பெற்று ஆசி அளிப்பார்கள்.

    தர்ப்பண பூஜை நாட்களில் நாம் யாருக்காக, எந்தக் காரணத்துக்காகத் தர்ப்பணம் அளிக்கின்றோமோ, அதைப் பொறுத்து தர்ப்பண பூஜை முறைகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு தர்ப்பண பூஜை முறைக்கும் வெவ்வேறு விதமான சிறப்புப் பெயரும் உண்டு. அதைப்போலவே இறந்தவருடைய வாழ்க்கை முறை, செய்து வந்த தொழில், உத்தியோகம், அவரது உயிர் பிரிந்த விதம் இவ்வாறு எத்தனையோ காரண, காரியங்களைக் கொண்டு அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதற்கான வெவ்வேறு விதமான தர்ப்பண பூஜை முறைகளைச் சித்த புருஷர்கள் அருளியுள்ளனர்.

    ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை யாராலும் யூகிக்க இயலாது. விபத்து, தற்கொலை, உறவினர், நண்பர்கள் தரும் வேதனைகள், வறுமை, கொடிய நோய் போன்ற பல காரணங்களால் மரணம் ஏற்படுவதுண்டு.

    ஏன், நம் தினசரி வாழ்க்கையில் கூட எத்தனையோ கொசுக்கள், வண்டுகள், ஈக்கள், புழு, பூச்சிகள், எறும்புகள் போன்ற எத்தனையோ உயிரினங்களின் மரணத்திற்கு நாம் காரணமாகி விடுகின்றோம்.

    நாம் முறையாக நம் பித்ருக்களுக்கு சிரார்த்தம், திவசம் மற்றும் தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றினால் தான் இவ்வாறாக விதவிதமான முறைகளில் உயிர் விட்ட அனைத்து ஜீவன்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் எந்த அளவிற்கு நம்முடன் வாழ உரிமை பெற்றிருக்கும் சக ஜீவன்களின் நல்வாழ்விற்காக நாம் மனதாலும், உடலாலும் சேவை, பூஜை, வழிபாடு, தான தர்மங்கள் ஆகியவற்றைச் செய்கின்றோமோ, அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும் மேம்படும்.

    தற்காலத்தில் அனைவரும் சிரார்த்தத்துக்கும், தர்ப்பணத்துக்கும் வித்தியாசம் தெரியாது இவை இரண்டுமே ஒன்று என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். சிரார்த்தம், தர்ப்பணம் ஆகிய இரண்டு பூஜைகளுமே இறந்த நம் முன்னோர்களின் திதியன்று செய்யப்படுபவை என்றாலும் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.

    சிரார்த்தம், திவசம் என்றால் இறந்தோருக்குப் பிரியமான உணவு, உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் ஆகும்.

    ஆனால் தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு முறையான தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி வார்த்து பித்ருக்களை திருப்தி செய்தல் என்று பொருள்.

    • கல்வி ஞானம் பெருகும்.
    • பகை அழிந்து அமைதி உண்டாகும்.

    மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தந்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள்.

    என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பென் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள். அதை அப்படியே செய்தாள் சாருமதி. இப்படித் தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.

    லட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் பதினைந்து பெறுகள்:

    1.உடல் அழகு பெற்று ஒளிமயமாகும்.

    2.பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்.

    3.பகை அழிந்து அமைதி உண்டாகும்.

    4.கல்வி ஞானம் பெருகும்.

    5. பலவிதமான ஐசுவரியங்கள் செழிக்கும்.

    6.நிலைத்த செல்வம் அமையும்.

    7.வறுமை நிலை மாறும்.

    8.மகான்களின் ஆசி கிடைக்கும்.

    9.தானிய விருத்தி ஏற்படும்.

    10.வாக்கு சாதுரியம் உண்டாகும்.

    11.வம்ச விருத்தி ஏற்படும்.

    12.உயர் பதவி கிடைக்கும்.

    13.வாகன வசதிகள் அமையும்.

    14.ஆட்சிப்பொறுப்பெற்கும் யோகம் கிடைக்கும்.

    15.பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.

    வரலட்சுமி விரதம் இருப்பது எப்படி?

    வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும்.

    விரத பூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.

    ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகிய நிவேதனப் பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம்.

    அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் செய்ய வேண்டும்.

    இப்போது மகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும். அப்போது மங்களகரமான தோத்திரங்களை சொல்லலாம். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம்.

    இதையடுத்து நோன்புக் கயிறை கும்பத்தை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் சொல்லலாம். `மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும்' என்று மனம் உருக வணங்க வேண்டும்.

    பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

    • வரலட்சுமி விரதத்தில் பக்தர்கள் நேரடியாக பங்கேற்க நாளை காலை 9 மணிக்கு 150 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
    • நேரடி தரிசனத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் ரூ.1000 செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம்.

    திருப்பதி:

    திருப்பதி, திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதம் வரும் 25-ந்தேதி பிரமாண்டமாக நடைபெறும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 25-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை தன மண்டபத்தில் வரலட்சுமி விரதம் நடைபெறும். மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் மாட வீதிகளில் உலா வருகிறார்.

    வரலட்சுமி விரதத்தில் பக்தர்கள் நேரடியாக பங்கேற்க நாளை காலை 9 மணிக்கு 150 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

    இதேபோல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பக்தர்களுக்கு பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள குங்கும அர்ச்சனை கவுண்டரில் வரும் 24-ந்தேதி நேரடியாக 150 தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

    நேரடி தரிசனத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் ரூ.1000 செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். ஒரு தரிசன டிக்கெட்டுக்கு 2 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் வரும் 26-ந் தேதி முதல் 90 நாட்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    வரலட்சுமி விரதம் நடைபெறும். நாளில் அபிஷேகம், கல்யாண உற்சவம், வஸ்திர அலங்கார சேவை, அபிஷேக தரிசனம், லட்சுமி பூஜை, ஊஞ்சல் சேவை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் வேத ஆசீர்வசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • ஸ்ரீலட்சுமி திருமாலின் வட்சத் தலத்தில் நித்திய வாசம் புரிகின்றாள்.
    • ஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.

    ஸ்ரீலட்சுமி திருமாலின் வட்சத் தலத்தில் நித்திய வாசம் புரிகின்றாள். சுமங்கலிகள், பூரண கும்பம்-மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்கலப் பொருட்களில் மகா லட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

    அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்மசிந்தனை, பொறுமை, தெய்வபக்தி, ஐம்புலன் அடக்கம், சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள்.

    தேவர்களிடத்திலும் பிரம்ம ஞானியர்களிடத்திலும் பரமன் அடியார்களிடத்திலும் பக்தி உள்ளோர் இருதயங்களிலும், கிருகஸ்தர்களிடத்திலும், பசுக்களிடத்திலும், அந்த பசுக்களை பராமரிக்கும் பெண்களிடத்திலும் ஸ்ரீதேவி நித்யவாசம் புரிகிறாள்.

    வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீலட்சுமி வசிக்கிறாள். ஸ்ரீ லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அவ்வாறு அர்ச்சிக்கும் போது, வில்வத்தை தளப்பக்கமாக பூஜிக்க வேண்டும். ஏன் என்றால் வில்வ தளத்தில் அமிர்த தாரையாக லட்சுமி வாசம் செய்கிறாள்.

    அதேபோல் தாமரை மலரால் பூஜிக்கும் போதும் தாமரையின் பூ உள்ள பக்கமாக பூஜிக்க வேண்டும். ஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். ஸ்ரீரங்க சேத்திரத்தின் தல விருட்சம் வில்வம், திருவகீந்தபுரத்து ஹேமாம் புஜநாயகி தாயாருக்கு வில்வார்ச்சனை தான் செய்து வருகிறார்கள்.

    வில்வ மரத்தைப் பிரதட்சணம் செய்வது ஸ்ரீ லட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும். திருமலை ஸ்ரீ வெங்கடேச பெருமானுக்கு மார்கழி மாதம் வில்வார்ச்சனை செய்கிறார்கள். வைகாசன ஆகமத்தின் போது வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது. ஸ்ரீ லட்சுமிக்கு வில்வம் விசேஷம் என்பதனை ஸ்ரீ சுக்தத்தில், "ஆதித்ய வர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதி ஸ்தவ வ்ருஷோதபில்வ" என்று சொல்லப்பட்டுள்ளது. "சூரியனின் வர்ணத்தோடு கூடியவளே! தபசினாலே உணரப்படுபவளே! உன்னுடைய வனஸ்பதி பில்வ விருசமாகும்" என்பது பொருள்.

    இதேபோல் மற்றொரு சுலோகத்தில், தஸ்ய பவானி தபா சானு தந்து மாயாந் தரா யாஸ்ச பாக்யா அலட்சுமி என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் பழங்கள், மாயையான தடைகளை நீக்கி, அலட்சுமி நிலைக்கு (திருவின்மை) புறம்பானவர்களாக (லட்சுமிகரமாக) ஆக்கும்.

    ஸ்ரீலட்சுமி தவம் செய்வதற்கு வில்வ மரத்தடியில் எழுந்தருளினாள் என்பதைப் பற்றி வாமன புராணம் சொல்கிறது. வாமன புராணத்தில் திருமகளின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்ப மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள். இப்பேற்பட்ட மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே ஸ்ரீ லட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது புராணம்.

    நெல்லி மரம் திருமாலின் பேரருளைப் பெற்றது. அது காரணம் பற்றியே நெல்லி மரத்தை "ஹரி பலம்" என்று கூறுவர். நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் ஸ்ரீ லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள்.

    ஒரு அந்தணன் மகாலட்சுமிக்கு தியான நெல்லி மரத்தடியில் உயிர் நீத்த புண்ணியத்தால் வைகுண்ட பிராப்தியை பெற்றான். இதேபோல் நெல்லிக்கனியை பிச்சை இட்டதற்காக, கடும் வறுமையில் வாடிய குடும்பத்தவர்களுக்கு கனகமணி கட்டி களை கொடுத்தவள் மகாலட்சுமி. குபேர பட்டணத்தில் நெல்லி விருட்சங்களை நெடுகிலும் காணலாம். அதனால் தான் நெல்லி மர வழிபாடு குபேர சம்பத்தைக் கொடுக்கும் என்பதால் திருஷ்டாந்தம் துளசி செடியிலும் லட்சுமி எழுந்தருளியுள்ளாள்.

    இதேபோல் மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள். மஞ்சள் செடியை வளர்ப்பது விசேஷம். மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது. மஞ்சள் கலந்த மந்திராசத்தை - மங்களார்த்தி என்று கூறப்படும் மஞ்சள் நீர், மஞ்சள் பூசிய மாங்கல்ய சரடு என்று பல மங்களகரமான பொருட்களோடு, மஞ்சள் கலந்து சர்வ மங்களமாகிறது.

    பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது. குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவது நமது மரபு. ஸ்ரீ வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், ஸ்ரீமகளும் வாசம் செய்கின்றனர். ஸ்ரீ சூர்ணத்தை ஹரித்ரா சூர்ணம் என்று கூறு வர். மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி.

    அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்று பொருள். திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. திருமண்ணையும் ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது தான் சிலாக்கியம். ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது.

    ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவையும், சீதா பிராட்டியாரையும் சேர்த்துப் போற்றிப் பணிந்த ஆஞ்சநேய மகாப் பிரபுவும், அவரது திருவடியைச் சிந்தனையிலே கொண்ட பக்தர்களும் சகல சவுபாக்கியங்களுடனும் வாழ்கின்றனர். இல்லங்களை ஸ்ரீ லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவள் நம்முடன் வாசம் செய்வாள்.

    வைகறைக் துயில் எழுந்து, நீராடி, சூரியன் உதயமாவதற்கு முன்னால் வீட்டு வாயிலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். கோலம் போடும் பழக்கம் என்பது தொன்றுதொட்டு நமது பாரத நாட்டில் இருந்து வருவதால் தான் மாக்கோலம், இழை கோலம், புள்ளிக்கோலம், வர்ணப் பொடிகளைத் தூவி போடும் ரங்கோலி போன்ற கோலங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

    மாக்கோலத்தை சுற்றி காவி பூசுவதும் பழக்கத்தில் உள்ளது. புராண காலத்தில் யாக சாலைகளில் விதவிதமான வண்ணக் கோலங்களை போட்டு, அக்கோலங்களின் மீது ஹோம குண்டங்களை அமைப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர். ஸ்ரீ லட்சுமி தேவி தீபமங்கள ஜோதியாக விளங்குகிறாள். இல்லத்திலே விளக்கு எரிவதால் லட்சுமி நிரந்தர மாக வாசம் புரிவாள்.

    ×