search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahalakshmi"

    • வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, குங்குமத்துடன், மஞ்சள் கொடுக்க வேண்டும்.
    • சுமங்கலிகளுக்கு மஞ்சள் கொடுப்பதால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் தீர்ந்து பாக்கியங்கள் பெருகும்.

    மகாலட்சுமியின் அம்சமாகவும் அவளது மனத்திற்கு விருப்பமானதாகவும் உள்ள பொருட்களில் முக்கியமானது மஞ்சள்.

    மகாலட்சுமியின் இருப்பிடமாக மஞ்சளை சொல்வார்கள்.

    மணமக்களுக்கு ஆசிர்வாதம் செய்யும் போது அட்சதை தூவுவதற்கு முனைமுறியாத பச்சரிசியில் மஞ்சளை தோய்த்து தூவுவார்கள்.

    எந்த பூஜை செய்தாலும் மஞ்சளை அரைத்து பிள்ளையார் போல ஒரு உருவத்தை செய்துவிட்டு,

    அதற்கு குங்குமம் இட்டு பூஜை செய்வார்கள்.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, குங்குமத்துடன், மஞ்சள் கொடுக்க வேண்டும்.

    சுமங்கலிகளுக்கு மஞ்சள் கொடுப்பதால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் தீர்ந்து பாக்கியங்கள் பெருகும்.

    நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் பெறலாம்.

    • இவ்வாறு அவர் சத்தியம் செய்வதால் அவரை சத்திய நாராயணன் என்று அழைத்து வழிபடுகிறோம்.
    • பொதுவாக சத்திய நாராண பூஜை சித்திரையில் தொடங்குவது மிகவும் நல்லது.

    சந்திரன் மனதிற்கு அதிகாரமானவர். ஆகவே, பவுர்ணமி காலங்களில் மனிதனுடைய மனம் வேகம் கொள்ளும்.

    ஆகவே, அந்தசமயம் மனப் பாதிப்பு உள்ளவர்கள் விவேகமில்லாமல் நடந்து கொள்வர்.

    மேலும், சந்திரனின் அதிதேவதை நீர். பவுர்ணமி காலங்களில் கடலில் அலைகள் பெருக்கெடுக்கும்.

    சுனாமி போன்ற அலைகள் கூட பவுர்ணமி காலங்களில் வரும்.

    ஒவ்வொரு மாதத்தின் பெயருக்கும் சந்திரன் பவுர்ணமியன்று எந்த நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறாரோ அந்த நட்சத்திரத்தின் பெயரையே வைத்துள்ளார்கள்.

    ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று காலை முதல் விரதம் இருந்து மாலையில் சந்திரனைப் பார்க்க பின் சத்திய நாராயண பூஜை செய்ய வேண்டும்.

    இந்த விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு மனக் குறைகள் நீக்கி சகல ஐஸ்வர்யங்களையும் தருவேன் என்று ஸ்ரீமந் நாராயணன் சத்தியம் செய்துள்ளதாக கந்தபுராணம் கூறுகிறது.

    இவ்வாறு அவர் சத்தியம் செய்வதால் அவரை சத்திய நாராயணன் என்று அழைத்து வழிபடுகிறோம்.

    பொதுவாக சத்திய நாராண பூஜை சித்திரையில் தொடங்குவது மிகவும் நல்லது.

    • ஆடிக் கிருத்திகையிலோ, கார்த்திகை மாதம் கிருத்திகை தீபத்தன்றோ தொடங்க வேண்டும்.

    கிருத்திகை விரதம் அனுஷ்டிக்க விரும்புபவர்கள் ஆடிக் கிருத்திகையிலோ, கார்த்திகை மாதம் கிருத்திகை தீபத்தன்றோ தொடங்க வேண்டும்.

    காலை முதல் விரதம் இருந்து மாலையில் சூரிய அஸ்தமனம் முடியும் போது வீட்டில் விளக்குகளால் அலங்கரித்து கிழக்கு வாசலில் தோன்றும் கிருத்திகை நட்சத்திரத்தைத் தரிசனம் செய்து பிறகு முருகப் பெருமானையும் மகாலட்சுமியையும் வழிபட்டு உணவு அருந்தலாம்.

    • சென்னை மீஞ்சூர் அருகே தேவதானம் என்ற கிராமத்தில் வடஸ்ரீரங்கம் என்று ஒரு ஆலயம் உள்ளது.
    • இங்கும் ரங்கநாத பெருமாள் சயன கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    பஞ்சரங்கம் என்று கூட 5 தலங்களை நமது முன்னோர்கள் வரையறை செய்துள்ளனர்.

    ஸ்ரீரங்க பட்டினத்தில் உள்ள ஆலயம் ஆதிரங்கம் என்றும், திருப்பேர் நகரில் உள்ள ஆலயம் அப்பால ரங்கம் என்றும்

    ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆலயம் மத்திய ரங்கம் என்றும், கும்பகோணத்தில் உள்ள ஆலயம் சதுர்த்த ரங்கம் என்றும்,

    மயிலாடுதுறையில் உள்ள ஆலயம் பஞ்ச ரங்கம் என்றும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஆனால் இந்த பஞ்சரங்க ஆலயங்களை தவிர மேலும் சில ரங்க ஆலயங்கள் ரங்கநாதருடன் தொடர்புடையதாக கூறப்படுகின்றன.

    சீர்காழி தாலுகாவில் மாதானைக்கு அருகே வடரங்கம் ஸ்ரீரங்கநாதர் பெருமாள் ஆலயம் உள்ளது.

    நாகை மாவட்டம் கீழையூரில் கீழரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயம் ஸ்ரீரங்கத்துக்கு அபிமான தலமாக விளங்கும் தலமாகும்.

    திருத்துறைப்பூண்டி அருகேயும் ஆதிரங்கம் என்று ஒரு ஆலயம் உள்ளது.

    சென்னை மீஞ்சூர் அருகே தேவதானம் என்ற கிராமத்தில் வடஸ்ரீரங்கம் என்று ஒரு ஆலயம் உள்ளது.

    இங்கும் ரங்கநாத பெருமாள் சயன கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    • சயன கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் தலங்களில் ஸ்ரீரங்கம் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.
    • இந்த ஆலயத்தை வைணவத்தின் முதல் கோவில் என்று சொல்வார்கள்.

    பொதுவாக திருமால் தமிழகம் முழுவதும் மூன்று விதமான கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    ஒன்று நின்ற கோலம், 2வது சயன கோலம், 3வது அமர்ந்த கோலம்.

    அவர் எடுத்த அவதாரங்கள் கணக்கிட இயலாதவை.

    அதனால் 25வது அவதாரங்கள் முக்கியமானவை என்று நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    அதிலும் தசாவதாரம் மட்டுமே தற்போது நடைமுறையில் பேசப்படுவதாக உள்ளது.

    அதிகம் தேடிச்சென்று வழிபடக் கூடியவையாகவும் அவை இருக்கின்றன.

    மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என்று 10 அவதாரங்களை பெருமாளின் தசாவதாரமாக சொல்கிறார்கள்.

    இந்த 10 அவதாரங்களும் நிகழ்ந்த தலங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன.

    இந்த அவதாரங்களுடன் தொடர்புடைய தலங்களும் நாடு முழுவதும் பரவி கிடக்கின்றன.

    இந்த தலங்களில் ஆழ்வார்களால் பாடல் பெற்று மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள் மிக சிறப்பானதாக கருத்து உண்டு.

    அப்படி மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    இந்த 108 திவ்யதேசங்களில் திருமால் 67 ஆலயங்களில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

    சயன கோலத்தில் 24 தலங்களிலும், அமர்ந்த கோலத்தில் 17 தலங்களிலும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    சயன கோலத்தில் காட்சி அளிக்கும் 24 தலங்களில் அவர் கிழக்கு முகமாக 18 தலங்களில் உள்ளார்.

    மேற்கு முகமாக 3 தலங்களிலும், வடக்கு முகமாக 3 தலங்களிலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    இப்படி சயன கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் தலங்களில் ஸ்ரீரங்கம் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.

    இந்த ஆலயத்தை வைணவத்தின் முதல் கோவில் என்று சொல்வார்கள்.

    இங்கு ரங்கநாதர் சயன கோலத்தில் இருக்கிறார்.

    இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரங்கநாதர் சயன கோலத்தில் இருக்கிறார்.

    • நாராயணா என்றால் மங்களம் தருபவர், சுபம் செய்பவர் என்று பொருள்.
    • ஓம் நமே நாராயணா என்று சொல்லிக் கொண்டே இருங்கள். நல்லது நடக்கும்.

    விஷ்ணு பிரபுவே, என் அகந்தை அழிந்து மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டுங்கள்.

    என் மீது கருணை காட்டுங்கள்.

    எப்போதும் உமையே சரண் அடையும் பாக்கியத்தை தாருங்கள் என்று தினந்தோறும் திருமாலை நினைத்து மனம் உருக வழிபட வேண்டும்.

    இந்த புத்தாண்டு, பொங்கல் திருநாளில் மகாவிஷ்ணுவை நெருங்குவதற்கான சபதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

    விஷ்ணு என்றால் "எங்கும் நிறைந்தவர்" என்று பொருள். எனவே விஷ்ணுவை வழிபட எல்லா இடத்திலும் வாய்ப்புகள் உண்டு.

    நாம்தான் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறோம்.

    நாராயணா என்றால் மங்களம் தருபவர், சுபம் செய்பவர் என்று பொருள்.

    ஓம் நமே நாராயணா என்று சொல்லிக் கொண்டே இருங்கள். நல்லது நடக்கும்.

    கேசவா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, பத்மநாபா, தாமோதரா என்று திருமாலின் திருநாமங்களை சொல்லிக் கொண்டே போகலாம். 

    • கிருஷ்ண தலங்களில் திருமகள் ருக்மிணி எனும் பெயரில் அவருடன் வீற்றிருக்கிறாள்.
    • எட்டாவது அவதாரமான பலராம அவதாரத்தில் ரேவதி என்னும் பெயரில் லட்சுமி மகிழ்ந்திருந்தாள்.

    திருமால் அன்பர்களை காத்து அருள்புரிய எடுத்த பத்து அவதாரங்களில் மீன், ஆமை அவதாரங்கள் அவசர நிமித்தம் காரணமாக எடுத்து முடிக்கப்பட்ட அவதாரங்கள் ஆகும்.

    இவ்விரு அவதாரங்களிலும் மகாலட்சுமியை தேவியாகச் சொல்லவில்லை.

    திருமால் ஆமை அவதாரம் எடுத்து மலையைத் தாங்கியதாலேயே தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைய முடிந்தது. அப்போது பாற்கடலிலிருந்து லட்சுமி தோன்றினாள்.

    திருமால் ஆமை வடிவை நீக்கி அழகிய கோலத்துடள் சென்று அவளை மணந்து கொண்டார்.

    மூன்றாவது அவதாரமான வராக அவதாரத்தில் திருமால் கடலுக்கு அடியில் சென்று அங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்த திருமகளின் மறுகூறான பூமிதேவியை மேற்கொண்டு வந்து உலகைப் படைத்தார்.

    அவரைப் பூவராகம் என்று போற்றுகின்றனர்.

    அந்நிலையில் அவர் மார்பில் வாழும் திருமகள் அகில வல்லி என்று அழைக்கப்படுகிறாள்.

    சில ஆலயங்களில் திருமகளை மடிமீது கொண்டுள்ள லட்சுமி வராகரையும், சில தலங்களில் புவிமகளை மடிமீது கொண்டுள்ள வராகரையும் காண்கிறோம்.

    ஆதிவராக ஷேத்திரமான ஸ்ரீமுஷ்ணத்தில் வராகமூர்த்தி இரு பெரும் தேவியருடன் காட்சியளிக்கின்றார்.

    நரசிம்ம அவதாரத்தில் அவர் இரண்யனின் குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்தும், ரத்தத்தைக் குடித்தும், ஆர்ப்பரித்தார்.

    அவருடைய கோபக் கனல் எல்லாரையும் வருத்தியது. தேவர்கள் அவருடைய உக்கிரமயமான கோபத்தை எளிதில் தணிக்கும் ஆற்றல் மகாலட்சுமிக்கே உண்டு என்பதால் அவளைப் பணிந்து சாந்தப்படுத்துமாறு வேண்டினர்.

    மகாலட்சுமி நரசிம்மரை அணுகிக் கோபத்தை மாற்றினாள்.

    பிறகு திருமால் அவளைத் தன் மடிமீது அமர்த்திக் கொண்டு லட்சுமி நரசிம்மனாக அனைவருக்கும் அருள்புரிந்தார்.

    இதையொட்டி நரசிம்மர் 'மாலோலன்' என்று அழைக்கப்படுகிறார்.

    ஏழாவது அவதாரமான ராம அவதாரத்தில் மகாலட்சுமி ஜனக புத்ரியாக சீதையாக தோன்றி, ராமபிரானை மணந்தாள்.

    அப்போது அவளுக்குச் சீதா, ஜானகி, மைதிலி, வைதேகி, ராகவி முதலான பெயர்கள் வந்தன.

    எட்டாவது அவதாரமான பலராம அவதாரத்தில் ரேவதி என்னும் பெயரில் லட்சுமி மகிழ்ந்திருந்தாள்.

    ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில் மகாலட்சுமி வைஷ்க மன்னனின் மகளாகத் தோன்றி ருக்மணி எனும் பெயரில் வளர்ந்து கிருஷ்ணனை மணந்தாள்.

    சிவனால் எரிக்கப்பட்டுப் பார்வதியால் உருவமில்லாதவனாக உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன் அவளுக்குப் புத்யும்னன் எனும் பெயரில் மகனாகத் தோன்றினான்.

    கிருஷ்ண தலங்களில் திருமகள் ருக்மிணி எனும் பெயரில் அவருடன் வீற்றிருக்கிறாள்.

    திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதி ஆலயத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பார்த்தசாரதி கோலத்தில் நிற்க, அவருக்கு வலப்புறம் பெரிய வடிவில் ருக்மணியைக் காணலாம்.

    • மகாலட்சுமி ஒரே தெய்வமாக இருந்தாலும் பல சொரூபங்களாக அருள்புரிகிறாள்.
    • கருணை வேண்டும்போது காருண்ய லட்சுமியாக அருள்கிறாள்.

    விஷ்ணு ஆலயங்களில் மகாலட்சுமியை "தாயார்" என்று வணங்குகிறோம். முதலில் தாயாரை வழிப்பட்ட பிறகு பெருமாளை சேவிக்க வேண்டும்.

    மகாலட்சுமி ஒரே தெய்வமாக இருந்தாலும் பல சொரூபங்களாக அருள்புரிகிறாள்.

    மகாலட்சுமி வரமளிக்கும் நாளில் வரலட்சுமி ஆகிறாள்.

    செல்வம் வேண்டும்போது தனலட்சுமி

    கல்வி வேண்டும்போது வித்யாலட்சுமி

    தைரியம் வேண்டும்போது வீரலட்சுமி

    வெற்றியை வேண்டும்போது விஜயலட்சுமி

    புகழ் வேண்டும்போது கீர்த்திலட்சுமிணீ

    சாந்தம் வேண்டும்போது சாந்த லட்சுமி

    கருணை வேண்டும்போது காருண்ய லட்சுமி

    உடல்நலம் வேண்டும்போது ஆரோக்கிய லட்சுமி

    ஞானத்தை வேண்டும்போது ஞானலட்சுமி

    மோட்சத்தை வேண்டும்போது மோட்ச லட்சுமி

    சந்தோஷம் வேண்டும்போது ஆனந்த லட்சுமி

    திருமணம் வேண்டும்போது வைபவ லட்சுமி

    நிலம், வீடு, ஆபரணம் வேண்டும்போது ஐஸ்வர்ய லட்சுமி

    விவசாயம் செய்யும் விவசாயிகள் வேண்டும்போது தானிய லட்சுமி

    அழகை வேண்டும்போது சவுந்தர்ய லட்சுமி

    மகப்பேறு வேண்டும்போது சந்தான லட்சுமி

    நோயிலிருந்து மீளவேண்டும்போது சக்தி லட்சுமி

    சாமர்த்தியம் வேண்டும்போது பக்தி லட்சுமி

    • முதலில் விநாயகர் பாடல் எல்லோருக்கும் தெரியும்.
    • கீழ்க்கண்ட போற்றியை 108, 1008 பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளன்போடு போற்றினாலே போதும்.

    துதிப்பாடல்கள் மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள் தெரியவில்லையே என யாரும் பூஜை செய்யாமல் இருந்து விட வேண்டாம்.

    முதலில் விநாயகர் பாடல் எல்லோருக்கும் தெரியும். அதை சொல்லியே பின் கீழ்க்கண்ட போற்றியை 108, 1008 பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளன்போடு போற்றினாலே போதும்.

    1. சகல சித்தியளிக்கும் ஆதிலட்சுமியே போற்றி!

    2. பிள்ளைப்பேறு அளிக்கும் சந்தான லட்சுமியே போற்றி!

    3. ராஜமரியாதை தரும்கஜலட்சுமியே போற்றி!

    4. செல்வச் செழிப்பைத் தரும்தனலட்சுமியே போற்றி!

    5. தான்ய விருத்தியளிக்கும் தான்ய லட்சுமியே போற்றி!

    6. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும் விஜயலட்சுமியே போற்றி!

    7. சவுபாக்கியங்கள் தரும் மகாலட்சுமியே போற்றி!

    8. மனதிலும், உடலிலும் சோர்வை அகற்றி தைரியத்தையும், தெம்பையும், வீரத்தையும் அருளும் வீரலட்சுமியே போற்றி!

    9. அனைத்து நன்மைகளையும் வரமாகத் தரும் வரலட்சுமியே போற்றி! போற்றி!!.

    • கார்த்திகை மாதப் பஞ்சமியை ‘ஸ்ரீபஞ்சமி’ என்று அழைத்து அன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்.
    • சுக்ரவார விரதம் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை தியானித்து வழிபட செல்வ வளம் பெருகும்.

    ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமியும் லட்சுமி விரதத்திற் குரிய காலமாகும். ஆவணி வளர்பிறைப் பஞ்சமிக்கு 'மகாலட்சுமி பஞ்சமி' என்று பெயர்.

    அன்று தொடங்கி அஷ்டமி வரை நான்கு நாட்கள் வழிபடுவது மகாலட்சுமி விரதம் ஆகும்.

    கார்த்திகை மாதப் பஞ்சமியை 'ஸ்ரீபஞ்சமி' என்று அழைத்து அன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்.

    அன்று அஷ்ட லட்சுமிகளுக்குப் பால் நிவேதனம் செய்து, வருபவர்களுக்கு வழங்கினால் தோஷங்கள் நீங்கும்.

    ஐப்பசி மாதப் பவுர்ணமியில் மகாலட்சுமியை வழிபடச் செல்வம் பெருகும்.

    ஐப்பசி அமாவாசையன்று (தீபாவளிக்கு அடுத்த நாள்) மகாலட்சுமி பூஜை செய்யப்பட வேண்டும்.

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாட்கள் விரதமிருந்து மகாலட்சுமியை வழிபடுவது சோடச லட்சுமி விரதமாகும். இதனால் 16 செல்வங்களையும் நிறைவாக பெற்று வாழலாம்.

    இந்நாட்களில் ஒரு வேளை பகலில் மித உணவு உண்டு, மாலையில் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் அஷ்ட லட்சுமிகளை வணங்கி, நிவேதனம் செய்த பால் பழம் உண்டு விரதம் முடிப்பது பழக்கம் ஆகும்.

    சுக்ரவார விரதம் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை தியானித்து வழிபட செல்வ வளம் பெருகும்.

    நவராத்திரி லட்சுமி விரதம் சாரதா நவராத்திரியில் 4, 5, 6ம் நாட்களில் லட்சுமிவரும் நாளாகக் கருதி விரதம் செய்யலாம்.

    பைரவ லட்சுமி விரதம் புளிப்புப் பண்டங்கள் சேர்க்காத படையல்களை வைத்து வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்து வரும் 8 வெள்ளிக்கிழமைகள் செய்து முடிக்க வேண்டும்.

    எப்படி அழைத்தாலும் வரக்காத்திருக்கும் வரலட்சுமி விரத நாளில் நமது வீட்டில் உள்ள பூஜைப் பொருட்களை பயன்படுத்தி எளிமையாகவும், பூஜை செய்யலாம்.

    • இந்த மலைக் கோவிலில் தனிச் சந்நிதியில் அமிர்தவல்லித் தாயார் எழுந்தருளியுள்ளார்
    • இங்கு தாயார் அமிர்தவல்லி திருச்சந்திதியில் ஒரு பெரிய தேன்கூடு உள்ளது.

    உத்திரமேரூர்:- உத்திரமேரூர் திருத்தலத்தின் தாயார் ஆனந்த வல்லி ஆவார். தாயாருக்குத் தனிச் சந்நிதி உண்டு. இப்பிராட்டியாரின் திருவருளால் மாங்கல்ய பாக்கியம், பிள்ளைப்பேறு முதலியன கிடைப்பதால் இத்தலத்திற்குத் திருமாங்கல்யம் அதிக அளவில் காணிக்கையாகக் கிடைக்கிறது. அழகிய அஷ்டாங்க விமானம் கொண்ட அற்புதத் தலம் இது.

    காஞ்சீபுரம்:- காஞ்சீபுரம் ஸ்ரீ அஷ்டபுஜம் திருக்கோவிலின் தாயார் புஷ்பவல்லி ஆவார். பகவானின் திரு நாமம் அஷ்டபுஜத்தான் என்பது. இத்தலத்தில் ஸ்ரீ வராகப் பெருமாள் தாயாரைத் தன் மடியில் வைத்துக் கொண்டு சேவை சாதிக்கிறார்கள். இது வன்றி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீலஷ்மி தேவிக்கென தனிச் சந்நிதி உள்ளது.

    சோழிங்கபுரம்:- வடஆற்காடு மாவட்டம் அரக்கோணத்திலிருந்து மேற்கே சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் சோழிங்கபுரம் ஆகும். இந்த மலைக் கோவிலில் தனிச் சந்நிதியில் அமிர்தவல்லித் தாயார் எழுந்தருளியுள்ளார். அண்டிவரும் அன்பர்களுக்கு அமிர்தமயமான பலன் களை வழங்கி வருகிறார்.

    திருத்தங்கல்:-விருதுநகர் மாவட் டம் திருத்தங்கல் என்னும் திருத்தலத்தில் முனிவர்களின் வேண்டுகோளுக் கிணங்க திருமகள் அருண கமல மகாதேவி (செங்கமல நாச்சியார்) என்னும் திரு நாமத்துடன் திருநின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    திருக்கண்ண மங்கை:-திரு வாரூருக்கு அடுத்துள்ள திருத்தலம் திருக் கண்ண மங்கையாகும். இங்கு தாயார் அமிர்தவல்லி திருச்சந்திதியில் ஒரு பெரிய தேன்கூடு உள்ளது. பல ஆண்டுகளாக இத்தேன்கூடு இருந்து வருவதாகக் கூறுகிறார்கள். முனிவர்கள் தேனீ வடிவத்தில் இருந்து தாயாரையும் பெருமாளையும் சேவித்து வருவதாக ஐதீகம்.

    உத்தமர்கோவில்:- திருச்சிக்கு அருகில் உள்ள திருத்தலம் பிச்சாண்டார் கோவிலாகும். உத்தமர் கோவில் என்றும் இதனை அழைப்பர். சிவன், பிரும்மா, விஷ்ணு மூவருக்கும் தனிச் சந்நிதிகள் ஒரே ஆலயத்தினுள் அடங்கியுள்ளன. இந்த அற்புதத் திருத்தலத்தின் நாச்சியார் பூர்ணவல்லித் தாயார் ஆவர். பூர்வா தேவி என்றும் அழைக்கப் பெறுகிறார்.

    • தெய்வ பக்தி உடையவர்களிடத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
    • தர்ம வழியில் நடப்பவர்களிடத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

    1. சிறந்த ஆற்றல் உடையவர்கள்,

    2. துணிவுடையவர்கள்,

    3. கோபம் கொள்ளாதவர்கள்,

    4. தெய்வ பக்தி உடையவர்கள்,

    5. செய் நன்றி மறவாதவர்கள்,

    6. ஐம்புலனை அடக்குபவர்கள்,

    7.சத்துவ குணத்தை உடையவர்கள்,

    8.தர்ம வழியில் நடப்பவர்கள்,

    9. பிறர் மனதை அறிபவர்கள்,

    10. காலத்தை வீணாக்காதவர்கள்.

    11. பசுக்களைப் பராமரிப்பவர்கள்,

    12. கற்றவர்களை மதிப்பவர்கள்,

    13. எவற்றையும் தூய்மையாக வைத்திருப்பவர்கள்,

    14. பொறுமை கொண்டவர்கள்,

    15. ஊக்கத்தோடு உழைப்பவர்கள்,

    16. இயற்கையை வளர்ப்பவர்கள்,

    17. சத்தியம் தவறாதவர்கள்,

    18. சொன்னபடி நடப்பவர்கள்,

    19. நேர்மையோடு வாணிகம் செய்பவர்கள்,

    20. அன்னதானம் செய்பவர்கள்.

    21. கற்றோர் வழி நடப்பவர்கள்,

    22. விருந்தினரை உபசரிப்பவர்கள்,

    23. உள்ளன்போடு நடப்பவர்கள்,

    24. பெற்றோரை மதிப்பவர்கள்,

    25. கற்பித்த குருவைத் தொழுபவர்கள்,

    26. சுறுசுறுப்புடன் பணியாற்றுபவர்,

    27. அகந்தை அற்றவர்கள்,

    28. பிறர் கஷ்டத்தை துயர் களைபவர்கள்,

    29.வெள்ளை உடை உடுத்துபவர்கள்,

    30. பொறாமை கொள்ளாதவர்கள்,

    31. பகைமை பாராட்டாதவர்கள்,

    32. துணிவாகச் செயல்படுபவர்கள்,

    33.பொது நலம் விரும்புகிறவர்கள்,

    34. ஊனமுற்றோர்க்கு உதவுபவர்கள்,

    35. நித்திய கர்மத்தை அனுஷ்டிப்பவர்கள்,

    36. பேராசை கொள்ளாதவர்கள்,

    37. அழகிய தோற்றம் கொண்டவர்கள்,

    38. கற்பு நெறி காப்பவர்கள்,

    39.பிரதிபலனை எதிர் பார்க்காதவர்கள்,

    40. பிறன்மனை நோக்காதவர்கள்.

    41. அதிகாலை எழுபவர்கள்,

    42. நல்ல நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள்,

    43. இனிமையாகப் பேசுபவர்கள்,

    44. புன்னகை முகம் கொண்டவர்கள்,

    45. சங்குகள்,

    46. மாவிலைகள்,

    47. யானைகள்,

    48. ஸ்வத்திகா சின்னம்,

    49. கண்ணாடி,

    50. குங்குமம், மஞ்சள்,

    51. சந்தனம், பஞ்சகவ்யம்,

    52.வெற்றிலை,

    53.கோலம்,

    54.திருமண சூர்ணம்,

    55. கும்பம், தீபச்சுடர் ஒளி, கற்பூர ஜோதி,

    56. வாழைமரம்,

    57. நீதிநெறி வழுவாதவர்கள்,

    58.வீரம் உடையவர்கள்,

    59. விவேகம் உடையவர்கள்.

    ×